<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Wickremesinghe Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/wickremesinghe/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/wickremesinghe/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Wed, 10 Sep 2025 12:57:50 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>Wickremesinghe Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/wickremesinghe/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>நேபாளத்தில் இடம்பெறும் வன்முறை சம்பவங்கள் குறித்து ரணில் விக்ரமசிங்க கண்டனம்</title>
		<link>https://oruvan.com/ranil-wickremesinghe-condemns-the-violent-incidents-taking-place-in-nepal/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Wed, 10 Sep 2025 12:57:50 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[Nepal]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Ranil]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<category><![CDATA[Wickremesinghe]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=32256</guid>

					<description><![CDATA[<p>நேபாளத்தில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட அனைத்து வன்முறை சம்பவங்களையும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வன்மையாகக் கண்டித்துள்ளார். நேபாளத்தில் நிலவும் பதற்றமான சூழ்நிலை குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, முன்னாள் பிரதமரின் இல்லத்திற்குத் தீவைக்கப்பட்டமை, மற்றும் முன்னாள் பிரதமரின் மனைவி உயிரிழந்த சம்பவமும் மிகுந்த வருத்தத்திற்குரியது என ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். அத்துடன் வெளிவிவகார அமைச்சர் மீதான தாக்குதலும் துயரத்திற்குரிய சம்பவமாகும் என தெரிவித்துள்ளார். மேலும் நாடாளுமன்றம் மற்றும் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/ranil-wickremesinghe-condemns-the-violent-incidents-taking-place-in-nepal/">நேபாளத்தில் இடம்பெறும் வன்முறை சம்பவங்கள் குறித்து ரணில் விக்ரமசிங்க கண்டனம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>நேபாளத்தில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட அனைத்து வன்முறை சம்பவங்களையும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வன்மையாகக் கண்டித்துள்ளார்.</p>
<p>நேபாளத்தில் நிலவும் பதற்றமான சூழ்நிலை குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>அதேபோன்று, முன்னாள் பிரதமரின் இல்லத்திற்குத் தீவைக்கப்பட்டமை, மற்றும் முன்னாள் பிரதமரின் மனைவி உயிரிழந்த சம்பவமும் மிகுந்த வருத்தத்திற்குரியது என ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>அத்துடன் வெளிவிவகார அமைச்சர் மீதான தாக்குதலும் துயரத்திற்குரிய சம்பவமாகும் என தெரிவித்துள்ளார்.</p>
<p>மேலும் நாடாளுமன்றம் மற்றும் நீதித்துறை எரிக்கப்பட்டது நேபாளத்தின் ஜனநாயகத்திற்கு பெரும் அவமரியாதை என்றும் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>அத்துடன் புத்தர் பிறந்த நேபாளம் இலங்கைக்கு ஒரு தனித்துவமான நாடு என்றும், அத்தகைய நாட்டில் இதுபோன்ற செயல்கள் இடம்பெறுவதைப் பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் ரணில் விக்ரமசிங்க வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/ranil-wickremesinghe-condemns-the-violent-incidents-taking-place-in-nepal/">நேபாளத்தில் இடம்பெறும் வன்முறை சம்பவங்கள் குறித்து ரணில் விக்ரமசிங்க கண்டனம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ரணில் விக்ரமசிங்கவின் விசேட உரை</title>
		<link>https://oruvan.com/special-speech-by-ranil-wickremesinghe/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sat, 30 Aug 2025 11:13:00 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Ranil]]></category>
		<category><![CDATA[Special]]></category>
		<category><![CDATA[speech]]></category>
		<category><![CDATA[Wickremesinghe]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=31138</guid>

