மனித உயிர்களை காவுகொள்ளும் தன்சானிய கடல் ஆமைகள்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்
தன்சானியாவில் சன்சிபார் பகுதிக்கு உட்பட்ட பெம்பா தீவில் உள்ள கடல் ஆமை இறைச்சியை உட்கொண்ட முதியவர் ஒருவர் உட்பட எட்டு குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
கடந்த ஐந்தாம் திகதியும் அதே தீவிலுள்ள கடல் ஆமை இறைச்சியை உட்கொண்ட 78 பேர் Mkoani மாவட்டத்திலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதன்போது மேற்கொள்ளப்பட்ட ஆய்வு மற்றும் சிகிச்சைகளின் போது பாதிக்கப்பட்ட அனைவரும் கடல் ஆமை இறைச்சி உட்கொண்டதை வைத்தியர்கள் கண்டறிந்துள்ளனர்.
உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடியளவிற்கு இந்த இறைச்சி அதிக ஆபத்துக்களை விளைவிக்க கூடியதென்றாலும் அதிக சுவை காரணமாக அனைவரும் உட்கொள்வதாக கூறப்படுகின்றது.
இதன் சுவை, கணவாய் , முதலை, மாட்டிறைச்சி போன்ற சுவையுடையது என கூறப்படுகின்றது.
ஆமைகள் உண்ணும் நச்சுத் தன்மையுடைய பாசிகள் காரணமாக ஆமை இறைச்சி நச்சுத் தன்மையுடையதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்ற போதிலும் சரியான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.