<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Bangladesh Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/bangladesh/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/bangladesh/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Mon, 02 Feb 2026 10:15:43 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>Bangladesh Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/bangladesh/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை</title>
		<link>https://oruvan.com/sheikh-hasina-sentenced-to-10-years-in-prison/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Mon, 02 Feb 2026 10:15:43 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Bangladesh]]></category>
		<category><![CDATA[Bangladesh Court]]></category>
		<category><![CDATA[Sheikh Hasina]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=44304</guid>

					<description><![CDATA[<p>ஊழல் வழக்கில் பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு வங்கதேச நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. டாக்காவில் உள்ள புர்பச்சல் நியூ டவுன் அரசு திட்டத்தில் நிலங்களை ஒதுக்குவதில் முறைகேடுகள் நடந்ததாக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. டாக்கா நீதிமன்றத்தின் சிறப்பு நீதிபதி ரபியுல் ஆலம் இந்த தண்டனையை விதித்தார். இரண்டு வழக்குகளில் இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குற்றச்சாட்டுகளுக்கும் தலா ஐந்து ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதே வழக்கில், ஹசீனாவின் மருமகன் ரத்வான் முஜீப் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/sheikh-hasina-sentenced-to-10-years-in-prison/">ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஊழல் வழக்கில் பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு வங்கதேச நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.</p>
<p>டாக்காவில் உள்ள புர்பச்சல் நியூ டவுன் அரசு திட்டத்தில் நிலங்களை ஒதுக்குவதில் முறைகேடுகள் நடந்ததாக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.</p>
<p>டாக்கா நீதிமன்றத்தின் சிறப்பு நீதிபதி ரபியுல் ஆலம் இந்த தண்டனையை விதித்தார்.</p>
<p>இரண்டு வழக்குகளில் இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குற்றச்சாட்டுகளுக்கும் தலா ஐந்து ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.</p>
<p>அதே வழக்கில், ஹசீனாவின் மருமகன் ரத்வான் முஜீப் மற்றும் மருமகள் அஸ்மினா சித்திக் ஆகியோருக்கு தலா ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.</p>
<p>மற்றொரு மருமகள் துலிப் ரிஸ்வானா சித்திக் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வழக்கிலும் தலா இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.</p>
<p>மாணவர் போராட்டங்களை ஒடுக்கியதில் பங்கு வகித்ததற்காக, பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு, பங்களாதேஷூக்கான சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் (ICTB) மரண தண்டனை விதித்துள்ளது.</p>
<p>ஒகஸ்ட் 2024 இல் காவல்துறை நடவடிக்கை தொடர்பான வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. பங்களாதேஷூல் ஜனவரி மாதம் நடைபெற்ற தேர்தல்கள் மோசடியானவை என்று தீர்ப்பாயம் கண்டறிந்தது.</p>
<p>பங்களாதேஷூன் ஸ்தாபகத் தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மானின் மகள் ஹசீனா, 1996 முதல் 2001 வரையிலும், 2009 முதல் 2024 வரையிலும் பிரதமராகப் பணியாற்றினார்.</p>
<p>ஜூலை 2024 இல் தொடங்கிய மாணவர் போராட்டங்களைத் தொடர்ந்து ஒகஸ்ட் ஐந்தாம் திகதி அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டு இந்தியாவுக்குத் தப்பிச் சென்றார்.</p>
<p>இந்தியாவில் தஞ்சம் கோரிய ஹசீனாவிற்கு எதிராக பங்களாதேஷூல் பல வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/sheikh-hasina-sentenced-to-10-years-in-prison/">ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சீனாவின் கடன் வலையில் முழுமையாக சிக்கிய பங்களாதேஷ்!! இலங்கையை விட நிலைமை மோசமாகியுள்ளது</title>
