<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Wijerama House Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/wijerama-house/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/wijerama-house/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Fri, 17 Oct 2025 07:31:51 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>Wijerama House Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/wijerama-house/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>மகிந்தவை சந்தித்தது சீன வர்த்தகர்கள் குழு</title>
		<link>https://oruvan.com/a-group-of-chinese-businessmen-met-with-mahinda/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Fri, 17 Oct 2025 07:31:51 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[home]]></category>
		<category><![CDATA[Mahinda Rajapaksa]]></category>
		<category><![CDATA[Wijerama House]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=35692</guid>

					<description><![CDATA[<p>சீன வர்த்தகர்கள் குழு ஒன்று நேற்று (16) தங்காலையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தனிப்பட்ட இல்லத்தில் அவரைச் சந்தித்தது. இந்த விஜயத்தின் போது முன்னாள் ஜனாதிபதிக்கு பரிசுகளை வழங்கிய குழுவினர், அவரது நலம் விசாரித்தனர். கொழும்பில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறி தங்காலையில் குடியேறிய பின்னர், முன்னாள் ஜனாதிபதியை சந்திக்க வந்த முதல் சீன வர்த்தகர்கள் குழு இதுவாகும். தேயிலை ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ள இந்தக் குழு, வெலிகம மற்றும் நுவரெலியாவுக்குச் செல்லும் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/a-group-of-chinese-businessmen-met-with-mahinda/">மகிந்தவை சந்தித்தது சீன வர்த்தகர்கள் குழு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>சீன வர்த்தகர்கள் குழு ஒன்று நேற்று (16) தங்காலையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தனிப்பட்ட இல்லத்தில் அவரைச் சந்தித்தது.</p>
<p>இந்த விஜயத்தின் போது முன்னாள் ஜனாதிபதிக்கு பரிசுகளை வழங்கிய குழுவினர், அவரது நலம் விசாரித்தனர்.</p>
<p>கொழும்பில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறி தங்காலையில் குடியேறிய பின்னர், முன்னாள் ஜனாதிபதியை சந்திக்க வந்த முதல் சீன வர்த்தகர்கள் குழு இதுவாகும்.</p>
<p>தேயிலை ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ள இந்தக் குழு, வெலிகம மற்றும் நுவரெலியாவுக்குச் செல்லும் வழியில் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/a-group-of-chinese-businessmen-met-with-mahinda/">மகிந்தவை சந்தித்தது சீன வர்த்தகர்கள் குழு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஏழு லட்சம் ரூபாய் நிலுவை!! மகிந்த வசித்த வீட்டிற்கு மின் மற்றும் நீரை துண்டிக்க நடவடிக்கை</title>
		<link>https://oruvan.com/seven-lakh-rupees-outstanding-action-taken-to-cut-off-electricity-and-water-to-the-house-where-mahinda-lived/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Thu, 09 Oct 2025 06:12:54 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[CEB]]></category>
		<category><![CDATA[EB Bill]]></category>
		<category><![CDATA[Mahinda Rajapaksa]]></category>
		<category><![CDATA[Water Bill]]></category>
		<category><![CDATA[Water Board]]></category>
		<category><![CDATA[Wijerama House]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=34837</guid>

