<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>பிரதமர் Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/பிரதமர்/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Fri, 17 Apr 2026 07:59:46 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>பிரதமர் Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/பிரதமர்/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>பிரித்தானிய வெளியுறவுத்துறையின் உயர்மட்ட அதிகாரி பதவி நீக்கம்</title>
		<link>https://oruvan.com/foreign-offices-top-civil-servant-olly-robbins-forced-out-over-mandelson-vetting-row/</link>
		
		<dc:creator><![CDATA[Rasmila]]></dc:creator>
		<pubDate>Fri, 17 Apr 2026 07:59:46 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முகப்பு]]></category>
		<category><![CDATA[Lord Mandelson]]></category>
		<category><![CDATA[Olly Robbins]]></category>
		<category><![CDATA[சர் ஓலி ரொபின்ஸ்]]></category>
		<category><![CDATA[பிரதமர்]]></category>
		<category><![CDATA[லார்ட் மண்டல்சன்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=48485</guid>

					<description><![CDATA[<p>பிரித்தானிய வெளியுறவுத்துறையின் நிரந்தரச் செயலாளர் சர் ஓலி ரொபின்ஸ் (Sir Olly Robbins) தனது பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவிற்கான பிரித்தானியத் தூதராக லார்ட் மண்டல்சன் (Lord Mandelson) நியமிக்கப்பட்ட போது, அவர் பாதுகாப்புச் சோதனையில் (Security Vetting) தோல்வியடைந்த தகவலைப் பிரதமருக்கு அறிவிக்கத் தவறியமையே இதற்குக் காரணமாகும். கடந்த டிசம்பர் மாதம் அமெரிக்கத் தூதராக நியமிக்கப்பட்ட லார்ட் மண்டல்சன், ஜெப்ரி எப்ஸ்டீனுடனான தொடர்பு காரணமாகப் பின்னர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இருப்பினும், அவரது நியமனத்தின் போது முழுமையான [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/foreign-offices-top-civil-servant-olly-robbins-forced-out-over-mandelson-vetting-row/">பிரித்தானிய வெளியுறவுத்துறையின் உயர்மட்ட அதிகாரி பதவி நீக்கம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பிரித்தானிய வெளியுறவுத்துறையின் நிரந்தரச் செயலாளர் சர் ஓலி ரொபின்ஸ் (Sir Olly Robbins) தனது பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.</p>
<p>அமெரிக்காவிற்கான பிரித்தானியத் தூதராக லார்ட் மண்டல்சன் (Lord Mandelson) நியமிக்கப்பட்ட போது, அவர் பாதுகாப்புச் சோதனையில் (Security Vetting) தோல்வியடைந்த தகவலைப் பிரதமருக்கு அறிவிக்கத் தவறியமையே இதற்குக் காரணமாகும்.</p>
<p>கடந்த டிசம்பர் மாதம் அமெரிக்கத் தூதராக நியமிக்கப்பட்ட லார்ட் மண்டல்சன், ஜெப்ரி எப்ஸ்டீனுடனான தொடர்பு காரணமாகப் பின்னர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.</p>
<p>இருப்பினும், அவரது நியமனத்தின் போது முழுமையான விதிமுறைகள் பின்பற்றப்பட்டதாகப் பிரதமர் Sir Keir Starmer நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.</p>
<p>தற்போது பாதுகாப்பு அமைப்புகளின் எச்சரிக்கையை மீறி இந்த நியமனம் வழங்கப்பட்டமை வெளிச்சத்திற்கு வந்துள்ளதால், பிரதமர் நாடாளுமன்றத்தைத் தவறாக வழிநடத்தியதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன.</p>
<p>இந்த விவகாரத்தால் அதிருப்தியடைந்துள்ள பிரதமர், வரும் திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் இது குறித்த விளக்கத்தை அளிக்கவுள்ளார்.</p>
<p>அதேவேளை, இப்பிரச்சினை காரணமாகப் பிரதமர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/foreign-offices-top-civil-servant-olly-robbins-forced-out-over-mandelson-vetting-row/">பிரித்தானிய வெளியுறவுத்துறையின் உயர்மட்ட அதிகாரி பதவி நீக்கம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தனிநபருக்கும் தீங்கு விளைவிக்காத வகையில் சுற்றுலா துறை ஊக்குவிக்கப்படும் – பிரதமர் நாடாளுமன்றில் விளக்கம்</title>