		<link>https://oruvan.com/bangladesh-is-completely-caught-in-chinas-debt-trap/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Fri, 09 Jan 2026 06:57:41 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Bangladesh]]></category>
		<category><![CDATA[China]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=42759</guid>

					<description><![CDATA[<p>பங்களாதேஷ் இப்போது பொருளாதார அழுத்தத்தில் மட்டுமல்ல, சீனாவின் கடன் பொறியிலும் ஆழமாக சிக்கியுள்ளது. நிலைமை மிகவும் மோசமாக இருப்பதால், அந்நாட்டு உயர் அதிகாரிகள் கூட நாடு கடன் பொறியில் விழுந்துவிட்டதாக ஒப்புக்கொள்கிறார்கள். விவசாயம் மற்றும் கல்வி போன்ற அடிப்படைத் துறைகளின் கடன் சேவைச் செலவுகளை விடக் கடன் சேவைச் செலவுகள் அதிகமாகிவிட்டதால், கொள்கை முடிவுகளுக்கான வாய்ப்பு கிட்டத்தட்ட நீக்கப்பட்டுள்ளது. அதிகாரிகளின் கூற்றுப்படி, பங்களாதேஷ் இப்போது இலங்கையை விட மோசமான பாதையில் சென்று கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடன் வலையில் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/bangladesh-is-completely-caught-in-chinas-debt-trap/">சீனாவின் கடன் வலையில் முழுமையாக சிக்கிய பங்களாதேஷ்!! இலங்கையை விட நிலைமை மோசமாகியுள்ளது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பங்களாதேஷ் இப்போது பொருளாதார அழுத்தத்தில் மட்டுமல்ல, சீனாவின் கடன் பொறியிலும் ஆழமாக சிக்கியுள்ளது.</p>
<p>நிலைமை மிகவும் மோசமாக இருப்பதால், அந்நாட்டு உயர் அதிகாரிகள் கூட நாடு கடன் பொறியில் விழுந்துவிட்டதாக ஒப்புக்கொள்கிறார்கள்.</p>
<p>விவசாயம் மற்றும் கல்வி போன்ற அடிப்படைத் துறைகளின் கடன் சேவைச் செலவுகளை விடக் கடன் சேவைச் செலவுகள் அதிகமாகிவிட்டதால், கொள்கை முடிவுகளுக்கான வாய்ப்பு கிட்டத்தட்ட நீக்கப்பட்டுள்ளது.</p>
<p>அதிகாரிகளின் கூற்றுப்படி, பங்களாதேஷ் இப்போது இலங்கையை விட மோசமான பாதையில் சென்று கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p><strong>கடன் வலையில் சிக்கித் தவிக்கும் பங்களாதேஷ்</strong></p>
<p>பங்களாதேஷ் ஏற்கனவே கடனில் சிக்கியுள்ளது என்றும், உண்மையை தொடர்ந்து புறக்கணித்தால் பொருளாதார மீட்சி சாத்தியமற்றது என்றும் அந்நாட்டு தேசிய வருவாய் சபைத் தலைவர் எம். அப்துர் ரஹ்மான் கான் கூறியுள்ளார்.</p>
<p>2016 ஆம் ஆண்டு சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சியில் இணைந்த பின்னர் பங்களாதேஷின் கடன் சுமை வேகமாக அதிகரித்தது.</p>
<p>சீனாவிடமிருந்து 40 பில்லியன் டொலர் வரை நிதி உறுதிமொழிகளை பங்களாதேஷ் எதிர்பார்க்கிறது. இதில் கூட்டுத் திட்டங்களில் 14 பில்லியன் டொலர்களும் அடங்கும்.</p>
<p>இதன் விளைவாக, நாட்டின் கடன்-மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 34 சதவீதத்திலிருந்து 39 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.</p>
<p>உலக வங்கியின் சர்வதேச கடன் அறிக்கை 2025 இன் படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் பங்களாதேஷின் வெளிநாட்டுக் கடன் 42 சதவீதம் அதிகரித்து தோராயமாக 105 பில்லியன் டொலராக அதிகரித்துள்ளது.</p>
<p>வெளிநாட்டுக் கடன் இப்போது நாட்டின் ஏற்றுமதி வருவாயில் தோராயமாக 192 சதவீதமாக உள்ளது, அதே நேரத்தில் ஏற்றுமதிகளில் தோராயமாக 16 சதவீதம் கடன் திருப்பிச் செலுத்துவதற்கு மட்டுமே செலவிடப்படுகிறது.</p>
<p><strong>புலம்பிக்கொண்டிருக்கும் பாகிஸ்தான்</strong></p>
<p>இலங்கை ஏற்கனவே சர்வதேச அளவில் கடன் திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் உள்ளது.</p>
<p>அதேபோல், பாகிஸ்தான் இன்னும் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவிலும் சீனாவின் சுமார் 30 பில்லியன் டொலர் கடனிலும் தவித்து வருகிறது.</p>
