<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>போர் Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/போர்/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Mon, 08 Jun 2026 07:22:10 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>போர் Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/போர்/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>ஆயுத சூப்பர் மார்க்கெட்டும் முள்ளிவாய்க்கால் பேரழிவும்  கொலம்பகேயின் வாக்குமூலத்தால் அம்பலமாகும் சீன முகம்</title>
		<link>https://oruvan.com/mullivaikkal-disaster-former-navy-chief-exposes-chinas-weapons-supermarket-conspiracy/</link>
		
		<dc:creator><![CDATA[Rasmila]]></dc:creator>
		<pubDate>Mon, 08 Jun 2026 07:18:41 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கட்டுரை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA["Take Weapons Now]]></category>
		<category><![CDATA[Pay Later" – Admiral Colombage Strips China’s Deadly Mask in Eelam Tamil Genocide]]></category>
		<category><![CDATA[சீனா]]></category>
		<category><![CDATA[போர்]]></category>
		<category><![CDATA[முள்ளிவாய்க்கால்]]></category>
		<category><![CDATA[வடக்கு]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=49501</guid>

					<description><![CDATA[<p>ஈழத்தமிழினத்தின் வரலாற்றைச் சோகமயமாக மாற்றிய முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின்னணியில், சர்வதேச விதிகளைப் புறந்தள்ளி சீனா எவ்வாறு ஒரு ‘ஆயுத சூப்பர் மார்க்கெட்’ போலச் செயற்பட்டது என்பதை இலங்கைக் கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் ஜயநாத் கொலம்பகேயின் அண்மைய உரை வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது. முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாகக் கொன்றழிக்கப்பட்டு, ஈழத்தமிழினத்தின் வரலாறே குருதியால் எழுதப்பட்டதன் பின்னணியில், உலக வல்லரசுகளின் புவிசார் அரசியல் சதுரங்க ஆட்டம் இருந்தது என்பது உலகறிந்த உண்மை. ஆயினும், தமிழினப் படுகொலைக்குச் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/mullivaikkal-disaster-former-navy-chief-exposes-chinas-weapons-supermarket-conspiracy/">ஆயுத சூப்பர் மார்க்கெட்டும் முள்ளிவாய்க்கால் பேரழிவும்  கொலம்பகேயின் வாக்குமூலத்தால் அம்பலமாகும் சீன முகம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஈழத்தமிழினத்தின் வரலாற்றைச் சோகமயமாக மாற்றிய முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின்னணியில், சர்வதேச விதிகளைப் புறந்தள்ளி சீனா எவ்வாறு ஒரு ‘ஆயுத சூப்பர் மார்க்கெட்’ போலச் செயற்பட்டது என்பதை இலங்கைக் கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் ஜயநாத் கொலம்பகேயின் அண்மைய உரை வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது.</p>
<p>முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாகக் கொன்றழிக்கப்பட்டு, ஈழத்தமிழினத்தின் வரலாறே குருதியால் எழுதப்பட்டதன் பின்னணியில், உலக வல்லரசுகளின் புவிசார் அரசியல் சதுரங்க ஆட்டம் இருந்தது என்பது உலகறிந்த உண்மை. ஆயினும், தமிழினப் படுகொலைக்குச் சர்வதேச விதிகளைப் புறந்தள்ளி சீனா எவ்வாறு ‘ஆயுத சூப்பர் மார்க்கெட்’டைத் திறந்து பின்னணியில் நின்றது என்பதை, இலங்கை அரசாங்கத்தின் உயர் அதிகாரியாகவும் கடற்படையின் தளபதியாகவும் இருந்த அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தற்போது பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார்.</p>
<p>கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேசக் கல்வி மையத்தில் அண்மையில் அவர் ஆற்றிய உரை, தமிழ் மக்களின் நெஞ்சில் உள்ள ஆறாத வடுக்களை மீண்டும் கிளறியுள்ளதுடன், சீனாவின் உண்மையான கொடூர முகத்தையும் அம்பலப்படுத்தியுள்ளது.</p>
