<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>பிள்ளையான் Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/பிள்ளையான்/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Fri, 17 Apr 2026 11:29:59 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>பிள்ளையான் Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/பிள்ளையான்/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>பிள்ளையானுக்கு ஆதரவாக மட்டக்களப்பில் சத்தியாகிரகப் போராட்டம் – விடுதலை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை</title>
		<link>https://oruvan.com/satyagraha-protest-in-batticaloa-in-support-of-pillaiyaan/</link>
		
		<dc:creator><![CDATA[Rasmila]]></dc:creator>
		<pubDate>Fri, 17 Apr 2026 11:29:59 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முகப்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Satyagraha protest in Batticaloa in support of Pillaiyaan]]></category>
		<category><![CDATA[கருணா பிள்ளையான்]]></category>
		<category><![CDATA[சிவனேசதுரை சந்திரகாந்தன்]]></category>
		<category><![CDATA[சிறைச்சாலை]]></category>
		<category><![CDATA[பிள்ளையான்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=48495</guid>

					<description><![CDATA[<p>பிள்ளையான் என அறியப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் முன்னெடுத்துள்ள உண்ணாவிரத போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக அடையாள சத்தியாகிரகப் போராட்டம் இடம் பெற்றது. மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக இன்று காலை இந்த போராட்டம் இடம்பெற்றிருந்தது. சந்திரகாந்தனை தகுதியான சிறைச்சாலைக்கு மாற்ற வேண்டும் எனவும், உண்ணாவிரத போராட்டத்திற்கு தீர்வு கொடுங்கள் மற்றும் கைதிகளுக்கான வசதிகளை வழங்க வேண்டும் என இதன் போது கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் ஏற்பாட்டில் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/satyagraha-protest-in-batticaloa-in-support-of-pillaiyaan/">பிள்ளையானுக்கு ஆதரவாக மட்டக்களப்பில் சத்தியாகிரகப் போராட்டம் – விடுதலை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பிள்ளையான் என அறியப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் முன்னெடுத்துள்ள உண்ணாவிரத போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக அடையாள சத்தியாகிரகப் போராட்டம் இடம் பெற்றது.</p>
<p>மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக இன்று காலை இந்த போராட்டம் இடம்பெற்றிருந்தது.</p>
<p>சந்திரகாந்தனை தகுதியான சிறைச்சாலைக்கு மாற்ற வேண்டும் எனவும், உண்ணாவிரத போராட்டத்திற்கு தீர்வு கொடுங்கள் மற்றும் கைதிகளுக்கான வசதிகளை வழங்க வேண்டும் என இதன் போது கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.</p>
<p>மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த அடையாள சத்யாக்கிரக போராட்டத்தில் கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.</p>
<p>சிறையில் சந்திரகாந்தனின் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாகவும் அவருக்கு உரிய முறையில் சாதாரண கைதிகளுக்கு வழங்கப்படுகின்ற சலுகைகளும் வழங்கப்படவில்லை எனவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.</p>
<p>எனவே, சாதாரண கைதிகளுக்கு வழங்கப்படுகின்ற சலுகைகளையாவது வழங்க வேண்டும் எனவும், வேறு சிறைக்கு அவரை மாற்றி அவருக்கு அடிப்படை வசதிகளை வழங்க வேண்டும் எனவும் இதன் போது வலியுறுத்தப்பட்டுள்ளது.</p>
<p>இந்த அரசாங்கத்தின் செயல்பாடுகளை தாங்கள் வரவேற்பதாகவும், சந்திரகாந்தன் குற்றம் செய்திருந்தால் அவருக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் போராட்டத்தி ஈடுபட்டிருந்தவர்கள் தெரிவித்திருந்தனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/satyagraha-protest-in-batticaloa-in-support-of-pillaiyaan/">பிள்ளையானுக்கு ஆதரவாக மட்டக்களப்பில் சத்தியாகிரகப் போராட்டம் – விடுதலை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கடத்தல், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் &#8211;  பிள்ளையானுக்கு தொடர்ந்து விளக்கமறியல்</title>
		<link>https://oruvan.com/eastern-university-vice-chancellor-kidnapping-easter-sunday-attack-case-pillayan-remanded-in-custody/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Thu, 02 Apr 2026 13:40:41 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[பிள்ளையான்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=47856</guid>