<p>பங்களாதேஷ் உடனடியாக அதன் கடன் வாங்கும் கொள்கை, சீன திட்டங்களின் நம்பகத்தன்மை மற்றும் கடன் விதிமுறைகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் கடுமையான சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தாவிட்டால், அதன் பொருளாதாரக் கதை இலங்கையை விட வேதனையானது மற்றும் பாகிஸ்தானை விட நீடித்த ஒரு சோகமாக மாறும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/bangladesh-is-completely-caught-in-chinas-debt-trap/">சீனாவின் கடன் வலையில் முழுமையாக சிக்கிய பங்களாதேஷ்!! இலங்கையை விட நிலைமை மோசமாகியுள்ளது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பங்களாதேஷில் நாடாளுமன்ற தேர்தலுக்கான திகதி அறிவிப்பு</title>
		<link>https://oruvan.com/dates-announced-for-parliamentary-elections-in-bangladesh/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Fri, 12 Dec 2025 03:54:13 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[Bangladesh]]></category>
		<category><![CDATA[Election]]></category>
		<category><![CDATA[பங்களாதேஷ்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=40453</guid>

					<description><![CDATA[<p>முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகியதைத் தொடர்ந்து, பங்களாதேஷத்தில் புதிய பிரதமர் தெரிவுக்கான நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 12 ஆம் திகதி நடைபெறும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இந்த தேர்தலில், 300 தொகுதிகளில் சுமார் 127.6 மில்லியன் பேர் வாக்களிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு மற்றும் கடந்த வருடம் நாடு நெருக்கடிக்குள் தள்ளப்பட்ட பின்னர் அனைத்து கட்சிகளும் ஒருமித்து இணக்கம் கண்ட ஜூலை சாசனத்துக்கான வாக்குப்பதிவும் குறித்த திகதியில் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/dates-announced-for-parliamentary-elections-in-bangladesh/">பங்களாதேஷில் நாடாளுமன்ற தேர்தலுக்கான திகதி அறிவிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகியதைத் தொடர்ந்து, பங்களாதேஷத்தில் புதிய பிரதமர் தெரிவுக்கான நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 12 ஆம் திகதி நடைபெறும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.</p>
<p>இந்த தேர்தலில், 300 தொகுதிகளில் சுமார் 127.6 மில்லியன் பேர் வாக்களிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>
<p>இந்தநிலையில், பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு மற்றும் கடந்த வருடம் நாடு நெருக்கடிக்குள் தள்ளப்பட்ட பின்னர் அனைத்து கட்சிகளும் ஒருமித்து இணக்கம் கண்ட ஜூலை சாசனத்துக்கான வாக்குப்பதிவும் குறித்த திகதியில் இடம்பெறவுள்ளது. </p>
<p>இதேவேளை, வாக்காளர்கள் இரண்டு வாக்குகளையும் ஒரே நேரத்தில் செலுத்தவுள்ளதால், வாக்கு பதிவு நேரம் ஒரு மணித்தியாலத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நாட்டு தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/dates-announced-for-parliamentary-elections-in-bangladesh/">பங்களாதேஷில் நாடாளுமன்ற தேர்தலுக்கான திகதி அறிவிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பங்களாதேஷில் இருந்து வந்த நிவாரணப் பொருட்கள்</title>
		<link>https://oruvan.com/relief-supplies-from-bangladesh/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Wed, 03 Dec 2025 11:04:00 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Bangladesh]]></category>
		<category><![CDATA[Cyclone Ditwah]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=39894</guid>

					<description><![CDATA[<p>சமீபத்திய பாதகமான வானிலையால் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் மீட்புப் பணிகளை ஆதரிப்பதற்காக, பங்களாதேஷ் இன்று மதியம் மனிதாபிமான நிவாரணப் பொருட்களை இலங்கைக்கு அனுப்பியுள்ளது. அந்நாட்டு விமானப்படையின் C-130 விமானத்தில் இன்று மதியம் நிவாரணப் பொருட்கள் கொண்டுவரப்பட்டிருந்தன, பாதுகாப்பு அமைச்சின் கூடுதல் செயலாளர் மயூரி பெரேராவால் இந்தப் பொருட்கள் பெற்றுக்கொள்ளப்பட்டன. இந்த சவாலான காலகட்டத்தில் இலங்கையுடனான பங்களாதேஷின் தொடர்ச்சியான ஒற்றுமையை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில், இலங்கைக்கான பங்களாதேஷ் உயர் ஸ்தானிகர் ஆண்டலிப் எலியாஸால் இந்தப் பொருட்கள் முறையாக [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/relief-supplies-from-bangladesh/">பங்களாதேஷில் இருந்து வந்த நிவாரணப் பொருட்கள்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>சமீபத்திய பாதகமான வானிலையால் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் மீட்புப் பணிகளை ஆதரிப்பதற்காக, பங்களாதேஷ் இன்று மதியம் மனிதாபிமான நிவாரணப் பொருட்களை இலங்கைக்கு அனுப்பியுள்ளது.</p>