					<description><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வசித்து வந்த கொழும்பு &#8211; விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள வீட்டின் மின்சாரம் மற்றும் நீர் விநியோக இணைப்புகள் துண்டிக்கப்படவிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை அதிகாரிகள் நீர் இணைப்பை துண்டிக்க விஜேராம இல்லத்திற்கு சென்றிருந்தனர். அத்துடன், ஒரு லட்சம் ரூபாய் நிலுவைத் தொகை இருந்ததால் மின்சார சபை ஊழியர்களும் மின்சார இணைப்பை துண்டிக்க அங்கு சென்றிருந்தனர். விஜேராம இல்லத்தில் தற்போது பாதுகாப்புப் பணியாளர்கள் மட்டுமே இருப்பதன் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/seven-lakh-rupees-outstanding-action-taken-to-cut-off-electricity-and-water-to-the-house-where-mahinda-lived/">ஏழு லட்சம் ரூபாய் நிலுவை!! மகிந்த வசித்த வீட்டிற்கு மின் மற்றும் நீரை துண்டிக்க நடவடிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வசித்து வந்த கொழும்பு &#8211; விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள வீட்டின் மின்சாரம் மற்றும் நீர் விநியோக இணைப்புகள் துண்டிக்கப்படவிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை அதிகாரிகள் நீர் இணைப்பை துண்டிக்க விஜேராம இல்லத்திற்கு சென்றிருந்தனர்.</p>
<p>அத்துடன், ஒரு லட்சம் ரூபாய் நிலுவைத் தொகை இருந்ததால் மின்சார சபை ஊழியர்களும் மின்சார இணைப்பை துண்டிக்க அங்கு சென்றிருந்தனர்.</p>
<p>விஜேராம இல்லத்தில் தற்போது பாதுகாப்புப் பணியாளர்கள் மட்டுமே இருப்பதன் காரணமாக, அதிகாரிகள் திரும்பி வந்ததாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p>
<p>இந்த விடயம் குறித்து கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று வினவிய போது,</p>
<p>விஜேராம இல்லத்தில் ஆறு லட்சம் ரூபாய் நிலுவைத் தொகை இருப்பதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபையின் தலைவர்சந்தன பண்டார தெரிவித்தார்.</p>
<p>நிலுவைத் தொகை தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கான வழக்கமான நடைமுறையின்படி, விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள வீட்டிற்கு நீர் விநியோகத்தை துண்டிக்க அதிகாரிகள் சென்றதாகவும் அவர் கூறியுள்ளார்.</p>
<p>வீட்டில் நிறுத்தப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரிகள், நீர் கட்டணம் குறித்து பொறுப்பான நபர்களுக்கு தெரிவிக்க நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p>
<p>இதனால், விஜேராம இல்லத்திற்கு நீர் விநியோகத்தை துண்டிக்க நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p>விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள வீடு இன்னும் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்படவில்லை.</p>
<p>அரசாங்க சொத்து ஆய்வாளர்கள் பொருட்களை வரிசைப்படுத்தி மகிந்த ராஜபக்ஷவுக்குச் சொந்தமான பொருட்களை பிரித்த பின்னர, வீடு அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்படும் என்று மகிந்த ராஜபக்ச தரப்பு கூறுகிறது.</p>
<p>இந்த வீட்டில் ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகம் மற்றும் பொது நிர்வாக அமைச்சகத்திற்குச் சொந்தமான பொருட்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.</p>
<p>ஜனாதிபதி செயலக அதிகாரிகள் தற்போது ஜனாதிபதி செயலகத்திற்குச் சொந்தமான பொருட்களைப் பட்டியலிட்டுள்ளதாகவும் மகிந்த தரப்பு தெரிவித்துள்ளது.</p>
<p>மகிந்த ராஜபக்ச இந்த வீட்டை விட்டு வெளியேறியிருந்தாலும், வீடு இன்னும் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்படவில்லை.</p>
<p>எனவே, மின்சாரம் மற்றும் நீர் கட்டணங்களையும் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கும் திகதியில் செலுத்த வேண்டும்.</p>
<p>எனவே, இந்த வீட்டை விரைவில் கையகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மகிந்த தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/seven-lakh-rupees-outstanding-action-taken-to-cut-off-electricity-and-water-to-the-house-where-mahinda-lived/">ஏழு லட்சம் ரூபாய் நிலுவை!! மகிந்த வசித்த வீட்டிற்கு மின் மற்றும் நீரை துண்டிக்க நடவடிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>மகிந்தவை நேரில் சந்தித்து நலன் விசாரித்த முன்னாள் அமைச்சர்</title>
		<link>https://oruvan.com/former-minister-meets-mahinda-in-person-to-inquire-about-his-welfare/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Tue, 07 Oct 2025 08:18:07 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Mahinda Rajapaksa]]></category>
		<category><![CDATA[Wijerama House]]></category>