		<link>https://oruvan.com/tourism-sector-will-be-promoted-in-a-way-that-does-not-harm-the-individual-prime-minister-explains-in-parliament/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Wed, 08 Oct 2025 05:38:01 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Harini Amarasuriya]]></category>
		<category><![CDATA[LGBTQIA+]]></category>
		<category><![CDATA[ஒருவன் செய்தி]]></category>
		<category><![CDATA[ஒருவன் செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஓரினச்சேர்க்கையாளர்]]></category>
		<category><![CDATA[பிரதமர்]]></category>
		<category><![CDATA[ஹரினி அமரசூரிய]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=34735</guid>

					<description><![CDATA[<p>சுற்றுலாத் துறையை மேம்படுத்துவது தொடர்பான நிலைப்பாடு குறித்து ஜனாதிபதியும் வெளியுறவு அமைச்சரும் அரசாங்கத்திற்கும் நிர்வாக அதிகாரிகளுக்கும் தெரிவித்துள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். எந்தவொரு தனிநபருக்கும் தீங்கு விளைவிக்காத வகையில் சுற்றுலாவை செயல்படுத்துவது அரசாங்கத்தின் கொள்கை என்றும், சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதில் சிறப்புக் குழுக்கள் ஊக்குவிக்கப்படுவதில்லை என்றும் பிரதமர் கூறினார். சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக ஓரினச்சேர்க்கையாளர் சமூகத்தை ஊக்குவிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்த ஜெயவர்தன இன்று (08) நாடாளுமன்றத்தில் கேட்ட கேள்விக்கு [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/tourism-sector-will-be-promoted-in-a-way-that-does-not-harm-the-individual-prime-minister-explains-in-parliament/">தனிநபருக்கும் தீங்கு விளைவிக்காத வகையில் சுற்றுலா துறை ஊக்குவிக்கப்படும் – பிரதமர் நாடாளுமன்றில் விளக்கம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>சுற்றுலாத் துறையை மேம்படுத்துவது தொடர்பான நிலைப்பாடு குறித்து ஜனாதிபதியும் வெளியுறவு அமைச்சரும் அரசாங்கத்திற்கும் நிர்வாக அதிகாரிகளுக்கும் தெரிவித்துள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.</p>
<p>எந்தவொரு தனிநபருக்கும் தீங்கு விளைவிக்காத வகையில் சுற்றுலாவை செயல்படுத்துவது அரசாங்கத்தின் கொள்கை என்றும், சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதில் சிறப்புக் குழுக்கள் ஊக்குவிக்கப்படுவதில்லை என்றும் பிரதமர் கூறினார்.</p>
<p>சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக ஓரினச்சேர்க்கையாளர் சமூகத்தை ஊக்குவிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்த ஜெயவர்தன இன்று (08) நாடாளுமன்றத்தில் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.</p>
<p>சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதில் எந்தவொரு கட்சிக்கோ அல்லது குழுவுக்கோ எந்த சூழ்நிலையிலும் சிறப்பு ஊக்குவிப்பு வழங்கப்படாது என்று பிரதமர் மேலும் வலியுறுத்தினார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/tourism-sector-will-be-promoted-in-a-way-that-does-not-harm-the-individual-prime-minister-explains-in-parliament/">தனிநபருக்கும் தீங்கு விளைவிக்காத வகையில் சுற்றுலா துறை ஊக்குவிக்கப்படும் – பிரதமர் நாடாளுமன்றில் விளக்கம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>வடக்கு, கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பிரதமர் அவசரக் கூட்டம்</title>
		<link>https://oruvan.com/prime-minister-holds-emergency-meeting-with-north-and-east-parliamentarians/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Thu, 22 May 2025 13:54:58 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[பிரதமர்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=20977</guid>

