<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Department Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/department/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/department/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Wed, 08 Apr 2026 05:11:42 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>Department Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/department/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>அடையாள அட்டை பெற்றுக்கொள்வோருக்கு ஆட்பதிவுத் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு</title>
		<link>https://oruvan.com/important-announcement-from-the-department-of-registration-of-persons-to-those-receiving-identity-cards/</link>
		
		<dc:creator><![CDATA[Diluksha]]></dc:creator>
		<pubDate>Wed, 08 Apr 2026 05:11:42 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[announcement]]></category>
		<category><![CDATA[Department]]></category>
		<category><![CDATA[Important]]></category>
		<category><![CDATA[NIC]]></category>
		<category><![CDATA[Persons]]></category>
		<category><![CDATA[Registration]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=48143</guid>

					<description><![CDATA[<p>தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்வதற்கான ஒருநாள் சேவை, அத்தியாவசியத் தேவையுள்ளவர்களுக்காக மட்டும் இன்று (08) முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்தச் சேவை திணைக்களத்தின் பிரதான அலுவலகம் மற்றும் பிரதேச அலுவலகங்களில் முன்னெடுக்கப்படும் என அதன் பதில் பணிப்பாளர் நாயகம் எம்.எஸ்.பி. சூரியப்பெரும விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், திணைக்களத்தின் கணினி கட்டமைப்பைச் சீர்செய்யும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பிரதான அலுவலகம் மற்றும் பிரதேச அலுவலகங்களின் சாதாரண சேவைகள் மற்றும் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/important-announcement-from-the-department-of-registration-of-persons-to-those-receiving-identity-cards/">அடையாள அட்டை பெற்றுக்கொள்வோருக்கு ஆட்பதிவுத் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்வதற்கான ஒருநாள் சேவை, அத்தியாவசியத் தேவையுள்ளவர்களுக்காக மட்டும் இன்று (08) முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.</p>
<p>இந்தச் சேவை திணைக்களத்தின் பிரதான அலுவலகம் மற்றும் பிரதேச அலுவலகங்களில் முன்னெடுக்கப்படும் என அதன் பதில் பணிப்பாளர் நாயகம் எம்.எஸ்.பி. சூரியப்பெரும விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p>
<p>அத்துடன், திணைக்களத்தின் கணினி கட்டமைப்பைச் சீர்செய்யும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இருப்பினும், பிரதான அலுவலகம் மற்றும் பிரதேச அலுவலகங்களின் சாதாரண சேவைகள் மற்றும் முன்வரிசைச் சேவைகள் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.</p>
<p>கணினி கட்டமைப்பு முழுமையாகச் சீரமைக்கப்பட்ட பின்னர், அனைத்துச் சேவைகளும் வழமை போன்று தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என ஆட்பதிவுத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/important-announcement-from-the-department-of-registration-of-persons-to-those-receiving-identity-cards/">அடையாள அட்டை பெற்றுக்கொள்வோருக்கு ஆட்பதிவுத் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>நிலந்த ஜெயவர்தன குறித்த விசாரணை அறிக்கை &#8211; CID யிடம் கோர சட்டமா அதிபர் திணைக்களம் நடவடிக்கை</title>
		<link>https://oruvan.com/attorney-generals-department-takes-action-to-request-investigation-report-on-nilantha-jayawardena-from-cid/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sun, 27 Jul 2025 12:58:08 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Attorney]]></category>
		<category><![CDATA[CID]]></category>
		<category><![CDATA[Department]]></category>
		<category><![CDATA[General's]]></category>
		<category><![CDATA[Investigation]]></category>
		<category><![CDATA[Jayawardena]]></category>
		<category><![CDATA[Nilantha]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=27720</guid>

