<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>World News Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/world-news/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/world-news/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Tue, 10 Jun 2025 06:59:06 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>World News Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/world-news/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>3000 கார்களுடன் தீப்பிடித்த கப்பல் &#8211; ஆறு நாட்களாகியும் அணையாத தீ</title>
		<link>https://oruvan.com/ship-carrying-3000-cars-catches-fire-fire-that-has-not-been-extinguished-for-six-days/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Tue, 10 Jun 2025 06:59:06 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[World News]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=22999</guid>

					<description><![CDATA[<p>சீனாவிலிருந்து மெக்சிகோவிற்கு 3,000 கார்களை ஏற்றிச் சென்ற கப்பல் அலாஸ்கா கடற்பகுதியில் தீப்பிடித்தது. கடந்த ஜூன் மூன்றாம் திகதி நடந்த சம்பவத்திற்குப் பின்னரும் கப்பலில் ஏற்பட்ட தீ, ஆறு நாட்களாகியும் அணையவில்லை. மோர்னிங் மிடாஸ் என்ற கப்பல் தீப்பிடித்தது. அதில் 22 பணியாளர்கள் இருந்தனர். தீயை அணைக்க முடியாமல் அலாஸ்கா கடற்கரையில் உள்ள அலூடியன் தீவுகளுக்கு அருகே கப்பலை கைவிட்டு குழுவினர் தப்பினர். கப்பலில் உள்ள 3,000 கார்களில் 70 மின்சார கார்களும், 680 கலப்பின கார்களும் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/ship-carrying-3000-cars-catches-fire-fire-that-has-not-been-extinguished-for-six-days/">3000 கார்களுடன் தீப்பிடித்த கப்பல் &#8211; ஆறு நாட்களாகியும் அணையாத தீ</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>சீனாவிலிருந்து மெக்சிகோவிற்கு 3,000 கார்களை ஏற்றிச் சென்ற கப்பல் அலாஸ்கா கடற்பகுதியில் தீப்பிடித்தது. கடந்த ஜூன் மூன்றாம் திகதி நடந்த சம்பவத்திற்குப் பின்னரும் கப்பலில் ஏற்பட்ட தீ, ஆறு நாட்களாகியும் அணையவில்லை.</p>
<p>மோர்னிங் மிடாஸ் என்ற கப்பல் தீப்பிடித்தது. அதில் 22 பணியாளர்கள் இருந்தனர். தீயை அணைக்க முடியாமல் அலாஸ்கா கடற்கரையில் உள்ள அலூடியன் தீவுகளுக்கு அருகே கப்பலை கைவிட்டு குழுவினர் தப்பினர்.</p>
<p>கப்பலில் உள்ள 3,000 கார்களில் 70 மின்சார கார்களும், 680 கலப்பின கார்களும் அடங்கும்.</p>
<p>லித்தியம்-அயன் பேட்டரிகளில் ஏற்பட்ட தீயினால் தீ விபத்து ஏற்பட்டதாக நம்பப்படுகிறது. கப்பலில் இன்னும் 350 மெட்ரிக் தொன் எரிபொருளும், 1,530 மெட்ரிக் தொன் சல்பர் எரிபொருளும் மீதமுள்ளன.</p>
<p>அமெரிக்க கடலோர காவல்படை பல நாட்களாக மீட்புப் பணிகளுக்கு தலைமை தாங்கி வருகிறது. பல கப்பல்களும் ஒரு இழுவைப் படகும் சம்பவ இடத்தில் உள்ளன. ஹெலிகாப்டர்களும் சம்பவ இடத்தை கண்காணித்து வருகின்றன.</p>
<p>சம்பவ இடத்தில் கடல் மாசுபாட்டிற்கான அறிகுறிகள் எதுவும் இதுவரை இல்லை என்றும், பல நாட்களாக தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தாலும், தண்ணீரில் கப்பல் நிலை சாதாரணமாக இருப்பதாகவும் கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.</p>
<p>மோர்னிங் மிடாஸ் என்பது லைபீரியக் கொடியுடன் 2006 ஆம் ஆண்டு கட்டப்பட்ட ஒரு கப்பல் ஆகும். இது மே 26 அன்று சீனாவிலிருந்து 3,000 க்கும் மேற்பட்ட கார்களுடன் புறப்பட்டது.</p>
<p>ஜூன் 15ஆம் திகதி மெக்சிகோவை வந்தடைய திட்டமிடப்பட்டது. கடல்சார் நிபுணர்கள் மற்றும் அமைப்புகளுடன் இணைந்து மீட்பு நடவடிக்கையைத் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/ship-carrying-3000-cars-catches-fire-fire-that-has-not-been-extinguished-for-six-days/">3000 கார்களுடன் தீப்பிடித்த கப்பல் &#8211; ஆறு நாட்களாகியும் அணையாத தீ</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>100க்கும் மேற்பட்டவர்களை பலியெடுத்த தென் கொரிய விமான விபத்து &#8211; விபத்திற்கு முன் நடந்தது என்ன?</title>
		<link>https://oruvan.com/bird-hit-sparks-in-engine-before-deadly-south-korea-plane-crash/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Sun, 29 Dec 2024 06:19:03 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#oruvan #news]]></category>
