<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Will Anura&#039;s Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/will-anuras/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/will-anuras/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Sat, 14 Dec 2024 04:20:25 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>Will Anura&#039;s Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/will-anuras/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>அநுரவின் ”மாற்றம்” சுயநிர்ணய உரிமைக்கு வழிவிடுமா?</title>
		<link>https://oruvan.com/will-anuras-change-lead-to-the-right-to-self-determination/</link>
		
		<dc:creator><![CDATA[Kanooshiya Pushpakumar]]></dc:creator>
		<pubDate>Sat, 14 Dec 2024 04:20:25 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA["change" lead to the right to]]></category>
		<category><![CDATA[#local]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[#oruvan #news]]></category>
		<category><![CDATA[Government]]></category>
		<category><![CDATA[self-determination?]]></category>
		<category><![CDATA[Will Anura's]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=2479</guid>

					<description><![CDATA[<p>சந்திரிகா, மகிந்த, கோட்டா ஆகியோரின் பரம்பமரை அரசியல் நீட்சி தொடரும் நிலையில் ”மாற்றம்” ”மறுமலர்ச்சி” என்ற கோசங்களுக்கு முடிவுரை எழுதப்படும் சாத்தியமே அதிகரிக்கிறது. &#160; &#160; பல ஆண்டுகாலமாக “பரம்பரை அரசியல்” கலாசாரத்தைக் கையாண்டு இலங்கைத்தீவை வங்குரோத்து நிலைக்குத் தள்ள ராஜபக்ச குடும்பத்தின் ஆட்சி வழிவகுத்தது என்ற உறுதியான கருத்து மேலோங்கியுள்ளது. 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி இலங்கை சுதந்திரம் அடைந்தது முதல் 2024ஆம் ஆண்டு வரையிலான ஆட்சிகளில் நாட்டு மக்கள் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/will-anuras-change-lead-to-the-right-to-self-determination/">அநுரவின் ”மாற்றம்” சுயநிர்ணய உரிமைக்கு வழிவிடுமா?</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<ul>
<li><strong>சந்திரிகா, மகிந்த, கோட்டா ஆகியோரின் பரம்பமரை அரசியல் நீட்சி தொடரும் நிலையில் ”மாற்றம்” ”மறுமலர்ச்சி” என்ற கோசங்களுக்கு முடிவுரை எழுதப்படும் சாத்தியமே அதிகரிக்கிறது.</strong></li>
</ul>
<p>&nbsp;</p>
<p><img fetchpriority="high" decoding="async" class="alignnone  wp-image-2481" src="https://oruvan.com/wp-content/uploads/2024/12/Gotabaya-Rajapaksa-copy-3-400x300.jpg" alt="" width="479" height="359" srcset="https://oruvan.com/wp-content/uploads/2024/12/Gotabaya-Rajapaksa-copy-3-400x300.jpg 400w, https://oruvan.com/wp-content/uploads/2024/12/Gotabaya-Rajapaksa-copy-3-650x488.jpg 650w, https://oruvan.com/wp-content/uploads/2024/12/Gotabaya-Rajapaksa-copy-3-250x188.jpg 