					<description><![CDATA[<p>அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளரும், முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருமான நிலந்த ஜெயவர்தன தொடர்பான விசாரணை அறிக்கையை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடமிருந்து கோருவதற்கு சட்டமா அதிபர் திணைக்களம் தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த முறையான கோரிக்கை எதிர்வரும் நாட்களில் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அனுப்பப்படும் என சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது. விசாரணை அறிக்கையை முழுமையாக மீளாய்வு செய்த பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தீர்மானிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து குற்றச்சாட்டுகளிலும் நிலந்த [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/attorney-generals-department-takes-action-to-request-investigation-report-on-nilantha-jayawardena-from-cid/">நிலந்த ஜெயவர்தன குறித்த விசாரணை அறிக்கை &#8211; CID யிடம் கோர சட்டமா அதிபர் திணைக்களம் நடவடிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளரும், முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருமான நிலந்த ஜெயவர்தன தொடர்பான விசாரணை அறிக்கையை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடமிருந்து கோருவதற்கு சட்டமா அதிபர் திணைக்களம் தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>இந்த முறையான கோரிக்கை எதிர்வரும் நாட்களில் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அனுப்பப்படும் என சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p>
<p>விசாரணை அறிக்கையை முழுமையாக மீளாய்வு செய்த பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தீர்மானிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>அனைத்து குற்றச்சாட்டுகளிலும் நிலந்த ஜெயவர்தன குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தேசிய பொலிஸ் ஆணைக்குழு உடனடியாக அவரை பொலிஸ் சேவையிலிருந்து நீக்க நடவடிக்கை எடுத்தது.</p>
<p>உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் நிலந்த ஜயவர்தன அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளராக செயற்பட்டிருந்தார்.</p>
<p>இந்த தாக்குதல் தொடர்பில் புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்த போதிலும் அதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அவருக்கு எதிரான நடவடிக்கைகளை உள்ளடக்கிய சில பரிந்துரைகளை முன்வைத்திருந்தது.</p>
<p>அதற்கமைய முன்னெடுக்கப்பட்ட ஒழுக்காற்று விசாரணையில் அனைத்து குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டமையால் நிலந்த ஜயவர்தன சேவையில் இருந்து நீக்கப்பட்டதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் லலித் ஏக்கநாயக்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/attorney-generals-department-takes-action-to-request-investigation-report-on-nilantha-jayawardena-from-cid/">நிலந்த ஜெயவர்தன குறித்த விசாரணை அறிக்கை &#8211; CID யிடம் கோர சட்டமா அதிபர் திணைக்களம் நடவடிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>மதுவரித் திணைக்களத்திற்கு புதிய ஆணையாளர் நாயகம்</title>
		<link>https://oruvan.com/new-commissioner-general-for-the-excise-department/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Tue, 08 Jul 2025 12:22:08 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[Commissioner]]></category>
		<category><![CDATA[Department]]></category>
		<category><![CDATA[Excise]]></category>
		<category><![CDATA[General]]></category>
		<category><![CDATA[New]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=25983</guid>

					<description><![CDATA[<p>மதுவரி ஆணையாளர் நாயகம் பதவிக்கு இலங்கை கடற்படையின் ஓய்வுபெற்ற கொமடோர் எம்.பீ.என்.ஏ. பேமரத்னவை நியமிப்பதற்கு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. மதுவரி ஆணையாளர் நாயகம் பதவியில் சேவையாற்றும் இலங்கை உள்நாட்டு இறைவரி சேவையின் விசேட தர அலுவலர் யு.எல்.உதயகுமார பெரேராவுக்கு 10 ஆம் திகதியுடன் 60 வயது பூர்த்தியடைவதால் அரச சேவையிலிருந்து ஓய்வு பெறவுள்ளார். &#160;</p>
<p>The post <a href="https://oruvan.com/new-commissioner-general-for-the-excise-department/">மதுவரித் திணைக்களத்திற்கு புதிய ஆணையாளர் நாயகம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>மதுவரி ஆணையாளர் நாயகம் பதவிக்கு இலங்கை கடற்படையின் ஓய்வுபெற்ற கொமடோர் எம்.பீ.என்.ஏ. பேமரத்னவை நியமிப்பதற்கு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.</p>
