<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>ஜனாதிபதி அநுர Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%a8%e0%af%81%e0%ae%b0/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/ஜனாதிபதி-அநுர/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Tue, 07 Jan 2025 07:31:44 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>ஜனாதிபதி அநுர Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/ஜனாதிபதி-அநுர/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>ரஷ்யப்படையில் சிக்கியுள்ள எமது உறவுகளை மீட்டு தாருங்கள் &#8211; ஜனாதிபதிக்கு சென்ற கடிதம்</title>
		<link>https://oruvan.com/please-rescue-our-relatives-trapped-in-the-russian-army-letter-to-the-president-anura/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Tue, 07 Jan 2025 07:31:44 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[anura]]></category>
		<category><![CDATA[Anura Kumara]]></category>
		<category><![CDATA[Anura Kumara Dissanayake]]></category>
		<category><![CDATA[அநுரகுமார]]></category>
		<category><![CDATA[அநுரகுமார திசாநாயக்க]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி அநுர]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=5776</guid>

					<description><![CDATA[<p>ரஷ்யப்படையில் வலிந்து இணைக்கப்பட்டுள்ள எமது உறவுகளை பாதுகாப்பாக மீட்டுத்தருவதற்கு உடனடியாக நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி மற்றும் வெளிவிவகார அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து ரஷ்யப்டையில் சிக்கியுள்ளதாக கூறப்படுவர்களின் தாய்மார் னாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கு தாய்மார் கடிதம் அனுப்பியுள்ளனர். எமது உறவுகள் முகவர்கள் ஊடாக ஐரோப்பாவுக்குச் செல்வதற்காக பயணமாகியபோது இறுதித் தருணத்தில் ரஷ்யாவின் ஊடாக பயணத்தினை மேற்கொள்ளுமாறு பணிக்கப்பட்டனர். அதற்கமைவாக அவர்கள் ரஷ்யாவுக்குச் சென்றபோது அங்கு இலங்கை இராணுவத்தில் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/please-rescue-our-relatives-trapped-in-the-russian-army-letter-to-the-president-anura/">ரஷ்யப்படையில் சிக்கியுள்ள எமது உறவுகளை மீட்டு தாருங்கள் &#8211; ஜனாதிபதிக்கு சென்ற கடிதம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ரஷ்யப்படையில் வலிந்து இணைக்கப்பட்டுள்ள எமது உறவுகளை பாதுகாப்பாக மீட்டுத்தருவதற்கு உடனடியாக நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி மற்றும் வெளிவிவகார அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p>
<p>இது குறித்து ரஷ்யப்டையில் சிக்கியுள்ளதாக கூறப்படுவர்களின் தாய்மார் னாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கு தாய்மார் கடிதம் அனுப்பியுள்ளனர்.</p>
<p>எமது உறவுகள் முகவர்கள் ஊடாக ஐரோப்பாவுக்குச் செல்வதற்காக பயணமாகியபோது இறுதித் தருணத்தில் ரஷ்யாவின் ஊடாக பயணத்தினை மேற்கொள்ளுமாறு பணிக்கப்பட்டனர்.</p>
<p>அதற்கமைவாக அவர்கள் ரஷ்யாவுக்குச் சென்றபோது அங்கு இலங்கை இராணுவத்தில் கடமையாற்றிய அதிகாரியொருவர் அவர்களை சில நாட்களுக்கு பராமரித்ததோடு பின்னர் ரஷ்ய படையில் பயிற்சிகளைப் பெறுவதற்கான இணைப்புச் செய்துள்ளார்.</p>
<p>அப்போதும் கூட அவர் அடையாள அட்டையைப் பெறுவதற்காகவே அவ்வாறு செய்ததாக கூறியுள்ளார். எனினும் பயிற்சியின் பின்னர் எமது உறவுகள் போர்க்களத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.</p>
<p>அவர்களை மீட்டுத்தருமாறு ஏற்கனவே டிசம்பர் 2ஆம் திகதி நாம் எழுத்துமூலமான கோரிக்கையை விடுத்துள்ளபோதும் இதுவரையில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சு எவ்விதமான நடவடிக்கைகளையும் எடுத்ததாக நாம் அறியவில்லை.</p>