250w, https://oruvan.com/wp-content/uploads/2024/12/Gotabaya-Rajapaksa-copy-3-768x576.jpg 768w, https://oruvan.com/wp-content/uploads/2024/12/Gotabaya-Rajapaksa-copy-3-150x113.jpg 150w, https://oruvan.com/wp-content/uploads/2024/12/Gotabaya-Rajapaksa-copy-3-50x38.jpg 50w, https://oruvan.com/wp-content/uploads/2024/12/Gotabaya-Rajapaksa-copy-3-100x75.jpg 100w, https://oruvan.com/wp-content/uploads/2024/12/Gotabaya-Rajapaksa-copy-3-200x150.jpg 200w, https://oruvan.com/wp-content/uploads/2024/12/Gotabaya-Rajapaksa-copy-3-300x225.jpg 300w, https://oruvan.com/wp-content/uploads/2024/12/Gotabaya-Rajapaksa-copy-3-350x263.jpg 350w, https://oruvan.com/wp-content/uploads/2024/12/Gotabaya-Rajapaksa-copy-3-450x338.jpg 450w, https://oruvan.com/wp-content/uploads/2024/12/Gotabaya-Rajapaksa-copy-3-500x375.jpg 500w, https://oruvan.com/wp-content/uploads/2024/12/Gotabaya-Rajapaksa-copy-3-550x413.jpg 550w, https://oruvan.com/wp-content/uploads/2024/12/Gotabaya-Rajapaksa-copy-3.jpg 800w" sizes="(max-width: 479px) 100vw, 479px" /></p>
<p>&nbsp;</p>
<p>பல ஆண்டுகாலமாக “பரம்பரை அரசியல்” கலாசாரத்தைக் கையாண்டு இலங்கைத்தீவை வங்குரோத்து நிலைக்குத் தள்ள ராஜபக்ச குடும்பத்தின் ஆட்சி வழிவகுத்தது என்ற உறுதியான கருத்து மேலோங்கியுள்ளது.</p>
<p>1948 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி இலங்கை சுதந்திரம் அடைந்தது முதல் 2024ஆம் ஆண்டு வரையிலான ஆட்சிகளில் நாட்டு மக்கள் சரியான ஆட்சி முறையின் கீழ் ஒன்றிணைக்கப்பட்டு இருக்கவில்லை.</p>
<p>2009ஆம் ஆண்டில் மகிந்த ராஜபக்ச ஆட்சியின் கீழிருந்த அரசாங்கம் விடுதலைப்புலிகளை வீழ்த்தியது. இதனைக் காரணமாகக் கொண்டு மகிந்த, அவரது அரசாங்கத்தின் பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்ச மற்றும் ராஜபக்ச குடும்பத்தினர் , அரசியல் சுய இலாபங்களை மேற்கொள்ள ஆரம்பித்தனர்.</p>
<p>அவரது ஆட்சியைக் கேள்விக் கேட்கும் அளவிற்கு பலமான ஒரு எதிர்க்கட்சியும் இருக்கவில்லை. உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டு வந்ததை காரணம் காட்டி பல மோசடிகளில் ஈடுபட்டும் வந்தனர்.</p>
<p>இருந்தாலும் இந்த நாடகம், அரசியலில் அனுபவமே இல்லாத கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக தெரிவு செய்யபட்ட போது வெளிச்சத்திற்கு வர ஆரம்பித்தது.</p>
<p>கோட்டாபய பதவி வகித்த போது இராணுவ ஆட்சிக்கு வழி வகுக்கும் என்ற எதிர்ப்பார்ப்புகள் காணப்பட்டாலும், எதிர்ப்பாராத விதமாக நாட்டின் பொருளாதாரம் பின்னோக்கி செல்ல ஆரம்பித்தது.</p>
<p>1948ஆம் ஆண்டு சுதந்திரத்திற்கு முன்னிருந்தே இலங்கை மக்கள் அவர்களின் தேவைகளையும் , உரிமைகளையும் பெற போராட்டங்களை மேற்கொள்ள வேண்டி இருந்ததாலும் கூட மக்களின் பொறுமையை சீண்டும் விதத்தில் கோட்டாபயவின் ஆட்சி செயலிழந்தது.</p>
