<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>ரணில் விக்கிரமசிங்க Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d%e0%ae%95/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/ரணில்-விக்கிரமசிங்க/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Fri, 02 Jan 2026 05:02:44 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>ரணில் விக்கிரமசிங்க Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/ரணில்-விக்கிரமசிங்க/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>நாடாளுமன்றம் வருமாறு ரணிலுக்கு மீண்டும் அழைப்பு</title>
		<link>https://oruvan.com/ranil-again-invited-to-parliament/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Fri, 02 Jan 2026 05:02:44 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[ரணில் விக்கிரமசிங்க]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=42195</guid>

					<description><![CDATA[<p>“நாடாளுமன்றத்துக்கு மீண்டும் வருமாறு நாம்தான் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். ஆனால் இதில் அவர் ஆர்வம் காட்டவில்லை. எனினும், நாட்டுக்கு தேவையேற்படும்பட்சத்தில் பொறுப்புகளில் இருந்து தப்பியோடும் தலைவர் அவர் அல்ல. பொறுப்பை ஏற்பார்.” இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னபிரிய தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியை ஒன்றிணைப்பதற்குரிய பேச்சு வெற்றியளித்துள்ளது எனவும் அவர் கூறினார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/ranil-again-invited-to-parliament/">நாடாளுமன்றம் வருமாறு ரணிலுக்கு மீண்டும் அழைப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>“நாடாளுமன்றத்துக்கு மீண்டும் வருமாறு நாம்தான் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அழைப்பு விடுத்துள்ளோம்.</p>
<p>ஆனால் இதில் அவர் ஆர்வம் காட்டவில்லை. எனினும், நாட்டுக்கு தேவையேற்படும்பட்சத்தில் பொறுப்புகளில் இருந்து தப்பியோடும் தலைவர் அவர் அல்ல. பொறுப்பை ஏற்பார்.”</p>
<p>இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னபிரிய தெரிவித்தார்.</p>
<p>ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியை ஒன்றிணைப்பதற்குரிய பேச்சு வெற்றியளித்துள்ளது எனவும் அவர் கூறினார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/ranil-again-invited-to-parliament/">நாடாளுமன்றம் வருமாறு ரணிலுக்கு மீண்டும் அழைப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ரணிலுக்கு எதிரான வழக்கு ஜனவரிக்கு ஒத்திவைப்பு</title>
		<link>https://oruvan.com/case-against-ranil-postponed-to-january/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Wed, 29 Oct 2025 10:17:06 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Court]]></category>
		<category><![CDATA[Ranil wickramasinghe]]></category>
		<category><![CDATA[ரணில் விக்கிரமசிங்க]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=36777</guid>

					<description><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ஊழல் எதிர்வரும் ஜனவரி 28 ஆம் திகதிக்கு ஒத்திவைத்து கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று (29) உத்தரவிட்டது. அரச நிதியை தவறாக பயன்படுத்தியதாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு , இன்று பிற்பகல் நீதிவான் முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இலஞ்ச ஒழிப்பு ஆணையத்தால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அழைப்பாணையின்படி ரணில் விக்ரமசிங்க இன்று நீதிமன்றத்தில் முன்னிலையானார். வழக்கு விசாரணையின் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/case-against-ranil-postponed-to-january/">ரணிலுக்கு எதிரான வழக்கு ஜனவரிக்கு ஒத்திவைப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ஊழல் எதிர்வரும் ஜனவரி 28 ஆம் திகதிக்கு ஒத்திவைத்து கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று (29) உத்தரவிட்டது.</p>
<p>அரச நிதியை தவறாக பயன்படுத்தியதாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு , இன்று பிற்பகல் நீதிவான் முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.</p>
<p>இலஞ்ச ஒழிப்பு ஆணையத்தால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அழைப்பாணையின்படி ரணில் விக்ரமசிங்க இன்று நீதிமன்றத்தில் முன்னிலையானார்.</p>