<p>அந்நாட்டு விமானப்படையின் C-130 விமானத்தில் இன்று மதியம் நிவாரணப் பொருட்கள் கொண்டுவரப்பட்டிருந்தன, பாதுகாப்பு அமைச்சின் கூடுதல் செயலாளர் மயூரி பெரேராவால் இந்தப் பொருட்கள் பெற்றுக்கொள்ளப்பட்டன.</p>
<p>இந்த சவாலான காலகட்டத்தில் இலங்கையுடனான பங்களாதேஷின் தொடர்ச்சியான ஒற்றுமையை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில், இலங்கைக்கான பங்களாதேஷ் உயர் ஸ்தானிகர் ஆண்டலிப் எலியாஸால் இந்தப் பொருட்கள் முறையாக ஒப்படைக்கப்பட்டன.</p>
<p>இந்நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உதவி பொருட்கள் உடனடியாக அனுப்பப்படும் என்று ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/relief-supplies-from-bangladesh/">பங்களாதேஷில் இருந்து வந்த நிவாரணப் பொருட்கள்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பங்களாதேஷில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் &#8211; டெஸ்ட் போட்டியும் நிறுத்தி வைப்பு</title>
		<link>https://oruvan.com/powerful-earthquake-hits-bangladesh-test-match-suspended/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Fri, 21 Nov 2025 07:15:40 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[#oruvan #news]]></category>
		<category><![CDATA[Bangladesh]]></category>
		<category><![CDATA[earthquake]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=38879</guid>

					<description><![CDATA[<p>பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் சக்திவாயந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி இன்று காலை 10.08 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 5.5ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கொல்கத்தா, மேற்கு வங்கம் மற்றும் வழகிழக்கு இந்தியாவின் பிற பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேவேளை, டாக்காவில் பங்களாதேஷ் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற டெஸ்ட் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/powerful-earthquake-hits-bangladesh-test-match-suspended/">பங்களாதேஷில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் &#8211; டெஸ்ட் போட்டியும் நிறுத்தி வைப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் சக்திவாயந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.</p>
<p>உள்ளூர் நேரப்படி இன்று காலை 10.08 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 5.5ஆக பதிவாகியுள்ளது.</p>
<p>இந்த நிலநடுக்கம் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>மேலும், கொல்கத்தா, மேற்கு வங்கம் மற்றும் வழகிழக்கு இந்தியாவின் பிற பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p>
<p>இதேவேளை, டாக்காவில் பங்களாதேஷ் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற டெஸ்ட் கிரிக்கெட் பேட்டியும் நிலநடுக்கம் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/powerful-earthquake-hits-bangladesh-test-match-suspended/">பங்களாதேஷில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் &#8211; டெஸ்ட் போட்டியும் நிறுத்தி வைப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பங்களாதேஷின் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் கைது</title>
		<link>https://oruvan.com/bangladeshs-former-chief-election-commissioner-arrested/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Wed, 19 Nov 2025 11:30:56 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[#oruvan #news]]></category>
		<category><![CDATA[Bangladesh]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=38715</guid>