					<description><![CDATA[<p>கடந்த 2006ஆம் ஆண்டு கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சி. ரவீந்திரநாத் கொழும்பில் வைத்து கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் இன்றுகல்கிசை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போது பேராசிரியர் ரவீந்திரநாத் கடத்தல் மற்றும் ஏனைய குற்றச்சாட்டுகள் தொடர்பில் சட்ட மா அதிபரின் ஆலோசனை கிடைக்கும் வரை பிள்ளையானை விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிசை நீதவான் உத்தரவிட்டுள்ளார். கடந்த [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/eastern-university-vice-chancellor-kidnapping-easter-sunday-attack-case-pillayan-remanded-in-custody/">கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கடத்தல், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் &#8211;  பிள்ளையானுக்கு தொடர்ந்து விளக்கமறியல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>கடந்த 2006ஆம் ஆண்டு கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சி. ரவீந்திரநாத் கொழும்பில் வைத்து கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் இன்றுகல்கிசை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.</p>
<p>இதன்போது பேராசிரியர் ரவீந்திரநாத் கடத்தல் மற்றும் ஏனைய குற்றச்சாட்டுகள் தொடர்பில் சட்ட மா அதிபரின் ஆலோசனை கிடைக்கும் வரை பிள்ளையானை விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிசை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.</p>
<p>கடந்த 2025 ஏப்ரல் 8ஆம் திகதி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்ட பிள்ளையான், சுமார் 359 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு தொடர்ச்சியாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.</p>
<p>இதன்போது அவரிடம் விசாரணை நடத்துவதற்காக நான்கு முறை தடுப்புக் காவல் உத்தரவுகள் பெறப்பட்டிருந்த நிலையில், இறுதி உத்தரவு நாளை (3) நிறைவடையவிருந்த நிலையிலேயே அவர் நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.</p>
<p>உபவேந்தர் காணாமல்போன சம்பவம் மட்டுமன்றி, பிரிட்டனின் &#8216;செனல்-4&#8217; (Channel 4) தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணப்படத்தில் சுமத்தப்பட்ட பாரதூரமான குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும் இவரிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் கடந்த ஒரு வருடமாக விரிவான விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.</p>
<p>பிள்ளையானின் மிக நெருங்கிய சகாக்களில் ஒருவராக இருந்த அசாத் மௌலானா முன்வைத்த வெளிப்படுத்தல்களின் அடிப்படையில், 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்களை முன்னெடுத்த குழுவினருக்கும் இலங்கையின் புலனாய்வுப் பிரிவின் பிரதானிகளுக்கும் இடையில் சந்திப்புகளை ஒருங்கிணைக்க பிள்ளையான் உடந்தையாக இருந்தார் என்ற குற்றச்சாட்டு தொடர்பில் இந்த விசாரணைகள் இடம்பெற்றன.</p>
<p>முன்னதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் 2005ஆம் ஆண்டு நத்தார் தினத்தில் மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், 2015ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட பிள்ளையான் சுமார் ஐந்து ஆண்டுகள் சிறையிலிருந்தார்.</p>
<p>இருப்பினும், 2021ஆம் ஆண்டு சட்ட மா அதிபரினால் குறித்த வழக்கு மீளப் பெறப்பட்டதைத் தொடர்ந்து அவர் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டிருந்தார்.</p>
<p>இந்நிலையில், இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டவேளை, பேராசிரியர் ரவீந்திரநாத் கடத்தல் மற்றும் ஏனைய குற்றச்சாட்டுகள் தொடர்பில் சட்ட மா அதிபரின் ஆலோசனை கிடைக்கும் வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிசை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/eastern-university-vice-chancellor-kidnapping-easter-sunday-attack-case-pillayan-remanded-in-custody/">கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கடத்தல், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் &#8211;  பிள்ளையானுக்கு தொடர்ந்து விளக்கமறியல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பிள்ளையானை மேலும் 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்க உத்தேசம்</title>
		<link>https://oruvan.com/intended-to-keep-pillaiyaan-in-custody-for-another-90-days/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Thu, 30 Oct 2025 17:29:12 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[பிள்ளையான்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=36907</guid>

					<description><![CDATA[<p>பிள்ளையான் என்றழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனை மேலும் 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், பிள்ளையானின் அடிப்படை உரிமை மீறல் தொடர்பான எழுத்தாணை உத்தரவு மனு மீதான விசாரணை நாளை நடைபெறவுள்ளது. அதன் நிமித்தம் பிள்ளையானின் சட்டத்தரணியான முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு சென்று பிள்ளையானை சந்தித்தார். இதன்போது வழக்கு தொடர்பில் அவருடன் கலந்துரையாடியதாக உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/intended-to-keep-pillaiyaan-in-custody-for-another-90-days/">பிள்ளையானை மேலும் 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்க உத்தேசம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பிள்ளையான் என்றழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனை மேலும் 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p>
