<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>கணபதி கனகராஜ் Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/கணபதி-கனகராஜ்/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Sat, 15 Nov 2025 02:50:51 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>கணபதி கனகராஜ் Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/கணபதி-கனகராஜ்/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>மஞ்சுல சுரவீர மன்னிப்பு கோர வேண்டும் &#8211; கணபதி கனகராஜ்</title>
		<link>https://oruvan.com/manjula-suraweera-should-apologize-ganapathi-kanagaraj/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Sat, 15 Nov 2025 02:50:51 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[கணபதி கனகராஜ்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=38309</guid>

					<description><![CDATA[<p>பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீரவின் சமீபத்திய பேச்சு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமானின் திருமணத்தை நோக்கி முன்வைக்கப்பட்ட தனிப்பட்ட விமர்சனமாகும் என தொழிலாளர் காங்கிரஸின் பிரதித் தலைவர் கணபதி கனகராஜ் நேற்று (14) கண்டியில் ஊடகங்களுக்கு தெரிவித்தார். மஞ்சுள சுரவீரவின் இந்தக் கருத்து, மக்கள் விடுதலை முன்னணியின் அடிமனதில் பதிந்துள்ள இந்திய விஸ்தரிப்பு வாத அச்சத்தை அரசியல் ஆயுதமாக்கும் முயற்சியாகவும், ஜீவன் தொண்டமான் போன்ற இந்திய வம்சாவளித் தலைவர்களின் இயல்பான [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/manjula-suraweera-should-apologize-ganapathi-kanagaraj/">மஞ்சுல சுரவீர மன்னிப்பு கோர வேண்டும் &#8211; கணபதி கனகராஜ்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீரவின் சமீபத்திய பேச்சு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமானின் திருமணத்தை நோக்கி முன்வைக்கப்பட்ட தனிப்பட்ட விமர்சனமாகும் என தொழிலாளர் காங்கிரஸின் பிரதித் தலைவர் கணபதி கனகராஜ் நேற்று (14) கண்டியில் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.</p>
<p>மஞ்சுள சுரவீரவின் இந்தக் கருத்து, மக்கள் விடுதலை முன்னணியின் அடிமனதில் பதிந்துள்ள இந்திய விஸ்தரிப்பு வாத அச்சத்தை அரசியல் ஆயுதமாக்கும் முயற்சியாகவும், ஜீவன் தொண்டமான் போன்ற இந்திய வம்சாவளித் தலைவர்களின் இயல்பான குடும்ப மற்றும் கலாச்சாரப் பிணைப்புகளையே வெளிநாட்டு சதி என சித்தரித்து அவர்களை அரசியல் மற்றும் சமூக ரீதியாக தாழ்வுபடுத்தும் செயலாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.</p>
<p>இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்கள் தமிழக மக்களுடன் இரத்தத் தொடர்பை பகிர்ந்து கொள்கின்றனர் என்பதையும், தமிழகத்துடனான திருமணப் பந்தம் மிகவும் இயல்பான ஒன்று என்பதையும் கனகராஜ் வலியுறுத்தினார். தனிப்பட்ட திருமண உறவை அரசியல் ஆயுதமாக மாற்றுவது தரமற்ற குறுகிய மனப்பான்மையுடையவர்களின் செயல் எனவும், மஞ்சுள சுரவீர இனவாத பேச்சுக்கு புதிய வடிவம் கொடுக்க முயற்சிக்கிறாரா எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.</p>
<p>இந்த தாக்குதல் ஜீவன் தொண்டமானை மட்டுமல்ல, இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்களை முழுமையாக அவமானப்படுத்தும் முயற்சியாகும் என அவர் கண்டனம் தெரிவித்தார்.</p>
<p>தொண்டமான் குடும்பம் நான்கு தலைமுறைகளாக பாராளுமன்றத்தில் செயல்பட்டு வருவதையும், இவர்களைப் பற்றி தரமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவது மஞ்சுள சுரவீர சார்ந்துள்ள சமூகத்தின் மதிப்பை குறைத்து காட்டும் செயல் எனவும் அவர் குறிப்பிட்டார்.</p>