<p>இந்த வெற்றிக் களிப்புரை, சிங்களத் தேசத்தின் வீரத்தினால் போர் வெல்லப்படவில்லை, மாறாகச் சீனாவின் மூலோபாய வர்த்தக வெறியினாலும் அதன் நிபந்தனையற்ற இராணுவ ஆதரவினாலும்தான் ஈழ நிலம் பேரழிவிற்குள் தள்ளப்பட்டது என்ற கசப்பான உண்மையை உரத்துச் சொல்கிறது.</p>
<p><strong>‘ஆயுத சூப்பர் மார்க்கெட்’ சதித் திட்டம்</strong></p>
<p>2006–2009 வரையான காலப்பகுதியில், தமிழ் மக்கள் பாதுகாப்பு வளையங்களுக்குள் முடக்கப்பட்டிருந்த வேளையில், இந்தியா மற்றும் மேற்கத்திய நாடுகள் ‘பேரழிவு ஆயுதங்களை’ வழங்க மறுத்துத் தடைகளை விதித்திருந்தன. &#8220;பேரழிவு ஆயுதங்கள் இல்லாமல் எவ்வாறு ஒரு போரை எதிர்கொண்டு எதிரிகளை அழிக்க முடியும்?&#8221; என்று கொலம்பகே தனது உரையில் கேலியாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.</p>
<p>இலங்கை இராணுவம் திணறிய அந்த இக்கட்டான தருணத்தில்தான், சீனா கொழும்பு மற்றும் காலித் துறைமுகங்களுக்குள் தனது சொந்தப் பாதுகாப்புக் கிடங்குகளை அமைத்து ஆயுத விநியோகத்தை முன்னெடுத்தது.</p>
<p>&#8220;இது ஒரு ஷொப்பிங் பட்டியலை எடுத்துக் கொண்டு ஆயுத சூப்பர் மார்க்கெட்டுக்குச் செல்வது போன்றதாகும். நீங்கள் அங்கு சென்று உங்களுக்குத் தேவையான ஆயுதங்களைச் சேகரித்து உடனடியாகப் போர்க்களத்தில் பயன்படுத்தலாம்&#8221; என்ற கொலம்பகேயின் வாக்குமூலம் அதிர்ச்சியளிக்கக்கூடியது.</p>
<p>முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்களின் உடல்கள் சிதறிக்கொண்டிருந்தபோது, கொழும்புத் துறைமுகத்தில் சீனாவின் ஆயுதக் கிடங்குகளின் கதவுகள் அகலத் திறந்திருந்தன. தமிழ் மக்களின் மரணங்களை சீனா தனது புவிசார் அரசியல் சதுரங்கத்தின் இலாபக் கணக்காகவே பார்த்தது என்பதை இந்த வாக்குமூலம் அப்பட்டமாக நிரூபித்துள்ளது.</p>
<p><strong>அபிவிருத்தி என்ற மாயையும் திட்டமிட்ட உள்நுழைவும்</strong></p>
<p>போர் முடிவடைந்த 2009ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையில் ஒரு நெடுஞ்சாலை கூட இருக்கவில்லை என்பதை கொலம்பகே தனது உரையில் வெளிப்படையாகச் சுட்டிக்காட்டியுள்ளார். போரினால் உலுக்கப்பட்டிருந்த இலங்கை, சர்வதேச சமூகத்திடமிருந்து நிதி உதவிகளைப் பெற முடியாமல் ஒரு வெறிச்சோடிய நிலையை எதிர்கொண்டது. இந்த உள்நாட்டுப் பலவீனத்தையே சீனா தனக்கான நுழைவாயிலாக மாற்றிக்கொண்டது.</p>
<p>இரண்டாயிரத்துப் பதினொன்று முதல் இரண்டாயிரத்துப் பதிமூன்று வரையான மிகக் குறுகிய காலப்பகுதிக்குள் தெற்கு அதிவேக நெடுஞ்சாலை, கொழும்பு &#8211; கட்டுநாயக்க நெடுஞ்சாலை, மத்தள விமான நிலையம் போன்ற பிரமாண்டமான திட்டங்களை சீனா முடுக்கிவிட்டது. இது ஏதோ இலங்கையின் மீதான அன்பினால் செய்யப்பட்ட முதலீடல்ல, மாறாகத் தென்னிலங்கையைத் தனது வர்த்தகக் கடன் பொறிக்குள் நிரந்தரமாகப் பூட்டி வைப்பதற்காகச் சீனா விரித்த மிக நுட்பமான பொருளாதார வலை என்பதை கொலம்பகேயின் உரை நமக்குத் தெளிவுபடுத்துகின்றது.</p>
<p><strong>‘பணம் பிறகு, பிணங்கள் இப்போது’</strong></p>
<p>&#8220;ஆயுதங்களை எடுத்துச் சென்று உடனடியாகப் பயன்படுத்துங்கள், பணத்தைப் பிறகு தாருங்கள்&#8221; என்று கொலம்பகே குறிப்பிடும் சீனாவின் இந்தச் சலுகை, இலங்கை அரசுக்கு வழங்கப்பட்ட வெறும் இராணுவக் கடன் அல்ல.</p>
<p>‘பொருட்களைப் பெற்றுக்கொண்டு பிறகு பணம் செலுத்துங்கள்’ என்ற சீனாவின் ஏற்பாடு, இலங்கை இராணுவத்திற்கு வழங்கப்பட்ட சலுகை அல்ல, அது தமிழ் இனத்தை முற்றாக அழிப்பதற்காக எழுதப்பட்ட மரண சாசனமாகும். தமிழ் மக்களைக் கொன்று குவிக்கச் சீனா செய்த இந்த ஆயுத முதலீடு, போருக்குப் பிந்தைய காலத்தில் பேரினவாத அரசாங்கத்தை முற்றாகத் தன்வசப்படுத்துவதற்கான ஒரு தந்திரோபாய நகர்வாகும்.</p>
<p>போர் முடிந்த மறுகணமே, இந்த ஆயுத விநியோக நிறுவனங்கள் ஒரே இரவில் ‘கட்டுமான நிறுவனங்களாக’ அவதாரமெடுத்தன. பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் முள்ளிவாய்க்காலில் கொன்றழிக்கப்பட்டுக் கிடந்தபோது, அந்தப் பிணங்களின் மீதுதான் சீனாவின் கொழும்புத் துறைமுக நகரமும், தெற்கு அதிவேக நெடுஞ்சாலைகளும் நுரைச்சோலை மின்நிலையமும் கட்டப்பட்டுள்ளன என்பதையும் கொலம்பகே தனது உரையின் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார்.</p>