<p>எமக்கும் வெளிவிவகார அமைச்சு எவ்விதமான பதில்களையும் வழங்கவில்லை. இந்நிலையில், எமது உறவுகளுடன் காணப்பட்ட தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.</p>
<p>இற்றையக்கு ஒருமாதமாக எமக்கு எந்தவிதமான பதில்களும் அளிக்கப்படாதுள்ள நிலையில் எமது உறவுகளை மீட்டுத் தருவதற்காக உரிய நடடிவடிக்கைகளை விரைந்து எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.</p>
<p>விசேடமாக, எமது அன்புக்குரியவர்கள் தொடர்புகள் துண்டிக்கப்படுவதற்கு முன்னதாக அவர்கள் உயிருக்கு ஆபத்தான போர்க்களத்தில் இருப்பதாக வெளிப்படுத்தியிருந்தார்கள். அவர்களின் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருந்தது.</p>
<p>ஆகவே அவர்களை பாதுகாப்பாக மீட்டெடுத்து எம்மிடத்தில் ஒப்படைக்குமாறு நாம் கோரிக்கை விடுப்பதோடு கிளீர் சிறிலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் இவ்வாறு ஆட்கடத்தில் வலையமைப்புக்களையும் முழுமையாக அகற்றுவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்துகின்றோம்.</p>
<p>எமது நீதியையும், நியாயத்தையும் பெற்றுத்தருவீர்கள் என்ற பெரும் எதிர்பார்ப்பு காணப்படுவதோடு விரைந்து இந்த விடயத்தில் அவதானம் செலுத்த வேண்டும் என்றும்” அவர்கள் தமது கடிதத்தில் கோரியுள்ளனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/please-rescue-our-relatives-trapped-in-the-russian-army-letter-to-the-president-anura/">ரஷ்யப்படையில் சிக்கியுள்ள எமது உறவுகளை மீட்டு தாருங்கள் &#8211; ஜனாதிபதிக்கு சென்ற கடிதம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>மிக முக்கிய வழக்குகளில் தாமதம்: ஜனாதிபதியை சந்திக்கின்றார் சட்டமா அதிபர்</title>
		<link>https://oruvan.com/delays-in-very-important-cases-attorney-general-meets-president/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Sun, 05 Jan 2025 03:46:36 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[அநுரகுமார]]></category>
		<category><![CDATA[அநுரகுமார திசாநாயக்க]]></category>
		<category><![CDATA[சட்டமா அதிபர்]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி அநுர]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=5442</guid>

					<description><![CDATA[<p>குற்றவியல் வழக்குகளில், விசாரணைகளை முழுமையாக முடிக்காமல், வழக்குப் பதிவுகள் மற்றும் அறிக்கைகளை பொலிஸார் அனுப்பும் போது, ​​கோப்புகளைத் திறக்கவோ அல்லது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாதிருக்கவோ சட்டமா அதிபர் திணைக்களம் முடிவு செய்துள்ளது. வழக்குத் தொடரப்படாததற்கான குற்றச்சாட்டுகளின் பின்னணியில், குறிப்பாக உயர்மட்டங்களுக்கு எதிரான முறைப்பாடுகளில், சட்டமா அதிபர் திணைக்களம் எதிர்கொள்ளும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான கடுமையான குற்றவியல் வழக்குகள் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுப்பதில் தாமதம் ஏற்படுவதற்கான முக்கிய காரணம், பொலிஸ் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/delays-in-very-important-cases-attorney-general-meets-president/">மிக முக்கிய வழக்குகளில் தாமதம்: ஜனாதிபதியை சந்திக்கின்றார் சட்டமா அதிபர்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>குற்றவியல் வழக்குகளில், விசாரணைகளை முழுமையாக முடிக்காமல், வழக்குப் பதிவுகள் மற்றும் அறிக்கைகளை பொலிஸார் அனுப்பும் போது, ​​கோப்புகளைத் திறக்கவோ அல்லது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாதிருக்கவோ சட்டமா அதிபர் திணைக்களம் முடிவு செய்துள்ளது.</p>
<p>வழக்குத் தொடரப்படாததற்கான குற்றச்சாட்டுகளின் பின்னணியில், குறிப்பாக உயர்மட்டங்களுக்கு எதிரான முறைப்பாடுகளில், சட்டமா அதிபர் திணைக்களம் எதிர்கொள்ளும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.</p>