					<description><![CDATA[<p>தேர்தல் மோசடி குற்றச்சாட்டில் பங்களாதேஷ் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் கே.எம். நூருல் ஹுடா கைது செய்யப்பட்டுள்ளார் . முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி (BNP), முன்னாள் தேர்தல் ஆணையத் தலைவர் மற்றும் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனா உட்பட 18 பேர் மீது தொடர்ந்த வழக்கின் ஒரு பகுதியாக இந்தக் கைதுகள் இடம்பெற்றுள்ளன. தேர்தல் விவகாரங்கள் தொடர்பாக முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் ஒருவர் கைது செய்யப்படுவது இதுவே [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/bangladeshs-former-chief-election-commissioner-arrested/">பங்களாதேஷின் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் கைது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>தேர்தல் மோசடி குற்றச்சாட்டில் பங்களாதேஷ் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் கே.எம். நூருல் ஹுடா கைது செய்யப்பட்டுள்ளார் .</p>
<p>முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி (BNP), முன்னாள் தேர்தல் ஆணையத் தலைவர் மற்றும் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனா உட்பட 18 பேர் மீது தொடர்ந்த வழக்கின் ஒரு பகுதியாக இந்தக் கைதுகள் இடம்பெற்றுள்ளன.</p>
<p>தேர்தல் விவகாரங்கள் தொடர்பாக முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் ஒருவர் கைது செய்யப்படுவது இதுவே முதல் முறை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.</p>
<p>77 வயதான ஹுடா, 2014, 2018 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் பங்களாதேஷில் தேர்தல்களை மேற்பார்வையிட்டார்.</p>
<p>2014, 2018 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் ஹசீனாவின் ஆட்சியின் போது பொதுத் தேர்தல்களில் மோசடி செய்ததாக ஹுடா மற்றும் 19 பேர் மீது BNP வழக்குப் பதிவு செய்தது.</p>
<p>இந்த அனைத்துத் தேர்தல்களிலும் ஹசீனா வெற்றி பெற்றார். பொலிஸாரின் துப்பறியும் பிரிவு அலுவலகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பின்னர், சட்ட நடவடிக்கைகளுக்காக ஹுடா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்.</p>
<p>டாக்காவின் வடக்கில் உள்ள ஹுடாவின் வீட்டிற்கு வெளியே ஒரு கும்பல் கூடியிருந்தது. அந்தக் கும்பல் அவரது வீட்டிற்குள் புகுந்து, அவரை இழுத்துச் சென்றது.</p>
<p>ஹுடாவை கும்பல் சுற்றி வளைத்ததாக தகவல் கிடைத்ததும், அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரைக் கைது செய்ததாக வடமேற்கு பொலிஸ் நிலையத் தலைவர் ஹபிசுர் ரஹ்மான் தெரிவித்தார்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/bangladeshs-former-chief-election-commissioner-arrested/">பங்களாதேஷின் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் கைது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>டாக்காவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது</title>
		<link>https://oruvan.com/security-has-been-tightened-in-dhaka/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Fri, 14 Nov 2025 07:33:07 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[#oruvan #news]]></category>
		<category><![CDATA[Bangladesh]]></category>
		<category><![CDATA[Sheikh Hasina]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=38247</guid>

					<description><![CDATA[<p>பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி நாடு தழுவிய போராட்டங்களைத் தொடங்கத் தயாராகி வரும் நிலையில் பாதுகாப்பு பலகப்படுத்தப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டு ஒகஸ்ட் ஐந்தாம் திகதி பிரதமர் மற்றும் அவரது அரசாங்கத்திற்கு எதிரான கடுமையான பொது எதிர்ப்பை எதிர்கொண்டு ஷேக் ஹசீனா பதவியை இராஜினாமா செய்து இந்தியாவுக்குத் தப்பிச் சென்றார். பின்னர் நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கத்திடம் ஆட்சி ஒப்படைக்கப்பட்டது, மேலும் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/security-has-been-tightened-in-dhaka/">டாக்காவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.</p>