<p>இன்று இலங்கையில் பளபளக்கும் அதிவேக நெடுஞ்சாலைகளின் அடித்தளங்கள், தமிழ் மக்களின் குருதியினாலும் முள்ளிவாய்க்கால் சாம்பலினாலும் மெழுகப்பட்டவை என்பதைச் சிங்களத் தேசமும், சீனப் பேரரசும் மறைக்கத் துடித்தாலும், அவர்களின் சொந்த அதிகாரிகளின் வாக்குமூலங்களே அதை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன.</p>
<p><strong>வடக்கு &#8211; கிழக்கைக் குறிவைக்கும் சீனாவின் ‘மென் அதிகார’ வியூகம்</strong></p>
<p>தென்னிலங்கையைத் தனது கடன் பொறிக்குள் சிக்க வைத்து, அம்பாந்தோட்டை துறைமுகம் உட்படப் பல மூலோபாயப் பகுதிகளைத் தன்வசப்படுத்திய சீனாவுக்கு, கடந்த பல வருடங்களாக வடக்கு &#8211; கிழக்கு என்பது எட்டாக்கனியாகவே இருந்து வருகின்றது. ஈழத்தமிழர்களின் தாயக நிலத்தின் மீது நேரடியாகக் கால்வைக்க முடியாமல் சீனா இப்போதும் தவித்துக் கொண்டிருக்கின்றது.</p>
<p>இதற்குக் காரணம், தமிழ் மக்களின் உறுதியான ஒரே நோக்க அரசியல் கோட்பாடும், தாயகக் கோட்பாடும் ஆகும். தமிழ் மக்களின் இந்த அரசியல் இருப்பை உடைத்துத் தவிடுபொடியாக்கும் சீனாவின் அத்தனை முயற்சிகளுக்கும், வெளிப்புறச் சக்தியான இந்தியாவின் பிராந்தியப் பாதுகாப்பு நலன்களும், தலையீடுகளும் பெரும் முட்டுக்கட்டையாக அமைந்துள்ளன.</p>
<p>அத்துடன், தமிழர் பகுதி அரசியல் தலைமைகளின் இறுக்கமான பிடியும், சீனாவின் நேரடி ஊடுருவலுக்குப் பாரிய தடையாக இருந்து வருகின்றது. இருப்பினும், சீனா தனது காய்நகர்த்தல்களைக் கைவிட்டதாக இல்லை. நேரடியாக வடக்கு &#8211; கிழக்கிற்குள் நுழைய முடியாத சூழ்ச்சி ஆட்டத்தை அது இப்போது மிக நிதானமாகவும் தந்திரமாகவும் அரங்கேற்றத் தொடங்கியுள்ளது.</p>
<p><strong>வாழ்வாதார முகமூடியும் தமிழ் மக்களின் விழிப்புணர்வும்</strong></p>
<p>நேரடி இராணுவ அல்லது பொருளாதாரத் திட்டங்கள் மூலம் நுழைய முற்பட்டால் இந்தியாவின் எதிர்ப்பையும் தமிழ் மக்களின் கொந்தளிப்பையும் சந்திக்க நேரிடும் என்பதைச் சீனா நன்கு அறிந்துள்ளது. இதனால், ‘மென் அதிகார’ (Soft Power) அரசியலைச் சீனா கையில் எடுத்துள்ளது.</p>
<p>வடக்கு &#8211; கிழக்கின் கடற்றொழிலாளர் அமைப்புகள், உள்ளூர் முக்கியப் புள்ளிகள், சில அடிவருடி அரசியல் பிரமுகர்கள் மற்றும் சமூகப் பிரதிநிதிகளைக் கைக்குள் போட்டுகொண்டு படிப்படியாக, மெதுவாக உள்நுழையும் சதித்திட்டங்களை சீனா நகர்த்திக் கொண்டிருக்கின்றது. வறுமையை முதலாக்கி, வாழ்வாதார உதவிகள் என்ற போர்வையிலும், கடலட்டைப் பண்ணைகள், உலர் உணவு விநியோகம் என்ற முகமூடியணிந்தும் தமிழ் மக்களின் மனங்களை வெல்லும் நாடகங்கள் அரங்கேற்றப்படுகின்றன.</p>
<p>இன்றுவரை சர்வதேச அரங்கில் தமிழ் மக்களுக்கான ஐநா மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட தளங்களில் நீதி மறுக்கப்படுவதற்குப் பின்னணியில், இந்த ‘ஆயுத சூப்பர் மார்க்கெட்’ நடத்திய சீனாவின் வீட்டோ அதிகாரக் கரங்களே முதன்மையாக இருக்கின்றன என்பதைத் தமிழ் சமூகம் மறந்துவிடக்கூடாது. ஜெனிவாவில் தமிழர்களுக்கு எதிராகப் பகிரங்கமாக நின்றுகொண்டு, யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலும் வந்து உதவிப் பொருட்கள் வழங்குவது தமிழ் மக்களின் அரசியல் விழிப்புணர்வை மழுங்கடிக்கும் சதியன்றி வேறில்லை.</p>
<p><strong>நிலப்பறிப்பின் நீண்டகாலப் பேராபத்து</strong></p>
<p>கடலட்டைப் பண்ணைகள், முதலீடுகள் என்ற போர்வையில் வடக்கு &#8211; கிழக்கின் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த நிலப்பரப்புகளையோ அல்லது கடல் வளங்களையோ ஏதேனுமோர் அடிப்படையில் சீனாவுக்குத் தாரை வார்ப்பது, தமிழ் இனத்தின் எதிர்காலத்திற்குப் பாரிய, நீண்டகாலப் பேராபத்தாய் முடியும்.</p>
