பனியில் குழந்தைபோல் உறங்கும் துருவ பனிக்கரடி: சிறந்த புகைப்பட கலைஞருக்கான விருதை பெற்றுக்கொடுத்தது

OruvanOruvan

People's Choice Award winner

பிரிட்டிஷ் அமெச்சூர் புகைப்படக் கலைஞர் நிமா சரிகானியின் இளம் துருவ கரடி பனிப்பாறையில் உறங்கச் செல்லும் அற்புதமான புகைப்படம், ஆண்டின் சிறந்த வனவிலங்கு புகைப்படக் கலைஞருக்கான பீப்பிள்ஸ் சாய்ஸ் விருதை வென்றுள்ளது.

இவரது புகைப்படங்களில் , அனைவரின் சிந்தனையைத் தூண்டும் மற்றும் விலங்குக்கும் அதன் வாழ்விடத்திற்கும் இடையிலான ஒருங்கிணைந்த பிணைப்பின் அப்பட்டமான தன்மையை வெளிப்படுத்துகின்றது.

மேலும், காலநிலை, வெப்பமயமாதல் மற்றும் வாழ்விட இழப்பின் தீங்கு விளைவிக்கும் தாக்கங்களின் காட்சி என்பன அமைந்துள்ளன.

நோர்வேயின் ஸ்வால்பார்ட் தீவுக்கு துருவ கரடிகளைத் தேடி மூன்று நாட்கள் பயணம் மேற்கொண்டு குறித்த புகைப்படத்தை படம்பிடித்துள்ளார்.

OruvanOruvan

உலகெங்கிலும் உள்ள வனவிலங்கு புகைப்படம் எடுத்தல் மற்றும் இயற்கை ரசிகர்கள் 25 படங்களின் குறுகிய பட்டியலில் இருந்து வாக்களிக்க அழைக்கப்பட்டனர்.

மற்ற நான்கு சிறந்த இறுதிப் போட்டியாளர்கள் பாராட்டப்பட்டனர்.

மேலும், பாராட்டுக்களை பெற்றுக்கொண்ட புகைப்படகலைஞர்களின் புகைப்படங்கள் 👇