<p>இந்த நிலையில், பிள்ளையானின் அடிப்படை உரிமை மீறல் தொடர்பான எழுத்தாணை உத்தரவு மனு மீதான விசாரணை நாளை நடைபெறவுள்ளது.</p>
<p>அதன் நிமித்தம் பிள்ளையானின் சட்டத்தரணியான முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு சென்று பிள்ளையானை சந்தித்தார்.</p>
<p>இதன்போது வழக்கு தொடர்பில் அவருடன் கலந்துரையாடியதாக உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பிள்ளையான் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக, அரசாங்கம் தெரிவித்துவருகிறது.</p>
<p>எனினும், கிழக்கின் பேராசிரியர் ஒருவர் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பிலேயே, அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.</p>
<p>அதன்படி, தடுப்புக் காவல் உத்தரவுக்கு அமைய சுமார் ஏழரை மாதங்கள் பிள்ளையான் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.</p>
<p>இதனடிப்படையில், தாம் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமையில் எவ்வித அடிப்படையும் இல்லை எனவும், இதனூடாக தனது உரிமை மீறப்பட்டுள்ளதாகவும் அறிவித்து உத்தரவிடுமாறு கோரி, பிள்ளையான் தாக்கல் செய்த எழுத்தாணை மனு நாளை உயர் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/intended-to-keep-pillaiyaan-in-custody-for-another-90-days/">பிள்ளையானை மேலும் 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்க உத்தேசம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பிள்ளையானின் முக்கிய சகா காத்தான்குடியில் கைது</title>
		<link>https://oruvan.com/pillayans-key-aide-arrested-in-kattankudy/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Thu, 14 Aug 2025 03:20:20 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[arrest]]></category>
		<category><![CDATA[Pillaiyan]]></category>
		<category><![CDATA[பிள்ளையான்]]></category>
		<category><![CDATA[முகமட் ஷாகித்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=29411</guid>

					<description><![CDATA[<p>பிள்ளையான் என்ற முன்னாள் இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தனால் செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கொலைகளில் முக்கிய துப்பாக்கி சூடு நடாத்திய பிள்ளையானின் சகாவான முகமட் ஷாகித் என்பவரை காத்தான்குடியில் வைத்து குற்றப் புலனாய்வு துறையினர் கைது செய்துள்ளனர். நேற்று புதன்கிழமை (13) மாலை சந்தேகநபர் அவரின் வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்படு காணாமல் போன சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/pillayans-key-aide-arrested-in-kattankudy/">பிள்ளையானின் முக்கிய சகா காத்தான்குடியில் கைது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பிள்ளையான் என்ற முன்னாள் இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தனால் செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கொலைகளில் முக்கிய துப்பாக்கி சூடு நடாத்திய பிள்ளையானின் சகாவான முகமட் ஷாகித் என்பவரை காத்தான்குடியில் வைத்து குற்றப் புலனாய்வு துறையினர் கைது செய்துள்ளனர்.</p>
<p>நேற்று புதன்கிழமை (13) மாலை சந்தேகநபர் அவரின் வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.</p>
<p>கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்படு காணாமல் போன சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சி.சந்திரகாந்தனை கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவினர் மட்டக்களப்பில் உள்ள அவரது காரியாலயத்தில் வைத்து கடந்த ஏப்பிரல் ஏழாம் திகதி கைது செய்தனர்.</p>
<p>அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையையடுத்து காத்தான்குடியைச் சேர்ந்தவரும் கடந்த காலத்தில் பிள்ளையானுடன் செயற்பட்ட 45 வயதுடைய முகமட் ஷாகித்தை அவரது வீட்டில் வைத்து கொழும்பில் இருந்து வந்த அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.</p>
<p>இதேவேளை கைது செய்யப்பட்டவர் கடந்த 2024 ஜூன் 17ஆம் திகதி காத்தான்குடி மீன்பிடி இலாகாவீதியில் உள்ள வீடு ஒன்றில் தனிமையில் இருந்த பெணிடம் தங்க ஆபரணங்களை கொள்ளையடிப்பதற்காக கை துப்பாக்கியால் ஆகாயத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியிருந்தார்.</p>
<p>இதனையடுத்து அவரை கைது செய்து மூன்று நாள் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்த நிலையில் அவரிடமிருந்து அந்த கைதுப்பாக்கியை மீட்க முடியாமல் போனதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/pillayans-key-aide-arrested-in-kattankudy/">பிள்ளையானின் முக்கிய சகா காத்தான்குடியில் கைது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சிறையில் இருந்து பிள்ளையானால் அனுப்பப்பட்ட கடிதம் தொடர்பில் விசாரணை</title>
