வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி: முட்டை சாப்பிடுவதை கைவிடும் சுவிஸ் மக்கள்

OruvanOruvan

ஐரோப்பாவில் மிகவும் ஆரோக்கியமான மக்கள் வாழும் நாடுகளில் ஒன்றாக சுவிட்சர்லாந்து உள்ளது. ஆனால், இங்கு தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

பல்வேறு துறைகளில் தொழிலாளர்கள் எண்ணிக்கையில் குறைவு ஏற்பட்டுள்ளதால் சுவிஸில் உற்பத்திகளும் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக முட்டை உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, சுவிட்சர்லாந்தில் முட்டைக்கான தேவை கணிசமாக அதிகரித்துள்ளது. இது சில்லறை விற்பனையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

2023 ஆம் ஆண்டின் இறுதியில் குறைவான மக்கள் முட்டைகளை வாங்கியிருந்தார்கள். முட்டை கொள்வனவு குறைந்தமையால் முட்டைக்கான கேள்வி குறைந்திருந்தது. இந்நிலையில் தற்போது முட்டைக்கு கேள்வி அதிகரித்திருந்தாலும் சுவிஸில் போதுமான கையிருப்பு இல்லை.

இதனால் ஈஸ்டர் பண்டிகை காலத்தில் சுவிஸில் முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்படும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஈஸ்டருக்கு முன் பற்றாக்குறை உச்சத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இக்கட்டான நேரத்தில் பலர் முட்டை சாப்பிடமுடியாமல் போவற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. முட்டை சாப்பிடுவதை பலர் கைவிட்டுள்ளனர்.

நாட்டின் மிகப்பெரிய பல்பொருள் அங்காடி சங்கிலியான மிகரோஸ் போன்ற கடைகளில் முட்டைகள் குறைவாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. எனினும் இத்தட்டுப்பாட்டை நிவர்த்திசெய்ய வேறு நாடுகளில் இருந்து முட்டைகள் இறக்குமதி செய்யப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.