		<category><![CDATA[மகிந்த ராஜபக்ச]]></category>
		<category><![CDATA[மஹிந்த அமரவீர]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=34636</guid>

					<description><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை, முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீர நேரில் சந்தித்து நலன் விசாரித்துள்ளார். தங்காலையில் அமைந்துள்ள கார்ல்டன் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட மஹிந்த அமரவீர, மகிந்த ராஜபக்ச ஒரு சகாப்தத்தை உருவாக்கிய தலைவர் என்று தெரிவித்துள்ளார். இதேவேளை, முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை நீக்கும் சட்டமூலம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, கொழும்பு விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள வீட்டில் இருந்து மகிந்த ராஜபக்ச வெளியேறினார். கடந்த மாதம் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/former-minister-meets-mahinda-in-person-to-inquire-about-his-welfare/">மகிந்தவை நேரில் சந்தித்து நலன் விசாரித்த முன்னாள் அமைச்சர்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை, முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீர நேரில் சந்தித்து நலன் விசாரித்துள்ளார்.</p>
<p>தங்காலையில் அமைந்துள்ள கார்ல்டன் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.</p>
<p>இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட மஹிந்த அமரவீர, மகிந்த ராஜபக்ச ஒரு சகாப்தத்தை உருவாக்கிய தலைவர் என்று தெரிவித்துள்ளார்.</p>
<p>இதேவேளை, முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை நீக்கும் சட்டமூலம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, கொழும்பு விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள வீட்டில் இருந்து மகிந்த ராஜபக்ச வெளியேறினார்.</p>
<p>கடந்த மாதம் 11ஆம் திகதி கொழும்பில் இருந்து தங்காலைக்குச் சென்ற மகிந்த ராஜபக்சவை அரசியல்வாதிகளும், பொது மக்களும் நேரில் சந்தித்து நலன் விசாரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/former-minister-meets-mahinda-in-person-to-inquire-about-his-welfare/">மகிந்தவை நேரில் சந்தித்து நலன் விசாரித்த முன்னாள் அமைச்சர்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>விஜேராம வீட்டை கையளிக்காத மகிந்த &#8211; நடவடிக்கை எடுக்க தயாராகும் அரசாங்கம்</title>
		<link>https://oruvan.com/former-president-mahinda-rajapaksa-has-not-officcially-handed-over-his-official-residence-at-wijerama-mawatha-as-yet/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Thu, 02 Oct 2025 06:07:11 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Dr. Nalinda Jayatissa]]></category>
		<category><![CDATA[Mahinda Rajapaksa]]></category>
		<category><![CDATA[Wijerama House]]></category>
		<category><![CDATA[மகிந்த ராஜபக்ச]]></category>
		<category><![CDATA[விஜேராம இல்லம்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=34160</guid>

					<description><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கொழும்ப விஜேராம மாவத்தையில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தை இன்னும் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கவில்லை என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இந்நிலையில், குறித்து விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சகத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி விஜேராம இல்லத்தை விட்டு வெளியேறி மூன்று வாரங்கள் கடந்துவிட்டன, எனினும், வீட்டை திகாரப்பூர்வமாக பொது நிர்வாக அமைச்சகத்திடம் ஒப்படைக்கவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளை ரத்து [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/former-president-mahinda-rajapaksa-has-not-officcially-handed-over-his-official-residence-at-wijerama-mawatha-as-yet/">விஜேராம வீட்டை கையளிக்காத மகிந்த &#8211; நடவடிக்கை எடுக்க தயாராகும் அரசாங்கம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கொழும்ப விஜேராம மாவத்தையில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தை இன்னும் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கவில்லை என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.</p>