<p>நாட்டை கைப்பற்றுவதற்காக குவேணியை மணந்து பின்னர் அவரை கைவிட்டு இந்தியத் தமிழ் பெண்களை அழைத்து வந்து திருமணம் செய்துகொண்டவர்களாலேயே வரலாறு நிரம்பியிருக்கின்ற நிலையில், இந்தியத் திருமணப் பந்தங்கள் குறித்து இவ்வாறு பேசுவது வேடிக்கையாக உள்ளது என்றும் கனகராஜ் தெரிவித்தார்.</p>
<p>மஞ்சுள சுரவீரவின் கருத்துக்கள் காரணமாக இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாகவும், அவர் உடனடியாக பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என்றும் கனகராஜ் வலியுறுத்தினார். சுரவீர தேசிய மக்கள் சக்தியை சேர்ந்தவர் என்பதால், இதற்கு பதில் அளிக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கும் உண்டு என அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/manjula-suraweera-should-apologize-ganapathi-kanagaraj/">மஞ்சுல சுரவீர மன்னிப்பு கோர வேண்டும் &#8211; கணபதி கனகராஜ்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை மாத சம்பளமாக ரூ. 54 ஆயிரம் வேண்டும் &#8211; கணபதி கனகராஜ்</title>
		<link>https://oruvan.com/we-want-rs-54-thousand-as-basic-monthly-salary-for-plantation-workers-ganapathi-kanagaraj/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Sat, 18 Oct 2025 09:27:36 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[கணபதி கனகராஜ்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=35801</guid>

					<description><![CDATA[<p>எதிர்வரும் மாதம் சமர்ப்பிக்கப்பட இருக்கின்ற வரவு செலவுத் திட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச மாதாந்த சம்பளமாக 54 ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்கப்பட வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதி தலைவர் கணபதி கனகராஜ் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். தொழில் ஆணையாளரால் அழைக்கப்பட்ட சம்பள நிர்ணய சபை கூட்டத்திற்கு முதலாளிமார் சம்மேளனம் சமூக மளிக்காதது அவர்கள் தாங்களுக்காக உழைக்கின்ற தொழிலாளர் சமூகத்தின்மேல் எவ்வளவு மரியாதை வைத்திருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்துகின்றது. தாங்களுக்காக உழைத்துக் கொடுக்கின்ற தொழிலாளர்களை மதிக்க முடியாவிட்டால் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/we-want-rs-54-thousand-as-basic-monthly-salary-for-plantation-workers-ganapathi-kanagaraj/">தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை மாத சம்பளமாக ரூ. 54 ஆயிரம் வேண்டும் &#8211; கணபதி கனகராஜ்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>எதிர்வரும் மாதம் சமர்ப்பிக்கப்பட இருக்கின்ற வரவு செலவுத் திட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச மாதாந்த சம்பளமாக 54 ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்கப்பட வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதி தலைவர் கணபதி கனகராஜ் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.</p>
<p>தொழில் ஆணையாளரால் அழைக்கப்பட்ட சம்பள நிர்ணய சபை கூட்டத்திற்கு முதலாளிமார் சம்மேளனம் சமூக மளிக்காதது அவர்கள் தாங்களுக்காக உழைக்கின்ற தொழிலாளர் சமூகத்தின்மேல் எவ்வளவு மரியாதை வைத்திருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்துகின்றது.</p>
<p>தாங்களுக்காக உழைத்துக் கொடுக்கின்ற தொழிலாளர்களை மதிக்க முடியாவிட்டால் தோட்டங்களை தொழிலாளர்களிடம் ஒப்படைத்து விட்டு வெளியேறுவதுதான் பொருத்தமானதாகும். உற்பத்தி அடிப்படையிலான சம்பள உயர்வு என்பது கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக கேட்டு புளித்துப் போன விடயமாகும். இது ஏற்றுக் கொள்ள முடியாதாகும்.</p>
<p>ஊட்டச்சத்து இல்லாத பழைய தேயிலை செடிகளை வைத்துக்கொண்டு எவ்வாறு உற்பத்திகளை அதிகரிக்க முடியும்? முதலாளிமார் சம்மேளனம் இலங்கையின் தேயிலைத் துறையை வெளிநாடுகளுடன் அடிக்கடி ஒப்பிட்டு காட்டுகிறது. பறிக்கப்படும் கொழுந்தின் அளவு ஒப்பிட்டு காட்டப்படுகிறது.</p>
