ஆண்ட்ரூ டேட்டை இங்கிலாந்துக்கு நாடு கடத்த முடியும்: ரோமானிய நீதிமன்றம் தீர்ப்பு

OruvanOruvan

சர்ச்சைக்குரிய நபரான ஆண்ட்ரூ டேட் மற்றும் அவரது சகோதரர் டிரிஸ்டன் ஆகியோரை இங்கிலாந்துக்கு நாடு கடத்தலாம் என்று ரோமானிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பெட்ஃபோர்ட்ஷையர் பொலிஸார் சர்வதேச பிடியாணை உத்தரவு பெற்றுள்ளதாக அறிவித்துள்ளதை தொடர்ந்து ஆண்ட்ரூ டேட் மற்றும் டிரிஸ்டன் ஆகியோர் திங்களன்று புக்கரெஸ்டில் தடுத்து வைக்கப்பட்டனர்.

மனித கடத்தல் குற்றச்சாட்டின் பேரில் ருமேனியாவில் இடம்பெற்று வரும் விசாரணைகள் முடிந்த பின்னரே இந்த இருவரையும் நாடு கடத்த முடியும் என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.

எவ்வாறாயினும், "அனைத்து குற்றச்சாட்டுகளையும் திட்டவட்டமாக நிராகரித்துள்ள" சகோதரர்கள், ருமேனியாவில் நீதிமன்றக் கட்டுப்பாட்டின் கீழ் இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அவர்கள் அந்த நாட்டில் இருநு்து வெளிநாடுகளுக்கு செல்ல முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கற்பழிப்பு மற்றும் மனித கடத்தல் குற்றச்சாட்டுகள் மீதான விசாரணையின் ஒரு பகுதியாக இருவருக்கும் எதிராக பிடியாணை கிடைக்கப்பெற்றுள்ளதை பெட்ஃபோர்ட்ஷையர் பொலிஸார் உறுதிப்படுத்தினர்.

"ஆண்ட்ரூ மற்றும் டிரிஸ்டன் டேட் ஆகியோரை நாடுகடத்துவதை ஒத்திவைத்துள்ள புக்கரெஸ்ட் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் முடிவை நாங்கள் பாராட்டுகிறோம் என ஆண்ட்ரூவின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

"சகோதரர்கள் தங்கள் பாதுகாப்பில் முழுமையாக பங்கேற்கவும், சட்ட செயல்முறை வெளிப்படையான முறையில் தொடரவும் இந்த தீர்ப்பு ஒரு வாய்ப்பை வழங்குகிறது." எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

ருமேனிய அதிகாரிகள் கற்பழிப்பு, மனித கடத்தல் மற்றும் குற்றவியல் கும்பலை உருவாக்குதல் போன்ற தனித்தனி குற்றச்சாட்டுகளை விசாரித்து வருகின்றனர்.

எனினும், இந்தக் குற்றச்சாட்டுகளை சகோதரர்கள் இருவரும் மறுத்துள்ளனர்.

2022ஆம் ஆண்டு டிசம்பரில் இருவரும் ருமேனிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.