<p>நாட்டின் பணவீக்கம் அதிகரித்தது, மின் துண்டிப்புகள் நாளுக்கு நாள் ஒவ்வொரு மணித்தியாலமாக அதிகரித்தது, எரிபொருள் தட்டுப்பாடு போன்ற அடிப்படை சிக்கல்கள் மக்களை மேலும் கோபத்திற்கு உள்ளாக்கியது.</p>
<p>கோட்டாபயவின் ஆட்சி இதற்கு முறையான தீர்வுகளை வழங்க முன்வரவில்லை. இதுவே மக்கள் பொறுமையை இழக்க வழிசமைத்தது.</p>
<p>பொறுமையை இழந்த மக்கள் வீதிக்கு இறங்க இரண்டு தடவை சிந்திக்கவில்லை.</p>
<p>கொரோனா தொற்று அதன் காரணமாக சுற்றுலாத்துறை வருமானத்தை இழந்தமையே பொருளாதார நெருக்கடிக்கான காரணம் என அரசாங்கம் கூறிக்கொண்டாலும், சரியான தலைமைத்துவமின்மையே நாட்டை பாரிய வங்குரோத்து நிலைக்குத் தள்ளியது.</p>
<p>2009 போருக்குப் பின்னரான சூழலிலும் கூட ஏற்றுமதிப் பொருளாதாரம் அதிகரிக்கவில்லை. தேசிய உற்பத்திகளும் அபிவிருத்தியடையவில்லை.</p>
<p>இதன் காரணமாக பொருளாதார வங்குரோத்து நிலையை சரி செய்ய பல சர்வதேச நாடுகளிலிருந்தும் கடன் வாங்க வேண்டிய நிலை உருவானது.</p>
<p>இந்த அனைத்து காரணங்களாலும் கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகக் கோரி மக்கள் வீதிக்கு இறங்கி போராடினர்.</p>
<p>கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட ராஜபக்ச குடும்பத்தினர் அனைவரும் அதிகாரக் கதிரைகளில் இருந்து மக்களால் தூக்கியெறியப்பட்டனர்.</p>
<p>முன்னாள் இராணுவ அதிகாரியாக பணியாற்றியிருந்த கோட்டாபயவிற்கு அரசியல் ஞானமும், அனுபவமும் குறைவாகவே காணப்பட்டது.</p>
<p>ஜனாதிபதியாக பதவி வகித்த பின்னர் கோட்டாபயவை வழிநடத்தியவர்களே நாட்டின் இந்த நிலைக்கு காரணம் என்பது அந்த சந்தரப்பத்தில் அதிகளவில் பேசப்பட்ட ஒரு விடயம்.</p>
<p>நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியானது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் ஏற்படுத்தப்பட்டதாகவும், அதற்கு கோட்டாபய ராஜபகச் பலியானதாகவும், தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவே பல அரசியல் மேடைகளில் தெரிவித்திருந்தார்.</p>
<p>எனினும், தற்போதைய மறுமலர்ச்சி அரசாங்கமான அநுர அரசாங்கமும் ஆட்சிக்கு வந்த பின்னர் கோட்டாபய கால்தடத்தை பின்பற்றும் ஒரு போக்கு காணக்கூடியதாக உள்ளது.</p>
<p>இவ்விடயம் தற்போது அரசியல் விமர்சகர்கள் மத்தியிலும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.</p>
<p>முதலில் கூறிய பரம்பரை அரசியல் மற்றும் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து புதிய ஒரு அரசியல் கலாசாரத்தை மக்கள் ஏற்று அதிகாரத்தில் அமர்த்தினாலும் கூட ஆட்சி அமைத்த நாளிலிருந்து அநுர உள்ளிட்ட அரசாங்கத்தின் செயற்பாடுகள் அனைத்தும் கோட்டாபயவை பின்பற்றுவதாகவே அமைந்துள்ளது.</p>
<p>இந்தக் கேள்வி அநுர ஜனாதிபதியாகும் முன்னரே எழுந்திருந்தது, அதற்கான காரணம் அவர்களின் கொள்கைகளுள் இறக்குமதி பொருளாதாரத்திற்கு தடை எனக் குறிப்பிடப்பட்டிருந்ததே ஆகும்.</p>
<p>இந்த சந்தேகங்களுக்கு அவர்களின் கொள்கைகள் மூலமாகவே அவர்கள் மேடைகளில் பதிலளித்திருந்தாலும் ஆட்சிக்கு வந்தவுடனேயே நாட்டில் ஏற்பட்ட அரிசித் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய முடியாமல் இந்தியாவிலிருந்து அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய நிலைக்கு அநுர அரசாங்கம் தள்ளப்பட்டது.</p>