<p>இந்நிலையில், குறித்து விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சகத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>முன்னாள் ஜனாதிபதி விஜேராம இல்லத்தை விட்டு வெளியேறி மூன்று வாரங்கள் கடந்துவிட்டன, எனினும், வீட்டை திகாரப்பூர்வமாக பொது நிர்வாக அமைச்சகத்திடம் ஒப்படைக்கவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p>
<p>முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளை ரத்து செய்யும் சட்ட மூலம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட நிலையில், மகிந்த ராஜபக்ச கடந்த மாதம் 11ஆம் திகதி விஜேராம இல்லத்தை விட்டு வெளியேறியிருந்தார்.</p>
<p>இதேவேளை, அமைச்சர் வசித்த வீடுகள் மூடப்பட்டு கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகியும், இந்த விடயத்தில் அரசாங்கம் இன்னும் உறுதியான முடிவை எட்டவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.</p>
<p>இதன் காரணமாக, குறித்த வீடுகள் நாளுக்கு நாள் பாழடைந்து வருவதாக வட்டாரங்கள் தெரிவித்தன.</p>
<p>அமைச்சர்கள் வசித்த வீடுகளுக்க மேலதிகமாக, கடந்த காலங்களில் மூடப்பட்ட பல கட்டிடங்கள் குறித்து அமைச்சரவை விரைவில் முடிவெடுக்க உள்ளது.</p>
<p>இந்த கட்டிடங்கள் சிறிது காலம் அரசு அதிகாரிகளால் பயன்படுத்தப்பட்டன.</p>
<p>இது தொடர்பாக, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைச்சர் சந்தன அபேரத்னவிடம் வினவிய போது, ​​அமைச்சர்கள் வசித்த வீடுகள் குறித்து அமைச்சரவை விரைவில் முடிவெடுக்கும் என்று தெரிவித்தார்.</p>
<p>அந்த வீடுகள் உட்பட கட்டிடங்கள் தொடர்பான அனைத்து அறிக்கைகளும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். அமைச்சர்கள் வசித்த வீடுகளிகளில் சில புதுப்பித்தல் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.</p>
<p>இதற்கிடையில், ஐம்பதுக்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் அமைச்சர்கள் வசித்த வீடுகளை வழங்குமாறு கோரியுள்ளதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைச்சகம் கூறுகிறது.</p>
<p>கொழும்பு நகரில் உள்ள அமைச்சர் வீடுகளின் எண்ணிக்கை ஐம்பத்தைந்து ஆகும்.</p>
<p>The post <a href="https://oruvan.com/former-president-mahinda-rajapaksa-has-not-officcially-handed-over-his-official-residence-at-wijerama-mawatha-as-yet/">விஜேராம வீட்டை கையளிக்காத மகிந்த &#8211; நடவடிக்கை எடுக்க தயாராகும் அரசாங்கம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>மகிந்தவிற்கு கொழும்பில் வீடு தேடும் பணியில் விசேட குழு</title>
		<link>https://oruvan.com/special-team-tasked-with-finding-a-house-for-mahinda-in-colombo/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Wed, 17 Sep 2025 06:48:11 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Mahinda Rajapaksa]]></category>
		<category><![CDATA[Wijerama House]]></category>
		<category><![CDATA[மகிந்த ராஜபக்ச]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=32836</guid>

					<description><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு கொழும்பில் மிகவும் பொருத்தமான வீடு ஒன்றை தேடி வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். இதன்படி, சிறப்பு குழு ஒன்று தற்போது பொருத்தமான வீட்டை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மகிந்தவை வெளிநாட்டு தூதர்கள் உள்ளிட்ட சிறப்பு பிரமுகர்கள் சந்திக்க வருவதால், பொருத்தமான சூழலைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். பொருத்தமான சாலை வசதிகள் உள்ள பகுதியில் ஒரு வீட்டைத் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/special-team-tasked-with-finding-a-house-for-mahinda-in-colombo/">மகிந்தவிற்கு கொழும்பில் வீடு தேடும் பணியில் விசேட குழு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு கொழும்பில் மிகவும் பொருத்தமான வீடு ஒன்றை தேடி வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.</p>
