குயின்ஸ்டவுனில் அவசர நிலை பிரகடனம்: வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக பல நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன

OruvanOruvan

Emergency declared in Queenstown

நியூசிலாந்தின் சுற்றுலா மையமான குயின்ஸ்டவுனில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக இந்த திடீர் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது.

அதன்படி தற்போது சுமார் 100 நகரவாசிகள் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குயின்ஸ்டவுன் அதிகாரிகள் குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை வெள்ளத்தைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும், வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக பல நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.