கப்பலில் இருந்து ஏவுகணைகளை ஏவியது வடகொரியா: கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரிப்பு

OruvanOruvan

North Korea launched the missiles

வடகொரியாவின் நடவடிக்கைகள் காரணமாக கொரிய தீபகற்பத்தில் நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து வருவதாக சர்வதேச பாதுகாப்பு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அயல் நாடான தென்கொரியாவுக்கு ஆத்திரமூட்டும் வகையில் வடகொரியாவின் நடவடிக்கைகள் பதற்றத்தை ஏற்படுத்தி வருவதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வடகொரியா இன்று (28) காலை 8 மணியளவில், தனது பிராந்தியத்தின் சிம்ப்னோ என்ற பகுதிக்கு அருகிலுள்ள கடல் நீரில் கப்பலில் இருந்து ஏவுகணைகளை ஏவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியளவில், வட கொரியா சில அடையாளம் தெரியாத கப்பல் ஏவுகணைகளை கடலில் செலுத்தியதை தமது இராணுவம் கண்டறிந்ததாக தென் கொரியாவின் கூட்டுப் படைத் தலைவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளனர்.

வடகொரியா அண்மையில் கடலில் பீரங்கி குண்டுகளை வீசி பிராந்தியத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி இருந்தது.