<p>பெரும்பாலான கடுமையான குற்றவியல் வழக்குகள் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுப்பதில் தாமதம் ஏற்படுவதற்கான முக்கிய காரணம், பொலிஸ் விசாரணைகள் முழுமையாக முடிக்கப்படாததே என்று சட்டமா அதிபர் திணைக்கள் அதிகாரிகள் தெரிவித்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.</p>
<p>இந்த முடிவு குறித்து விளக்கமளிக்க சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்க நாளை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவைச் சந்திக்க உள்ளார் என்று கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.</p>
<p>கடந்த டிசம்பர் ஒன்பதாம் திகதி சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினத்தைக் குறிக்கும் நிகழ்வின் போது பேசிய ஜனாதிபதி, வழக்குகளைத் தாக்கல் செய்வதில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் தாமதங்கள் குறித்து பகிரங்கமாகக் கேள்வி எழுப்பினார்.</p>
<p>“சட்டமா அதிபர் திணைக்களம் ஏழு ஆண்டுகளாக ஒரு கோப்பைப் பூட்டி வைத்திருப்பது நம்பமுடியாதது. அதேபோல், சில கோப்புகள் தாக்கல் செய்யப்பட்ட நாளிலிருந்து அவை மோசமடையும் வரை தொடப்படாமல் இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது,” என்று ஜனாதிபதி கூறினார்.</p>
<p>இந்நிலையில், பல உயர்மட்ட குற்ற வழக்குகள் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுப்பதில் சட்டமா அதிபர் திணைக்களம் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்து ஜனாதிபதியுடனான சந்திப்பில் விவாதிக்கப்பட உள்ளதாக அறியப்படுகிறது.</p>
<p>2015 பிணை முறிப் பத்திரம் ஏலம், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் உள்ளிட்ட முக்கிய ஏழு வழக்குகளின் விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பொது பாதுகாப்பு அமைச்சகம் கடந்த ஆண்டு ஒக்டோபரில் பதில் பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/delays-in-very-important-cases-attorney-general-meets-president/">மிக முக்கிய வழக்குகளில் தாமதம்: ஜனாதிபதியை சந்திக்கின்றார் சட்டமா அதிபர்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஜனாதிபதி அநுரவும், கடந்து வந்துள்ள 100 நாட்களும்</title>
		<link>https://oruvan.com/president-anura-kumara-and-the-past-100-days/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Thu, 02 Jan 2025 08:09:06 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Anura india visit]]></category>
		<category><![CDATA[Anura Kumara]]></category>
		<category><![CDATA[Anura Kumara Dissanayake]]></category>
		<category><![CDATA[President of Sri Lanka]]></category>
		<category><![CDATA[Sri Lanka President]]></category>
		<category><![CDATA[அநுரகுமார திசாநாயக்க]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி அநுர]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=5016</guid>

					<description><![CDATA[<p>இலங்கையில் பல தசாப்தங்காக ஆட்சி செய்த தேசியக் கட்சிகளின் ஆதிக்கம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் ஆட்சிபீடம் ஏறியது. அநுரகுமார திசாநாயக்க கடந்த ஆண்டு செப்டம்பர் 23ஆம் திகதி ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் ஒரு பிரபலமான தலைவராக மாறியுள்ளார். அவர் பலரால் நேசிக்கப்படுகின்றார். மேலும் தேசியக் கட்சிகளின் பெருகிய ஆதிக்கத்திற்கு மத்தியில் தனது கட்சியை மகத்தான வெற்றிக்கு அழைத்துச் சென்று தனது தலைமை திறனை [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/president-anura-kumara-and-the-past-100-days/">ஜனாதிபதி அநுரவும், கடந்து வந்துள்ள 100 நாட்களும்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இலங்கையில் பல தசாப்தங்காக ஆட்சி செய்த தேசியக் கட்சிகளின் ஆதிக்கம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் ஆட்சிபீடம் ஏறியது.</p>