		<link>https://oruvan.com/investigation-into-letter-sent-by-child-from-prison/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Sat, 09 Aug 2025 02:54:27 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[பிள்ளையான்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=28820</guid>

					<description><![CDATA[<p>சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனால், அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் தொடர்பில் மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதனிடம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணை நடத்தியுள்ளனர். மட்டக்களப்பில் புணர் நிர்மாணிக்கப்பட்ட பொது நூலகத்தை திறந்து மக்கள் பாவனைக்கு கையளிக்குமாறு வலியுறுத்தி, சிறையில் உள்ள பிள்ளையான் கையெழுத்திட்ட கடிதம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியிருந்தது. அந்த கடிதம் கடந்த 30ஆம் திகதி மட்டக்களப்பு மாநகர முதல்வருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக குறித்த கடிதம் மூலம் தெரியவருகிறது. [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/investigation-into-letter-sent-by-child-from-prison/">சிறையில் இருந்து பிள்ளையானால் அனுப்பப்பட்ட கடிதம் தொடர்பில் விசாரணை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனால், அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் தொடர்பில் மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதனிடம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணை நடத்தியுள்ளனர்.</p>
<p>மட்டக்களப்பில் புணர் நிர்மாணிக்கப்பட்ட பொது நூலகத்தை திறந்து மக்கள் பாவனைக்கு கையளிக்குமாறு வலியுறுத்தி, சிறையில் உள்ள பிள்ளையான் கையெழுத்திட்ட கடிதம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியிருந்தது.</p>
<p>அந்த கடிதம் கடந்த 30ஆம் திகதி மட்டக்களப்பு மாநகர முதல்வருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக குறித்த கடிதம் மூலம் தெரியவருகிறது.</p>
<p>இதனையடுத்தே அந்த கடிதம் தொடர்பாக மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதனிடம், குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் நேற்று வாக்குமூலம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p>
<p>முன்னாள் இராஜாங்க அமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான பிள்ளையான் என்றழைக்கப்படும் சி.சந்திரகாந்தன் முன்னாள் கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, கடந்த ஏப்ரல் 6ஆம் திகதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.</p>
<p>பின்னர் அவர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ், தடுப்பு காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.</p>
<p>பிள்ளையான் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள சூழலில், அவரால் கடிதம் ஒன்று அனுப்பட்டதாக கூறி சமூக வலைத்தளங்களில் வௌியிடப்பட்டுள்ளமை தொடர்பில், குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மாநகரசபைக்கு சென்று, மாநகரசபை முதல்வரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.</p>
<p>The post <a href="https://oruvan.com/investigation-into-letter-sent-by-child-from-prison/">சிறையில் இருந்து பிள்ளையானால் அனுப்பப்பட்ட கடிதம் தொடர்பில் விசாரணை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>கொலைக் குற்றச்சாட்டுகள் &#8211; பிள்ளையானுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பம்</title>
		<link>https://oruvan.com/murder-charges-cid-investigations-begin-against-pillayan/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Fri, 27 Jun 2025 03:29:38 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Pillaiyan]]></category>
		<category><![CDATA[சிவனேசத்துரை சந்திரகாந்தன்]]></category>
		<category><![CDATA[பிள்ளையான்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=24750</guid>

					<description><![CDATA[<p>முன்னாள் அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் ஐந்து கொலை வழக்குகளில் தொடர்புடையவரா என்பது குறித்து விசாரித்து வருவதாக குற்றப் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த கொலை வழக்குகள் தொடர்பாக பல குழுக்கள் ஏற்கனவே விசாரணைகளைத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த ஐந்து கொலை சம்பவங்களில் ஒரு பொலிஸ் அதிகாரி ஒருவரின் கொலையும் அடங்கும் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் வேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/murder-charges-cid-investigations-begin-against-pillayan/">கொலைக் குற்றச்சாட்டுகள் &#8211; பிள்ளையானுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>முன்னாள் அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் ஐந்து கொலை வழக்குகளில் தொடர்புடையவரா என்பது குறித்து விசாரித்து வருவதாக குற்றப் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.</p>