<p>வழக்கு விசாரணையின் சமர்ப்பிப்புகளுக்குப் பிறகு, அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்காக வழக்கை அடுத்த ஆண்டு ஜனவரி 28 ஆம் திகதி மீண்டும் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.</p>
<p>இந்த வழக்கு முன்னாள் ஜனாதிபதி, அரச தலைவராகப் பணியாற்றியபோது, ​​பிரித்தானிய பல்கலைக்கழகத்தில் தனது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக லண்டனுக்குச் செல்ல அரசாங்க நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பானது.</p>
<p>குற்றப் புலனாய்வுப் பிரிவு (CID) முன்னிலையில் முன்னதாக வாக்குமூலம் அளிக்க ஆஜரான பின்னர், 2025 ஒகஸ்ட் 22 அன்று ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டார்.</p>
<p>பின்னர் அவர் கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு ஆகஸ்ட் 26 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.</p>
<p>முன்னாள் ஜனாதிபதியின் சார்பாக சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ அறிக்கைகளை பரிசீலித்த கோட்டை நீதிவான் நிலுபுலி லங்காபுர, தலா 5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள மூன்று சரீரப் பிணைகளில் அவரை விடுவிக்க உத்தரவிட்டு, வழக்கை இன்று (29) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/case-against-ranil-postponed-to-january/">ரணிலுக்கு எதிரான வழக்கு ஜனவரிக்கு ஒத்திவைப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>மெல்சிரிபுர விபத்து &#8211; ரணில் மற்றும் மகிந்த இரங்கல்</title>
		<link>https://oruvan.com/cable-car-accident-at-na-uyana-ranil-and-mahinda-express-condolences/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Thu, 25 Sep 2025 10:24:29 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Mahinda Rajapaksa]]></category>
		<category><![CDATA[Ranil Wickremesinghe]]></category>
		<category><![CDATA[மகிந்த ராஜபக்ச]]></category>
		<category><![CDATA[ரணில் விக்கிரமசிங்க]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=33560</guid>

					<description><![CDATA[<p>குருணாகலை – மெல்சிரிபுரவின் பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த தேரர்களுக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரங்கல் தெரிவித்துள்ளார். அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இந்நிலையில், விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தேரர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார் இந்த உலகத்தின் துன்பத்தை முடிவுக்குக் கொண்டுவர காட்டில் வளர்ந்த துறவிகள் புத்தர் போதித்த நிலையற்ற தன்மையை விளக்கச் சென்றதாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். உயிரிழந்த தேரர்கள் தாங்கள் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/cable-car-accident-at-na-uyana-ranil-and-mahinda-express-condolences/">மெல்சிரிபுர விபத்து &#8211; ரணில் மற்றும் மகிந்த இரங்கல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>குருணாகலை – மெல்சிரிபுரவின் பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த தேரர்களுக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரங்கல் தெரிவித்துள்ளார்.</p>
<p>அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.</p>
<p>இந்நிலையில், விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தேரர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்</p>
<p>இந்த உலகத்தின் துன்பத்தை முடிவுக்குக் கொண்டுவர காட்டில் வளர்ந்த துறவிகள் புத்தர் போதித்த நிலையற்ற தன்மையை விளக்கச் சென்றதாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.</p>
<p>உயிரிழந்த தேரர்கள் தாங்கள் தேடிய நிர்வாணத்தை அடைய பிரார்த்திப்பதாக முன்னாள் ஜனாதிபதி தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p>இதற்கிடையில் இந்தச் துயர சம்பவம் குறித்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் தனது ஆழ்ந்த வருத்தத்தை சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.</p>
<p>&#8220;அந்த எதிர்பாராத விபத்தில் உயிரிழந்த உள்ளூர் மற்றும் வெளிநாட்டு தேரர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p>
<p>வெளிநாட்டு துறவிகள் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்தியா, ரஷ்யா மற்றும் ருமேனியா நாடுகளுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.</p>