<p>தென்னிலங்கையைப் போல நமது தாயக நிலத்தையும் சீனா தனது ஆதிக்கப் பிடிக்குள் கொண்டு வந்தால், தமிழ் மக்களின் சுயாட்சி மற்றும் சுயநிர்ணய உரிமைக்கான அரசியல் கோரிக்கைகள் சர்வதேச அரங்கில் முற்றாக நீர்த்துப் போகச் செய்யப்படும். அதுமட்டுமன்றி, இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பிராந்தியப் போர்க்களமாக நமது பூர்வீக நிலம் மாறும் அபாயமும் உண்டு. நிலம் என்பது வெறும் பொருளல்ல, அது தமிழர்களின் இறையாண்மை மற்றும் வரலாற்றுத் தொடர்ச்சியின் அடையாளம் என்பதை உணர்ந்து, அதனைப் பாதுகாப்பது நமது முதன்மைக் கடமையாகும்.</p>
<p>அட்மிரல் கொலம்பகேயின் இந்த வாக்குமூலம் தமிழ் மக்களுக்கு உணர்த்தும் பாடம் என்னவெனில், புவிசார் சர்வதேச அரசியலில் எந்த நாடும் நமக்கு நிரந்தர நண்பனும் அல்ல, பகையாளியும் அல்ல. சீனாவுக்குத் தேவைப்பட்டது தமிழர்களின் தாயக நிலத்தின் மூலோபாய முக்கியத்துவமே தவிர, இங்கு வாழும் தமிழ் மக்களின் உரிமைகளோ, அவர்களின் உயிர்களோ அல்ல. தமது உறவுகளின் எலும்புகளின் மேல் கட்டப்பட்ட சீனக் கட்டுமானங்களையும், அவர்களின் தந்திரோபாய உதவிகளையும் தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டிய வரலாற்றுத் தருணம் இதுவாகும்.</p>
<p>உள்நாட்டுக் கைக்கூலிகளைப் பயன்படுத்திச் சீனா நடத்தும் இந்த மெதுவான ஊடுருவல் குறித்துத் தமிழ்த் தேசிய அரசியல் தலைமைகளும், சமூக ஆர்வலர்களும் விழிப்படைய வேண்டும். நமது தாயக நிலத்தை மற்றொரு வல்லரசின் சூறையாடலுக்குத் தாரைவார்ப்பது, முள்ளிவாய்க்காலில் மடிந்த ஆன்மாக்களுக்குச் செய்யும் துரோகம்.</p>
<p>சீனா விரிக்கும் சதிவலையைத் தவிடுபொடியாக்கி, நமது அரசியல் அபிலாஷைகளை உறுதியுடன் காப்பதே ஈழத்தமிழினத்தின் இன்றைய அவசரத் தேவையாகும்.</p>
<p>The post <a href="https://oruvan.com/mullivaikkal-disaster-former-navy-chief-exposes-chinas-weapons-supermarket-conspiracy/">ஆயுத சூப்பர் மார்க்கெட்டும் முள்ளிவாய்க்கால் பேரழிவும்  கொலம்பகேயின் வாக்குமூலத்தால் அம்பலமாகும் சீன முகம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>மாபெரும் சீற்றத்தின் நிழல் &#8211; உலக பொருளாதாரத்தை அதிர வைத்த ஹார்முஸ் முட்டுக்கட்டை</title>
		<link>https://oruvan.com/the-hormuz-standoff-has-shaken-the-global-economy/</link>
		
		<dc:creator><![CDATA[Diluksha]]></dc:creator>
		<pubDate>Mon, 30 Mar 2026 10:22:49 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[economy]]></category>
		<category><![CDATA[global]]></category>
		<category><![CDATA[Hormuz]]></category>
		<category><![CDATA[அமெரிக்கா]]></category>
		<category><![CDATA[இஸ்ரேல்]]></category>
		<category><![CDATA[ஈரான்]]></category>
		<category><![CDATA[போர்]]></category>
		<category><![CDATA[ஹார்முஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=47663</guid>

					<description><![CDATA[<p>&#8220;அதிர்ச்சி மற்றும் அச்சம்&#8221; உத்தி தோல்வி – ஈரான் ஒன்றுபட்டது, எதிர்பார்த்த அரசியல் வீழ்ச்சி ஏற்படவில்லை. ஹார்முஸ் நீரிணை மூடல் – எண்ணெய் விலைகள் விண்ணை முட்டும் உயர்வில் &#8211; உலக பொருளாதாரத்தில் அவசரநிலை. ‘ஆபரேஷன் எபிக் ஃபியூரி’ – அமெரிக்க நியாயம், அணு ஆயுத அச்சுறுத்தலையும் தாண்டி பரபரப்பான பிராந்திய சவாலை உருவாக்கியது. உலகம் தற்போது ஈரான் போரால் உருவான மிகப்பெரிய நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. எரிசக்தி பாதைகள் முடக்கம், எண்ணெய் விலை உயர்வு, மற்றும் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/the-hormuz-standoff-has-shaken-the-global-economy/">மாபெரும் சீற்றத்தின் நிழல் &#8211; உலக பொருளாதாரத்தை அதிர வைத்த ஹார்முஸ் முட்டுக்கட்டை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p><strong>&#8220;அதிர்ச்சி மற்றும் அச்சம்&#8221; உத்தி தோல்வி – ஈரான் ஒன்றுபட்டது, எதிர்பார்த்த அரசியல் வீழ்ச்சி ஏற்படவில்லை.</strong></p>
<p><strong>ஹார்முஸ் நீரிணை மூடல் – எண்ணெய் விலைகள் விண்ணை முட்டும் உயர்வில் &#8211; உலக பொருளாதாரத்தில் அவசரநிலை.</strong></p>
<p><strong>‘ஆபரேஷன் எபிக் ஃபியூரி’ – அமெரிக்க நியாயம், அணு ஆயுத அச்சுறுத்தலையும் தாண்டி பரபரப்பான பிராந்திய சவாலை உருவாக்கியது.</strong></p>