<p>இது குறித்து தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.</p>
<p>இந்த கொலை வழக்குகள் தொடர்பாக பல குழுக்கள் ஏற்கனவே விசாரணைகளைத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த ஐந்து கொலை சம்பவங்களில் ஒரு பொலிஸ் அதிகாரி ஒருவரின் கொலையும் அடங்கும் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.</p>
<p>கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் வேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறையினர் மேற்கொண்ட விசாரணைகளில் இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.</p>
<p>கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் காணாமல் போனது தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறையின் பல சிறப்புக் குழுக்கள் மட்டக்களப்பு பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.</p>
<p>அந்த விசாரணைகள் தொடர்பாக, சந்தேக நபர்கள் முகாம்களை நடத்தி வந்த இடங்கள் கண்காணிக்கப்பட்டு, பலரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.</p>
<p>அந்த சம்பவம் தொடர்பாக, பிள்ளையான் சமீபத்தில் கைது செய்யப்பட்டு, தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் குற்றப் புலனாய்வுத் துறையின் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.</p>
<p>குற்றப் புலனாய்வு மற்றும் நிதிக் குற்றப் பிரிவின் பொறுப்பான மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசங்க கரவிட்டவின் அறிவுறுத்தலின் கீழ் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/murder-charges-cid-investigations-begin-against-pillayan/">கொலைக் குற்றச்சாட்டுகள் &#8211; பிள்ளையானுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பிள்ளையானின் அலுவலகத்தில் 12 மணிநேர தேடுதல் வேட்டை</title>
		<link>https://oruvan.com/12-hour-search-at-pillayans-office/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Sat, 31 May 2025 09:20:47 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[பிள்ளையான்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=21969</guid>

					<description><![CDATA[<p>மட்டக்களப்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் இருந்து, 3 கைத்தொலைபேசிகள், ஒரு சாரதி அனுமதிப்பத்திரம், i pad ஒன்று, கடவுச்சீட்டு ஒன்று, 9 மில்லி மீற்றர் ரவை துப்பாக்கியின் 6 தோட்டாக்கள், ரிப்பிட்டர் ரக துப்பாக்கியின் 5 வெற்றுத் தோட்டாக்கள் என்பன சிஐடியினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமைக் காரியாலயத்தை, கொழும்பில் இருந்து வருகை தந்த குற்றப்புலனாய்வு துறையினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து, நேற்று வெள்ளிக்கிழமை முற்பகல் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/12-hour-search-at-pillayans-office/">பிள்ளையானின் அலுவலகத்தில் 12 மணிநேர தேடுதல் வேட்டை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>மட்டக்களப்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் இருந்து, 3 கைத்தொலைபேசிகள், ஒரு சாரதி அனுமதிப்பத்திரம், i pad ஒன்று, கடவுச்சீட்டு ஒன்று, 9 மில்லி மீற்றர் ரவை துப்பாக்கியின் 6 தோட்டாக்கள், ரிப்பிட்டர் ரக துப்பாக்கியின் 5 வெற்றுத் தோட்டாக்கள் என்பன சிஐடியினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.</p>
<p>தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமைக் காரியாலயத்தை, கொழும்பில் இருந்து வருகை தந்த குற்றப்புலனாய்வு துறையினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து, நேற்று வெள்ளிக்கிழமை முற்பகல் 11 மணியில் இருந்து இரவு 11 மணி வரை முற்றுகையிட்டு கட்டிட நிலத்தை உடைத்து தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்தனர்.</p>
<p>குறித்த தேடுதல் நடவடிக்கையின் போதே இந்த பொருட்கள் மீட்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p>
<p>கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடந்த 2006 டிசம்பர் 15 ம் திகதி கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வாகனத்தில் பிரயாணித்த நிலையில் அவர் கொழும்பில் வைத்து கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டார்.</p>
<p>சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சி.சந்திரகாந்தனை கடந்த ஏப்பிரல் 8 ஆம் திகதி கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவியினர் மட்டக்களப்பில் உள்ள அவரது காரியாலயத்தில் வைத்து கைது செய்து பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 3 மாதம் தடுப்புக்காவலில் வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/12-hour-search-at-pillayans-office/">பிள்ளையானின் அலுவலகத்தில் 12 மணிநேர தேடுதல் வேட்டை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக கூறி 100 மில்லியன் ரூபா இழப்பீடு கோரும் பிள்ளையான்</title>