<p>தங்கள் ஆன்மீக இலக்குகளை அடைய பசுமையான மற்றும் அமைதியான சூழலில் தியானத்தில் ஈடுபட்ட மறைந்த தேரர்கள் உச்ச நிர்வாணத்தை அடைய பிரார்த்திக்கிறேன்.</p>
<p>வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் தேரர்கள் விரைவில் குணமடையவும் பிரார்த்திக்கிறேன்,&#8221; என்று மகிந்த ராஜபக்ச தனது பதிவில் மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/cable-car-accident-at-na-uyana-ranil-and-mahinda-express-condolences/">மெல்சிரிபுர விபத்து &#8211; ரணில் மற்றும் மகிந்த இரங்கல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>வெளிநாடு செல்லத் தயாராகும் ரணில்</title>
		<link>https://oruvan.com/ranil-prepares-to-go-abroad/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Wed, 24 Sep 2025 07:09:26 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Ranil wickramasinghe]]></category>
		<category><![CDATA[ரணில்]]></category>
		<category><![CDATA[ரணில் விக்கிரமசிங்க]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=33433</guid>

					<description><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது உடல்நிலை காரணமாக வெளிநாடு செல்ல தயாராகி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தென்னிலங்கை ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, முன்னாள் ஜனாதிபதி ரணில் பிரான்ஸ், இங்கிலாந்து அல்லது இந்தியா போன்ற ஒரு நாட்டிற்கு செல்ல தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போதைய அரசியல் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, எதிர்க்கட்சியின் பொறுப்பை ஏற்று எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முன்னாள் ஜனாதிபதிக்கு சமீபத்தில் அழைப்புகள் வந்தன. முன்னாள் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/ranil-prepares-to-go-abroad/">வெளிநாடு செல்லத் தயாராகும் ரணில்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது உடல்நிலை காரணமாக வெளிநாடு செல்ல தயாராகி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p>
<p>தென்னிலங்கை ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இதன்படி, முன்னாள் ஜனாதிபதி ரணில் பிரான்ஸ், இங்கிலாந்து அல்லது இந்தியா போன்ற ஒரு நாட்டிற்கு செல்ல தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>தற்போதைய அரசியல் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, எதிர்க்கட்சியின் பொறுப்பை ஏற்று எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முன்னாள் ஜனாதிபதிக்கு சமீபத்தில் அழைப்புகள் வந்தன.</p>
<p>முன்னாள் ஜனாதிபதி ரணிலும் இந்த விஷயத்தில் கவனம் செலுத்தியுள்ளார், மேலும் ஆயிரம் அரசியல் கூட்டங்களை நடத்தும் திட்டம் குறித்து முன்னாள் ஜனாதிபதி தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.</p>
<p>எவ்வாறாயினும், அவரது உடல்நிலை மற்றும் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் காரணமாக ரணில் விக்கிரமசிங்க வெளிநாடு செல்ல தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>இந்த ஆண்டு இறுதிக்குள் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளிநாடு செல்வார் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/ranil-prepares-to-go-abroad/">வெளிநாடு செல்லத் தயாராகும் ரணில்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ரணிலுடன் சந்தோஷ் ஜா சந்திப்பு &#8211; புது டில்லிக்கு அறிக்கை அளிக்கவும் தயார்</title>
		<link>https://oruvan.com/santosh-jha-meets-ranil-ready-to-report-to-new-delhi/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Sun, 14 Sep 2025 10:46:52 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Ranil wickramasinghe]]></category>
		<category><![CDATA[Santosh Jha]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[சந்தோஷ் ஜா]]></category>
		<category><![CDATA[ரணில் விக்கிரமசிங்க]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=32606</guid>

