அல்-கைய்தாவின் அரேபிய தீபகற்ப குழுவின் தலைவர் மரணம்: அமெரிக்காவால் தேடப்பட்டு வந்தவர்

OruvanOruvan

Al Qaeda Arabian Peninsula Leader

ஏமனை தலைமையிடமாக கொண்ட அல்-கைய்தா அமைப்பின் அரேபிய தீபகற்பத்தின் தலைவரான காலித் அல்-பதர்ஃபி (Khalid Al Batarfi) மரணமடைந்துள்ளார்.

இந்தத் தகவலை அல்-கைய்தா அமைப்பினர் நேற்றிரவு (10) அறிவித்துள்ளனர்.

அரேபிய தீபகற்பத்தின் அல்-கைய்தா குழுவின் தலைவரான காலித் அல்-பதர்ஃபி,அமெரிக்காவினால் தேடப்பட்டு வந்தவர் என்பதுடன் அவரை கொலை செய்பவருக்கு அமெரிக்க அரசாங்கம் ஐந்து மில்லியன் டொலர் பரிசு வழங்கப்படும் எனவும் அறிவித்திருந்தது.

அல்-கைய்தா நிறுவனர் ஒசாமா பின் லேடன் கொலை செய்யப்பட்ட பின்னர், அரேபிய தீபகற்பத்தின் அல்-கைய்தா குழுவே அந்த அமைப்பின் மிகவும் ஆபத்தான பிரிவாக கருதப்படுகிறது.

தலைவரின்மரணம் தொடர்பாக அல்-கைய்தா வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது.அதில், காலித் அல்-பதர்ஃபியின் உடலில் அல்-கைய்தா அமைப்பின் கொடி போர்த்தப்பட்டுள்ளது.

காலித் அல்-பதர்ஃபிக்கு 40 வயது இருக்கும் என கூறப்படுகிறது. அல்-கைய்தாவின் தள புலனாய்வு குழு இது தொடர்பான விபரங்களை அறிவித்துள்ளது.

அவர் தாக்குதலில் கொல்லப்பட்டரா அல்லது இயற்கை மரணமா என்ற தகவல்கள் வெளியாகவில்லை.

ஏமனில் இஸ்லாமியர்களின் புனித ரமலான் மாத நோன்பு இன்று (11) முதல் ஆரம்பமாகியுள்ளது.