உலக பணக்கார நாட்டுக்கு ஏற்பட்டுள்ள நிலைமை: சுவிசில் இலவச உணவுக்காக அலைமோதும் மக்கள்

OruvanOruvan

உலகில் மிகவும் பணக்கார நாடுகளில் ஒன்றாக சுவிட்சர்லாந்து உள்ளது. அதேபோன்று இங்கு மக்கள் மிகவும் அமைதியாகவும் சுமைகள் குறைவுடனும் வாழ்வதாக கூறப்படுகிறது.

ஆனால், அண்மைக்காலமாக சுவிட்சர்லாந்தில் மக்களின் வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்துள்ளதாக பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கொவிட் தொற்றுக்கு பின்னர் சுவிட்சர்லாந்தில் மக்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வருவதாகவும் உணவுக்காக மக்கள் இங்கு அலைமோதி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

OruvanOruvan

கொவிட் தொற்று காலகட்டத்தில், இலவச உணவுக்காக நீண்ட வரிசையில் நின்ற மக்களைக் காட்டும் புகைப்படங்கள் வெளியாகி உலக முழுவதிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தின.

தற்போதும் அவ்வாறான சில நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. சுவிட்சர்லாந்தில் ஏராளமானோர் உணவு வங்கிகளை நாடும் நிலைமைக்கு தள்ளப்பட்டுவருவதாக Caritas தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

முழுநேர பணியாளர்களுக்கே வாழ முடியாத நிலை

சுவிட்சர்லாந்தில் உணவு வங்கிகள் முன் எப்போதுமே கூட்டம் அதிகமாக காணப்படுவதாக தெரிவித்துள்ள Caritas தொண்டு நிறுவனம், கடந்த ஆண்டில் உணவு வங்கிகளை நாடுவோரின் எண்ணிக்கை 11 சதவிகிதம் அதிகரித்ததாக தெரிவித்துள்ளது.

OruvanOruvan

ஆச்சரியத்துக்குரிய விடயம் என்னவென்றால், பணக்கார நகரமான ஜெனீவாவில் அதிக அளவில் மக்கள் உணவு வங்கிகளை பயன்படுத்தியுள்ளார்கள்.

சுவிட்சர்லாந்தில் Fondation Partage என்னும் தொண்டு நிறுவனத்தின் தலைவரான Marc Nobs கூறும்போது, மாதக் கடைசியில் உணவு வாங்க பணமில்லாததால் மக்கள் உணவு வங்கிகளை நாடுவதாக தெரிவிக்கிறார்.

விலைவாசிப் பிரச்சினை, பணவீக்கம், மருத்துவச் செலவுகள் அதிகரிப்பு, அதிக மின்கட்டணம் முதலான விடயங்களால், முழு நேரப் பணிகளில் உள்ளவர்களே செலவுகளை சமாளிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.