<p>மதுவரி ஆணையாளர் நாயகம் பதவியில் சேவையாற்றும் இலங்கை உள்நாட்டு இறைவரி சேவையின் விசேட தர அலுவலர் யு.எல்.உதயகுமார பெரேராவுக்கு 10 ஆம் திகதியுடன் 60 வயது பூர்த்தியடைவதால் அரச சேவையிலிருந்து ஓய்வு பெறவுள்ளார்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/new-commissioner-general-for-the-excise-department/">மதுவரித் திணைக்களத்திற்கு புதிய ஆணையாளர் நாயகம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சிறைச்சாலைகள் திணைக்கள உயர் அதிகாரிகளின் சொத்துக்கள் தொடர்பில் CID விசாரணை</title>
		<link>https://oruvan.com/cid-investigates-assets-of-senior-prisons-department-officials/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sat, 14 Jun 2025 06:19:25 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[CID]]></category>
		<category><![CDATA[Department]]></category>
		<category><![CDATA[investigates]]></category>
		<category><![CDATA[officials]]></category>
		<category><![CDATA[Prisons]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=23415</guid>

					<description><![CDATA[<p>சிறைச்சாலைகள் திணைக்கள உயர் அதிகாரிகளின் சொத்துக்கள் தொடர்பிலான விசாரணைகளை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவினர் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிவில் குழுக்கள் மற்றும் தனிநபர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களது வங்கிக் கணக்குகள், சொத்துக்கள் மற்றும் வாகனங்கள் தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முழுமையான தகவல்கள் தொடர்பிலான வெளிப்படுத்தல்களுக்கு நீதிமன்ற உத்தரவுகள் பெறப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் பாதாள உலக நபர்களுக்கும் இடையிலான தொடர்புகள் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/cid-investigates-assets-of-senior-prisons-department-officials/">சிறைச்சாலைகள் திணைக்கள உயர் அதிகாரிகளின் சொத்துக்கள் தொடர்பில் CID விசாரணை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>சிறைச்சாலைகள் திணைக்கள உயர் அதிகாரிகளின் சொத்துக்கள் தொடர்பிலான விசாரணைகளை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவினர் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>சிவில் குழுக்கள் மற்றும் தனிநபர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>அவர்களது வங்கிக் கணக்குகள், சொத்துக்கள் மற்றும் வாகனங்கள் தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>மேலும் முழுமையான தகவல்கள் தொடர்பிலான வெளிப்படுத்தல்களுக்கு நீதிமன்ற உத்தரவுகள் பெறப்படும் எனவும்<br />
கூறப்பட்டுள்ளது.</p>
<p>சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் பாதாள உலக நபர்களுக்கும் இடையிலான தொடர்புகள் மற்றும் ஜனாதிபதி மன்னிப்புகளை தவறாகப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.</p>
<p>நீண்டகாலமாக பணியாற்றிய அதிகாரிகளின் இடமாற்றங்கள் உட்பட துறை மறுசீரமைப்பு தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.</p>
<p>இதனிடையே, நீதி அமைச்சின் செயலாளர் உட்பட உயர் அரச அதிகாரிகள் பலர், ஜனாதிபதி மன்னிப்பை கைதிகளை விடுவிப்பதற்காக தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படுவது தொடர்பாக விசாரிக்கப்படுவார்கள் என பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல கூறினார்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/cid-investigates-assets-of-senior-prisons-department-officials/">சிறைச்சாலைகள் திணைக்கள உயர் அதிகாரிகளின் சொத்துக்கள் தொடர்பில் CID விசாரணை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>கலிப்சோ ரயிலை நானுஓயா வரை இயக்க ரயில்வே திணைக்களம் நடவடிக்கை</title>
		<link>https://oruvan.com/railway-department-takes-action-to-operate-calypso-train-up-to-nanu-oya/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sat, 29 Mar 2025 12:43:29 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[Department]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Railway]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=16291</guid>