<p>ஆனால் வெளிநாடுகளில் தேயிலை செடிகள் எவ்வாறு பராமரிக்கப்படுகிறன என்பதை முதலாளிமார் சம்மேளனம் சென்று பார்த்து விட்டு வர வேண்டும். அங்கு தேயிலை செடிகளுக்கு எவ்வாறு உரமிடப்படுகின்றன. எவ்வாறு ஊட்டச்சத்துக்கள் வழங்கப்படுகின்றன. பழைய தேயிலை செடிகளுக்கு பதிலாக மீள்நடுகைகள் எவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றன.</p>
<p>என்பதுடன் சேர்த்து விளைச்சல் அளவையும் நோக்க வேண்டும். முதலீடுகளை அதிகரித்து உற்பத்தியை அதிகரித்துக் காட்டிய பின். உற்பத்தி அடிப்படையான சம்பளம் பற்றி ஆலோசிக்க முடியும். தேயிலை செடிகளில் கொழுந்து வராவிட்டால் அதற்குத் தோட்ட தொழிலாளர்களால் என்ன செய்ய முடியும்?</p>
<p>முதலாளிமார் சம்பளம் யதார்த்தமாக சிந்திக்க வேண்டும். எது எவ்வாறினும் தொழில் ஆணையாளர் கூட்டிய சம்பள நிர்ணய சபை கூட்டத்திற்கு புற முதுகை காட்டுவது முதலாளிமார் சம்மேளனத்தின் தன்னிச்சையான எவரையும் மதிக்காத தான்தோற்றி தனத்தை காட்டுகிறது. இதை நாம் வன்மையாக கண்டிக்கிறோம்.</p>
<p>அதேபோல கடந்த சம்பள நிர்ணய சபையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 1700 ரூபாய் சம்பள உயர்வை கோரியது. அவ்வேளையில் 2138 ரூபாவுக்கு குறைந்த சம்பளத்தை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என வீராப்பு பேசிய தற்போதைய அரசாங்கத்தின் இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் சம்பள நிர்ணய சபைக்கு வராமல் ஒளிந்து கொண்டது ஏன்? எதிர்க்கட்சியில் இருக்கும் போது ஒரு நிலைப்பாடு ஆளும் கட்சியில் இருக்கும் போது ஒரு நிலைப்பாடு ஏன்? அன்று ஆட்சியைப் பிடிப்பதற்கு அந்த நிலைப்பாடு.</p>
<p>இன்று முதலாளிமார் சம்மேளனத்திற்கு. வால் பிடிப்பதற்கு இந்த நிலைப்பாடு. கடந்த முறை நாம் முன்வைத்த 1700 ரூபாய் சம்பளத்துக்கு ஆளும் கட்சியின் இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கமும். இன்று சம்பளத்துக்காக நீதிமன்றத்திற்கு செல்கின்றோம் என்று சொல்லுகின்ற தொழிற்சங்கங்களும் சாதகமாக வாக்களித்திருந்தால். அன்றே 1700 ரூபாவை பெற்றிருக்க முடியும். இவர்கள் அரசியல் தொழிற்சங்க நலன்களை ஒரு புறம் ஒதுக்கி வைத்து விட்டு தங்களுடைய மனசாட்சியை தொட்டு தங்களைத் தாங்களே சுய விமர்சனம் செய்து கொள்ள வேண்டும்.</p>
<p>எப்போதுமே தொழிலாளர்களின் நலன்களுக்காக செயற்பட்டு வரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசை வசைப்பாடி வரும் இவர்களின் உண்மையான வேஷம் தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. எம்மை துரோகிகள் காட்டிக் கொடுத்தவர்கள் என்று சொன்னவர்கள் இன்று ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்போது தோட்டத்து தொழிலாளர்களை கட்டிக் காத்தவர்களாக ஏன் மாறவில்லை.</p>
<p>வார்த்தை ஜாலங்களில் மூலம் எம்மை வசைபாட முடியும். ஆனால் தோட்ட தொழிலாளர்களின் அபிலாசைகளை நிறைவேற்றுவது அவ்வளவு இலகுவானதல்ல. இந்த கடினமான பணியை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் செய்திருக்கிறது.</p>
<p>தோட்டத் தொழிலாளர்களுக்காக ஏற்றுக் கொள்ளக்கூடிய பொருத்தமான சம்பளத் தொகை முன்வைக்கப்படுகின்ற போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் லாபத்தையும் தொழிற்சங்க நலன்களையும் ஒதுக்கி வைத்துவிட்டு சம்பள உயர்வுக்காக இணைந்து செயல்பட தயாராக இருக்கிறது.</p>
<p>எனினும் கண்களில் தொகையை காட்டி விட்டு பெற்றுக் கொள்வதற்கு முடியாத அளவில் சம்பளம் முறை தீர்மானிக்க முற்பட்டால் அதை போதும் எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பகுதி தலைவர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/we-want-rs-54-thousand-as-basic-monthly-salary-for-plantation-workers-ganapathi-kanagaraj/">தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை மாத சம்பளமாக ரூ. 54 ஆயிரம் வேண்டும் &#8211; கணபதி கனகராஜ்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>நிதி ஒதுக்கீட்டில் நுவரெலியாவில் தமிழ் பிரதேசங்களுக்கு பாரபட்சம் &#8211; கணபதி கனகராஜ் குற்றச்சாட்டு</title>