<p>முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி நாடு தழுவிய போராட்டங்களைத் தொடங்கத் தயாராகி வரும் நிலையில் பாதுகாப்பு பலகப்படுத்தப்பட்டுள்ளது.</p>
<p>2024ஆம் ஆண்டு ஒகஸ்ட் ஐந்தாம் திகதி பிரதமர் மற்றும் அவரது அரசாங்கத்திற்கு எதிரான கடுமையான பொது எதிர்ப்பை எதிர்கொண்டு ஷேக் ஹசீனா பதவியை இராஜினாமா செய்து இந்தியாவுக்குத் தப்பிச் சென்றார்.</p>
<p>பின்னர் நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கத்திடம் ஆட்சி ஒப்படைக்கப்பட்டது, மேலும் அவாமி லீக் கட்சி தடை செய்யப்பட்டது.</p>
<p>பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட பொதுமக்கள் போராட்டக்காரர்களை சுட்டுக் கொன்றதற்காக ஷேக் ஹசீனா மீது தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு வரும் திங்கட்கிழமை வழங்கப்பட உள்ளது.</p>
<p>இத்தகைய பின்னணியில், இந்தியாவில் மறைந்திருக்கும் ஷேக் ஹசீனா, தனது ஆதரவாளர்களை போராட்டம் நடத்துமாறு வலியுறுத்தியுள்ளார்.</p>
<p>அதன்படி, சமீபத்திய நாட்களில் நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டங்கள் மற்றும் தீ வைப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பங்களாதேஷ் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.</p>
<p>சூழ்நிலை காரணமாக, போக்குவரத்து நடவடிக்கைகள் தடைசெய்யப்பட்டன, மேலும் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழக நடவடிக்கைகளை ஒன்லைனில் நடத்தவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.</p>
<p>பங்களாதேஷில் புதிய அரசாங்கத்தை நியமிக்கும் பொதுத் தேர்தல் அடுத்த பெப்ரவரியில் நடைபெற உள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/security-has-been-tightened-in-dhaka/">டாக்காவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்! வலுக்கும் கோரிக்கை</title>
		<link>https://oruvan.com/sheikh-hasina-should-be-given-death-penalty-strong-demand/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Fri, 17 Oct 2025 06:21:01 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Bangladesh]]></category>
		<category><![CDATA[Bangladesh Court]]></category>
		<category><![CDATA[Sheikh Hasina]]></category>
		<category><![CDATA[மரண தண்டனை]]></category>
		<category><![CDATA[ஷேக் ஹசீனா]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=35672</guid>

					<description><![CDATA[<p>பங்களாதேஷில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவிற்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று அந்நாட்டு சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த ஆண்டு இடம்பெற்ற போராட்டத்தை அடுத்து அதிகாரத்தில் இருந்து தூக்கியெறியப்பட்ட ஷேக் ஹசினா, இந்தியாவுக்கு தப்பிச் சென்றதுடன், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக விசாரணையில் உள்ளார். கசிந்த குரல் பதிவுகளின்படி, போராட்டக்காரர்களுக்கு எதிராக &#8220;கொடிய ஆயுதங்களைப் பயன்படுத்த&#8221; பாதுகாப்புப் படையினருக்கு ஷேக் ஹசினா உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகின்றது. எவ்வாறாயினும், இந்த குற்றச்சாட்டுகளை ஷேக் ஹசினா மறுத்துள்ளார். ஹசீனாவின் 15 ஆண்டுகால [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/sheikh-hasina-should-be-given-death-penalty-strong-demand/">ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்! வலுக்கும் கோரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பங்களாதேஷில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவிற்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று அந்நாட்டு சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
<p>கடந்த ஆண்டு இடம்பெற்ற போராட்டத்தை அடுத்து அதிகாரத்தில் இருந்து தூக்கியெறியப்பட்ட ஷேக் ஹசினா, இந்தியாவுக்கு தப்பிச் சென்றதுடன், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக விசாரணையில் உள்ளார்.</p>
<p>கசிந்த குரல் பதிவுகளின்படி, போராட்டக்காரர்களுக்கு எதிராக &#8220;கொடிய ஆயுதங்களைப் பயன்படுத்த&#8221; பாதுகாப்புப் படையினருக்கு ஷேக் ஹசினா உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.</p>