					<description><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 06 ஆம் திகதி விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கட்சியின் மாநாடு எதிர்வரும் 06 ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன், அன்றைய தினம் முன்னாள் ஜனாதிபதி இந்த விசேட உரையினை நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பொது சொத்துக்கள் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, 26 ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டார். முன்னாள் ஜனாதிபதி தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ அறிக்கைகளை பரிசீலித்த பின்னர், கோட்டை நீதவான் நிலுபுலி [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/special-speech-by-ranil-wickremesinghe/">ரணில் விக்ரமசிங்கவின் விசேட உரை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 06 ஆம் திகதி விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>கட்சியின் மாநாடு எதிர்வரும் 06 ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன், அன்றைய தினம் முன்னாள் ஜனாதிபதி இந்த விசேட உரையினை நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>
<p>பொது சொத்துக்கள் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, 26 ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டார்.</p>
<p>முன்னாள் ஜனாதிபதி தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ அறிக்கைகளை பரிசீலித்த பின்னர், கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர இந்த உத்தரவை பிறப்பித்தார்.</p>
<p>அதன்படி, குற்றப் புலனாய்வு திணைக்களம் மற்றும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த உண்மைகளை பரிசீலித்த பின்னர், முன்னாள் ஜனாதிபதியை தலா 05 மில்லியன் ரூபா பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளில் விடுவிக்க நீதவான் உத்தரவிட்டிருந்தார்.</p>
<p>அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய சம்பவம் தொடர்பாக பொது சொத்துக்கள் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த 22 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.</p>
<p>அதே நாளில் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டது.</p>
<p>அவரது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, அவர் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், மறுநாள், மருத்துவ பரிந்துரைகளின் பேரில் முன்னாள் ஜனாதிபதியை கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.</p>
<p>பின்னர், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (29) வைத்தியசாலையிலிருந்து வெளியேறினார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/special-speech-by-ranil-wickremesinghe/">ரணில் விக்ரமசிங்கவின் விசேட உரை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>வைத்தியசாலையிலிருந்து வௌியேறிய ரணில் விக்ரமசிங்க</title>
		<link>https://oruvan.com/ranil-wickremesinghe-discharged-from-hospital/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Fri, 29 Aug 2025 09:57:21 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[discharged]]></category>
		<category><![CDATA[hospital]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Ranil]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<category><![CDATA[Wickremesinghe]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=31050</guid>

					<description><![CDATA[<p>கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வைத்தியசாலையிலிருந்து வௌியேறியுள்ளார். அவர் இன்று வெள்ளிக்கிழமை (29) காலை சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டிருந்தார். ரணில் விக்ரமசிங்க கடந்த 23 ஆம் திகதி முதல் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சிகிச்சை பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/ranil-wickremesinghe-discharged-from-hospital/">வைத்தியசாலையிலிருந்து வௌியேறிய ரணில் விக்ரமசிங்க</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வைத்தியசாலையிலிருந்து வௌியேறியுள்ளார்.</p>
<p>அவர் இன்று வெள்ளிக்கிழமை (29) காலை சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டிருந்தார்.</p>
<p>ரணில் விக்ரமசிங்க கடந்த 23 ஆம் திகதி முதல் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சிகிச்சை பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/ranil-wickremesinghe-discharged-from-hospital/">வைத்தியசாலையிலிருந்து வௌியேறிய ரணில் விக்ரமசிங்க</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ரணில் விக்ரமசிங்க அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றம்</title>
		<link>https://oruvan.com/ranil-wickremesinghe-transferred-to-intensive-care-unit/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sat, 23 Aug 2025 12:02:42 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[intensive]]></category>
		<category><![CDATA[Ranil]]></category>
		<category><![CDATA[Transferred]]></category>
		<category><![CDATA[Wickremesinghe]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=30459</guid>