<p>இதன்படி, சிறப்பு குழு ஒன்று தற்போது பொருத்தமான வீட்டை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது.</p>
<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்தவை வெளிநாட்டு தூதர்கள் உள்ளிட்ட சிறப்பு பிரமுகர்கள் சந்திக்க வருவதால், பொருத்தமான சூழலைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.</p>
<p>பொருத்தமான சாலை வசதிகள் உள்ள பகுதியில் ஒரு வீட்டைத் தேர்ந்தெடுப்பதே எதிர்பார்ப்பு என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>இந்நிலையில், மிக விரைவில் பொருத்தமான வீடு தெரிவுசெய்யப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>இதனிடையே, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்தில் சந்தித்து, அவரது உடல்நிலை குறித்து விசாரித்துள்ளார்.</p>
<p>இந்த சந்திப்பு நேற்று இடம்பெற்றிருந்தது. விடுதலைப் புலிகளை தோற்கடித்த மகிந்த ராஜபக்ச தற்போதை ஆட்சியாளர்களின் முடிவின்படி, கொழும்பில் இருந்து தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்திற்கு சென்றுளளார்.</p>
<p>உயிர் அச்சுறுத்தல் உள்ள போதிலும் அவர் தங்காலைக்கு சென்றுள்ளார்.</p>
<p>அரசியல் வேறுபாடுகள் இருந்தபோதிலும், பயங்கரவாதத்தை தோற்கடிக்க அவர் வழங்கிய அரசியல் தலைமைக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம்.</p>
<p>இந்நிலையில், தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்திற்குச் சென்று மகிந்த ராஜபக்சவை சந்தித்து நலம் விசாரித்ததாக விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.</p>
<p>இதேவேளை, தான் தங்காலை வீட்டில் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தனது பேஸ்புக் பக்கத்தில் விடுத்துள்ள பதிவொன்றின் மூவம் அவர் இதனை தெரிவித்துள்ளார்.</p>
<p>தான் ஆட்சியில் இருந்த போதிலும், ஆட்சியில் இல்லாத போதிலும் மக்களுன் என்னுடன் இருக்கின்றனர். சிறு குழந்தைகளின் உரையாடல் என்னை மகிழ்ச்சியடையச் செய்கிறது.</p>
<p>இந்த உரையாடல் மிகவும் சுவாரஸ்யமானது. நான் அதனை ரசித்து கேட்கின்றேன்.</p>
<p>இந்நிலையில், எனது நலனை விசாரிக்க வந்த அன்பான மக்கள், அரசியல் சகாக்கள் மற்றும் பல்வேறு நிபுணர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>முன்னான் ஜனாதிபதிகளின் சலுகைகளை ரத்து செய்யும் சட்டமூலம் அண்மையில் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டிருந்தது.</p>
<p>இதனையடுத்து அரச வீடுகளில் தங்கியிருந்த முன்னாள் ஜனாதிபதிகள் வீடுகளை மீளவும் அரசாங்கத்திடம் கையளிக்க நேர்ந்தது.</p>
<p>இதன்படி, கொழும்பு விஜேராம மாவத்தையில் அரச வீட்டில் தங்கியிருந்த மகிந்த ராஜபக்ச, கடந்த 11ஆம் திகதி அங்கிருந்து வெளியேறி தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்தில் குடியேறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/special-team-tasked-with-finding-a-house-for-mahinda-in-colombo/">மகிந்தவிற்கு கொழும்பில் வீடு தேடும் பணியில் விசேட குழு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>மகிந்த மீதான அளவு கடந்த அன்பு &#8211; தங்காலைக்கு ஆறு மணி நேரம் பைகில் பயணித்த தம்பதியினர்</title>
		<link>https://oruvan.com/unrequited-love-for-mahinda-the-couple-who-cycled-six-hours-to-tangalle/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Sun, 14 Sep 2025 08:08:48 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Mahinda Rajapaksa]]></category>
		<category><![CDATA[Wijerama House]]></category>
		<category><![CDATA[மகிந்த ராஜபக்ச]]></category>
		<category><![CDATA[விஜேராம இல்லம்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=32587</guid>