<p>எவ்வாறாயினும், இந்த குற்றச்சாட்டுகளை ஷேக் ஹசினா மறுத்துள்ளார்.</p>
<p>ஹசீனாவின் 15 ஆண்டுகால ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்த கலவரத்தில் 1,400 பேர் வரை கொல்லப்பட்டனர். 1971 ஆம் ஆண்டு சுதந்திரப் போருக்குப் பிறகு பங்களாதேஷ் கண்ட மிக மோசமான வன்முறை இதுவாகும்.</p>
<p>ஹசீனாவுக்கு 1,400 மரண தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்று கூறினார். &#8221; மனித ரீதியாக இது சாத்தியமில்லாததால், குறைந்தபட்சம் ஒன்றையாவது நாங்கள் கோருகிறோம்,&#8221; என்று தலைமை சட்டத்தரணி தாஜுல் இஸ்லாம் வலியுறுத்தியுள்ளார்.</p>
<p>&#8220;ஹசீனாவின் குறிக்கோள், தனக்கும் தனது குடும்பத்திற்கும் நிரந்தரமாக அதிகாரத்தில் ஒட்டிக்கொள்வதாகும்,&#8221; என்று இஸ்லாம் வியாழக்கிழமை நீதிமன்றத்தில் தெரிவித்தார்.</p>
<p>&#8220;அவர் ஒரு கடுமையான குற்றவாளியாக மாறிவிட்டார், அவர் செய்த கொடூரத்திற்கு எந்த வருத்தமும் காட்டவில்லை,&#8221; என்று சட்டத்தரணி தாஜுல் இஸ்லாம் தெரிவித்துள்ளார்.</p>
<p>ஹசீனாவின் முன்னாள் உள்துறை அமைச்சர் அசாதுஸ்மான் கான் கமல் மற்றும் முன்னாள் பொலிஸ் தலைவர் சவுத்ரி அப்துல்லா அல்-மாமுன் ஆகியோருக்கும் விசாரணைகள் நடைபெற்று வருகிறன.</p>
<p>கமலும் தலைமறைவாக இருப்பதால், அவருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.<br />
ஜூலை மாதம் சவுத்ரி குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். எனினும், அவருக்கு இன்னும் தண்டனை வழங்கப்படவில்லை.</p>
<p>நீதிமன்ற அவமதிப்புக்காக ஹசீனாவுக்கு ஏற்கனவே ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது, மேலும் அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளும் தனித்தனியாக சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/sheikh-hasina-should-be-given-death-penalty-strong-demand/">ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்! வலுக்கும் கோரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பங்களாதேஷில் ஆடைத் தொழிற்சாலையில் தீ விபத்து &#8211; 16 பேர் உயிரிழப்பு</title>
		<link>https://oruvan.com/fire-at-garment-factory-in-bangladesh-16-dead/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Wed, 15 Oct 2025 06:16:56 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[Bangladesh]]></category>
		<category><![CDATA[ஆடைத் தொழிற்சாலை]]></category>
		<category><![CDATA[தீ விபத்து]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=35458</guid>

					<description><![CDATA[<p>பங்களாதேஷில் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் எனவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. 16 பேரின் உடல்கள் மீட்கப்பட்டாலும், அடையாளம் காண முடியாத அளவுக்கு எரிந்து போயுள்ளதாக தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. டாக்காவின் மிர்பூர் பகுதியில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. நண்பகலில் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ, மூன்று மணி நேரத்திற்குப் பிறகு அணைக்கப்பட்டது. எனினும், அருகிலுள்ள ஒரு இரசாயனக் கிடங்கு தொடர்ந்து எரிந்து [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/fire-at-garment-factory-in-bangladesh-16-dead/">பங்களாதேஷில் ஆடைத் தொழிற்சாலையில் தீ விபத்து &#8211; 16 பேர் உயிரிழப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பங்களாதேஷில் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் எனவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.</p>
<p>16 பேரின் உடல்கள் மீட்கப்பட்டாலும், அடையாளம் காண முடியாத அளவுக்கு எரிந்து போயுள்ளதாக தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.</p>
<p>டாக்காவின் மிர்பூர் பகுதியில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.</p>
<p>நண்பகலில் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ, மூன்று மணி நேரத்திற்குப் பிறகு அணைக்கப்பட்டது.</p>