<p>அநுரகுமார திசாநாயக்க கடந்த ஆண்டு செப்டம்பர் 23ஆம் திகதி ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் ஒரு பிரபலமான தலைவராக மாறியுள்ளார். அவர் பலரால் நேசிக்கப்படுகின்றார்.</p>
<p>மேலும் தேசியக் கட்சிகளின் பெருகிய ஆதிக்கத்திற்கு மத்தியில் தனது கட்சியை மகத்தான வெற்றிக்கு அழைத்துச் சென்று தனது தலைமை திறனை நிரூபித்துள்ளதுடன் ஒரு வலுவான அரசியல் நபராகவும் உருவெடுத்துள்ளார்.</p>
<p><strong>தனது வாக்குறுதிகளை நிறைவேற்றினாரா அநுர?</strong></p>
<p>தனது ஆட்சியில் முதல் 100 நாட்களுக்குள் அதிகாரத்தை நிறுவி, மக்களின் ஆணையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு நாடாளுமன்றத்தை உருவாக்குவதற்குப் பாடுபடுவேன் என்று ஜனாதிபதி அநுரகுமார் பிபிசிக்கு அளித்த செவ்வியில் குறிப்பிட்டிருந்தார்.</p>
<p>அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், சில வாரங்களுக்குள் தனது அரசாங்கத்தின் கீழ் நிறுவப்பட்ட நாடாளுமன்றின் முதல் சபாநாயகரை இழந்த போதிலும், தொடர்ந்து ஒரு வலுவான அரசாங்கத்தை ஜனாதிபதி வழிநடத்தி வருகின்றார்.</p>
<p>சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்தவும், நிறைவேற்றப்படாத சில நீதிமன்ற உத்தரவுகளை செயல்படுத்தவும் ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார். இதில் சில முன்னேற்றங்களையும் கண்டுள்ளார்.</p>
<p>ஜனாதிபதி அநுரகுமார பதவியேற்ற பிக்கர், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறிபத்த வழக்கை விசாரிக்க கடந்த அரசாங்கத்தால் ஒதுக்கி வைக்கப்பட்ட இரண்டு மூத்த புலனாய்வாளர்களை நியமித்தார்.</p>
<p>மேலும், விசாரணைகள் குறித்து கார்டினல் மல்கம் ரஞ்சித் ஆண்டகை திருப்தி தெரிவித்துள்ளார், எவ்வாறாயினும, அவர்களின் விசாரணைகளின் முன்னேற்றம் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.</p>
<p>பிள்ளையான் என்று பிரபலமாக அழைக்கப்படும் முன்னாள் அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், குற்றப் புலனாய்வுத் துறைக்கு அழைக்கப்பட்டு, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரிக்கப்பட்டார்.</p>
<p>கூடுதலாக, வரி ஏய்ப்பு செய்ததற்காக அர்ஜுன் அலோசியஸ் சிறையில் அடைக்கப்பட்டதைத் தொடர்ந்து, வரி ஏய்ப்பு செய்து வந்தவர்கள் விரைவாக பணம் செலுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>அத்துடன், மெண்டிஸ் டிஸ்டில்லரீஸின் உரிமம் இடைநிறுத்தப்பட்டது.</p>
<p><strong>பொருளாதார முன்னேற்றம்</strong></p>
<p>அநுரவின் ஆட்சியில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாய் மதிப்பு அதிகரித்துள்ளது, மேலும் பங்குச் சந்தையில் 40 வீத அதிகரிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. பணவீக்கமும் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>மேலும், ஜனாதிபதி அநுரகுமாரவின் ஆட்சியில் இராஜதந்திர முயற்சிகள் இந்தியாவில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்ததுடன், அவரது வெளிநாட்டு உறவுகள் பெரும்பாலும் சுமூகமாக நடந்துள்ளன.</p>
<p>இருப்பினும், அரசாங்கம் குறிப்பிடத்தக்க பொருளாதார சவால்களை எதிர்கொள்கிறது. சமகாலத்தில் ஏற்பட்டுள்ள அரிசி தட்டுப்பாடை நிவர்த்தி செய்ய அரசாங்கம் தலையிட்டுள்ளது. எனினும் அந்தப் பிரச்சியை இன்னும் முழுமையாக தீர்க்கப்படவில்லை.</p>
<p>மேலும், பொலிஸ்மா அதிபர், தலைமை நீதிபதி, இராணுவத் தளபதி மற்றும் கடற்படைத் தளபதி உள்ளிட்ட முக்கிய பதவிகளுக்கு புதிய தலைவர்களை ஜனாதிபதி அநுரகுமார நியமித்துள்ளார்.</p>
<p><strong>ஊழல் எதிர்ப்பு முயற்சிகள்</strong></p>
<p>ஊழலை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்ட &#8220;க்ளீன் ஸ்ரீலங்கா&#8221; வேலைத் திட்டம் பலரிடையே நம்பிக்கையைத் தூண்டியுள்ளதுடன் பரவலான ஆதரவுடன் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது.</p>