					<description><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிற்கும் இடையிலான சந்திப்பு கொழும்பில் நடைபெற்றது. கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் வேண்டுகோளின் பேரில் இந்த சந்திப்பு நடைபெற்றது. ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. உலக அரசியல் மற்றும் இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து இந்த சந்திப்பின் போது விரிவான கலந்தரையாடல்கள் நடத்தப்பட்டன. நேபாளத்தில் தற்போதைய அரசியல் ஸ்திரமின்மை குறித்து தனது நிலைப்பாட்டை ரணில் விக்கிரமசிங்க இந்திய உயர் ஸ்தானிகரிடம் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/santosh-jha-meets-ranil-ready-to-report-to-new-delhi/">ரணிலுடன் சந்தோஷ் ஜா சந்திப்பு &#8211; புது டில்லிக்கு அறிக்கை அளிக்கவும் தயார்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிற்கும் இடையிலான சந்திப்பு கொழும்பில் நடைபெற்றது.</p>
<p>கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் வேண்டுகோளின் பேரில் இந்த சந்திப்பு நடைபெற்றது. ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.</p>
<p>உலக அரசியல் மற்றும் இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து இந்த சந்திப்பின் போது விரிவான கலந்தரையாடல்கள் நடத்தப்பட்டன.</p>
<p>நேபாளத்தில் தற்போதைய அரசியல் ஸ்திரமின்மை குறித்து தனது நிலைப்பாட்டை ரணில் விக்கிரமசிங்க இந்திய உயர் ஸ்தானிகரிடம் தெரிவித்தார்.</p>
<p>முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இந்திய உயர் ஸ்தானிகருக்கும் இடையிலான கலந்துரையாடல் குறித்து இந்திய உயர் ஸ்தானிகர் புது டில்லிக்கு அறிக்கை அளிக்க உள்ளார் என்றும் அறியப்படுகிறது.</p>
<p>The post <a href="https://oruvan.com/santosh-jha-meets-ranil-ready-to-report-to-new-delhi/">ரணிலுடன் சந்தோஷ் ஜா சந்திப்பு &#8211; புது டில்லிக்கு அறிக்கை அளிக்கவும் தயார்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ரணிலை சந்தித்துப் பேசிய சீன தூதுவர்</title>
		<link>https://oruvan.com/chinese-ambassador-meets-ranil/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Fri, 12 Sep 2025 06:17:14 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Qi Zhenhong]]></category>
		<category><![CDATA[Ranil wickramasinghe]]></category>
		<category><![CDATA[குய் ஜென்ஹோங்]]></category>
		<category><![CDATA[சீன தூதுவர்]]></category>
		<category><![CDATA[ரணில் விக்கிரமசிங்க]]></category>
		<category><![CDATA[චී චෙන් හොං]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=32368</guid>

					<description><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சீன தூதுவர் குய் ஜென்ஹோங் சந்தித்துப் பேசியுள்ளார். இந்த சந்திப்பு கொழும்பு மலர் வீதியில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. அண்மையில் கைது செய்யப்பட்டிருந்த ரணில் விக்கிரமசிங்க உடல் நல குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எவ்வாறாயினும், அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார். அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்ட பின்னர் சந்திக்கும் உத்தியோகபூர்வ முதல் இராஜதந்திர சந்திப்பு இதுவாகும். ரணில் விக்கிரமசிங்க மற்றும் சீனத் தூதருக்கும் இடையிலான கலந்துரையாடல் இலங்கையின் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/chinese-ambassador-meets-ranil/">ரணிலை சந்தித்துப் பேசிய சீன தூதுவர்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சீன தூதுவர் குய் ஜென்ஹோங் சந்தித்துப் பேசியுள்ளார்.</p>
<p>இந்த சந்திப்பு கொழும்பு மலர் வீதியில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.</p>
<p>அண்மையில் கைது செய்யப்பட்டிருந்த ரணில் விக்கிரமசிங்க உடல் நல குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.</p>
<p>எவ்வாறாயினும், அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார். அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்ட பின்னர் சந்திக்கும் உத்தியோகபூர்வ முதல் இராஜதந்திர சந்திப்பு இதுவாகும்.</p>
<p>ரணில் விக்கிரமசிங்க மற்றும் சீனத் தூதருக்கும் இடையிலான கலந்துரையாடல் இலங்கையின் அரசியல் நிலைமை மற்றும் சர்வதேச மட்டத்தில் கவனம் செலுத்தியது.</p>