					<description><![CDATA[<p>கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை அளவு மற்றும் மிகுந்த சோர்வு காரணமாக ரணில் விக்ரமசிங்க அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலை வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டிருந்த  ரணில் விக்ரமசிங்க கொழும்பு தேசியவைத்தியசாலையில்  இன்று பிற்பகல் அனுமதிக்கப்பட்டார். அவரது நோய் நிலையை பரிசோதித்த சிறைச்சாலை வைத்தியர்கள் கொழும்பு  தேசிய வைத்தியசாலைக்கு மாற்றுமாறு பரிந்துரைத்தனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/ranil-wickremesinghe-transferred-to-intensive-care-unit/">ரணில் விக்ரமசிங்க அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p>
<p>உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை அளவு மற்றும் மிகுந்த சோர்வு காரணமாக ரணில் விக்ரமசிங்க அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<div>சிறைச்சாலை வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டிருந்த  ரணில் விக்ரமசிங்க கொழும்பு தேசியவைத்தியசாலையில்  இன்று பிற்பகல் அனுமதிக்கப்பட்டார்.</div>
<p>அவரது நோய் நிலையை பரிசோதித்த சிறைச்சாலை வைத்தியர்கள் கொழும்பு  தேசிய வைத்தியசாலைக்கு மாற்றுமாறு பரிந்துரைத்தனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/ranil-wickremesinghe-transferred-to-intensive-care-unit/">ரணில் விக்ரமசிங்க அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ரணில் விக்ரமசிங்க கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றம்</title>
		<link>https://oruvan.com/recommendation-to-transfer-ranil-wickremesinghe-to-colombo-national-hospital/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sat, 23 Aug 2025 10:12:24 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[Colombo]]></category>
		<category><![CDATA[hospital]]></category>
		<category><![CDATA[national]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Ranil]]></category>
		<category><![CDATA[Recommendation]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<category><![CDATA[Wickremesinghe]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=30446</guid>

					<description><![CDATA[<p>சிறைச்சாலை வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொழும்பு தேசியவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நோய் நிலையை பரிசோதித்த சிறைச்சாலை வைத்தியர்கள் கொழும்பு  தேசிய வைத்தியசாலைக்கு மாற்றுமாறு பரிந்துரைத்துள்ளனர். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்க நேற்று வெள்ளிக்கிழமை (22) இரவு சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக சர்க்கரை அளவு காரணமாக முன்னாள் ஜனாதிபதியை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/recommendation-to-transfer-ranil-wickremesinghe-to-colombo-national-hospital/">ரணில் விக்ரமசிங்க கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<div>சிறைச்சாலை வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொழும்பு தேசியவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</div>
<p>அவரது நோய் நிலையை பரிசோதித்த சிறைச்சாலை வைத்தியர்கள் கொழும்பு  தேசிய வைத்தியசாலைக்கு மாற்றுமாறு பரிந்துரைத்துள்ளனர்.</p>
<p>குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்க நேற்று வெள்ளிக்கிழமை (22) இரவு சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.</p>
<p>உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக சர்க்கரை அளவு காரணமாக முன்னாள் ஜனாதிபதியை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு வைத்தியர்கள் பரிந்துரைத்தனர்.</p>
<p>மேலும் முன்னாள் ஜனாதிபதியின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வரும் சிறைச்சாலை வைத்தியர்களும் அவருக்கு வீட்டு உணவை வழங்குமாறு பரிந்துரைத்திருந்தனர். இதற்மைய, சிறைச்சாலை தலைமையகத்தின் அனுமதியும் கிடைத்தது.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/recommendation-to-transfer-ranil-wickremesinghe-to-colombo-national-hospital/">ரணில் விக்ரமசிங்க கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>கைது செய்யப்படுவதற்கு முன்னர் ரணில் விக்ரமசிங்க வெளியிட்ட கருத்து</title>
		<link>https://oruvan.com/statement-made-by-ranil-wickremesinghe-before-his-arrest/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sat, 23 Aug 2025 08:45:24 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[arrest]]></category>
		<category><![CDATA[made]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Ranil]]></category>
		<category><![CDATA[statement]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<category><![CDATA[Wickremesinghe]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=30415</guid>

