உலகளவில் உணவு பாதுகாப்பின்மையை எதிர்கொள்ளும் மக்கள்: அதிகளவான உணவு வீண்விரயம் - ஐ.நா

OruvanOruvan

100 crore tonnes of food is wasted

வீடுகளில் நாளொன்றுக்கு 100 கோடி தொன் உணவுகள் வீண்விரயம் செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலகளாவிய உணவு விரயம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

2022 ஆம் ஆண்டில் 5 இல் 1 பங்கு உணவு விரயமானமையும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வீடுகளில் 63 கோடி தொன், உணவகங்களில் 29 கோடி தொன், கடைகளில் 13 கோடி தொன் என உலக அளவில் 105 கோடி தொன் உணவு விரயம் செய்யப்படுகின்றமை மதிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, உலக அளவில் வீடுகளில் ஒரு நாள் வீண்விரயம் செய்யப்படும் உணவைக் கொண்டு 100 கோடி மக்களின் பசியைத் தீர்க்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

அதிக வெப்பம் நிலவும் நாடுகளில் உணவை சேமித்து வைப்பது சவாலாக உள்ளமையால் தனிநபர் உணவு விரயம் அதிகமாக காணப்படுகின்றது.

உணவு வீண்விரயம் செய்யப்படுகின்றமை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டப் பிரிவின் செயல் இயக்குநர் ஆண்டர்சன் கவலை வெளியிட்டுள்ளார்.

“உணவு விரயம் என்பது உலக அளவில் நிகழ்ந்து வரும் துயரமான விடயம். இலட்சக்கணக்கான மக்கள் உணவின்றி பசியில் வாடும் சூழலில், உணவுகள் வீணாக்கப்படுகின்றன.

சுற்றுச்சூழல் சார்ந்தும் இது பாதிப்பை ஏற்படுத்துகிறது. நாடுகள் நினைத்தால் உணவு விரயத்தை கட்டுப்படுத்த முடியும்” என தெரிவித்துள்ளார்.

உலக நாடுகள் உணவு விரயத்தை கட்டுப்படுத்துவதற்கு இலக்கு நிர்ணயித்து செயல்பட வேண்டியது அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.