		<link>https://oruvan.com/ganapathi-kanagaraj-alleges-discrimination-against-tamil-areas-in-nuwara-eliya-in-funding-allocation/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Fri, 25 Apr 2025 10:35:51 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[கணபதி கனகராஜ்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=18420</guid>

					<description><![CDATA[<p>தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இன, மத பேதமற்ற முறையில் சகல மக்களையும் நோக்குவதாக கூறுகின்றது. ஆனால் இவ்வருடம் பிரதேச செயலக வாரியாக ஒதுக்கப்பட்ட நிதியில் தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களுக்கு பாரபட்சமாகவே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதித் தலைவர் கணபதி கனகராஜ் குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளவை வருமாறு, ” நுவரெலிய மாவட்டத்தில் ஐந்து பிரதேச செயலகங்களை காணப்பட்டன. அது தற்போது 7 ஆக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/ganapathi-kanagaraj-alleges-discrimination-against-tamil-areas-in-nuwara-eliya-in-funding-allocation/">நிதி ஒதுக்கீட்டில் நுவரெலியாவில் தமிழ் பிரதேசங்களுக்கு பாரபட்சம் &#8211; கணபதி கனகராஜ் குற்றச்சாட்டு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இன, மத பேதமற்ற முறையில் சகல மக்களையும் நோக்குவதாக கூறுகின்றது. ஆனால் இவ்வருடம் பிரதேச செயலக வாரியாக ஒதுக்கப்பட்ட நிதியில் தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களுக்கு பாரபட்சமாகவே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதித் தலைவர் கணபதி கனகராஜ் குற்றஞ்சாட்டியுள்ளார்.</p>
<p>இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளவை வருமாறு,</p>
<p>” நுவரெலிய மாவட்டத்தில் ஐந்து பிரதேச செயலகங்களை காணப்பட்டன. அது தற்போது 7 ஆக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் நோர்வூட் மற்றும் தலவாக்கலை பிரதேச செயலகங்களே புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பிரதேச செயலகங்களாகும்.</p>
<p>ஆனால் நிதி ஒதுக்கீட்டை மையப்படுத்தி ஹங்குரான்கெத்த, வலப்பனை, கொத்மலை ஆகிய பிரதேசங்களில் தலா இரண்டு பிரதேச செயலகங்கள் இருப்பதாக நிதி ஒதுக்கீட்டுக்காக காட்டப்பட்டிருக்கிறது.</p>
<p>இந்த வகையில் நுவரெலிய மாவட்டத்திற்கு இவ்வாண்டு 92 மில்லியன் ரூபாய்கள் மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் ஹங்குராங்கெத்த பிரதேச செயலக பிரிவுக்கு 25 மில்லியன், வலப்பனை பிரதேச செயலக பிரிவுக்கு 23 மில்லியன், கொத்மலை பிரதேச செயலக பிரிவுக்கு 18 மில்லியன், அம்பகமுவ பிரதேச செயலகப் பிரிவுக்கு 6 மில்லியன், நோ ர்வூட் பிரதேச செயலக பிரிவுக்கு 7 மில்லியன், நுவரெலிய பிரதேச செயலகப் பிரிவுக்கு 7 மில்லியன், தலவாக்கல்லை பிரதேச செயலக பிரிவுக்கு 6 மில்லியன் என்ற வகையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.</p>
<p>இந்த நாட்டில் எந்த ஆட்சி வந்தாலும், பாரபட்ச மற்ற முறையில் நடந்து கொள்வோம் என்று சொன்னாலும், அனைவரும் சமம் என்று முழங்கினாலும் அது மேடைகளுடனேயே மட்டுப்படுத்தப்பட்டும் என்பதற்கு நுவரெலிய மாவட்ட நிதி ஒதுக்கீடு ஒரு நல்ல உதாரணமாகும்.</p>
<p>மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கும் அவர்களுக்காக பேரம் பேசுவதற்கும் மலையகத் தளத்திலிருந்து உருவாகி அவர்களை உண்மையாக நேசிக்கின்ற இன உணர்வுள்ள தமிழ் கட்சிகளுக்கே பொறுப்பும் கடமையும் இருக்கிறது. இதை மக்கள் சரியாக புரிந்து கொள்ள வேண்டும்.</p>
