<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Colombo National Hospital Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/colombo-national-hospital/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/colombo-national-hospital/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Fri, 19 Dec 2025 03:37:51 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>Colombo National Hospital Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/colombo-national-hospital/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் பணி இடைநீக்கம்!</title>
		<link>https://oruvan.com/deputy-director-of-the-colombo-national-hospital-suspended/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Fri, 19 Dec 2025 03:37:51 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Colombo National Hospital]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=41024</guid>

					<description><![CDATA[<p>கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்‌ஷன் பெல்லனா பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். சுகாதார அமைச்சினால் முன்னெடுக்கப்பட்ட முதற்கட்ட விசாரணைகளை அடுத்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அரச மருத்துவ அதிகாரியான அவர், உரிய அனுமதியின்றி ஊடகங்களுக்குக் கருத்துக்களைத் தெரிவித்ததன் மூலம் நாட்டில் சர்ச்சைக்குரிய சூழலை ஏற்படுத்தியதுடன், பொதுமக்களிடையே அமைதியின்மையையும் உருவாக்கியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஒரு பொறுப்பான பதவியில் இருந்து கொண்டு, திணைக்கள விதிமுறைகளை மீறிச் செயற்பட்டமைக்காகவே அவர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகச் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/deputy-director-of-the-colombo-national-hospital-suspended/">கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் பணி இடைநீக்கம்!</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்‌ஷன் பெல்லனா பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.</p>
<p>சுகாதார அமைச்சினால் முன்னெடுக்கப்பட்ட முதற்கட்ட விசாரணைகளை அடுத்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.</p>
<p>அரச மருத்துவ அதிகாரியான அவர், உரிய அனுமதியின்றி ஊடகங்களுக்குக் கருத்துக்களைத் தெரிவித்ததன் மூலம் நாட்டில் சர்ச்சைக்குரிய சூழலை ஏற்படுத்தியதுடன், பொதுமக்களிடையே அமைதியின்மையையும் உருவாக்கியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.</p>
<p>ஒரு பொறுப்பான பதவியில் இருந்து கொண்டு, திணைக்கள விதிமுறைகளை மீறிச் செயற்பட்டமைக்காகவே அவர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/deputy-director-of-the-colombo-national-hospital-suspended/">கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் பணி இடைநீக்கம்!</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைத்து காணாமல் போன சிசுவின் சடலம் &#8211; பொலிஸார் தீவிர விசாரணை</title>
		<link>https://oruvan.com/police-investigate-missing-infants-body-at-colombo-national-hospital/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Wed, 03 Sep 2025 08:23:53 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Colombo National Hospital]]></category>
		<category><![CDATA[Marudana Police]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=31541</guid>

					<description><![CDATA[<p>கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த சிசு ஒன்றின் உடல் காணாமல் போயுள்ளதாக மருதானை பொலிஸார் தெரிவிக்கின்றனர். தெமட்டகொட பொலிஸ் பிரிவில் உள்ள மாளிகாவத்தை ரயில்வே முற்றத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரயிலின் கழிப்பறையில் கடந்ம ஓகஸ்ட் முதலாம் திகதி சிசுவின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இந்த விவகாரம் குறித்து தெமட்டகொட பொலிஸார் விசாரணை நடத்தி, நீதவானின் உத்தரவின் பேரில், குழந்தையின் உடலை கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைத்தனர். தெமட்டகொட பொலிஸ் நிலைய அதிகாரிகள் கடந்த மாதம் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/police-investigate-missing-infants-body-at-colombo-national-hospital/">கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைத்து காணாமல் போன சிசுவின் சடலம் &#8211; பொலிஸார் தீவிர விசாரணை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த சிசு ஒன்றின் உடல் காணாமல் போயுள்ளதாக மருதானை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.</p>
<p>தெமட்டகொட பொலிஸ் பிரிவில் உள்ள மாளிகாவத்தை ரயில்வே முற்றத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரயிலின் கழிப்பறையில் கடந்ம ஓகஸ்ட் முதலாம் திகதி சிசுவின் உடல் கண்டெடுக்கப்பட்டது.</p>
<p>இந்த விவகாரம் குறித்து தெமட்டகொட பொலிஸார் விசாரணை நடத்தி, நீதவானின் உத்தரவின் பேரில், குழந்தையின் உடலை கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைத்தனர்.</p>
<p>தெமட்டகொட பொலிஸ் நிலைய அதிகாரிகள் கடந்த மாதம் 29 மற்றும் 31ஆம் திகதிகளில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறைக்குச் சென்று பரிசோதனையை மேற்கொண்டனர்.</p>
<p>எனினும், சிசுவின் உடல் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், சம்பவம் குறித்து மருதானை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்</p>
<p>The post <a href="https://oruvan.com/police-investigate-missing-infants-body-at-colombo-national-hospital/">கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைத்து காணாமல் போன சிசுவின் சடலம் &#8211; பொலிஸார் தீவிர விசாரணை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ரணிலின் உடல்நிலை &#8220;திருப்திகரமான நிலைக்கு&#8221; முன்னேறியுள்ளது</title>
		<link>https://oruvan.com/ranils-health-condition-has-improved-to-a-satisfactory-level/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Mon, 25 Aug 2025 08:56:46 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Colombo National Hospital]]></category>
		<category><![CDATA[Ranil wickramasinghe]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=30614</guid>