<p>இதே நிலை தான் கோட்டாபய ஆட்சியில் மஞ்சள் இறக்குமதி மற்றும் உர இறக்குமதி நாடுக்குத் தடை விதிக்கப்பட்டதால் வருமானத்தை இழக்க நேரிட்டது.</p>
<p>வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை அநுர அரசாங்கத்தில் நீக்கப்பட்டுள்ள அதேவேளை, ஐஎம்எப் எனப்படும் சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தங்கள் எதுவித மாற்றங்களுமின்றி தொடருகின்றன.</p>
<p>இந்த விடயங்கள் அனைத்தும் அநுரவின் கொள்கைகளுக்கு அப்பாற்பட்டவையாக இருப்பதால் நாட்டு மக்கள் மத்தியில் தற்போது அச்சம் ஏற்பட ஆரம்பித்துள்ளது.</p>
<p>இலங்கை தற்போது ஆட்சி மாற்றத்தை எதிர்கொண்டுள்ளது. மறுமலர்ச்சி அரசியல் என மார்தட்டினாலும் கூட அது தொடர்பிலான எதுவித மாற்றமும் அவர்களின் நடவடிக்கைகளில் தெரியவில்லை.</p>
<p>நீண்ட நாட்களாக காலி முகத்திடல் போராட்டத்தை எதிர்கொண்ட மக்கள் புதிய ஆட்சியில் இருந்து பல விடயங்களை எதிர்ப்பார்க்கின்றனர் என்பதை அநுர உள்ளிட்ட அரசாங்கம் புரிந்துக்கொள்ள வேண்டும்.</p>
<p>ஆட்சியின் ஆரம்பத்திலேயே இவ்வாறு மக்கள் விமர்சனங்களுக்கு உள்ளாவார்களாக இருந்தால் அதில் ஒரு சிக்கல் நிலை உள்ளது.</p>
<p>அரிசி, தேங்காய் போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு என்பது உட்பட போலிக் கல்வித் தகைமைகளை மக்கள் மத்தியில் முன்வைப்பது வரை சிக்கல்கள் காணப்படுகின்றன.</p>
<p>கோட்டாவின் அரசாங்கம் பதவி கவிழ்வதற்குக் காரண &#8211; காரியமாக அமைந்த அத்தனை விடயங்களும் தற்போது அநுரவின் அரசாங்கத்தில் தலைகாட்டுகின்றன.</p>
<p>1948 இல் இருந்து இனவாத நோக்கிலான அரசியல் &#8211; பொருளாதார திட்டங்களே இலங்கைத்திவின் பொருளாதார வீழ்ச்சிக்குக் காரணம் என்று பொருளியல் ஆய்வாளர்கள் பலர் கூறியுள்ளனர். ஆகவே ”மாற்றம்” ”மறுமலர்ச்சி” என்று மார்தட்டிக் கொண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கம் பரம்பரை கட்சிகளின் அரசியல் நீட்சியாக இருக்கக் கூடாது.</p>
<p>பரம்பரை அரசியல் தலைவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் கனவான்கள் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில், இடதுசாரி &#8211; சோசலிசம் என்று கோசமிட்டு ஆட்சிக்கு வந்த ஜேவிபியின் முகத் தோற்றமான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இலங்கை ஒற்றையாட்சி அரச கட்டமைப்பை முற்றாக மாற்ற வேண்டும்.</p>
<p>அந்த மாற்றம் என்றும் ஏனைய தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் வகையிலான புதிய அரசியல் யாப்புக்கு இடமளிக்க வேண்டும். வெறுமனே சமத்துவம் என்ற கோசத்துக்குள் சிங்கள தேசியத்துக்கள் ஏனைய தேசிய இனங்களை கரைக்கும் திட்டங்களுக்கு இடமளிக்கக்கூடாது.</p>
<p>&nbsp;</p>
<p><strong>(கனூஷியா புஷ்பகுமார்)</strong></p>
<p>The post <a href="https://oruvan.com/will-anuras-change-lead-to-the-right-to-self-determination/">அநுரவின் ”மாற்றம்” சுயநிர்ணய உரிமைக்கு வழிவிடுமா?</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