					<description><![CDATA[<p>தான் நாட்டிற்காக மட்டுமே செயற்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்படுவதற்கு முன்னர் இவ்வாறு கூறியுள்ளார். கொழும்பில் இன்று சனிக்கிழமை (23) நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் அகில விராஜ் காரியவசம், ரணில் விக்ரமசிங்கமவின் இந்த குரல் பதிவை ஊடகங்களுக்கு வௌியிட்டார். அந்த குரல் பதிவில் ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருப்பதாவது, “தான் தனிப்பட்ட காரணங்களுக்காக அல்ல, நாட்டிற்காக மட்டுமே [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/statement-made-by-ranil-wickremesinghe-before-his-arrest/">கைது செய்யப்படுவதற்கு முன்னர் ரணில் விக்ரமசிங்க வெளியிட்ட கருத்து</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>தான் நாட்டிற்காக மட்டுமே செயற்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.</p>
<p>குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்படுவதற்கு முன்னர் இவ்வாறு கூறியுள்ளார்.</p>
<p>கொழும்பில் இன்று சனிக்கிழமை (23) நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர்<br />
அகில விராஜ் காரியவசம், ரணில் விக்ரமசிங்கமவின் இந்த குரல் பதிவை ஊடகங்களுக்கு வௌியிட்டார்.</p>
<p>அந்த குரல் பதிவில் ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருப்பதாவது,</p>
<p>“தான் தனிப்பட்ட காரணங்களுக்காக அல்ல, நாட்டிற்காக மட்டுமே செயற்பட்டேன்</p>
<p>நான் எப்போதும் நாட்டிற்காகவே உழைத்திருக்கிறேன். நான் தனிப்பட்ட காரணங்களுக்காக உழைத்ததில்லை. இந்த ஆட்சியின் உண்மை முகம் இப்போது வெளிவருகிறது.</p>
<p>எல்லா இடங்களிலும் நடைபெறும் இதுபோன்ற அரசியல் நடவடிக்கைகளை நான் ஏற்றுக்கொள்வதில்லை.&#8221; என ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/statement-made-by-ranil-wickremesinghe-before-his-arrest/">கைது செய்யப்படுவதற்கு முன்னர் ரணில் விக்ரமசிங்க வெளியிட்ட கருத்து</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ரணில் விக்ரமசிங்கவை பார்வையிட சிறைச்சாலைக்கு சென்ற சஜித்</title>
		<link>https://oruvan.com/sajith-visits-ranil-wickremesinghe-in-prison/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sat, 23 Aug 2025 05:18:24 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[prison]]></category>
		<category><![CDATA[Ranil]]></category>
		<category><![CDATA[Sajith]]></category>
		<category><![CDATA[visits]]></category>
		<category><![CDATA[Wickremesinghe]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=30389</guid>

					<description><![CDATA[<p>சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பார்வையிடுவதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சென்றுள்ளார். சஜித் பிரேமதாச மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஆகியோர் இன்று (23) காலை 9.30 அளவில், வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றுள்ளனர். குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட ரணில் விக்ரமசிங்கவை 26 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று (22) உத்தரவிட்டது. விளக்கமறியலில் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/sajith-visits-ranil-wickremesinghe-in-prison/">ரணில் விக்ரமசிங்கவை பார்வையிட சிறைச்சாலைக்கு சென்ற சஜித்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பார்வையிடுவதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சென்றுள்ளார்.</p>
<p>சஜித் பிரேமதாச மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஆகியோர் இன்று (23) காலை 9.30 அளவில், வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றுள்ளனர்.</p>
<p>குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட ரணில் விக்ரமசிங்கவை 26 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று (22) உத்தரவிட்டது.</p>
<p>விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மருத்துவ ஆலோசனைக்கமைய சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.</p>
<p>உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக சர்க்கரை அளவு காரணமாக ரணில் விக்ரமசிங்க சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p>
<p>இலங்கை வரலாற்றில் நிறைவேற்று ஜனாதிபதி ஒருவர் கைது செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.</p>
<p>முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமது பதவிக் காலத்தில் மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக அரசாங்க நிதியைப் பயன்படுத்தி லண்டனுக்குச் சென்றமை தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்திருந்தது.</p>
<p>மேலும் ஜூன் மாதம் 24 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இது தொடர்பான ஆவணங்களை கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தது.</p>
<p>அதனைத் தொடர்ந்து, விசாரணை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட செயலாளராகப் பணியாற்றிய செண்ட்ரா பெரேரா மற்றும் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏகநாயக்க ஆகியோரிடமிருந்து குற்றப் புலனாய்வு பிரிவு வாக்குமூலங்களைப் பதிவு செய்தது.</p>
<p>மேலும் வாக்குமூலங்களைப் பெறுவதற்காக ரணில் விக்ரமசிங்க நேற்று காலை (22.08) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில் அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டார்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/sajith-visits-ranil-wickremesinghe-in-prison/">ரணில் விக்ரமசிங்கவை பார்வையிட சிறைச்சாலைக்கு சென்ற சஜித்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>CID யில் இருந்து ரணில் விக்ரமசிங்க வௌியேறினார்</title>
		<link>https://oruvan.com/ranil-wickremesinghe-resigns-from-cid/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Wed, 11 Jun 2025 11:24:42 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[CID]]></category>
		<category><![CDATA[Ranil]]></category>
		<category><![CDATA[resigns]]></category>
		<category><![CDATA[Wickremesinghe]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=23146</guid>