					<description><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உடல்நிலை &#8220;திருப்திகரமான நிலைக்கு&#8221; முன்னேறியுள்ளதாகத் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பதில் இயக்குநர் வைத்தியர் பிரதீப் விஜேசிங்க தெரிவித்துள்ளார். தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) தீவிர கண்காணிப்பில் உள்ள விக்ரமசிங்கவை, சிறப்பு வைத்தியர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் நாளை நீதிமன்றத்தில் முன்னிலையாவதற்கு தகுதியானவரா என்பது குறித்து இன்று மாலை இடம்பெறும் கலந்துரையாடலுக்கு பின்னர் முடிவு செய்யப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். லண்டனில் தனது [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/ranils-health-condition-has-improved-to-a-satisfactory-level/">ரணிலின் உடல்நிலை &#8220;திருப்திகரமான நிலைக்கு&#8221; முன்னேறியுள்ளது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உடல்நிலை &#8220;திருப்திகரமான நிலைக்கு&#8221; முன்னேறியுள்ளதாகத் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பதில் இயக்குநர் வைத்தியர் பிரதீப் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.</p>
<p>தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) தீவிர கண்காணிப்பில் உள்ள விக்ரமசிங்கவை, சிறப்பு வைத்தியர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.</p>
<p>இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் நாளை நீதிமன்றத்தில் முன்னிலையாவதற்கு தகுதியானவரா என்பது குறித்து இன்று மாலை இடம்பெறும் கலந்துரையாடலுக்கு பின்னர் முடிவு செய்யப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.</p>
<p>லண்டனில் தனது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்கிரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு அரசு நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டார்.</p>
<p>நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவர் நாளை 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p>
<p>எவ்வாறாயினும், சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர் உடல்நிலை மோசமானதை அடுத்து சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.</p>
<p>தொடர்ந்து அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பித்தக்கது.</p>
<p>ரணில் விக்கிரமசிங்கவின் வழக்கு நாளை (26) மீண்டும் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/ranils-health-condition-has-improved-to-a-satisfactory-level/">ரணிலின் உடல்நிலை &#8220;திருப்திகரமான நிலைக்கு&#8221; முன்னேறியுள்ளது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ரணிலால் நீதிமன்றில் முன்னிலையாக முடியாது!! தேசிய வைத்தியசாலையின் இயக்குநர் அறிவிப்பு</title>
		<link>https://oruvan.com/ranilal-will-not-be-able-to-appear-in-court-national-hospital-director-announces/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Sun, 24 Aug 2025 08:35:23 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Colombo]]></category>
		<category><![CDATA[Colombo National Hospital]]></category>
		<category><![CDATA[Ranil wickramasinghe]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=30521</guid>

