மலேசியாவில் மூன்று இலங்கையர்கள் படுகொலை: வீட்டில் வாடகை அடிப்படையில் தங்கியிருந்த தம்பதியின் 20 வயதுடைய மகனும் இரண்டு இலங்கையர்களுமே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளனர்.

OruvanOruvan

Suspected criminals

மலேசியாவின் சென்டுல் பகுதியில் மூன்று இலங்கையர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இரண்டு இலங்கையர்கள் இந்த கொலைகளை செய்துள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கோலாலம்பூர் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

கடந்த 22ஆம் திகதி இரவு சென்டுல் பகுதியில் உள்ள இலங்கை தம்பதிகளுக்கு சொந்தமான வீடொன்றில் இந்த கொலைகள் இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த வீட்டில் வாடகை அடிப்படையில் தங்கியிருந்த தம்பதியின் 20 வயதுடைய மகனும் இரண்டு இலங்கையர்களுமே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளனர்.

சுமார் 02 நாட்களுக்கு முன்னர் குறித்த வீட்டிற்கு இரு இலங்கையர்கள் வந்துள்ளனர். அவர்கள் இந்தக் கொலைகளை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக மலேசிய பொலிஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அக்கம்பக்கத்தினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வீட்டுக்கு வந்த பொலிஸார், தலையை மூடி கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் கொல்லப்பட்ட நிலையில் மூவரின் சடலங்களையும் மீட்டுள்ளனர்.

இரண்டு இலங்கையர்களின் புகைப்படங்களையும் பொலிஸார் ஊடகங்களுக்கு வெளியிட்டிருந்தனர்.