<p>உலகம் தற்போது ஈரான் போரால் உருவான மிகப்பெரிய நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. எரிசக்தி பாதைகள் முடக்கம், எண்ணெய் விலை உயர்வு, மற்றும் வல்லரசு போட்டி ஆகியவை உலக நிலைத்தன்மையை அச்சுறுத்துகின்றன. பாரம்பரிய சக்திகள் திணறிக் கொண்டிருக்கும் வேளையில், இலங்கை போன்ற அணிசேரா நாடுகள் மீண்டும் மத்தியஸ்த வினையூக்கியாக உருவெடுக்க முடியுமா என்ற கேள்வி எழுகிறது.</p>
<p>2026 ஆம் ஆண்டு பெப்ரவரி 28 ஆம் திகதி உலக அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான மற்றும் அதிர்ச்சியூட்டும் திருப்புமுனையாக பதிவாகியுள்ளது. அன்றைய தினம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொண்ட மாபெரும் சீற்றம் என குறியிடப்பட்ட இராணுவ நடவடிக்கை, மத்திய கிழக்கு பிராந்தியத்தின் சமநிலையை மட்டுமின்றி, உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார அமைப்புகளையும் ஆழமாக பாதித்துள்ளது.</p>
<p>இந்த தாக்குதலின் முக்கிய விளைவாக, ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனியின் உயிரிழப்பு மற்றும் அதன் இராணுவத்<br />
தலைமை கடுமையாக சீர்குலைந்துள்ளது, இந்த நடவடிக்கை ஒரு விரைவான மற்றும் துல்லியமான ஆட்சி மாற்றத்தை நோக்கமாகக்<br />
கொண்டதாக கருதப்பட்டாலும், அதன் விளைவுகள் முற்றிலும் எதிர்பாராத வகையில் பிராந்திய மோதலாக மாறியுள்ளது.</p>
<p><strong>மாபெரும் உத்தியும்  தவறான கணிப்புகளும்</strong></p>
<p>அமெரிக்காவின் “அதிர்ச்சி மற்றும் அச்சம்” என்ற இராணுவ உத்தி, ஈரானின் அரசியல் அமைப்பை உடைத்து உள்நாட்டு குழப்பத்தை<br />
உருவாக்கும் என கணிக்கப்பட்டது. ஆனால், இந்த கணிப்பு முற்றிலும் தவறானதாக மாறியுள்ளது. பல்வேறு உள்நாட்டு பிரிவினைகள்<br />
இருந்தபோதிலும், ஈரான் தற்போது தேசிய பாதுகாப்பு மற்றும் மத அடையாளம் என்ற சக்திவாய்ந்த அடையாளங்களின் கீழ் ஒன்றுபட்டுள்ளது.</p>
<p>கமெனியின் மரணம், அரசியல் வெற்றிடத்தை உருவாக்கவில்லை. மாறாக, அவர் ஒரு தியாகியாக மாறி,<br />
மக்களின் எதிர்ப்புத் தூண்டுதலை மேலும் வலுப்படுத்தியுள்ளது. இதன் மூலம், அமெரிக்கா எதிர்பார்த்த அரசியல்<br />
வீழ்ச்சி நிகழவில்லை என்பது தெளிவாகியுள்ளது.</p>
<p><strong>பொருளாதார விளிம்பு &#8211; ஹார்முஸ் முட்டுக்கட்டை</strong></p>
<p>இந்த மோதலின் மிக தீவிரமான மற்றும் உடனடி தாக்கம் உலகளாவிய எரிசக்தி துறையில் வெளிப்பட்டுள்ளது.<br />
உலகின் மிக முக்கியமான கடல் வர்த்தக நரம்பு எனக் கருதப்படும் ஹார்முஸ் நீரிணை, செயல்பட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.</p>
<p>உலகின் சுமார் 20 சதவீத எண்ணெய் மற்றும் எரிவாயு இந்த கடல் பாதை வழியாகச் செல்லும் நிலையில்,<br />
அதன் முடக்கம் உலக பொருளாதாரத்திற்கு நேரடி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச சந்தைகளில்<br />
எண்ணெய் விலை பீப்பாயொன்றுக்கு 200 அமெரிக்க டொலரை எட்டும் என பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.<br />
இதன் விளைவாக, உலகளாவிய பணவீக்கம் கட்டுக்கடங்காத அளவிற்கு உயர்ந்து, ஐரோப்பாவில் வீட்டு வெப்பமூட்டல் செலவுகள் அதிகரித்துள்ளன. ஆசிய நாடுகளில் உற்பத்தி துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் வளர்ந்து வரும் நாடுகள் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கின்றன.</p>
<p>இந்த இராணுவ நடவடிக்கையின் பின்னணி வெறும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களைத் தாண்டி, ஒரு விரிவான<br />
புவிசார் அரசியல் வியூகத்தின் பகுதியாகவே பார்க்கப்படுகிறது. டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம்,<br />
இந்த தாக்குதலின் மூலம் சீனாவின் எரிசக்தி ஆதாரங்களை கட்டுப்படுத்தவும், மத்திய கிழக்கில் புதிய அரசியல் ஒழுங்கை உருவாக்கவும், மேலும் இஸ்ரேலின் பிராந்திய ஆதிக்கத்தை உறுதி செய்யவும் முயன்றதாக மதிப்பிடப்படுகிறது.<br />