<p>இதேவேளை, விஜேராம இல்லத்தில் இருந்து வெளியேறிய முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவையும் சீன தூதுவர் நேற்று சந்தித்துப் பேசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>மேலும், சீனத் தூதர் எதிர்காலத்தில் மற்றொரு உயர் மட்ட முன்னாள் சக்திவாய்ந்த அரசியல்வாதியைச் சந்தித்து கலந்துரையாடவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/chinese-ambassador-meets-ranil/">ரணிலை சந்தித்துப் பேசிய சீன தூதுவர்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ரணிலின் லண்டன் பயணம் குறித்து வாக்குமூலம் பெற சமன் ஏக்கநாயக்கவிற்கு அழைப்பு</title>
		<link>https://oruvan.com/saman-ekanayake-summoned-to-testify-regarding-ranils-london-trip/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Sun, 31 Aug 2025 04:59:51 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Ranil wickramasinghe]]></category>
		<category><![CDATA[Saman Ekanayake]]></category>
		<category><![CDATA[சமன் ஏக்கநாயக்க]]></category>
		<category><![CDATA[ரணில் விக்கிரமசிங்க]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=31165</guid>

					<description><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய இராச்சிய விஜயம் மற்றும் அந்த விஜயத்திற்காக அரச நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து வாக்குமூலம் பெற்றுக்கொள்ள இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வோல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகத்தில் இருந்து ரணிலுக்கு கிடைத்த அழைப்புக் கடிதம் &#8216;போலியானது&#8217; என்ற குற்றச்சாட்டிற்கு பதிலளிக்க சமன் ஏகநாயக்க மேலும் ஆதாரங்களை முன்வைக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி மற்றும் முன்னாள் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/saman-ekanayake-summoned-to-testify-regarding-ranils-london-trip/">ரணிலின் லண்டன் பயணம் குறித்து வாக்குமூலம் பெற சமன் ஏக்கநாயக்கவிற்கு அழைப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.</p>
<p>முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய இராச்சிய விஜயம் மற்றும் அந்த விஜயத்திற்காக அரச நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து வாக்குமூலம் பெற்றுக்கொள்ள இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.</p>
<p>வோல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகத்தில் இருந்து ரணிலுக்கு கிடைத்த அழைப்புக் கடிதம் &#8216;போலியானது&#8217; என்ற குற்றச்சாட்டிற்கு பதிலளிக்க சமன் ஏகநாயக்க மேலும் ஆதாரங்களை முன்வைக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>முன்னாள் ஜனாதிபதி மற்றும் முன்னாள் முதல் பெண்மணி மற்றும் ஐக்கிய இராச்சியத்திற்கான முன்னாள் இலங்கை உயர் ஸ்தானிகர் ஆகியோருக்கு இரண்டு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>ரணில் விக்ரமசிங்கவின்சட்டத்தரணி வோல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பிய மின்னஞ்சலுக்கு பதிலளிக்கும் விதமாக, முன்னாள் ஜனாதிபதி குற்றப் புலனாய்வுத் துறைக்கு சமர்ப்பித்த அழைப்பு கடிதத்தின் நம்பகத்தன்மையை பல்கலைக்கழகம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த ஆவணங்கள் குற்றப் புலனாய்வுத் துறையிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளன.</p>
<p>முன்னாள் ஜனாதிபதியும் முதல் பெண்மணியும் நிகழ்வில் கலந்து கொண்டதை உறுதிப்படுத்தும் சந்திப்பு நிமிடங்களையும் விக்ரமசிங்கவின் சட்டத்தரணிகள் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>The post <a href="https://oruvan.com/saman-ekanayake-summoned-to-testify-regarding-ranils-london-trip/">ரணிலின் லண்டன் பயணம் குறித்து வாக்குமூலம் பெற சமன் ஏக்கநாயக்கவிற்கு அழைப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாட்டில் இணையும் ரணில்-சஜித்</title>
		<link>https://oruvan.com/ranil-sajith-join-the-united-national-party-conference/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Sun, 31 Aug 2025 04:13:21 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Ranil wickramasinghe]]></category>
		<category><![CDATA[Sajith Premadasa]]></category>
		<category><![CDATA[UNP]]></category>
		<category><![CDATA[ஐக்கிய தேசியக் கட்சி]]></category>
		<category><![CDATA[ஐக்கிய மக்கள் சக்தி]]></category>
		<category><![CDATA[சஜித் பிரேமதாச]]></category>
		<category><![CDATA[ரணில் விக்கிரமசிங்க]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=31160</guid>