					<description><![CDATA[<p>காணி அமைச்சின் கீழ் உள்ள ஒரு நிறுவனம் வெளியிட்ட சர்ச்சைக்குரிய வர்த்தமானி அறிவித்தலுக்கு, தமிழ் மக்கள் பிரதிநிதிகள் தலைமையிலான வட மாகாண மக்களிடமிருந்து கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், பிரதமர் திடீரென இந்தப் பிரச்சினையில் தலையிட்டுள்ளார். மார்ச் 28, 2025 வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட வர்த்தமானி இல. 2430 இல் குறிப்பிடப்பட்டுள்ளமைக்கு அமைய, வடக்கு கடலோரப் பகுதியில் சுமார் 6,000 ஏக்கர் காணியின் உரிமை மூன்று மாதங்களுக்குள் உறுதிப்படுத்தப்படாவிட்டால், அந்த காணி அரசால் கையகப்படுத்தப்படும் என நில உரித்து [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/prime-minister-holds-emergency-meeting-with-north-and-east-parliamentarians/">வடக்கு, கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பிரதமர் அவசரக் கூட்டம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<div class="gs">
<div class="">
<div id=":1gw" class="ii gt">
<div id=":1gx" class="a3s aiL ">
<div dir="ltr">காணி அமைச்சின் கீழ் உள்ள ஒரு நிறுவனம் வெளியிட்ட சர்ச்சைக்குரிய வர்த்தமானி அறிவித்தலுக்கு, தமிழ் மக்கள் பிரதிநிதிகள் தலைமையிலான வட மாகாண மக்களிடமிருந்து கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், பிரதமர் திடீரென இந்தப் பிரச்சினையில் தலையிட்டுள்ளார்.</p>
<p>மார்ச் 28, 2025 வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட வர்த்தமானி இல. 2430 இல் குறிப்பிடப்பட்டுள்ளமைக்கு அமைய, வடக்கு கடலோரப் பகுதியில் சுமார் 6,000 ஏக்கர் காணியின் உரிமை மூன்று மாதங்களுக்குள் உறுதிப்படுத்தப்படாவிட்டால், அந்த காணி அரசால் கையகப்படுத்தப்படும் என நில உரித்து நிர்ணயத் திணைக்களத்தின் உதவி அதிகாரி சுவிந்த எஸ். சிங்கப்புலி ஊடாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.</p>
<p>இது, போரினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களின் காணிகளை சூறையாடும் திட்டம் எனவும், அவற்றின் உரிமையை நிரூபிப்பது கடினமான விடயம் எனவும் கூறி, வர்த்தமானி அறிவித்தலை உடனடியாக மீளப்பெற வேண்டுமென தமிழ் தேசியக் கட்சிகள் வலியுறுத்தியதை அடுத்து, பிரதமர் வடக்கு மற்றும் கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை கலந்துரையாடலுக்கு அழைத்துள்ளார்.</p>
<p>மே 20ஆம் திகதி, பிரதமர் ஹரிணி அமரசூரிய மக்கள் பிரதிநிதிகளுக்கு அனுப்பிய கடிதம், தமிழர்களின் எதிர்ப்புகளுக்கு காரணமான வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணி உரிமைகள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து விவாதிக்க மே 23ஆம் திகதி, வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தின் குழு அறை இல. 1 ற்கு வருமாறு கேட்டுக்கொள்கிறது.</p>
<p>விவசாயம், கால்நடை, காணி விவகாரம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே. டி. லால்காந்த இந்தக் கூட்டத்தில் பங்கேற்பார் என தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.</p>
<p>பலர் போரில் இறந்தமையாலும், பலர் காணாமல் ஆக்கப்பட்டமையாலும், ஆயிரக்கணக்கானவர்கள் வெளிநாடுகளில் அகதிகளாக வாழ்வதாலும், பலரது ஆவணங்கள் போரால் அழிந்துபோயுள்ளமையாலும், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் தமது பாரம்பரிய காணி  உரிமைகளை உறுதிப்படுத்துவது கடினமான விடயமென தமிழ் மக்கள் பிரதிநிதிகளும் மனித உரிமை நிபுணர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p></div>
<div class="yj6qo"></div>
<div class="adL"></div>
</div>
</div>
<div class="WhmR8e" data-hash="0"></div>
</div>
</div>
<p>The post <a href="https://oruvan.com/prime-minister-holds-emergency-meeting-with-north-and-east-parliamentarians/">வடக்கு, கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பிரதமர் அவசரக் கூட்டம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