ஆனால், இந்த வியூக இலக்குகள் பல முக்கிய தவறான கணிப்புகளின் அடிப்படையில் அமைந்திருந்தன. குறிப்பாக, ஈரானின் புவியியல் அமைப்பு மலைப்பகுதிகள் மற்றும் இயற்கை பாதுகாப்பு கட்டமைப்புகள் ஒரு நேரடி தரைபடையெடுப்பை மிகவும் கடினமாக்குகின்றன. மேலும், ஈரான் தனது உள்நாட்டு இராணுவ திறன்களைப் பயன்படுத்தி நீண்டகால மோதலை தாங்கக்கூடிய நிலையிலும் உள்ளது.</p>
<p>இராணுவ ரீதியாக பார்க்கும்போது, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேம்பட்ட தொழில்நுட்ப ஆயுதங்களை கொண்டிருந்தாலும், ஈரானின் பலம் அதன் பொறுமை மற்றும் நீடித்த போர்திறனில் இருக்கிறது. சுமார் 45,000 ஏவுகணைகள், விரிவடைந்த ட்ரோன் உற்பத்தி திறன், மற்றும் நீண்டகால போரை தாங்கும் உள்நாட்டு அமைப்பு ஆகியவை, இந்த மோதலை ஒரு விரைவான வெற்றியாக மாற்றாமல், நீண்டகால சோர்வு போராக மாற்றும் அபாயத்தை உருவாக்குகின்றன. இதன் காரணமாக, எந்த தரப்பும் விரைவில் தீர்மானமிக்க வெற்றியைப் பெற முடியாத ஒரு முட்டுக்கட்டை நிலை உருவாகியுள்ளது.</p>
<p><strong>பாரம்பரிய கூட்டணிகளின் தோல்வி</strong></p>
<p>இந்த சூழலில், சர்வதேச கூட்டணிகளின் நிலைப்பாடு கூட அமெரிக்காவிற்கு எதிர்பாராத சவாலாக மாறியுள்ளது.<br />
நேட்டோ நாடுகள் உட்பட பல பாரம்பரிய நட்பு நாடுகள், நேரடி இராணுவ தலையீட்டைத் தவிர்க்க முனைந்துள்ளன.<br />
குறிப்பாக, ஹார்முஸ் நீரிணையை வலுக்கட்டாயமாகத் திறக்க கடற்படைகளை அனுப்புவதில் அவர்கள் காட்டும் தயக்கம்,<br />
மேற்கத்திய கூட்டணிகளில் உள்ள ஆழமான பிளவுகளை வெளிப்படுத்துகிறது.<br />
ஐரோப்பிய நாடுகள், ஏற்கனவே எரிசக்தி விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் பொருளாதார சுமையை ஏற்கத் தயங்குகின்றன.</p>
<p>இதேவேளை, இந்த மோதல் உலக வல்லரசுகளின் மறைமுக மோதலாகவும் மாறியுள்ளது. சீனாவும் ரஷ்யாவும், ஈரானுக்கு பல்வேறு வடிவங்களில் ஆதரவை வழங்கி வருகின்றன. செயற்கைக்கோள் உளவு தகவல்கள், மின்னணு போர் உதவிகள் மற்றும் தொழில்நுட்ப ஆதரவுகள் மூலம், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தொழில்நுட்ப முன்னிலை குறைக்கப்படுகின்றது எனக் கூறப்படுகிறது.<br />
இதன் மூலம், இந்த மோதல் ஒரு பிராந்தியப் போரிலிருந்து, உலகளாவிய சக்தி போட்டியின் ஒரு முக்கிய மேடையாக மாறியுள்ளது.</p>
<p>இந்த அனைத்துப் பரிமாணங்களையும் கருத்தில் கொண்டால், உலக பொருளாதாரம் மிகவும் ஆபத்தான நிலையை எட்டியுள்ளது.<br />
எரிசக்தி விலை உயர்வு, உலகளாவிய பணவீக்கம், வர்த்தக சங்கிலி சிதைவு, மற்றும் நாணய மதிப்பிழப்பு ஆகியவை ஒன்றோடொன்று இணைந்து, ஒரு பெரிய நிதி நெருக்கடியை உருவாக்கும் அபாயத்தை ஏற்படுத்துகின்றன.<br />
இந்நிலையில் இந்தப் போர் நீடித்தால், உலக நிதி அமைப்பே சீர்குலையும் அபாயம் உள்ளது என பல நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.</p>
<p><img fetchpriority="high" decoding="async" class="alignnone size-full wp-image-47665" src="https://oruvan.com/wp-content/uploads/2026/03/russia.png" alt="" width="908" height="513" /></p>
<p><strong>பதற்றத்தைத் தணிப்பதற்கான ஒரே தீர்வு</strong></p>
<p>இந்த சூழலில், மோதலை முடிவுக்குக் கொண்டுவர ஒரு விரிவான மற்றும் சமநிலையான மாபெரும் உடன்படிக்கை அவசியமாகியுள்ளது.<br />
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய மூன்று முக்கிய தரப்புகளும், தங்களது அடிப்படை பாதுகாப்பு கவலைகளைத் தீர்க்கும் வகையில்<br />
பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது, பாதுகாப்பு உத்தரவாதங்கள் வழங்குவது, மற்றும் இராணுவ நடவடிக்கைகளை குறைப்பது போன்ற அம்சங்கள் இந்த உடன்படிக்கையின் மையமாக இருக்க வேண்டும்.</p>
<p><strong>இந்திய மற்றும் இலங்கை தலையீட்டிற்கான வாதம்</strong></p>
<p>இந்த நெருக்கடியான தருணத்தில், இந்தியா ஒரு முக்கிய மத்தியஸ்த சக்தியாக உருவெடுக்கக்கூடிய நிலையில் உள்ளது.<br />
இஸ்ரேலுடன் வலுவான பாதுகாப்பு உறவுகளையும், ஈரானுடன் நீண்டகால வரலாற்று மற்றும் எரிசக்தி தொடர்புகளையும் பேணும் இந்தியா,<br />