					<description><![CDATA[<p>பயணிகளின் கோரிக்கையை ஏற்று  கலிப்சோ ரயிலை நானுஓயா வரை இயக்க ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. முன்னதாக கலிப்சோ ரயில் பதுளை ரயில் நிலையத்தில் இருந்து பண்டாரவளை ரயில் நிலையம் வரை தினமும் இயக்கப்பட்டு வந்தது. இதன்படி ஏப்ரல் மாதம் 08 ஆம் திகதி முதல் ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும் பதுளையில் இருந்து நானுஓயா வரை ரயில் சேவையில் ஈடுபடவுள்ளதாக ரயில்வே முகாமைத்துவப் பணிப்பாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்தார். சுற்றுலாப் பயணிகளுக்கு காட்சிகளைக் காண வாய்ப்பளிக்கும் வகையில், [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/railway-department-takes-action-to-operate-calypso-train-up-to-nanu-oya/">கலிப்சோ ரயிலை நானுஓயா வரை இயக்க ரயில்வே திணைக்களம் நடவடிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பயணிகளின் கோரிக்கையை ஏற்று  கலிப்சோ ரயிலை நானுஓயா வரை இயக்க ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.</p>
<p>முன்னதாக கலிப்சோ ரயில் பதுளை ரயில் நிலையத்தில் இருந்து பண்டாரவளை ரயில் நிலையம் வரை தினமும் இயக்கப்பட்டு வந்தது.</p>
<p>இதன்படி ஏப்ரல் மாதம் 08 ஆம் திகதி முதல் ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும் பதுளையில் இருந்து நானுஓயா வரை ரயில் சேவையில் ஈடுபடவுள்ளதாக ரயில்வே முகாமைத்துவப் பணிப்பாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்தார்.</p>
<p>சுற்றுலாப் பயணிகளுக்கு காட்சிகளைக் காண வாய்ப்பளிக்கும் வகையில், தெம்மோதர அருகே 10 நிமிடங்களும், எல்ல 9 வளைவுப் பாலத்தில் 10 நிமிடங்களும் கலிப்சோ ரயில் நிறுத்தப்படும்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/railway-department-takes-action-to-operate-calypso-train-up-to-nanu-oya/">கலிப்சோ ரயிலை நானுஓயா வரை இயக்க ரயில்வே திணைக்களம் நடவடிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பலத்த மின்னல் தாக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை</title>
		<link>https://oruvan.com/meteorological-department-warns-of-strong-lightning-strikes/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sat, 22 Mar 2025 11:20:45 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Department]]></category>
		<category><![CDATA[lightning]]></category>
		<category><![CDATA[Meteorological]]></category>
		<category><![CDATA[strikes]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=15505</guid>

					<description><![CDATA[<p>பலத்த மின்னல் தாக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அனுராதபுரம்,வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/meteorological-department-warns-of-strong-lightning-strikes/">பலத்த மின்னல் தாக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பலத்த மின்னல் தாக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.</p>
<p>இதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அனுராதபுரம்,வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p>
<p>இதன்போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p>
<p><img fetchpriority="high" decoding="async" class="alignleft size-full wp-image-15506" src="https://oruvan.com/wp-content/uploads/2025/03/weather.jpg" alt="" width="524" height="843" srcset="https://oruvan.com/wp-content/uploads/2025/03/weather.jpg 524w, https://oruvan.com/wp-content/uploads/2025/03/weather-400x644.jpg 400w, https://oruvan.com/wp-content/uploads/2025/03/weather-250x402.jpg 250w, https://oruvan.com/wp-content/uploads/2025/03/weather-150x241.jpg 150w, https://oruvan.com/wp-content/uploads/2025/03/weather-50x80.jpg 50w, https://oruvan.com/wp-content/uploads/2025/03/weather-100x161.jpg 100w, https://oruvan.com/wp-content/uploads/2025/03/weather-200x322.jpg 200w, https://oruvan.com/wp-content/uploads/2025/03/weather-300x483.jpg 300w, https://oruvan.com/wp-content/uploads/2025/03/weather-350x563.jpg 350w, https://oruvan.com/wp-content/uploads/2025/03/weather-450x724.jpg 450w, https://oruvan.com/wp-content/uploads/2025/03/weather-500x804.jpg 500w" sizes="(max-width: 524px) 100vw, 524px" /></p>
