<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>who Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/who/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/who/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Fri, 16 Jan 2026 03:25:49 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>who Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/who/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>இலங்கையில் மதுபானத்தால் தினசரி 50 மரணங்கள்</title>
		<link>https://oruvan.com/50-deaths-per-day-due-to-alcohol-in-sri-lanka/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Fri, 16 Jan 2026 03:25:49 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#police]]></category>
		<category><![CDATA[ADIC]]></category>
		<category><![CDATA[death]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<category><![CDATA[who]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=43233</guid>

					<description><![CDATA[<p>இலங்கையில் மதுபானப் பயன்பாடு காரணமாக நாளொன்றுக்கு சுமார் 50 பேர் உயிரிழப்பதாக மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் (ADIC) பகீர் தகவலை வெளியிட்டுள்ளது. கொழும்பில் நடைபெற்ற &#8220;மதுபானம் குறித்த உண்மைகளும் கட்டுக்கதைகளும் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் பொறுப்பு&#8221; என்ற தலைப்பிலான ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் சம்பத் டி சேரம் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், இலங்கையில் மதுபானம் மற்றும் புகையிலை பயன்பாடு காரணமாக ஆண்டுதோறும் 15,000 முதல் 20,000 [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/50-deaths-per-day-due-to-alcohol-in-sri-lanka/">இலங்கையில் மதுபானத்தால் தினசரி 50 மரணங்கள்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இலங்கையில் மதுபானப் பயன்பாடு காரணமாக நாளொன்றுக்கு சுமார் 50 பேர் உயிரிழப்பதாக மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் (ADIC) பகீர் தகவலை வெளியிட்டுள்ளது.</p>
<p>கொழும்பில் நடைபெற்ற &#8220;மதுபானம் குறித்த உண்மைகளும் கட்டுக்கதைகளும் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் பொறுப்பு&#8221; என்ற தலைப்பிலான ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் சம்பத் டி சேரம் இதனைத் தெரிவித்தார்.</p>
<p>அவர் மேலும் குறிப்பிடுகையில், இலங்கையில் மதுபானம் மற்றும் புகையிலை பயன்பாடு காரணமாக ஆண்டுதோறும் 15,000 முதல் 20,000 பேர் வரை உயிரிழக்கின்றனர்.</p>
<p>வீதி விபத்துக்கள், புற்றுநோய் மற்றும் ஏனைய நோய்களால் ஏற்படும் மரணங்களின் மொத்த எண்ணிக்கையை விடவும், மதுபானத்தினால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.</p>
<p>சட்டபூர்வமான மற்றும் சட்டவிரோத மதுபானங்கள் ஆகிய இரண்டுமே இந்த உயயிரிழப்புகளுக்குப் பிரதான காரணிகளாக அமைவதாக அவர் சுட்டிக்காட்டினார்.</p>
<p>அதேவேளை, மதுபானக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்குப் பெரும் சவாலாக இருப்பது அரசியல்வாதிகளுக்கும் மதுபான நிறுவனங்களுக்கும் இடையிலான நெருங்கிய தொடர்பு என்று புகையிலை மற்றும் மதுபானங்கள் மீதான தேசிய அதிகார சபையின் தலைவர் வைத்தியர் ஆனந்த ரத்நாயக்க தெரிவித்தார்.</p>
<p>நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பலருக்கு மதுபான உற்பத்தி நிலையங்கள் அல்லது விற்பனை நிலையங்களின் உரிமம் இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.</p>
<p>அரசியல் பலத்தைத் தக்கவைக்க மதுபான நிறுவனங்களின் நிதி பயன்படுத்தப்படுவதாகவும், நிறுவனங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்ட அரசியல்வாதிகள் பயன்படுத்தப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.</p>
<p>மேலும், இலங்கையில் சட்டவிரோத மதுபானப் பயன்பாடு 300% அல்லது 37% இனால் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் (WHO) தெரிவித்ததாகக் கூறப்படும் செய்திகள் முற்றிலும் அடிப்படையற்றவை.</p>
<p>அவ்வாறான அறிக்கையை அந்த நிறுவனம் வெளியிடவில்லை என்றும் இந்தச் சந்திப்பின் போது தெளிவுபடுத்தப்பட்டது</p>
<p>The post <a href="https://oruvan.com/50-deaths-per-day-due-to-alcohol-in-sri-lanka/">இலங்கையில் மதுபானத்தால் தினசரி 50 மரணங்கள்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இலங்கையில் பெண்களை விட ஆண்கள் அதிகம் தற்கொலை செய்கின்றனர் &#8211; ஆய்வில் தகவல்</title>
		<link>https://oruvan.com/more-men-than-women-commit-suicide-in-sri-lanka-study-finds/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Tue, 18 Nov 2025 10:09:28 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[#oruvan #news]]></category>
		<category><![CDATA[death]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<category><![CDATA[who]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=38576</guid>