					<description><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்திக்க குருநாகல், கல்கமுவவிலிருந்து தங்காலைக்கு மோட்டார் சைக்கிள் மூலம் பயணித்த ஒரு தம்பதியினர் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த தம்பதியினர் சுமார் ஆறு மணித்தியாலங்கள் உந்துருளியில் பயணம் செய்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சந்திக்க சென்றுள்ளனர். முன்னாள் ஜனாதிபதியைச் சந்தித்து பின்னர் சிநேகபூர்வமான உரையாடலில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது . மகிந்த ராஜபக்சவின் மீதான அன்பின் காரணமாக இந்தப் பயணத்தை மேற்கொள்ள முடிவு செய்ததாகக் குறித்த தம்பதியினர் தெரிவித்துள்ளனர். அண்மையில் முன்னாள் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/unrequited-love-for-mahinda-the-couple-who-cycled-six-hours-to-tangalle/">மகிந்த மீதான அளவு கடந்த அன்பு &#8211; தங்காலைக்கு ஆறு மணி நேரம் பைகில் பயணித்த தம்பதியினர்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்திக்க குருநாகல், கல்கமுவவிலிருந்து தங்காலைக்கு மோட்டார் சைக்கிள் மூலம் பயணித்த ஒரு தம்பதியினர் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.</p>
<p>குறித்த தம்பதியினர் சுமார் ஆறு மணித்தியாலங்கள் உந்துருளியில் பயணம் செய்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சந்திக்க சென்றுள்ளனர்.</p>
<p>முன்னாள் ஜனாதிபதியைச் சந்தித்து பின்னர் சிநேகபூர்வமான உரையாடலில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது .</p>
<p>மகிந்த ராஜபக்சவின் மீதான அன்பின் காரணமாக இந்தப் பயணத்தை மேற்கொள்ள முடிவு செய்ததாகக் குறித்த தம்பதியினர் தெரிவித்துள்ளனர்.</p>
<p>அண்மையில் முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை ரத்து செய்யும் நோக்கில் அரசாங்கம் கொண்டுவந்த சட்டத்தை தொடர்ந்து அரச வீடுகளில் தங்கியிருந்த முன்னாள் ஜனாதிபதிகள் வெளியேறியிருந்தனர்.</p>
<p>இதன்படி, கொழும்பில் விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள இல்லத்தில் தங்கியிருந்த மகிந்த ராஜபக்ச கடந்த 11ஆம் திகதி தனது சொந்த ஊரான தங்காலைக்கு சென்றார்.</p>
<p>இந்நிலையில், தங்காலை வீட்டில் தங்கியிருக்கும் மகிந்த ராஜபக்சவை பொது மக்கள் உள்ளிட்டவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு தமது அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.</p>
<p>இந்நிலையிலேயே, கல்கமுவவிலிருந்து தங்காலைக்கு மோட்டார் சைக்கிள் மூலம் பயணித்த ஒரு தம்பதியினர், மகிந்த ராஜபக்சவை நேரில் சந்தித்து தமது அன்பை வெளிப்படுத்தியிருந்ததுடன், ஆசியும் பெற்றுக்கொண்னர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/unrequited-love-for-mahinda-the-couple-who-cycled-six-hours-to-tangalle/">மகிந்த மீதான அளவு கடந்த அன்பு &#8211; தங்காலைக்கு ஆறு மணி நேரம் பைகில் பயணித்த தம்பதியினர்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>அரச அலுவலகமாக மாறும் மகிந்தவின் உத்தியோகபூர்வ இல்லம்</title>
		<link>https://oruvan.com/mahindas-official-residence-to-become-government-office/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Sun, 14 Sep 2025 06:23:42 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[ananda wijepala]]></category>
		<category><![CDATA[Mahinda Rajapaksa]]></category>
		<category><![CDATA[Wijerama House]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=32575</guid>

					<description><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதிகளிடமிருந்து மீண்டும் கையகப்படுத்தப்பட்ட அதிகாரப்பூர்வ குடியிருப்புகளை அரசு அலுவலகங்களாகவோ அல்லது வருவாய் ஈட்டும் நோக்கங்களுக்காகவோ பயன்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இந்தக் கட்டிடங்கள் எவ்வாறு பொருளாதார ரீதியாகப் பயன்படுத்தப்படும் என்பது குறித்த இறுதி முடிவை நிதி அமைச்சகம் எடுக்கும். அரசாங்க நிதியில் பராமரிக்கப்படும் இந்த சொத்தை பொதுமக்களுக்கு நேரடியாக பயனளிக்கும் முதலீடுகளுக்குப் பயன்படுத்துவது அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாகும் என்று பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். முன்னர் ஒரு குடும்பத்திற்கு மட்டுமே சொந்தமானதாக இருந்த [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/mahindas-official-residence-to-become-government-office/">அரச அலுவலகமாக மாறும் மகிந்தவின் உத்தியோகபூர்வ இல்லம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதிகளிடமிருந்து மீண்டும் கையகப்படுத்தப்பட்ட அதிகாரப்பூர்வ குடியிருப்புகளை அரசு அலுவலகங்களாகவோ அல்லது வருவாய் ஈட்டும் நோக்கங்களுக்காகவோ பயன்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.</p>