<p>The post <a href="https://oruvan.com/meteorological-department-warns-of-strong-lightning-strikes/">பலத்த மின்னல் தாக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>அரசாங்க அச்சுத் திணைக்களத்தில் பதற்றம்</title>
		<link>https://oruvan.com/security-officer-threatens-employees-with-knife-at-printing-department/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Thu, 13 Feb 2025 07:39:25 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[Department]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[officer]]></category>
		<category><![CDATA[Printing]]></category>
		<category><![CDATA[security]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<category><![CDATA[threatens]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=10239</guid>

					<description><![CDATA[<p>அரசாங்க அச்சுத் திணைக்களத்தில் பாதுகாப்பு அதிகாரிக்கும் ஒருவருக்கும் ஊழியர்கள் சிலருக்கும் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து பதற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஊழியர்கள் சிற்றுண்டிச்சாலையில் உண்பதற்கு மறுத்ததால், வெளியில் இருந்து உணவு வாங்குவதற்காக வளாகத்தை விட்டு வெளியேற பாதுகாப்பு அதிகாரி அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது. இதன்போது ​​பாதுகாப்பு அதிகாரி காவலர் அறையில் இருந்து கத்தியை எடுத்து ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்கத் தலைவர்களை மிரட்டியதாகக் கூறப்படுகிறது. சம்பவத்தைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பாதுகாப்பு அதிகாரி பொரெல்ல பொலிஸ் நிலையத்திற்குச் சென்று பொலிஸாருக்கு [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/security-officer-threatens-employees-with-knife-at-printing-department/">அரசாங்க அச்சுத் திணைக்களத்தில் பதற்றம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>அரசாங்க அச்சுத் திணைக்களத்தில் பாதுகாப்பு அதிகாரிக்கும் ஒருவருக்கும் ஊழியர்கள் சிலருக்கும் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து பதற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>ஊழியர்கள் சிற்றுண்டிச்சாலையில் உண்பதற்கு மறுத்ததால், வெளியில் இருந்து உணவு வாங்குவதற்காக வளாகத்தை விட்டு வெளியேற பாதுகாப்பு அதிகாரி அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது.</p>
<p>இதன்போது ​​பாதுகாப்பு அதிகாரி காவலர் அறையில் இருந்து கத்தியை எடுத்து ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்கத் தலைவர்களை மிரட்டியதாகக் கூறப்படுகிறது.</p>
<p>சம்பவத்தைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பாதுகாப்பு அதிகாரி பொரெல்ல பொலிஸ் நிலையத்திற்குச் சென்று பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/security-officer-threatens-employees-with-knife-at-printing-department/">அரசாங்க அச்சுத் திணைக்களத்தில் பதற்றம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>கடற்றொழில், நீரியல்வளத்துறை திணைக்களத்தின் யாழ்.மாவட்ட அலுவலகத்துக்கு அமைச்சர்  திடீர் கள விஜயம்</title>
		<link>https://oruvan.com/minister-visits-jaffna-district-office-of-the-department-of-fisheries-and-aquatic-resources/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Tue, 11 Feb 2025 12:28:42 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[Department]]></category>
		<category><![CDATA[District]]></category>
		<category><![CDATA[Fisheries]]></category>
		<category><![CDATA[Jaffna]]></category>
		<category><![CDATA[Minister]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[office]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<category><![CDATA[visits]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=10071</guid>

