ரஷ்ய - உக்ரைன் போரில் இலங்கையர்கள்: அல் - ஜசீரா வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்
![Oruvan](https://gumlet.assettype.com/oruvan/2024-03/0ed9eac8-8788-407b-ab8e-517a351269c0/MicrosoftTeams_image__222_.png?format=webp&w=800&q=70)
![Oruvan](/site-related-assets/no-image.webp)
Sri Lankans die in Russia’s Ukraine war
உக்ரைனில் நடந்து வரும் மோதலுக்கு மத்தியில், அங்கு இலங்கையை சேர்ந்தவர்கள் ஆயும் ஏந்தி மோதலில் ஈடுபட்டு வருவதாக அல் - ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், உக்ரைன் மட்டுமல்லாது இருதரப்பிலும் இலங்கையர்கள் செயற்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அல் - ஜசீரா அறிக்கையொன்றையும் தயார்படுத்தியுள்ளது. இதனடிப்படையில், உக்ரைனில் ரஷ்யாவுக்காக போரிட்டதில் குறைந்தது இரண்டு இலங்கையர்களும், உக்ரைன் தரப்பில் மூன்று பேரும் இதுவரையில் கொல்லப்பட்டுள்ளனர்.
டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள ரஷ்ய பதுங்கு குழியின் மீது உக்ரைன் நடத்திய தாக்குதலில் இலங்கையர் ஒருவர் காயமடைந்ததாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலில் காயமடைந்த சக இலங்கையர் ஒருவரால் அவர் அந்த இடத்திலிருந்து அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதனடிப்படையில், கடந்த ஆண்டு ரஷ்யாவின் படையெடுப்பிற்கு எதிராக உக்ரைனுக்காக போராடிய மூன்று இலங்கையர்களுடன் இந்த இரண்டு இறப்புகளும் சேர்ந்துள்ளன. என அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
3,000 டொலர் சம்பளத்துக்கு இலங்கையர்கள்
நூற்றுக்கணக்கான இலங்கையர்கள் இப்போது உக்ரேனில் ரஷ்ய இராணுவத்தில் பணியாற்றி வருகின்றனர். குறித்த இலங்கையர்கள் ரஷ்யாவில் மாதாந்தம் 3,000 டொலர் சம்பளம் மற்றும் ரஷ்ய குடியுரிமையை எதிர்பார்த்து ஆயுதமேந்தி போராடுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
பெரும்பாலும் ஓய்வுபெற்ற இலங்கைப் படையினர் – ரஷ்ய இராணுவத்தில் சேர தீவிரமாக முயற்சித்து வருவதாகவும், இலங்கையில் உள்நாட்டில் கடுமையான வறுமையின் மத்தியில் மாஸ்கோவின் பணத்திற்கு ஈடாக உக்ரேனியப் படைகளின் கைகளில் மரணத்தைப் பணயம் வைக்கத் தயாராக இருப்பதாகவும் அல் ஜசீரா மேலும் தெரிவித்துள்ளது.
![Oruvan](https://gumlet.assettype.com/oruvan/2024-03/681aaf68-3e16-47e5-9f88-b27cc789467c/Sri_Lankan_in_Russia_1_1711431524.webp?format=webp&w=1000&q=80)
![Oruvan](/site-related-assets/no-image.webp)
உக்ரேனின் விடுதலைக்காக இலங்கையர்களும் போராடி உயிரிழந்துள்ளனர்
டிசம்பரில், சிறப்புப் போராளிகள் பிரிவுக்கு தலைமை தாங்கிய கப்டன் ரனிஷ் ஹேவகே மற்றும் எம்.எம்.பிரியந்த மற்றும் ரொட்னி ஜெயசிங்க ஆகிய இரு இலங்கையர்களும் ரஷ்ய படைகளுக்கு எதிராக போரிட்டு கொல்லப்பட்டனர்.
![Oruvan](https://gumlet.assettype.com/oruvan/2024-03/415e3f8b-64e3-4b8a-a29d-a27594409dbc/ranish_hewage_1711431897.webp?format=webp&w=1000&q=80)
![Oruvan](/site-related-assets/no-image.webp)
CAPTAN Ranish Hewage
டிசம்பர் 15 அன்று பல உக்ரேனிய வீரர்களுடன் கீவ் நகருக்கு கிழக்கே 400 கிமீ (240 மைல்) தொலைவில் உள்ள மிலினோவ் என்ற இடத்தில் ஹெவகே புதைக்கப்பட்டார், ஆனால் மற்ற இரண்டு இலங்கையர்களின் உடல்கள் மீட்கப்படவில்லை.
![Nipuna Silva in his Sri Lankan army uniform, before he left to fight for Russia in Ukraine](https://gumlet.assettype.com/oruvan/2024-03/c7667ddf-94ab-4f3e-9b8b-b1d8a8995e18/sri_lanka_soldier_1_1711431748.webp?format=webp&w=1000&q=80)
![Nipuna Silva in his Sri Lankan army uniform, before he left to fight for Russia in Ukraine](/site-related-assets/no-image.webp)
Nipuna Silva Nipuna Silva in his Sri Lankan army uniform, before he left to fight for Russia in Ukraine
உக்ரேனின் பிராந்திய பாதுகாப்புக்கான சர்வதேச படையணியில் பணியாற்றிய சுமார் 20 இலங்கையர்கள் ஹெவகேவின் மரணத்திற்குப் பிறகு அப்பகுதியை விட்டு வெளியேறினர், 25 வயதான லஹிரு ஹத்துருசிங்க, காயமடைந்த ரனிஷ் ஹேவகேவை பல கிலோமீட்டர்கள் தாண்டி பாதுகாப்புக்காக அழைத்து சென்றனர். ஆனாலும் அவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்தார்.
உக்ரேனுக்காகப் போரிடுவதற்காக இலங்கை இராணுவத்திலிருந்து வெளியேறிய ஹத்துருசிங்க, ரஷ்யாவுடனான போரில் உக்ரைன் பக்கம் இன்னும் இணைந்திருக்கும் ஒரே இலங்கையர் என நம்பப்படுகிறது.
நன்றி - அல்ஜசீரா