<p>இந்தக் கட்டிடங்கள் எவ்வாறு பொருளாதார ரீதியாகப் பயன்படுத்தப்படும் என்பது குறித்த இறுதி முடிவை நிதி அமைச்சகம் எடுக்கும்.</p>
<p>அரசாங்க நிதியில் பராமரிக்கப்படும் இந்த சொத்தை பொதுமக்களுக்கு நேரடியாக பயனளிக்கும் முதலீடுகளுக்குப் பயன்படுத்துவது அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாகும் என்று பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.</p>
<p>முன்னர் ஒரு குடும்பத்திற்கு மட்டுமே சொந்தமானதாக இருந்த இந்த மதிப்புமிக்க வீடுகள், முழு மக்களுக்கும் பயனளிக்கும் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுவது மக்களுக்குக் கிடைத்த வெற்றி என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/mahindas-official-residence-to-become-government-office/">அரச அலுவலகமாக மாறும் மகிந்தவின் உத்தியோகபூர்வ இல்லம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>எங்கே ஆரம்பித்தாரோ அங்கேயே என் தந்தை திரும்பிவிட்டார் &#8211; நாமல் எம்.பி உருக்கம்</title>
		<link>https://oruvan.com/my-father-has-returned-to-where-he-started-namal-mp-urukkam/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Thu, 11 Sep 2025 11:22:44 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Back to Tangalle]]></category>
		<category><![CDATA[Mahinda Rajapaksa]]></category>
		<category><![CDATA[Namal Rajapaksa]]></category>
		<category><![CDATA[Wijerama House]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=32323</guid>

					<description><![CDATA[<p>தனது தந்தை மகிந்த ராஜபக்ச ஆரம்பித்த இடத்திற்கே மீளவும் திரும்பியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பு விஜேராம இல்லத்தில் இருந்து மகிந்த ராஜபக்ச வெளியேறியதாக தெரிவித்துள்ள நாமல் எம்.பி, தனது சொந்த ஊரான தங்காலைக்குத் திரும்பியுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகள் ரத்து செய்யப்படும் சட்டமூலம் நாடாளுமன்றில் நேற்று நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து கொழும்பு விஜேராம இல்லத்தில் இருந்து மகிந்த ராஜபக்ச இன்று வெளியேறியிருந்தார். இது குறித்து நாமல் ராஜபக்ச எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/my-father-has-returned-to-where-he-started-namal-mp-urukkam/">எங்கே ஆரம்பித்தாரோ அங்கேயே என் தந்தை திரும்பிவிட்டார் &#8211; நாமல் எம்.பி உருக்கம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>தனது தந்தை மகிந்த ராஜபக்ச ஆரம்பித்த இடத்திற்கே மீளவும் திரும்பியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.</p>
<p>கொழும்பு விஜேராம இல்லத்தில் இருந்து மகிந்த ராஜபக்ச வெளியேறியதாக தெரிவித்துள்ள நாமல் எம்.பி, தனது சொந்த ஊரான தங்காலைக்குத் திரும்பியுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.</p>
<p>முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகள் ரத்து செய்யப்படும் சட்டமூலம் நாடாளுமன்றில் நேற்று நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து கொழும்பு விஜேராம இல்லத்தில் இருந்து மகிந்த ராஜபக்ச இன்று வெளியேறியிருந்தார்.</p>
<p>இது குறித்து நாமல் ராஜபக்ச எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள பதிவில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.</p>
<p>&#8220;இன்று, என் தந்தை கொழும்பில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறி தங்காலைக்குத் திரும்புகிறார், இது அனைத்தும் தொடங்கிய இடம்.</p>
<p>உண்மையான பலம் நமது வேர்களிலிருந்து வருகிறது, பதவிகள் அல்லது சலுகைகளிலிருந்து அல்ல என்பதை நினைவூட்டுகிறது.&#8221; என நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/my-father-has-returned-to-where-he-started-namal-mp-urukkam/">எங்கே ஆரம்பித்தாரோ அங்கேயே என் தந்தை திரும்பிவிட்டார் &#8211; நாமல் எம்.பி உருக்கம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