					<description><![CDATA[<p>கடற்றொழில் மற்றும் நீரியல் கடல் வளங்கள் அமைச்சரும், யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர், கடற்றொழில், நீரியல்வளத்துறை திணைக்களத்தின் யாழ்.மாவட்ட அலுவலகத்துக்கு இன்று  செவ்வாய்க்கிழமை (11.02.2025) திடீர் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டார். மேற்படி திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் சுதாகரனுடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட அமைச்சர், முக்கிய பல விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்தார். திணைக்களம் ஊடாக மீனவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சேவைகள் முறையாக இடம்பெறுகின்றனவா, சேவைகளை வழங்குவதில் உள்ள குறைப்பாடுகளை நிவர்த்தி செய்வதற்கு எவ்வாறான வளங்கள் தேவை, மீனவர்களின் தரவுகள் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/minister-visits-jaffna-district-office-of-the-department-of-fisheries-and-aquatic-resources/">கடற்றொழில், நீரியல்வளத்துறை திணைக்களத்தின் யாழ்.மாவட்ட அலுவலகத்துக்கு அமைச்சர்  திடீர் கள விஜயம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>கடற்றொழில் மற்றும் நீரியல் கடல் வளங்கள் அமைச்சரும், யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர், கடற்றொழில், நீரியல்வளத்துறை திணைக்களத்தின் யாழ்.மாவட்ட அலுவலகத்துக்கு இன்று  செவ்வாய்க்கிழமை (11.02.2025) திடீர் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டார்.</p>
<p>மேற்படி திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் சுதாகரனுடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட அமைச்சர், முக்கிய பல விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்தார்.</p>
<p>திணைக்களம் ஊடாக மீனவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சேவைகள் முறையாக இடம்பெறுகின்றனவா, சேவைகளை வழங்குவதில் உள்ள குறைப்பாடுகளை நிவர்த்தி செய்வதற்கு எவ்வாறான வளங்கள் தேவை, மீனவர்களின் தரவுகள் என்பன பற்றி அமைச்சர் கேட்டறிந்தார்.</p>
<p>அத்துடன்,  இந்திய மீனவர்கள் கைது செய்யப்படும்போது கைப்பற்றப்பட்ட படகுகளின் நிலை பற்றியும் அமைச்சர் அவதானம் செலுத்தினார்.</p>
<p>அரசாங்கம் மூலம் மீனவர்களுக்கென வழங்கப்படும் நிவாரணங்களை எவ்வித தடையுமின்றி உரியவகையில் பெற்றுக்கொள்வதற்குரிய சூழ்நிலை உள்ளதா என்பது பற்றியும் அமைச்சர், அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/minister-visits-jaffna-district-office-of-the-department-of-fisheries-and-aquatic-resources/">கடற்றொழில், நீரியல்வளத்துறை திணைக்களத்தின் யாழ்.மாவட்ட அலுவலகத்துக்கு அமைச்சர்  திடீர் கள விஜயம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை &#8211; பரீட்சைகள் திணைக்களத்தின் இறுதி முடிவு</title>
		<link>https://oruvan.com/grade-5-exam-leak-exam-department-gives-final-solution/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Thu, 02 Jan 2025 06:00:55 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Department]]></category>
		<category><![CDATA[exam]]></category>
		<category><![CDATA[final]]></category>
		<category><![CDATA[gives]]></category>
		<category><![CDATA[Grade 5]]></category>
		<category><![CDATA[leak]]></category>
		<category><![CDATA[solution]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=4976</guid>

					<description><![CDATA[<p>தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் கசிந்த 3 வினாக்களுக்கு உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு அமைவாக &#8216;இலவச மதிப்பெண்&#8217; வழங்குவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார். அண்மையில் நிறைவடைந்த தரம் 05 இற்கான புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் வினாத்தாளின் முன்கூட்டியே வௌியான மூன்று வினாக்களுக்கு இலவச மதிப்பெண்கள் வழங்குவது அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகும் என உயர் நீதிமன்றம் நேற்றுமுன்தினம் தீர்ப்பளித்தது. இந்த பிரச்னைக்கு தீர்வு [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/grade-5-exam-leak-exam-department-gives-final-solution/">தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை &#8211; பரீட்சைகள் திணைக்களத்தின் இறுதி முடிவு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் கசிந்த 3 வினாக்களுக்கு உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு அமைவாக &#8216;இலவச மதிப்பெண்&#8217; வழங்குவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.</p>
<p>பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார்.</p>
<p>அண்மையில் நிறைவடைந்த தரம் 05 இற்கான புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் வினாத்தாளின் முன்கூட்டியே வௌியான மூன்று வினாக்களுக்கு இலவச மதிப்பெண்கள் வழங்குவது அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகும் என உயர் நீதிமன்றம் நேற்றுமுன்தினம் தீர்ப்பளித்தது.</p>