		<link>https://oruvan.com/pillayan-seeks-rs-100-million-in-compensation-alleging-violation-of-fundamental-rights/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Fri, 16 May 2025 02:57:14 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Pillaiyan]]></category>
		<category><![CDATA[Pillayan]]></category>
		<category><![CDATA[சிவநேசதுரை சந்திரகாந்தன்]]></category>
		<category><![CDATA[பிள்ளையான்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=20361</guid>

					<description><![CDATA[<p>பிள்ளையான் என்று பரவலாக அறியப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன், இலங்கை உச்ச நீதிமன்றத்தில் ஒரு அடிப்படை உரிமைகள் (FR) மனுவைத் தாக்கல் செய்துள்ளார். குற்றப் புலனாய்வுத் துறையால் (CID)தான் சமீபத்தில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டதன் சட்டப்பூர்வத்தன்மையை எதிர்த்து அவர் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவின் ஊடாக தான் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமை சட்டவிரோதமானது என்று அறிவிக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் தனது அடிப்படை உரிமைகளை மீறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டிற்காக 100 மில்லியன் ரூபா [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/pillayan-seeks-rs-100-million-in-compensation-alleging-violation-of-fundamental-rights/">அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக கூறி 100 மில்லியன் ரூபா இழப்பீடு கோரும் பிள்ளையான்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பிள்ளையான் என்று பரவலாக அறியப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன், இலங்கை உச்ச நீதிமன்றத்தில் ஒரு அடிப்படை உரிமைகள் (FR) மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.</p>
<p>குற்றப் புலனாய்வுத் துறையால் (CID)தான் சமீபத்தில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டதன் சட்டப்பூர்வத்தன்மையை எதிர்த்து அவர் மனு தாக்கல் செய்துள்ளார்.</p>
<p>இந்த மனுவின் ஊடாக தான் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமை சட்டவிரோதமானது என்று அறிவிக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.</p>
<p>மேலும் தனது அடிப்படை உரிமைகளை மீறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டிற்காக 100 மில்லியன் ரூபா இழப்பீடும் கோரியுள்ளார்.</p>
<p>பிள்ளையான் கடந்த ஏப்ரல் 8ஆம் திகதி மட்டக்களப்பில் வைத்து குற்றப் புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்டு, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் 90 நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.</p>
<p>எவ்வாறாயினும், பிள்ளையான் கைது செய்யப்பட்டதற்கான குறிப்பிட்ட காரணங்களை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் பகிரங்கமாக வெளியிடவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>தனது அடிப்படை உரிமைகள் மனுவில், தனது கைது மற்றும் தடுத்து வைக்கப்பட்டது அரசியல் நோக்கம் கொண்டது என்றும் போதுமான சட்ட அடிப்படை இல்லை என்றும் பிள்ளையான் வலியுறுத்துகிறார்.</p>
<p>குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நடவடிக்கைகள் அரசியலமைப்பின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட தனது அடிப்படை உரிமைகளை மீறுவதாகும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>இந்த அடிப்படை உரிமை மீறலை உறுதிப்படுத்தும், அதேவேளை, அடிப்படை உரிமைகளை மீறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டிற்காக 100 மில்லியன் ரூபா இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/pillayan-seeks-rs-100-million-in-compensation-alleging-violation-of-fundamental-rights/">அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக கூறி 100 மில்லியன் ரூபா இழப்பீடு கோரும் பிள்ளையான்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பிள்ளையானை பற்றி பேசாவிட்டால் களுவாஞ்சிக்குடி அஷ்ரப்பிற்கு தூக்கம் வராது &#8211; கருணா</title>
		<link>https://oruvan.com/kaluvanchikudi-ashrap-wont-be-able-to-sleep-if-we-dont-talk-about-pillaiyaan-karuna/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Fri, 02 May 2025 03:28:26 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Karuna Amman]]></category>
		<category><![CDATA[Pillayan]]></category>
		<category><![CDATA[கருணா]]></category>
		<category><![CDATA[பிள்ளையான்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=19061</guid>