<p>ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் எமது மக்களை மதித்து அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வார்கள் என எதிர்பார்க்கக் கூடாது எதிர் பார்க்கவும் முடியாது. எமது இனத்தை சார்ந்தவர்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை வலுப்படுத்தி அதன் மூலம் பேரம் பேசும் ஆற்றலை உருவாக்கிக் கொண்டால் மட்டுமே எமது உரிமைகளை வென்றெடுக்க முடியும்.</p>
<p>கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் நடந்ததும் அது தான். மலையக தமிழ் சமூகம் அரசியல் ஏமாளிகளாக இருந்து விடக்கூடாது. எம்மிடையே ஒற்றுமை இல்லை என்பதை ஏற்றுக் கொள்ளக் கூடியது தான். அதற்காக குள்ளநரி கூட்டுக்குள் நாம் அடைக்கலம் புகுந்து விட முடியாது.</p>
<p>எதிர் வருகின்ற உள்ளாட்சி மன்ற தேர்தல். நமது சமூகத்தின் ஒற்றுமையை எடுத்துக்காட்டுவதாக அமைய வேண்டும். தமிழர்கள் பெரும்பான்மையாகவாழுகின்ற சகல உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சியை மீண்டும் நாம் கைப்பற்ற வேண்டும். எனவும் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/ganapathi-kanagaraj-alleges-discrimination-against-tamil-areas-in-nuwara-eliya-in-funding-allocation/">நிதி ஒதுக்கீட்டில் நுவரெலியாவில் தமிழ் பிரதேசங்களுக்கு பாரபட்சம் &#8211; கணபதி கனகராஜ் குற்றச்சாட்டு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>துணிவிருந்தால் ஹட்டனுக்கு வந்து கூறி பாருங்கள்: சந்திரசேகருக்கு இதொகா சவால்</title>
		<link>https://oruvan.com/if-you-dare-come-to-hatton-and-tell-me-this-is-a-challenge-for-chandrashekhar/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Sat, 08 Feb 2025 04:30:43 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கணபதி கனகராஜ்]]></category>
		<category><![CDATA[ஜீவன் தொண்டமான்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=9716</guid>

					<description><![CDATA[<p>மலையக மக்களால் நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டவர் ஜீவன் தொண்டமான். அவரை தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்த அமைச்சர் சந்திரசேகர் மலையக மக்கள் பற்றி பேச வேண்டாம் என்று கூறுவதற்கு எவ்வித அருகதையுமற்றவர். இது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் சர்வாதிகார கோரமுகத்தின் வெளிப்பாடு. இது எதிர்பார்த்த ஒன்றுதான் என இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பிரதி தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளவை வருமாறு, ” [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/if-you-dare-come-to-hatton-and-tell-me-this-is-a-challenge-for-chandrashekhar/">துணிவிருந்தால் ஹட்டனுக்கு வந்து கூறி பாருங்கள்: சந்திரசேகருக்கு இதொகா சவால்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>மலையக மக்களால் நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டவர் ஜீவன் தொண்டமான். அவரை தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்த அமைச்சர் சந்திரசேகர் மலையக மக்கள் பற்றி பேச வேண்டாம் என்று கூறுவதற்கு எவ்வித அருகதையுமற்றவர். இது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் சர்வாதிகார கோரமுகத்தின் வெளிப்பாடு. இது எதிர்பார்த்த ஒன்றுதான் என இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பிரதி தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.</p>
<p>இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளவை வருமாறு,</p>
