அமெரிக்க-தென் கொரிய கூட்டு இராணுவ பயிற்சி: வட கொரியாவின் அணுவாயுத அச்சுறுத்தல் அதிகரிப்பு

OruvanOruvan

தென்கொரியா-அமெரிக்கா ஆகிய நாடுகள் கூட்டு இராணுவப் பயிற்சியை ஆரம்பித்துள்ளன. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் இராணுவத் துருப்பினை இருமடங்காக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வட கொரியாவினால் அணுவாயுத அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில் கூட்டுப்பயிற்சியில் இராணுவத்தினர் அதிகரிக்கப்பட்டுள்ளனர்.இராணுவப் பயிற்சி எதிர்வரும் 14 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

வட கொியாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில் நேசநாடுகளைப் பலப்படும் வகையில் அமெரிக்கா இந்த கூட்டுப்பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றது.