					<description><![CDATA[<p>களுவாஞ்சிக்குடி அஷ்ரப்பிற்கு பிள்ளையானைப் பற்றிப் பேசாவிட்டால் அவருக்கு நித்திரை வருவதில்லை என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னனியின் தலைவர் கருணா அம்மான் தெரிவித்துள்ளார். வாழைச்சேனையில் இடம்பெற்ற கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் மே தின கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொது செயலாளர் பூ.பிரசாந்தன் மற்றும் அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளர் த.தஜீவரன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். இதன்போது கருத்துத் தெரிவித்த கருணா அம்மான். களுவாஞ்சிக்குடி அஷ்ரப்பின் வாயில் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/kaluvanchikudi-ashrap-wont-be-able-to-sleep-if-we-dont-talk-about-pillaiyaan-karuna/">பிள்ளையானை பற்றி பேசாவிட்டால் களுவாஞ்சிக்குடி அஷ்ரப்பிற்கு தூக்கம் வராது &#8211; கருணா</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>களுவாஞ்சிக்குடி அஷ்ரப்பிற்கு பிள்ளையானைப் பற்றிப் பேசாவிட்டால் அவருக்கு நித்திரை வருவதில்லை என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னனியின் தலைவர் கருணா அம்மான் தெரிவித்துள்ளார்.</p>
<p>வாழைச்சேனையில் இடம்பெற்ற கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் மே தின கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.</p>
<p>இந்நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொது செயலாளர் பூ.பிரசாந்தன் மற்றும் அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளர் த.தஜீவரன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.</p>
<p>இதன்போது கருத்துத் தெரிவித்த கருணா அம்மான்.</p>
<p>களுவாஞ்சிக்குடி அஷ்ரப்பின் வாயில் வரும் வார்த்தை பிள்ளையான் பிள்ளையான், பிள்ளையான பற்றி பேசாவிட்டால் அவருக்கு நித்திரை வருவதில்லை என தெரிவித்தார்.</p>
<p>அரசியல் பழிவாங்கலினால் திட்டமிட்டு பிள்ளையானை கைது செய்து செய்தார்கள். இந்த உலகம் முழுவதும் பிள்ளையான் பிள்ளையான் என கத்துகின்றனர்” என்றார்.</p>
<p>இதன்போது பிள்ளையான தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொது செயலாளர் பூ.பிரசாந்தன் கருத்து தெரிவிக்கையில்,</p>
<p>கடந்த 72 வருடங்களுக்கு மேலாக வீட்டு சின்னத்திற்கு வாக்களித்து வாக்களித்து வீடு கூட இல்லாமல் தமிழ் மக்களை நடுத்தெருவிற்கு கொண்டு வந்தவர்கள்தான் தமிழரசுக்கட்சியினர்.</p>
<p>போராளிகளின் புதை குழிகளில் நின்று கேவலமாக வாக்கு கேட்கும் நீங்கள் போராளிகளின் குடும்பங்களை பாதுகாக்க முடியாமல் நிற்கின்றார்கள்” என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/kaluvanchikudi-ashrap-wont-be-able-to-sleep-if-we-dont-talk-about-pillaiyaan-karuna/">பிள்ளையானை பற்றி பேசாவிட்டால் களுவாஞ்சிக்குடி அஷ்ரப்பிற்கு தூக்கம் வராது &#8211; கருணா</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பிள்ளையான் சிறையில் இருப்பது கொடுமையானது &#8211; கருணா ஆதங்கம்</title>
		<link>https://oruvan.com/it-is-cruel-that-pillayan-is-in-prison-karuna-anger/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Thu, 01 May 2025 03:23:49 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[karuna]]></category>
		<category><![CDATA[Pillayan]]></category>
		<category><![CDATA[கருணா]]></category>
		<category><![CDATA[கருணா பிள்ளையான்]]></category>
		<category><![CDATA[பிள்ளையான்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=18977</guid>

					<description><![CDATA[<p>பிள்ளையான் சிறையில் இருப்பது கொடுமையான விடயமாகும் என முன்னாள் பிரதியமைச்சரும், தமிர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான வினாயகமூர்த்தி முரளிதரன்(கருணாஅம்மான்) தெரிவித்துள்ளார். ஏற்கனவே இல்லாத பிரச்சனையில் நான்கு வருடங்கள் சிறையிலேயே இருந்தவர் நிரபராதியாக வெளிய வந்தார். அவ்வளவு காலத்திற்கும் யார் பதில் சொல்வது? அதேபோன்று தான் தற்போதும் அவருக்கு நடந்துள்ளது. அதற்காக வேண்டி வெளிநாட்டில் இருக்கின்ற ஊதுகுழர்கள் கத்திக்கொண்டு இருப்பார்கள் என சுட்டிக்காட்டியுள்ளார். உள்ளூராட்சி தேர்தல் பரப்புரை கூட்டமொன்றில் உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசுகையில், [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/it-is-cruel-that-pillayan-is-in-prison-karuna-anger/">பிள்ளையான் சிறையில் இருப்பது கொடுமையானது &#8211; கருணா ஆதங்கம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பிள்ளையான் சிறையில் இருப்பது கொடுமையான விடயமாகும் என முன்னாள் பிரதியமைச்சரும், தமிர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான வினாயகமூர்த்தி முரளிதரன்(கருணாஅம்மான்) தெரிவித்துள்ளார்.</p>
<p>ஏற்கனவே இல்லாத பிரச்சனையில் நான்கு வருடங்கள் சிறையிலேயே இருந்தவர் நிரபராதியாக வெளிய வந்தார். அவ்வளவு காலத்திற்கும் யார் பதில் சொல்வது?</p>
<p>அதேபோன்று தான் தற்போதும் அவருக்கு நடந்துள்ளது. அதற்காக வேண்டி வெளிநாட்டில் இருக்கின்ற ஊதுகுழர்கள் கத்திக்கொண்டு இருப்பார்கள் என சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>உள்ளூராட்சி தேர்தல் பரப்புரை கூட்டமொன்றில் உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசுகையில்,</p>