<p>இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், வல்லுனர்கள் முன்வைத்த மூன்று பரிந்துரைகளில், பொருத்தமான பரிந்துரையை தேர்வு செய்து, உடனடியாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி, பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்திற்கு நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டது.</p>
<p>மேலும், இந்த வினாத்தாள்கள் வெளியானதில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர்களான, ஐ.ஜி.எஸ். பிரேமதிலக மூன்று மில்லியன் ரூபாவையும், சமிந்த குமார இளங்கசிங்க இரண்டு மில்லியன் ரூபாவையும் அரசாங்கத்திற்கு இழப்பீடாக செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.</p>
<p>பரீட்சையில் தோற்றிய மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் தாக்கல் செய்த நான்கு அடிப்படை உரிமை மனுக்களை விசாரணை செய்த யசந்த கோதாகொட, குமுதுனி விக்கிரமசிங்க மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இந்த தீர்ப்பை அறிவித்தது.</p>
<p>தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் வினாத்தாளில் மூன்று கேள்விகள் முன்கூட்டியே வெளியிடப்பட்டதன் காரணமாக, பரீட்சையில் தோற்றிய அனைத்து மாணவர்களுக்கும் இலவச மதிப்பெண்கள் வழங்குவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்தால் தமக்கு அநீதி இழைக்கப்படுவதாக மனுதாரர்கள் குறிப்பிட்டிருந்தனர்.</p>
<p>இதனூடாக, தங்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பு ஒன்றை வழங்குமாறு கோரி இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.</p>
<p>The post <a href="https://oruvan.com/grade-5-exam-leak-exam-department-gives-final-solution/">தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை &#8211; பரீட்சைகள் திணைக்களத்தின் இறுதி முடிவு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>கலால் திணைக்களத்துக்கு 200 பில்லியன் வருவாய்</title>
		<link>https://oruvan.com/200-billion-revenue-for-the-excise-department/</link>
		
		<dc:creator><![CDATA[Kanooshiya Pushpakumar]]></dc:creator>
		<pubDate>Fri, 13 Dec 2024 10:27:10 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[200 billion]]></category>
		<category><![CDATA[Department]]></category>
		<category><![CDATA[Excise]]></category>
		<category><![CDATA[for]]></category>
		<category><![CDATA[revenue]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=2409</guid>

					<description><![CDATA[<p>இந்த ஆண்டு கலால் வரி வருவாய் 200 பில்லியனைத் தாண்டியுள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளது. 2024ஆம் ஆண்டு எதிர்பார்க்கப்பட்ட வருமானம் 232 பில்லியன் ரூபாவாகும் எனவும், நவம்பர் 30ஆம் திகதியாகும் போது அதிலிருந்து 200 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான தொகையை வசூலிக்க முடிந்துள்ளதாகவும் கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. கலால் திணைக்களத்தின் 120 வருட வரலாற்றில் 200 பில்லியனைத் தாண்டிய வருமானம் இதுவே முதல் தடவை ஆகும். மேலும், இந்த வருமானங்கள் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/200-billion-revenue-for-the-excise-department/">கலால் திணைக்களத்துக்கு 200 பில்லியன் வருவாய்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இந்த ஆண்டு கலால் வரி வருவாய் 200 பில்லியனைத் தாண்டியுள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p>
<p>திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளது.</p>
<p>2024ஆம் ஆண்டு எதிர்பார்க்கப்பட்ட வருமானம் 232 பில்லியன் ரூபாவாகும் எனவும், நவம்பர் 30ஆம் திகதியாகும் போது அதிலிருந்து 200 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான தொகையை வசூலிக்க முடிந்துள்ளதாகவும் கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p>
<p>கலால் திணைக்களத்தின் 120 வருட வரலாற்றில் 200 பில்லியனைத் தாண்டிய வருமானம் இதுவே முதல் தடவை ஆகும்.</p>
<p>மேலும், இந்த வருமானங்கள் மதுபான உற்பத்திக்கான கலால் வரியாகவும் புகையிலை வரிச் சட்டத்தின் கீழ் ,வரியாகவும் ஈட்டப்பட்டதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/200-billion-revenue-for-the-excise-department/">கலால் திணைக்களத்துக்கு 200 பில்லியன் வருவாய்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