<p>எனினும், அருகிலுள்ள ஒரு இரசாயனக் கிடங்கு தொடர்ந்து எரிந்து கொண்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.</p>
<p>இந்த இரசாயனக் கிடங்கில் ப்ளீச்சிங் பவுடர், பிளாஸ்டிக் மற்றும் ஹைட்ரஜன் பெராக்சைடு சேமிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இரண்டு கட்டிடங்களில் எந்த கட்டிடம் முதலில் தீப்பிடித்தது என்பதை தீயணைப்பு சேவை அதிகாரிகள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.</p>
<p>எவ்வாறாயினும், பாதிக்கப்பட்டவர்கள் &#8220;அதிக நச்சு வாயுவை&#8221; சுவாசித்த பின்னர் உயிரிழந்திருக்கலாம் என தீயணைப்பு சேவை இயக்குநர் முகமது தாஜுல் இஸ்லாம் சவுத்ரி  தெரிவித்துள்ளார்.</p>
<p>தொழிற்சாலை மற்றும் இரசாயன கிடங்கின் உரிமையாளர்களைக் கண்டுபிடிக்க பொலிஸார் மற்றும் இராணுவ அதிகாரிகள் முயற்சித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.</p>
<p>குறித்த இரசாயன கிடங்கு சட்டப்பூர்வமாக இயங்கி வருகிறதா என்பது குறித்தும் விசாரணை நடந்து வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/fire-at-garment-factory-in-bangladesh-16-dead/">பங்களாதேஷில் ஆடைத் தொழிற்சாலையில் தீ விபத்து &#8211; 16 பேர் உயிரிழப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இலங்கைக்கு எதிரான போட்டியில் பங்களாதேஷ் வெற்றி</title>
		<link>https://oruvan.com/bangladesh-win-against-sri-lanka/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sun, 21 Sep 2025 06:29:53 +0000</pubDate>
				<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[against]]></category>
		<category><![CDATA[Bangladesh]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[sports]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=33184</guid>

					<description><![CDATA[<p>ஆசிய கிண்ணத் தொடரின் சூப்பர் 4 சுற்றின் இலங்கை அணிக்கு எதிரான நேற்றைய (20) போட்டியில் பங்களாதேஷ் அணி 04 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. டுபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் உள்ளூர் நேரப்படி இரவு 08 மணிக்கு ஆரம்பமான இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 07 விக்கெட்டுக்களை இழந்து 168 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/bangladesh-win-against-sri-lanka/">இலங்கைக்கு எதிரான போட்டியில் பங்களாதேஷ் வெற்றி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஆசிய கிண்ணத் தொடரின் சூப்பர் 4 சுற்றின் இலங்கை அணிக்கு எதிரான நேற்றைய (20) போட்டியில் பங்களாதேஷ் அணி 04 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.</p>
<p>டுபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் உள்ளூர் நேரப்படி இரவு 08 மணிக்கு ஆரம்பமான இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.</p>
<p>இதன்படி முதலில் துடுப்பாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 07 விக்கெட்டுக்களை இழந்து 168 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.</p>
<p>துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் தசுன் சானக்க ஆட்டமிழக்காது 64 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார். குசல் மெண்டிஸ் 34 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.</p>
<p>பங்களாதேஷ் அணி சார்பில் பந்துவீச்சில் முஸ்தாபிசுர் ரஹ்மான் 03 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.</p>
<p>இந்நிலையில் 169 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய பங்களாதேஷ் அணி 19.5 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து 169 ஓட்டங்களை பெற்று வெற்றி அடைந்தது.</p>
<p>பங்களாதேஷ் அணி சார்பில் துடுப்பாட்டத்தில் சயிப் ஹசன் 61 ஓட்டங்களையும் Towhid Hridoy 58 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தனர்.</p>
<p>இலங்கை சார்பில் பந்துவீச்சில் தசுன் சானக்க மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/bangladesh-win-against-sri-lanka/">இலங்கைக்கு எதிரான போட்டியில் பங்களாதேஷ் வெற்றி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