					<description><![CDATA[<p>ஒரு மணிநேர வாக்குமூலத்திற்கு பின்னர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து வௌியேறினார். சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தாக்கல் செய்த முறைப்பாடு தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் இன்று புதன்கிழமை (11) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானார். நாட்டிற்குள் மருந்துகளை இறக்குமதி செய்வது தொடர்பாக கெஹெலிய ரம்புக்வெல்ல அளித்திருந்த முறைப்பாட்டுக்கமைய, முந்தைய அரசாங்கத்தின் பல அமைச்சர்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இது தொடர்பாக வாக்குமூலம் அளித்துள்ளனர். &#160;</p>
<p>The post <a href="https://oruvan.com/ranil-wickremesinghe-resigns-from-cid/">CID யில் இருந்து ரணில் விக்ரமசிங்க வௌியேறினார்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஒரு மணிநேர வாக்குமூலத்திற்கு பின்னர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து வௌியேறினார்.</p>
<p>சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தாக்கல் செய்த முறைப்பாடு தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் இன்று புதன்கிழமை (11) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானார்.</p>
<p>நாட்டிற்குள் மருந்துகளை இறக்குமதி செய்வது தொடர்பாக கெஹெலிய ரம்புக்வெல்ல அளித்திருந்த முறைப்பாட்டுக்கமைய, முந்தைய அரசாங்கத்தின் பல அமைச்சர்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இது தொடர்பாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/ranil-wickremesinghe-resigns-from-cid/">CID யில் இருந்து ரணில் விக்ரமசிங்க வௌியேறினார்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிலிருந்து ரணில் விக்ரமசிங்க வெளியேறினார்</title>
		<link>https://oruvan.com/ranil-wickremesinghe-resigns-from-the-anti-corruption-commission/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Mon, 28 Apr 2025 07:23:32 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Anti-Corruption]]></category>
		<category><![CDATA[Commission]]></category>
		<category><![CDATA[Ranil]]></category>
		<category><![CDATA[Wickremesinghe]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=18727</guid>

					<description><![CDATA[<p>சுமார் 03 மணி நேரம் வாக்குமூலம் பதிவு செய்த பின்னர் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிலிருந்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வெளியேறியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கைது செய்யப்பட்டமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று காலை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தார். முன்னதாக இரண்டு முறை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குமுன்னிலையாகுமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும் புத்தாண்டு விடுமுறை மற்றும் அவரது சட்டத்தரணி வெளிநாட்டில் இருந்தமையை காரணம் காட்டி அவர் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/ranil-wickremesinghe-resigns-from-the-anti-corruption-commission/">இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிலிருந்து ரணில் விக்ரமசிங்க வெளியேறினார்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>சுமார் 03 மணி நேரம் வாக்குமூலம் பதிவு செய்த பின்னர் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிலிருந்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வெளியேறியுள்ளார்.</p>
<p>நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கைது செய்யப்பட்டமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று காலை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தார்.</p>
<p>முன்னதாக இரண்டு முறை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குமுன்னிலையாகுமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும்<br />
புத்தாண்டு விடுமுறை மற்றும் அவரது சட்டத்தரணி வெளிநாட்டில் இருந்தமையை காரணம் காட்டி அவர் முன்னிலையாகவில்லை.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/ranil-wickremesinghe-resigns-from-the-anti-corruption-commission/">இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிலிருந்து ரணில் விக்ரமசிங்க வெளியேறினார்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>லசந்த விக்கிரமதுங்க படுகொலை 16 வருடங்கள் பூர்த்தி</title>
		<link>https://oruvan.com/16-years-have-passed-since-the-assassination-of-lasantha-wickremesinghe/</link>
		