					<description><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நீதிமன்றத்தில் முன்னிலையாக முடியாது என்று கொழும்பு தேசிய வைத்தியசாலையின் துணை இயக்குநர் வைத்தியர் ருக்‌ஷன் பெல்லனா தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை தெரிவித்துள்ளார். ரணில் விக்கிரமசிங்கவுக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாக அவரது இரத்தத்திலும் பிற உடல் அறிகுறிகளிலும் மாற்றங்கள் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நிலை &#8216;வெப்ப பக்கவாதமாக&#8217; இருக்கலாம் என்று வைத்தியர் குறிப்பிட்டுள்ளார். நீதிமன்றத்தில் முன்னிலையான நாளில் சுமார் 10 மணி [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/ranilal-will-not-be-able-to-appear-in-court-national-hospital-director-announces/">ரணிலால் நீதிமன்றில் முன்னிலையாக முடியாது!! தேசிய வைத்தியசாலையின் இயக்குநர் அறிவிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நீதிமன்றத்தில் முன்னிலையாக முடியாது என்று கொழும்பு தேசிய வைத்தியசாலையின் துணை இயக்குநர் வைத்தியர் ருக்‌ஷன் பெல்லனா தெரிவித்துள்ளார்.</p>
<p>கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை தெரிவித்துள்ளார்.</p>
<p>ரணில் விக்கிரமசிங்கவுக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாக அவரது இரத்தத்திலும் பிற உடல் அறிகுறிகளிலும் மாற்றங்கள் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>இந்த நிலை &#8216;வெப்ப பக்கவாதமாக&#8217; இருக்கலாம் என்று வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>நீதிமன்றத்தில் முன்னிலையான நாளில் சுமார் 10 மணி நேரம் கடுமையான வெப்பத்தில் நீதிமன்றத்தில் இருந்ததே இந்த நிலைக்குக் காரணம் என்றும், அந்த நேரத்தில் அவருக்கு சரியான தண்ணீர் அல்லது உணவு கிடைக்காமல் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது என்றும் வைத்தியர் கூறியுள்ளார்</p>
<p>முன்னாள் ஜனாதிபதி பல சிறப்பு மருத்துவக் குழுக்களால் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், கடுமையான மருத்துவ மேற்பார்வையின் கீழ் நீர்ச்சத்து குறைபாட்டிற்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.</p>
<p>நீரிழப்பு நிலையை முறையாக நிர்வகிக்காவிட்டால், அது சிறுநீரகங்கள், மூளை மற்றும் பிற முக்கிய உறுப்புகளைப் பாதித்து கடுமையான சிக்கல்களை ஏற்படுத்தும் என்று வைத்தியர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>எனவே, ஆபத்தைத் தடுக்க அவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்திருக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.<br />
முறையான சிகிச்சை பெற்ற பிறகு, முன்னாள் ஜனாதிபதி சுமார் இரண்டு முதல் மூன்று நாட்களில் குணமடைந்து சாதாரண நிலைக்கு திரும்ப முடியும் என்று வைத்தியர் ருக்ஷன் பெல்லனா வலியுறுத்தியுள்ளார்.</p>
<p>தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதால், நீதிமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்க முடியாது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/ranilal-will-not-be-able-to-appear-in-court-national-hospital-director-announces/">ரணிலால் நீதிமன்றில் முன்னிலையாக முடியாது!! தேசிய வைத்தியசாலையின் இயக்குநர் அறிவிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>டான் பிரியசாத் உயிரிழந்துவிட்டார் &#8211; பொலிஸார் உறுதிப்படுத்தினர்</title>
		<link>https://oruvan.com/police-confirms-death-of-dan-priyasad/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Wed, 23 Apr 2025 02:17:42 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Colombo National Hospital]]></category>
		<category><![CDATA[Dan Priyasad]]></category>
		<category><![CDATA[Laksanda Sevana]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=18052</guid>

					<description><![CDATA[<p>துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர் டான் பிரியசாத், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். நேற்று இரவு மீதொட்டமுல்லவில் உள்ள லக்சந்த செவன அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தனது வீட்டில் வைத்து டான் பிரியசாத் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருந்தது. இதில் படுகாயமடைந்த அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நேற்று (22) இரவு 9.10 மணியளவில் இனந்தெரியாத துப்பாக்கிதாரிகள் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/police-confirms-death-of-dan-priyasad/">டான் பிரியசாத் உயிரிழந்துவிட்டார் &#8211; பொலிஸார் உறுதிப்படுத்தினர்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர் டான் பிரியசாத், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.</p>
<p>நேற்று இரவு மீதொட்டமுல்லவில் உள்ள லக்சந்த செவன அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தனது வீட்டில் வைத்து டான் பிரியசாத் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருந்தது.</p>
<p>இதில் படுகாயமடைந்த அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.</p>
<p>நேற்று (22) இரவு 9.10 மணியளவில் இனந்தெரியாத துப்பாக்கிதாரிகள் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.</p>
<p>மீதொட்டமுல்லவில் உள்ள லக்சந்த செவன அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தின் மேல் தளத்தில் துப்பாக்கிச் சூடு நடந்தது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு பிஸ்டல் ரக துப்பாக்கியைப் பயன்படுத்தி நடத்தப்பட்டதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p>
<p>எவ்வாறாயினும், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான டான் பிரியசாத் உயிரிழக்கவில்லை என்றும், ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் நேற்று இரவு பொலிஸார் அறிவித்திருந்தனர்.</p>
<p>இந்நிலையில், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த டான் பிரியசாத் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று காலை உறுதிப்படுத்தியது.</p>
<p>டான் பிரியசாத்தின் தோள்பட்டையில் இரண்டு துப்பாக்கிச் சூடுகளும், மார்பில் மேலும் இரண்டு துப்பாக்கிச் சூடுகளும் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.</p>
<p>இந்த சம்பவத்தில் மற்றொருவர் லேசான காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/police-confirms-death-of-dan-priyasad/">டான் பிரியசாத் உயிரிழந்துவிட்டார் &#8211; பொலிஸார் உறுதிப்படுத்தினர்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
