காசாவிற்கான கடல் உதவி வழித்தடத்தை அறிவித்த ஐரோப்பிய ஒன்றியம்: 2.3 மில்லியன் மக்கள் பஞ்சத்தில்
இந்த வார இறுதியில் சைப்ரஸ் - காசா இடையே ஒரு கடல் உதவி வழித்தடத்தை செயல்படத் தொடங்கும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் வெள்ளியன்று (08) தெரிவித்தார்.
போரினால் அழிக்கப்பட்ட பாலஸ்தீனிய நிலப்பரப்பில் மனிதாபிமான நெருக்கடியைப் போக்க மேற்கத்திய முயற்சிகளை துரிதப்படுத்தும் முயற்சிகளில் இது ஒரு பகுதியாகும்.
காசாவின் மத்தியதரைக் கடலோரப் பகுதியில் 2.3 மில்லியன் மக்களிடையே பஞ்சம் நிலவுவதாக ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது.
காசாவில் தற்காலிக துறைமுகம் ஒன்றை அமைக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி பைடன் கூறிய ஒரு நாள் கழித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
ஹமாஸுக்கு எதிரான இஸ்ரேலின் போரில் சாத்தியமான போர்நிறுத்தம் பற்றிய பேச்சுவார்த்தைகள், இப்போது அதன் ஐந்தாவது மாதத்தில், கெய்ரோவில் முட்டுக்கட்டையாக உள்ளன.
இந் நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஆதரவுடன் தொண்டு குழுவால் சேகரிக்கப்பட்ட உணவு உதவியின் விநியோகம் வார இறுதி முதல் சைப்ரஸை விட்டு வெளியேறக்கூடும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் வான் டெர் லேயன் கூறினார்.
உதவிப் பொதிகள் மக்கள் மீது விழுந்ததில் 5 பேர் பலி
காசா நகரின் மேற்கே அல் ஷாதி முகாமில் வெள்ளிக்கிழமை (08) வான்வழி உதவிப் பொதிகள் மக்கள் கூட்டத்தில் விழுந்ததில் குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 10 பேர் காயமடைந்துள்ளனர்.
உதவிப் பொருட்களை சுமந்து வந்த பாராசூட்கள் சரியாகப் பயன்படுத்தப்படாததால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக நேரில் கண்ட சாட்சியங்களை அடிப்படையாகக் கொண்டு சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.