ஒரு சமநிலையான அணுகுமுறையை வழங்கக்கூடிய நாடாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக, எண்ணெய் விலை உயர்வு இந்தியாவின்<br />
பொருளாதார வளர்ச்சியை நேரடியாக பாதிக்கும் நிலையில், இந்த மோதலை தணிக்க இந்தியா முன்வருவது அதன் தேசிய நலனுக்கும் இணங்குகிறது.</p>
<p>அதேபோன்று, இலங்கை தனது அணிசேரா வெளிநாட்டு கொள்கை மரபின் அடிப்படையில், நடுநிலை மத்தியஸ்த முயற்சிகளில் பங்கேற்கக்கூடிய திறனை கொண்டுள்ளது. ஜே.ஆர். ஜெயவர்தன மற்றும் சிறிமாவோ பண்டாரநாயக்க காலங்களில்,<br />
இலங்கை சர்வதேச இராஜதந்திரத்தில் முக்கிய பங்காற்றியதன் வரலாறு உள்ளது. ஆனால், தற்போதைய சூழலில் அந்த திறனை மீண்டும் உருவாக்குவது ஒரு சவாலாகவே உள்ளது. இதற்கு வலுவான தலைமைத்துவம், நுண்ணறிவு மற்றும் உலக அரசியல் பற்றிய ஆழமான புரிதல் அவசியமாகிறது.</p>
<p>முடிவாக , 2026 ஈரான் போர் ஒரு சாதாரண பிராந்திய மோதலைத் தாண்டி, உலகளாவிய அரசியல், பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளை மாற்றக்கூடிய சக்தியாக மாறியுள்ளது.எனவே, உடனடி பேச்சுவார்த்தை, சமரசம் மற்றும் சர்வதேச மத்தியஸ்தம் மட்டுமே இந்த ஆபத்தான நிலையை கட்டுப்படுத்தக்கூடிய ஒரே வழியாக பார்க்கப்படுகிறது.</p>
<p>பாலகணேஷ் டிலுக்ஷா</p>
<p>The post <a href="https://oruvan.com/the-hormuz-standoff-has-shaken-the-global-economy/">மாபெரும் சீற்றத்தின் நிழல் &#8211; உலக பொருளாதாரத்தை அதிர வைத்த ஹார்முஸ் முட்டுக்கட்டை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>போர் ஏற்பட்டால் குடிமக்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் &#8211; நோர்வே இராணுவம் அறிவிப்பு</title>
		<link>https://oruvan.com/in-the-event-of-war-in-norway-citizens-vehicles-will-be-confiscated-and-used/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Wed, 21 Jan 2026 04:33:04 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Norway]]></category>
		<category><![CDATA[நோர்வே]]></category>
		<category><![CDATA[போர்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=43453</guid>

					<description><![CDATA[<p>ரஷ்யாவுடன் போர் ஏற்பட்டால் செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்து ஐரோப்பிய நாடான நோர்வே தனது குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. போர் ஏற்பட்டால், குடிமக்களின் வாகனங்கள், படகுகள் போன்றவை ராணுவத்தால் பறிமுதல் செய்யப்பட்டு பயன்படுத்தப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதுவரை 13,000 குடிமக்களுக்கு இந்த செய்தி அனுப்பப்பட்டுள்ளது. இந்த செய்தியின் மூலம், போர்க்காலத்தில் நாட்டின் பாதுகாப்புக்குத் தேவையான பொருட்களை ஆயுதப்படைகள் அணுகுவதை உறுதி செய்ய உள்ளதாக நோர்வே இராணுவம் தெரிவித்துள்ளது. இப்போது வழங்கப்பட்ட செய்தி ஒரு வருத்திற்கு செல்லுபடியாகும். [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/in-the-event-of-war-in-norway-citizens-vehicles-will-be-confiscated-and-used/">போர் ஏற்பட்டால் குடிமக்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் &#8211; நோர்வே இராணுவம் அறிவிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ரஷ்யாவுடன் போர் ஏற்பட்டால் செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்து ஐரோப்பிய நாடான நோர்வே தனது குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.</p>
<p>போர் ஏற்பட்டால், குடிமக்களின் வாகனங்கள், படகுகள் போன்றவை ராணுவத்தால் பறிமுதல் செய்யப்பட்டு பயன்படுத்தப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.</p>
<p>இதுவரை 13,000 குடிமக்களுக்கு இந்த செய்தி அனுப்பப்பட்டுள்ளது.</p>
<p>இந்த செய்தியின் மூலம், போர்க்காலத்தில் நாட்டின் பாதுகாப்புக்குத் தேவையான பொருட்களை ஆயுதப்படைகள் அணுகுவதை உறுதி செய்ய உள்ளதாக நோர்வே இராணுவம் தெரிவித்துள்ளது.</p>
<p>இப்போது வழங்கப்பட்ட செய்தி ஒரு வருத்திற்கு செல்லுபடியாகும். இராணுவம் இதற்கு முன்பு இதுபோன்ற செய்திகளை அனுப்பியுள்ளது.</p>