<p>எவ்வாறாயினும், அநுரவின் தலைமைத்துவம் அதிர்ச்சியூட்டும் சீர்திருத்தங்கள் உட்பட தீவிரமான மாற்றத்தைக் கொண்டுவரும் என்று சிலர் கணித்திருந்தாலும், அவர் படிப்படியாக ஒரு அணுகுமுறையைத் தேர்ந்தெடுத்துள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p>
<p>எனினும், இதனை மெதுவான வேகம் என்று குறிப்பிட்டிருந்தாலும், மாற்றத்தின் அளவிடப்பட்ட வேகத்தைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.</p>
<p><strong>அநுர முன் உள்ள சவால்கள்</strong></p>
<p>சந்தேகத்திற்கு இடமின்றி, இனப் பிளவுகளை சரிசெய்வதற்கான தனது முயற்சிகளைத் தொடரும்போது ஜனாதிபதி அநுரகுமார ஏராளமான முக்கியமான சவால்களை எதிர்கொள்ள நேரிடும் என அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.</p>
<p>இதன்படி, வேறூன்றி போயிருக்கும் ஊழலை ஒழிப்பதும், சில அதிகாரக் கட்டமைப்புகளை அகற்றுவதும் எளிதல்ல என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.</p>
<p>மேலும், அநுரகுமாரவின் குழுவினர் தீவிர அர்ப்பணிப்புடன் செயற்படுகின்ற போதிலும் சில பகுதிகளில் இன்னும் அனுபவம் போதவில்லை எனவும் இது வெளிப்படையாக தெரிவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p>
<p>ஜனாதிபதி அநுரகுமார மக்களின் ஆதரவுடன் தனது அதிகாரத்தை பலப்படுத்தியுள்ளார், ஆனால் இப்போது அவர் அரசியல் உயரடுக்கின் சிக்கலான இயக்கவியலுக்கு ஏற்ப செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் எனவும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/president-anura-kumara-and-the-past-100-days/">ஜனாதிபதி அநுரவும், கடந்து வந்துள்ள 100 நாட்களும்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>மியன்மார் அகதிகளை சந்திக்க அனுமதி கோரும் மனித உரிமைகள் ஆணைக்குழு &#8211; ஜனாதிபதிக்கு கடிதம்</title>
		<link>https://oruvan.com/human-rights-commission-requests-permission-to-meet-myanmar-refugees-letter-to-president/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Sun, 29 Dec 2024 08:34:13 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[அகதிகள்]]></category>
		<category><![CDATA[அநுரகுமார]]></category>
		<category><![CDATA[இலங்கை செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை தமிழ் செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு]]></category>
		<category><![CDATA[இலங்கை ஜனாதிபதி]]></category>
		<category><![CDATA[ஒருவன் செய்திகள்]]></category>
		<category><![CDATA[தமிழ் செய்திகள்]]></category>
		<category><![CDATA[புகலிட கோரிக்கையாளர்கள்]]></category>
		<category><![CDATA[மியான்மர்]]></category>
		<category><![CDATA[மியான்மர் அகதிகள்]]></category>
		<category><![CDATA[முல்லைத்தீவு]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி அநுர]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=4454</guid>

					<description><![CDATA[<p>நாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மியன்மார் அகதிகளை சந்திக்க அனுமதி வழங்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது. மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் நீதிபதி எல். டி.பி.தெஹிதெனிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம் எழுத்து மூலம் இது தொடர்பான கோரிக்கையை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அண்மையில் மியான்மரில் இருந்து படகில் வந்த 115 அகதிகள் முல்லைத்தீவு கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டனர். கப்பலில் இருந்த 12 பணியாளர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர், மீதமுள்ளவர்கள் முல்லைத்தீவு [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/human-rights-commission-requests-permission-to-meet-myanmar-refugees-letter-to-president/">மியன்மார் அகதிகளை சந்திக்க அனுமதி கோரும் மனித உரிமைகள் ஆணைக்குழு &#8211; ஜனாதிபதிக்கு கடிதம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>நாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மியன்மார் அகதிகளை சந்திக்க அனுமதி வழங்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.</p>