<p>கிழக்கு மாகாணத்திலே முதன் முதலாக மாகாண சபையைக் கட்டி எழுப்பி அதிலே முதல் முதலமைச்சராக பிள்ளையான் பதவி வகித்து அதனுடாக பாரிய அபிவிருத்திகளை செய்திருந்தார்.</p>
<p>அதன் பின்னர்தான் கல்வி அபிவிருத்தி உள்ளிட்ட அனைத்து அபிவிருத்திகளும் கிழக்கில் இடம்பெற்றன. பின்னர் நான் மத்திய அரசாங்கத்தில் இருந்து கொண்டு பல வீட்டுத்திட்டங்களையும், வீதிகள், பாலங்கள், என பல அவிருத்திட்டங்களை செய்திருந்தேன்.</p>
<p>அதுபோல் வியாழேந்திரன் அவர்கள் மத்திய அரசாங்கத்தில் இருந்தபோது பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை செய்திருந்தார்.</p>
<p>இவ்வாறு பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை செய்து விட்டுதான் நாங்கள் தற்போது இந்த உள்ளுராட்சி மன்றத்தில் நமது பிரதிநிதிகளை களம் இறக்கி இருக்கின்றோம்.</p>
<p>எனவே மக்கள் தற்போது கிடைத்திருக்கின்ற வாய்ப்பை தவற விடக்கூடாது. ஏனெனில் பல பிரச்சனைகள் நம் மத்தியில் காணப்படுகின்றன. ஒரு நபர் வயல் செய்வதற்காக பல மக்கள் பாவிக்கின்ற குளத்தை உடைக்கின்றார்கள்.</p>
<p>மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள் ஒருவரும் சென்று அதனை பார்வையிடவில்லை. இவ்வாறானவர்கள் நமக்கு எதற்கு? தேர்தல் காலத்தில் மேய்சல் தரைப் பிரச்சினையைத் தீர்த்து வைப்போம் என தெரிவிப்பார்கள்.</p>
<p>தேர்தலில் வெற்றி பெற்றதும் அந்தப் பக்கமே அவர்கள் போகவில்லை. இவர்களை நம்பி வாக்களித்ததுதான் மீதமாக உள்ளது, இதற்காக வேண்டித்தான் நாம் கிழக்கு தமிழர் கூட்டமைப்பு என்ற ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளோம்.</p>
<p>இதனை எமது மக்கள் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கான ஒரு அத்திவாரம் தற்போது போடப்பட்டுள்ளது. மக்கள் இவ்விடயத்தில் விழிப்பாக இருந்து செயல்பட வேண்டும்.</p>
<p>தவறான பிரசாரங்களை எடுத்து விடுவார்கள், இதனை நம்பி மக்கள் ஏமாந்து விடக்கூடாது. தற்போது நல்லதொரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பை சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டும், இதனை ஏனையோருக்கும் தெளிவாக்க வேண்டும்.</p>
<p>இலங்கை அரசாங்கத்தில் ஓர் விதி போன்று ஒன்று உள்ளது. அரசாங்கம் மாறி மாறி வருகின்ற போது முன்னை அரசாங்கத்தில் இருப்பவர்களை பிடித்து கைது செய்வது விதி போன்ற உள்ளது.</p>
<p>தற்போது அரசாங்கத்தில் இருப்பவர்கள் அடுத்த முறை வருகின்ற அரசாங்கத்தினால் கைது செய்யப்பட்டு அனைவரும் உள்ளே அனுப்பப்படுவார்கள். நானும் உள்ளே இருந்து வந்தவன்தான், இவை அனைத்தும் அரசியல் பழி வாங்கல்கள்.</p>
<p>இவை எமது மக்களையும் எமது இருப்புக்களையும் ஒருபோதும் பாதிக்கப் போவதில்லை. இதை பற்றி நாம் அலட்டிக் கொள்ள வேண்டிய தேவையும் இல்லை. ஆனால் எவ்வகையான தியாகங்களை செய்தவர்கள் என்பதை எனது மக்கள் சிந்திக்க வேண்டும்.</p>
<p>பிள்ளையான் தற்போது சிறையில் இருப்பது கொடுமையான விடயமாகும். ஏற்கனவே இல்லாத பிரச்சனையில் நான்கு வருடங்கள் சிறையிலேயே இருந்தவர். அப்போது நிரபராதி என வெளிய வந்தவர்.</p>
<p>அவ்வளவு காலத்திற்கும் யார் பதில் சொல்வது. அது போன்றுதான் தற்போதும் அவருக்கு நடைபெற்று இருக்கின்றது. அதற்காக வேண்டி வெளிநாட்டில் இருக்கின்ற ஊதுகுழர்கள் கத்திக்கொண்டு இருப்பார்கள்.</p>
<p>இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு பெரும்பான்மையான மக்கள் வாக்களித்து எமது உறுப்பினர்களை வெற்றிபெறச் செய்ய வேண்டும். அது கிழக்கு மாகாணத்திற்குரிய ஒரு அத்திவாரமாகும்.</p>
<p>தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி என்பது கிழக்கு மாகாண மக்களுக்காக முதன்முதலாக உருவாக்கப்பட்ட ஒரு கட்சியாகும். அக்கட்சியின் சின்னம்தான் படகு சின்னமாகும். அதன் ஊடாக கிழக்கு மாகாணத்தை காப்பாற்ற வேண்டும் என்பதுதான் நமது நோக்கம்.</p>
<p>அம்பாறை மாவட்டத்திலேயே 60 கிராமங்கள் இல்லாமல் போய்விட்டது. மட்டக்களப்பில் தளவாய்க் கிராமமும் இல்லாமல் போய்விட்டது. அதற்கு எல்லாம் துணிந்தவன் முன்வர வேண்டும்.</p>
<p>நாங்கள் துணிந்துதான் நிற்கின்றோம். தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற ஒன்று இல்லை. அவர்களுக்கு தலைவரும் இல்லை. தலைமை போட்டிக்கு வழக்கு வைத்து ஆளுக்கு ஆள் சண்டை பிடிக்கிறார்கள்.</p>
<p>வடக்கு மக்கள் அவர்களை விரட்டியுள்ளார்கள். அவர்களை, கிழக்கிலும், விரட்டி அடிக்க வேண்டும். அவர்கள் அரசாங்கத்தின் முகவர்களாக இருந்து செயற்பட்டவர்கள். இதனை வடக்கு மக்கள் நன்கு அறிந்துவிட்டார்கள்.</p>
<p>கிழக்கு மாகாண மக்களும் இதனை உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதை நான் கூறிக் கொள்கின்றேன். ஆகவே எமது வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/it-is-cruel-that-pillayan-is-in-prison-karuna-anger/">பிள்ளையான் சிறையில் இருப்பது கொடுமையானது &#8211; கருணா ஆதங்கம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