<p>இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு நோர்வே மிகவும் கடுமையான பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்கிறது, மேலும் போருக்குத் தயாராக வேண்டிய அவசியம் சமீபத்தில் கணிசமாக அதிகரித்துள்ளது,</p>
<p>எனவே ஒரு பெரிய கையிருப்புக்குத் தயாராகி வருகிறது என்று இராணுவத்தின் தளவாட அமைப்பின் தலைவர் ஆண்டர்ஸ் ஜென்பெர்க் தெரிவித்துள்ளார்.</p>
<p>நோர்வே ஆர்க்டிக்கில் ஒரு மூலோபாய இடத்தைக் கொண்டுள்ளது, அங்கு ரஷ்யாவுடன் கடல் மற்றும் நில எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது.</p>
<p>நேட்டோ உறுப்பினரான நோர்வேயின் கவலைகளுக்கு கூடுதலாக, மேற்கு நாடுகளால் ஏகபோகமாக வைத்திருக்கும் ஆர்க்டிக்கில் ரஷ்யாவும் சீனாவும் தங்கள் இருப்பை விரிவுபடுத்தும் திட்டங்களை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/in-the-event-of-war-in-norway-citizens-vehicles-will-be-confiscated-and-used/">போர் ஏற்பட்டால் குடிமக்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் &#8211; நோர்வே இராணுவம் அறிவிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>கசான் நகரம் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல்</title>
		<link>https://oruvan.com/drone-attack-on-the-city-of-kazan/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Sun, 22 Dec 2024 04:09:55 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[Russia]]></category>
		<category><![CDATA[ukrain russia war]]></category>
		<category><![CDATA[ukraine]]></category>
		<category><![CDATA[உக்ரைன்]]></category>
		<category><![CDATA[கசான்]]></category>
		<category><![CDATA[போர்]]></category>
		<category><![CDATA[யுத்தம்]]></category>
		<category><![CDATA[ரஷ்யா]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=3581</guid>

					<description><![CDATA[<p>ரஷ்யாவின் கசான் நகரம் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் கசான் நகரைச் சுற்றியுள்ள பல விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மொஸ்கோவில் இருந்து சுமார் 800 கிமீ தொலைவில் உள்ள கசானில் உள்ள பல குடியிருப்பு வளாகங்கள் ஆளில்லா விமானங்களால் தாக்கப்பட்டதாக ரஷ்ய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. நேற்று (21) காலை மூன்று ஆளில்லா விமானங்கள் மூலம் நகரம் தாக்கப்பட்டதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. கசானில் அதிகாரிகள் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/drone-attack-on-the-city-of-kazan/">கசான் நகரம் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ரஷ்யாவின் கசான் நகரம் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p>
<p>இதனால் கசான் நகரைச் சுற்றியுள்ள பல விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p>
<p>மொஸ்கோவில் இருந்து சுமார் 800 கிமீ தொலைவில் உள்ள கசானில் உள்ள பல குடியிருப்பு வளாகங்கள் ஆளில்லா விமானங்களால் தாக்கப்பட்டதாக ரஷ்ய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.</p>
<p>நேற்று (21) காலை மூன்று ஆளில்லா விமானங்கள் மூலம் நகரம் தாக்கப்பட்டதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. கசானில் அதிகாரிகள் தாக்கப்பட்ட கட்டிடங்களில் இருந்து மக்களை வெளியேற்றி வருகின்றனர்.</p>
<p>ட்ரோன் தாக்குதல்கள் உக்ரைனால் நடத்தப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கூறியது, ஆனால் உக்ரைன் அதிகாரிகள் இது குறித்து இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.</p>
<p>கசான் மேயர் அலுவலகம், ட்ரோன்கள் நகரத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகளை குறிவைத்ததாக தெரிவித்துள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/drone-attack-on-the-city-of-kazan/">கசான் நகரம் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