<p>” மலையக மக்களுக்கு எதிரான எல்லா சவால்களையும் எதிர்கொண்டு எல்லா சக்திகளையும் முறியடித்து இந்த மக்களுக்கு தலைமை கொடுத்து, தலை நிமிர வைத்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினரை பார்த்து மலையக மக்கள் குறித்து பேச வேண்டாம் என்று சொல்வதற்கு அமைச்சர் சந்திரசேகர் யார்?</p>
<p>இலங்கை வாழ்கின்ற இந்திய வம்சாவளி மலையக மக்களுக்கு வாக்குரிமை இருந்த போதும், வாக்குரிமை இல்லாது ஒழிக்கப்பட்ட போதும், பாராளுமன்ற ஊப்புரிமை இருந்த போதும் ,அது இல்லாத போதும் அம்மக்கள் மத்தியில் நிலையாக நின்று அவர்களுக்கு குரல் கொடுப்பது இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் கொள்கையாகும்.</p>
<p>தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் வாக்களித்தது அரசாங்கத்தை அமைக்க வைத்தது இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் மீது விரல் நீட்டுவதற்கல்ல. மாறாக எமது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுங்கள். வெறும் வாய் சவாடல் மூலம் காலத்தை வீணடிக்காமல் மலையக மக்களின் வீடு , காணி, சம்பளம், தொழில் போன்றவற்றுக்கு தீர்வை முன் வையுங்கள்.</p>
<p>அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகருக்கு துணிவிருந்தால் பாராளுமன்றத்தில் கூறியதை அட்டன் பிரதேசத்திற்கு வந்து ஒரு தோட்டத்தில் கூறி பார்க்கட்டும். அவருக்கு மலையக மக்கள் சரியான பாடத்தை புகட்டி அனுப்புவார்கள்.</p>
<p>தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உள்ளூராட்சி மன்ற தேர்தலை இழுத்தடிக்காமல் உடனடியாக நடத்த வேண்டும். தேர்தலில் நாம் பேச வேண்டியதில்லை பதிலாக மக்களே பேசுவார்கள். எதிர்வரும் உள்ளாட்சி மன்ற தேர்தல் தேசிய மக்கள் சக்தியின் தோல்வியை ஆரம்பித்து வைக்கும். அமைச்சர் சந்திரசேகரும் அவருடைய தேசிய மக்கள் சக்தியினருக்கும் தைரியம் இருந்தால் நுவரெலியா மாவட்டத்தில் தமிழர்கள் வாழும் பிரதேசத்தில் ஒரு சபையாவது பிடித்துக் காட்டிவிட்டு வாய்ந்த சவடால் விடட்டும்.</p>
<p>அமைச்சர் சந்திரசேகரின் உரை மூலம் மக்களுக்கு பொய்களைக் கூறி அதன் மூலம் ஆட்சியைப் பெற்றுக் கொண்ட தேசிய மக்கள் சக்தி நாட்டை சர்வாதிகா முறையில் ஆட்சி செய்ய ஆரம்பிக்கின்றதா? என்ற சந்தேகம் எனக்கு எழுகின்றது. எனவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பிரதித் தலைவர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/if-you-dare-come-to-hatton-and-tell-me-this-is-a-challenge-for-chandrashekhar/">துணிவிருந்தால் ஹட்டனுக்கு வந்து கூறி பாருங்கள்: சந்திரசேகருக்கு இதொகா சவால்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>&#8216;மலையகத்தில் மாடி வீடு&#8217; &#8211; அமைச்சர் சொல்வதா, அமைச்சின் செயலாளர் சொல்வதா உண்மை?</title>
		<link>https://oruvan.com/storied-house-in-the-mountains-is-it-true-what-the-minister-says-or-what-the-ministry-secretary-says-ganapathy-kanagaraj/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Fri, 13 Dec 2024 09:32:03 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கணபதி கனகராஜ்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=2401</guid>

					<description><![CDATA[<p>மலையகத்தில் வீடமைப்பதற்கு காணிகளை வழங்காமல் மாடி வீடுகளை அமைப்பதற்கு அரசு ஆலோசித்து வருவதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திர கீர்த்தி தெரிவிக்கின்ற அதே நிலையில், தொடர்மாடி வீடுகளை அமைப்பதற்கு தீர்மானிக்கவில்லை என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவிக்கின்றார். அரசாங்கத்துக்குள்ளேயே முரண்பாடான கருத்துக்களை தெரிவிப்பது மக்களை குழப்பமடைய செய்திருக்கிறது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதி தலைவர் கணபதி கனகராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். பெருந்தோட்ட [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/storied-house-in-the-mountains-is-it-true-what-the-minister-says-or-what-the-ministry-secretary-says-ganapathy-kanagaraj/">&#8216;மலையகத்தில் மாடி வீடு&#8217; &#8211; அமைச்சர் சொல்வதா, அமைச்சின் செயலாளர் சொல்வதா உண்மை?