ரஷ்யாவின் எண்ணை சுத்திகரிப்பு நிலையங்கள் மீது தாக்குதல்: எரிபொருள் விலை அதிகரிக்கலாம் என்ற அச்சம்

OruvanOruvan

Ukrainian

ரஷ்யாவின் எண்ணை சுத்திகரிப்பு நிலையங்கள் மீது,உக்ரெய்ன் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது.இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ரஷ்யாவின் சக்தி உற்பத்தி நிலையங்கள் மீது உக்ரைய்ன் கடந்த சில மாதங்களாக தாக்கதல் நடத்திவருகின்றது.அந்தவகையில் குறித்த தாக்குதலில் பாரிய அழிவினை ரஷ்யா சந்தித்துள்ளதாக நம்பப்படுவதாக உக்ரெய்ன் சுட்டிக்காட்டியுள்ளது.

தாக்குதல் காரணமாக எரிபொருளின் விலையை 02 வீதமான அதிகரிப்பதாக ஜனாதிபதி புட்டின் அறிவித்துள்ளார்.இதேவேளை அவர் ஜனாதிபதித் தேர்தல் ஒன்றிற்காக காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை ரஷ்ய-உக்ரெய்ன் மோதல் காரணமாக உலக வர்த்தகத்தில் தானியங்களுக்கான விலைகள் அதிகரித்திருந்த நிலையில் எரிபொருள் விலை அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.