					<description><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பின் பேரில், சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர்கள் செப்டம்பர் 6ஆம் திகதி நடைபெறும் ஐக்கிய தேசியக் கட்சி மாநாட்டில் பங்கேற்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து சண்டே டைம்ஸ் நாளிதழுக்கு கருத்து வெளியிட்ட ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய மக்கள் சக்தியுடள் இணைவதற்கா பிரிந்து சென்ற ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் மீது விதிக்கப்பட்ட தடையை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளில் இரு [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/ranil-sajith-join-the-united-national-party-conference/">ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாட்டில் இணையும் ரணில்-சஜித்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பின் பேரில், சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர்கள் செப்டம்பர் 6ஆம் திகதி நடைபெறும் ஐக்கிய தேசியக் கட்சி மாநாட்டில் பங்கேற்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>இது குறித்து சண்டே டைம்ஸ் நாளிதழுக்கு கருத்து வெளியிட்ட ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய மக்கள் சக்தியுடள் இணைவதற்கா பிரிந்து சென்ற ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் மீது விதிக்கப்பட்ட தடையை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.</p>
<p>கடந்த ஐந்து ஆண்டுகளில் இரு குழுக்களும் ஒரு பொது அரசியல் கூட்டத்தில் இணைந்து செயல்படவுள்ளமை இதுவே முதல் முறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி உட்பட பல கட்சிகள் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.</p>
<p>இந்த மாநாட்டின் போது ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு விஷேட உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>பொது நிதியை மோசடி செய்ததாக கூறி கடந்த 22ஆம் திகதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டிருந்தார். இதனையடுத்து ஏற்பட்ட உடல்நல குறைவு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.</p>
<p>எவ்வாறாயினும், அவரின் உடல்நிலையை காரணம் காட்டி கடந்த 26ஆம் திகதி பிணை வழங்கப்பட்டிருந்தது. ரணில் விக்கிரமசிங்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் சஜித், ரணிலை நேரில் பலமுறை சந்தித்து நலம் விசாரித்து வந்திருந்தார்.</p>
<p>இந்நிலையிலேயே, ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாட்டிற்கு சஜித் பிரேமதாச உள்ளிட்டவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இதன்போது ரணில் தனது கட்சித் தலைமையிலிருந்து விலகுவாரா அல்லது சஜித் பிரேமதாசவை மீண்டும் தனது தலைமையின் கீழ் இணைய அழைப்பாரா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.</p>
<p>இந்த அழைப்பு குறித்து ஐக்கிய மக்கள் சக்தியில் பொது செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார சண்டே டைம்ஸிடம் கருத்து தெரிவிக்கையில்,<br />
“தனது கட்சிக்கு கிடைத்த அழைப்பின் பேரில் சஜித் பிரேமதாசவும் மற்ற உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டத்தில் கலந்து கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.</p>
<p>கடந்த காலங்களில் கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும், இரு கட்சிகளும் இணைந்து பணியாற்றுவதற்கு எந்தத் தடையும் இல்லை என்றும் அவர் மேலும் கூறியிருந்தார்.</p>
<p>இந்தக் கூட்டத்திற்கு முன்னாள் ஜனாதிபதிகள் மகிந்த ராஜபக்ச மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p>
<p>இருப்பினும், மகிந்த ராஜபக்ச இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டார் என்பதை அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/ranil-sajith-join-the-united-national-party-conference/">ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாட்டில் இணையும் ரணில்-சஜித்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பட்டலந்த, மத்திய வங்கிக்கு வரமாட்டோம்</title>
		<link>https://oruvan.com/patalanta-we-will-not-come-to-the-central-bank/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Tue, 26 Aug 2025 12:12:27 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[ரணில் விக்கிரமசிங்க]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=30738</guid>