		<category><![CDATA[South Korea]]></category>
		<category><![CDATA[South Korea as plane crashes]]></category>
		<category><![CDATA[Sri Lanka News]]></category>
		<category><![CDATA[Tamil News]]></category>
		<category><![CDATA[World News]]></category>
		<category><![CDATA[முவான் சர்வதேச விமான நிலையம்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=4437</guid>

					<description><![CDATA[<p>தென் கொரியாவின் முவான் சர்வதேச விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை 181 பேருடன் சென்ற ஜெஜு ஏர் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் தவிர மற்ற அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தரையிறங்கும் போது ஏற்பட்ட கோளாறு காரணமாக விமானம் விபத்துக்குள்ளானதாக தென் கொரிய செய்தி நிறுவனமான யோன்ஹாப் தெரிவித்துள்ளது. விமானத்தின் முதல் தரையிறங்கும் முயற்சி தோல்வியடைந்ததாகவும், இரண்டாவது முயற்சி விபத்தாக மாறியதாகவும் அது மேலும் கூறியது. தாய்லாந்தின் பாங்காக்கிலிருந்து 175 பயணிகள் மற்றும் ஆறு [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/bird-hit-sparks-in-engine-before-deadly-south-korea-plane-crash/">100க்கும் மேற்பட்டவர்களை பலியெடுத்த தென் கொரிய விமான விபத்து &#8211; விபத்திற்கு முன் நடந்தது என்ன?</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>தென் கொரியாவின் முவான் சர்வதேச விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை 181 பேருடன் சென்ற ஜெஜு ஏர் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் தவிர மற்ற அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.</p>
<p>தரையிறங்கும் போது ஏற்பட்ட கோளாறு காரணமாக விமானம் விபத்துக்குள்ளானதாக தென் கொரிய செய்தி நிறுவனமான யோன்ஹாப் தெரிவித்துள்ளது.</p>
<p>விமானத்தின் முதல் தரையிறங்கும் முயற்சி தோல்வியடைந்ததாகவும், இரண்டாவது முயற்சி விபத்தாக மாறியதாகவும் அது மேலும் கூறியது.</p>
<p>தாய்லாந்தின் பாங்காக்கிலிருந்து 175 பயணிகள் மற்றும் ஆறு பணியாளர்களை ஏற்றிச் சென்ற போயிங் 737-800 விமானத்தின் தரையிறங்கும் கியரில் ஏற்பட்ட கோளாறுக்கு பறவை மோதல் காரணமாக சந்தேகிக்கப்படுகிறது.</p>
<p>விபத்து காட்சிகளில் இரட்டை எஞ்சின் விமானம் தரையிறங்கும் கியர் இல்லாமல் முவானில் தரையிறங்குவதையும், விமான நிலையத்தின் வெளிப்புற விளிம்பில் உள்ள சுவரில் மோதி வெடித்தமையும் காட்டப்படுள்ளது.</p>
<p>விரைந்து செயற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணிகளை மேற்கொண்டனர். யோன்ஹாப்பின் கூற்றுப்படி, இரண்டு பயணிகள் மற்றும் ஒரு பணியாளர் உள்ளிட்ட மூவரை மீட்புக் குழுக்கள் காப்பாற்றியுள்ளனர்.</p>
<p>தென் கொரியாவின் தெற்கு ஜியோல்லா மாகாணத்தில் உள்ள ஒரு முக்கிய பிராந்திய மையமான தென்மேற்கு கடலோர விமான நிலையத்தில் உள்ளூர் நேரப்படி காலை 9:07 மணிக்கு இந்த சம்பவம் நடந்தது.</p>
<p>தொடர்ச்சியான அரசியல் நெருக்கடியின் மத்தியில், நாட்டின் இடைக்காலத் தலைவராக நியமிக்கப்பட்ட தற்காலிக ஜனாதிபதி சோய் சாங்-மோக், முழு மீட்பு முயற்சிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்.</p>
<p>கடந்த 25ஆம் திகதி கஜகஸ்தானின் அக்டாவ் அருகே அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானதில் 38 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து தென் கொரியாவில் இந்த பயங்கரமான விமான விபத்து ஏற்பட்டது.</p>
<p>செச்சென் தலைநகர் க்ரோஸ்னிக்கு செல்லும் வழியில் ரஷ்ய வான் பாதுகாப்பிலிருந்து விமானம் சுடப்பட்டதாகவும், அதை திசைதிருப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் பல தகவல்கள் தெரிவிக்கின்றன.</p>
<p>அதேபோல், நேற்று இரவு செயிண்ட் ஜோன்ஸிலிருந்து கனடாவின் ஹாலிஃபாக்ஸ் வந்த விமானம் தரையிறங்கும் போது ஏற்பட்ட பிரச்சனையால், ஓடுபாதையில் இருந்து சறுக்கி பகுதியளவு தீப்பிடித்ததால், விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/bird-hit-sparks-in-engine-before-deadly-south-korea-plane-crash/">100க்கும் மேற்பட்டவர்களை பலியெடுத்த தென் கொரிய விமான விபத்து &#8211; விபத்திற்கு முன் நடந்தது என்ன?</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