		<dc:creator><![CDATA[Kanooshiya Pushpakumar]]></dc:creator>
		<pubDate>Wed, 08 Jan 2025 09:37:26 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[16 years]]></category>
		<category><![CDATA[have]]></category>
		<category><![CDATA[of Lasantha]]></category>
		<category><![CDATA[passed]]></category>
		<category><![CDATA[since]]></category>
		<category><![CDATA[the assassination]]></category>
		<category><![CDATA[Wickremesinghe]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=6003</guid>

					<description><![CDATA[<p>மக்களுக்காக ஊடகவியலில் ஈடுபட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 16 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளன. சண்டே லீடர் பத்திரிகையின் ஆசியிரயராக லசந்த விக்ரமதுங்க பல ஊழல் மோசடி சம்பவங்களை மக்கள் முன் வெளிப்படுத்தினார். அவர் தனது வாழ்க்கையை இரண்டாவதாகவே கருதினார். யாராலும் நெருங்கக்கூட முடியாத பல விடயங்களை ஆராய்ந்து மக்களுக்கு வெளிப்படுத்திய இந்த புலனாய்வில் சிறந்த ஊடகவியலாளர் இல்லையேல் இன்று வரையில் பல தகவல்கள் யாரும் அறியாமலேயே போயிருக்கும். இவ்வாறான விடயங்களினாலேயே அவருடைய வாழ்க்கைக்கும், [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/16-years-have-passed-since-the-assassination-of-lasantha-wickremesinghe/">லசந்த விக்கிரமதுங்க படுகொலை 16 வருடங்கள் பூர்த்தி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>மக்களுக்காக ஊடகவியலில் ஈடுபட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 16 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளன.</p>
<p>சண்டே லீடர் பத்திரிகையின் ஆசியிரயராக லசந்த விக்ரமதுங்க பல ஊழல் மோசடி சம்பவங்களை மக்கள் முன் வெளிப்படுத்தினார்.</p>
<p>அவர் தனது வாழ்க்கையை இரண்டாவதாகவே கருதினார்.</p>
<p>யாராலும் நெருங்கக்கூட முடியாத பல விடயங்களை ஆராய்ந்து மக்களுக்கு வெளிப்படுத்திய இந்த புலனாய்வில் சிறந்த ஊடகவியலாளர் இல்லையேல் இன்று வரையில் பல தகவல்கள் யாரும் அறியாமலேயே போயிருக்கும்.</p>
<p>இவ்வாறான விடயங்களினாலேயே அவருடைய வாழ்க்கைக்கும், உயிருக்கும் பல சந்தர்ப்பங்களில் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளன.</p>
<p>இறுதியாக 2009ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி காலை 10.25க்கு லசந்த விக்கிரமதுங்கவின் உயிர் பறிக்கப்பட்டது.</p>
<p>வழமை போன்று பணிக்கு சென்று கொண்டிருந்த லசந்த விக்கிரமதுங்க அத்திடிய வீதியில் கொல்லப்பட்டார்.</p>
<p>இந்த சிரேஷ்ட ஊடகவியலாளரை கொலை செய்தவர்கள் சுதந்திரமாக சுற்றித் திரியும் வேளையில், அவருடைய மரணத்தால் கடந்த காலங்களில் ஆட்சி மாற்றங்கள் கூட ஏற்பட்டன.</p>
<p>ஆட்சிக்கு வந்தவர்கள் அவருடைய கொலை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்தனர்.</p>
<p>அதன்படி, 2016ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 27ஆம் திகதி லசந்தவின் உடல் மீண்டும் மீட்கப்பட்டதுடன், சில சந்தேகநபர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்ட போதும் விசாரணைகள் தொக்கி நின்றன.</p>
<p>இன்று வரையில் அவருக்கான நீதி நிலைநாட்டப்படவில்லை.</p>
<p>பல சர்வதேச விருதுகளை பெற்றுள்ள லசந்தவுக்கு, ஐ.பி.ஐ. உலக பத்திரிகை சுதந்திர நாயகன் விருது வழங்கி கௌரவித்தது.</p>
<p>The post <a href="https://oruvan.com/16-years-have-passed-since-the-assassination-of-lasantha-wickremesinghe/">லசந்த விக்கிரமதுங்க படுகொலை 16 வருடங்கள் பூர்த்தி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