<p>மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் நீதிபதி எல். டி.பி.தெஹிதெனிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம் எழுத்து மூலம் இது தொடர்பான கோரிக்கையை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p>
<p>அண்மையில் மியான்மரில் இருந்து படகில் வந்த 115 அகதிகள் முல்லைத்தீவு கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டனர்.</p>
<p>கப்பலில் இருந்த 12 பணியாளர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர், மீதமுள்ளவர்கள் முல்லைத்தீவு விமானப்படை தளத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.</p>
<p>இந்த அகதிகளிடம் விசாரணை நடத்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழு கடந்த 26ஆம் திகதி முல்லைத்தீவு விமானப்படை முகாமுக்கு சென்றிருந்தனர்.</p>
<p>எவ்வாறாயினும், குடிவரவு கட்டுப்பாட்டு நாயகத்தின் அனுமதியின்றி அகதிகளை பார்வையிட அனுமதி வழங்க முடியாது என விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p>
<p>அகதிகளை சந்திக்க எவருக்கும் அனுமதி வழங்கக்கூடாது என குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டு நாயகம் உத்தரவிட்டுள்ள நிலையில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டு நாயகத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது.</p>
<p>ஆனால் குறித்த கோரிக்கைக்கு பதிலளித்த குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம், புகலிடக் கோரிக்கையாளர்களை அணுகுவதற்கு அனுமதி வழங்காமல் இருப்பது பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சரே என தெரிவித்துள்ளது.</p>
<p>குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தின் உதவிக் கட்டுப்பாட்டாளர் ஒருவரினால் வாய்மொழியாக இது தொடர்பான அறிவித்தல் விடுக்கப்பட்டதாகவும், குடிவரவு குடியகழ்வுக் கட்டுப்பாட்டாளர் நாயகம் இது தொடர்பில் எழுத்துப்பூர்வமாகத் தெரிவிக்கவில்லை எனவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.</p>
<p>நீதிமன்ற உத்தரவின் மூலமோ அல்லது வேறு வகையிலோ தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் நலன்களை தொடர்ந்தும் பரிசோதிக்கும் அதிகாரம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.</p>
<p>முகாமில் உள்ள அகதிகளில் 40இற்கும் அதிகமானோர் சிறுவர்கள் எனவும் அவர்களில் பெரும்பாலானோர் கைக்குழந்தைகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பில் ஆராய வேண்டிய பொறுப்பு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பொறுப்பாகும் என கடிதத்தில் சுட்டிக்காட்டுகின்றனர்.</p>
<p>எனவே, ஆணைக்குழுவின் அதிகாரிகள் தடையின்றி உரிய புகலிட கோரிக்கையாளர்களை சந்திப்பதற்கு வசதியாக தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்குமாறு முப்படைகளின் தளபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுப்பதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தனது கடிதத்தில் தெரிவித்துள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/human-rights-commission-requests-permission-to-meet-myanmar-refugees-letter-to-president/">மியன்மார் அகதிகளை சந்திக்க அனுமதி கோரும் மனித உரிமைகள் ஆணைக்குழு &#8211; ஜனாதிபதிக்கு கடிதம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