					<description><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீது பட்டலந்த விவகாரம் அல்லது மத்திய வங்கி மோசடி குறித்தான குற்றச்சாட்டு எனில் அதற்கு எதிராக நாம் குரல் கொடுக்கப் போவதில்லையென பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். எனினும் இதுவொரு அரசியல் பழிவாங்கலாகும். இங்கிலாந்தின் பல்கலைக்கழகத்திலிருந்து ரணிலுக்கு இலங்கை தூதுவர் ஊடாக பெறப்பட்ட அழைப்பிதழை அடிப்படையாகக் கொண்டு இவ்வாறு பழிவாங்குவது தவறு, ஜனாதிபதியானதன் பின்னர் அவர் செல்லும் பயணங்கள் அனைத்தும் உத்தியோகபூர்வமானவை, இப்பொழுது உள்ள ஜனாதிபதி அனுரவும் அவ்வாறே. அவருக்கும் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/patalanta-we-will-not-come-to-the-central-bank/">பட்டலந்த, மத்திய வங்கிக்கு வரமாட்டோம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீது பட்டலந்த விவகாரம் அல்லது மத்திய வங்கி மோசடி குறித்தான குற்றச்சாட்டு எனில் அதற்கு எதிராக நாம் குரல் கொடுக்கப் போவதில்லையென பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.</p>
<p>எனினும் இதுவொரு அரசியல் பழிவாங்கலாகும். இங்கிலாந்தின் பல்கலைக்கழகத்திலிருந்து ரணிலுக்கு இலங்கை தூதுவர் ஊடாக பெறப்பட்ட அழைப்பிதழை அடிப்படையாகக் கொண்டு இவ்வாறு பழிவாங்குவது தவறு, ஜனாதிபதியானதன் பின்னர் அவர் செல்லும் பயணங்கள் அனைத்தும் உத்தியோகபூர்வமானவை, இப்பொழுது உள்ள ஜனாதிபதி அனுரவும் அவ்வாறே. அவருக்கும் அது பொருந்தும்.</p>
<p>இதன் காரணமாகவே நாம் இந்த விடயத்தில் முன்னிற்பதாக மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அரசாங்கம் இதனை புரிந்துகொள்ள வேண்டும். தவறான புரிதலால் இந்த பிரச்சினை ஏற்ப்பட்டுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.</p>
<p>வழக்கு விசாரணை இடம்பெறும் நீதிமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/patalanta-we-will-not-come-to-the-central-bank/">பட்டலந்த, மத்திய வங்கிக்கு வரமாட்டோம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஹரிணி ரணிலை சந்தித்தாரா?</title>
		<link>https://oruvan.com/did-harini-meet-ranil/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Tue, 26 Aug 2025 10:31:45 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[ரணில் விக்கிரமசிங்க]]></category>
		<category><![CDATA[ஹரிணி அமரசூரிய]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=30719</guid>

					<description><![CDATA[<p>கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்க நான் சிறைக்குச் சென்றிருந்தால், நான் சென்றதை ஊடகங்கள் நிரூபிக்க வேண்டும். பிரதமராக, நான் எங்கு வேண்டுமானாலும் செல்ல முடியாது. ஆனால், ரகசியமாக செல்ல முடியாது. நான் சென்றதை நிரூபிக்குமாறு ஊடகங்களுக்கு சவால் விடுகிறேன் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். பொய்யான செய்திகளைப் பரப்புபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். வதந்திகளை செய்தியாக்கி ஆதாரமற்ற கதைகளை நிரூபிக்காதீர்கள். நீங்கள் செய்திகளை உருவாக்கினால், அதற்கு ஒரு அடிப்படை [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/did-harini-meet-ranil/">ஹரிணி ரணிலை சந்தித்தாரா?</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்க நான் சிறைக்குச் சென்றிருந்தால், நான் சென்றதை ஊடகங்கள் நிரூபிக்க வேண்டும். பிரதமராக, நான் எங்கு வேண்டுமானாலும் செல்ல முடியாது. ஆனால், ரகசியமாக செல்ல முடியாது. நான் சென்றதை நிரூபிக்குமாறு ஊடகங்களுக்கு சவால் விடுகிறேன் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.</p>
<p>பொய்யான செய்திகளைப் பரப்புபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். வதந்திகளை செய்தியாக்கி ஆதாரமற்ற கதைகளை நிரூபிக்காதீர்கள். நீங்கள் செய்திகளை உருவாக்கினால், அதற்கு ஒரு அடிப்படை இருக்க வேண்டும், 50 பேர் அரசாங்கத்தை விட்டு வெளியேறுகிறார்கள் என்று கூறுகின்றீர்கள். யார் வெளியேறுகிறார்கள் என்று சொல்லுங்கள்.</p>
<p>நாங்கள் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறோம். நாங்கள் சட்டத்தில் செல்வாக்கு செலுத்த மாட்டோம். சட்டத்தின்படி செயல்படுவோம் என்று பிரதமர், ஊவா மாகாண ஊடகவியலாளுடனான சந்திப்பில் கூறியுள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/did-harini-meet-ranil/">ஹரிணி ரணிலை சந்தித்தாரா?</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