</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>மலையகத்தில் வீடமைப்பதற்கு காணிகளை வழங்காமல் மாடி வீடுகளை அமைப்பதற்கு அரசு ஆலோசித்து வருவதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திர கீர்த்தி தெரிவிக்கின்ற அதே நிலையில், தொடர்மாடி வீடுகளை அமைப்பதற்கு தீர்மானிக்கவில்லை என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவிக்கின்றார். அரசாங்கத்துக்குள்ளேயே முரண்பாடான கருத்துக்களை தெரிவிப்பது மக்களை குழப்பமடைய செய்திருக்கிறது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதி தலைவர் கணபதி கனகராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.</p>
<p>பெருந்தோட்ட குடியிருப்பு பிரதேசத்தை கிராமமாக மாற்றுவது தொடர்பில் கடந்த காலங்களில் தொடர்ச்சியான கலந்துரையாடல் நடைபெற்றிருக்கின்றன. இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடனும், தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் நிதி பங்களிப்புடனும் ஆயிரக்கணக்கான தனி வீடுகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.</p>
<p>இந்த வீடுகளுக்கான காணி உறுதி பத்திரங்களை வழங்குவதற்கு கடந்த அரசாங்க காலத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான வேலை திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அவ்வாறு முன்னாள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் தயாரித்து முடிவுறுத்தப்பட்ட காணிகளுக்கான உறுதி பத்திரங்களை பிரதி அமைச்சர் பிரதீப் சுந்தரலிங்கம்  வழங்கி வைத்திருக்கிறார்.</p>
<p>தற்போதைய அரசாங்க காலத்திலும் நாம் முன்னெடுத்த காணி உறுதி பத்திரங்கள் வழங்கும் நடவடிக்கைகள் தொடர வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும். 200 வருடங்கள் இந்த நாட்டுக்காக அர்ப்பணித்த தொழிலாளர் சமூகத்துக்கு வீடு அமைப்பதற்கு காணி வழங்குவதற்கு அரசாங்கம் தற்போது பின்னடிப்பதாக தெரிகிறது.</p>
<p>கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தோட்டத் தொழிலாளர்களுக்கு வீடமைப்பதற்கு காணித் துண்டுகள் வழங்கப்படும் என உறுதி அளித்திருந்தார். ஆனால் தற்போது பெருந்தோட்ட மற்றும் சமூக உட் கட்டமைப்பு அமைச்சின் செயலாளர் அதற்கு முரண்பாடான கருத்துக்களை தெரிவிக்கிறார்.</p>
<p>அதே நேரத்தில் அமைச்சருக்கும் அமைச்சின் செயலாளருக்கும் பொதுவான கருத்து நிலைபாடு இல்லை. அவ்வாறெனில் பிரதி அமைச்சருக்கு தெரியாமல் அரசாங்கம் செயலாளர் மட்டத்தில் தீர்மானங்களை மேற்கொள்கிறதா என்ற சந்தேகம் ஏற்படுகிறது.</p>
<p>ஏற்கனவே, தோட்டங்களில் மாடி வீடு திட்டங்களை அமைக்கப்படுத்துவதை மக்கள் விரும்பவில்லை. இந்நிலையில் அதை மீண்டும் திணிப்பதற்கு முற்படக்கூடாது. ஜனாதிபதியின் தேர்தல் கால வாக்குறுதியின் படி தோட்டங்களில் வாழும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் காணிகள் வழங்கப்பட வேண்டும். அதற்காக தேயிலை பயிரிடப்படாமல் கைவிட்ட காணிகள் ஏராளமாக இருக்கின்றன என்பதை அரசாங்கம் மறந்துவிடக்கூடாது. எனவும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பிரதித் தலைவர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/storied-house-in-the-mountains-is-it-true-what-the-minister-says-or-what-the-ministry-secretary-says-ganapathy-kanagaraj/">&#8216;மலையகத்தில் மாடி வீடு&#8217; &#8211; அமைச்சர் சொல்வதா, அமைச்சின் செயலாளர் சொல்வதா உண்மை?</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