					<description><![CDATA[<p>இலங்கையில் ஆண்கள் தொடர்ந்து மன அழுத்தம் மற்றும் பதட்டம் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு வருவதுடன், இதனால் தற்கொலை செய்து கொள்ளும் விகிதம் அதிகமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கையின்படி, 100,000 ஆண்களுக்கு 27 பேரும், 100,000 பெண்களுக்கு ஐந்து பேரும் தற்கொலை செய்துகொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, ஒட்டுமொத்த தற்கொலை விகிதம் 100,000 மக்கள்தொகைக்கு 15 பேர் என காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகளவில் சராசரி தற்கொலை விகிதமான 100,000 மக்கள்தொகைக்கு 10.5 ஐ விட இலங்கையில் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/more-men-than-women-commit-suicide-in-sri-lanka-study-finds/">இலங்கையில் பெண்களை விட ஆண்கள் அதிகம் தற்கொலை செய்கின்றனர் &#8211; ஆய்வில் தகவல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இலங்கையில் ஆண்கள் தொடர்ந்து மன அழுத்தம் மற்றும் பதட்டம் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு வருவதுடன், இதனால் தற்கொலை செய்து கொள்ளும் விகிதம் அதிகமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>அறிக்கையின்படி, 100,000 ஆண்களுக்கு 27 பேரும், 100,000 பெண்களுக்கு ஐந்து பேரும் தற்கொலை செய்துகொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.<br />
உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, ஒட்டுமொத்த தற்கொலை விகிதம் 100,000 மக்கள்தொகைக்கு 15 பேர் என காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>உலகளவில் சராசரி தற்கொலை விகிதமான 100,000 மக்கள்தொகைக்கு 10.5 ஐ விட இலங்கையில் ஆண்களின் தற்கொலை விகிதம் அதிகமாக இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.</p>
<p>2022 ஆம் ஆண்டு நடத்தப்பட்டஉலக சுகாதார அமைப்பின் ஆய்வின்படி, தற்கொலை விகிதம் வயதுக்கு ஏற்ப அதிகரித்துள்ளது.</p>
<p>வயதான ஆண்களிடையே (55+ வயது: 100,000 க்கு 65) அதிக விகிதம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பெண்களிடையே, இது முக்கியமாக இளம் பெண்களில் (17-25 வயது: 100,000 க்கு 10) ஆக பதிவாகியுள்ளது.</p>
<p>தற்கொலை இறப்புகளில் அதிக விகிதம் தூக்கில் தொங்குவதால் (69.9 சதவீதம்), அதைத் தொடர்ந்து பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்திமை (14.0 சதவீதம்), பிற முறைகள் (12.2 சதவீதம்) மற்றும் பூச்சிக்கொல்லி அல்லாத விஷம் (3.9 சதவீதம்) காரணமாக ஏற்பட்டதாகவும் ஆய்வு கூறுகிறது.</p>
<p>இது குறித்து உலக சுகாதார அமைப்பின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,</p>
<p>“உலகளவில் ஒவ்வொரு 100 இறப்புகளில் ஒன்றுக்கும் மேற்பட்டவை தற்கொலையால் ஏற்படுகின்றன, மேலும் தற்கொலையால் ஏற்படும் ஒவ்வொரு மரணத்திற்கும், 20க்கும் மேற்பட்ட தற்கொலை முயற்சிகள் பதிவாகியுள்ளன.</p>
<p>2019 ஆம் ஆண்டில், அனைத்து வயதினரையும் (அல்லது 100,000 மக்கள்தொகையில் 9 பேர்) உள்ளடக்கிய 703,000 பேர் உலகளவில் தற்கொலையால் தங்கள் உயிர்களை இழந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.</p>
<p>மேலும் அனைத்து தற்கொலைகளிலும் 77 சதவீதம் உலக மக்கள் தொகையில் பெரும்பாலோர் குறைந்த நடுத்தர வருமான நாடுகளில் நிகழ்ந்தன.</p>
<p>2019 ஆம் ஆண்டில், 15–29 வயதுடையவர்களிடையே மரணத்திற்கு தற்கொலை நான்காவது முக்கிய காரணமாகும், மேலும் இது அனைத்து இறப்புகளிலும் எட்டு சதவீதமாகும்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/more-men-than-women-commit-suicide-in-sri-lanka-study-finds/">இலங்கையில் பெண்களை விட ஆண்கள் அதிகம் தற்கொலை செய்கின்றனர் &#8211; ஆய்வில் தகவல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>உலக சுகாதார அமைப்பின் பிராந்திய மாநாடு கொழும்பில் இன்று ஆரம்பம்</title>
		<link>https://oruvan.com/who-regional-conference-begins-in-colombo-today/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Mon, 13 Oct 2025 05:21:33 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<category><![CDATA[who]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=35191</guid>

					<description><![CDATA[<p>உலக சுகாதார அமைப்பின் தென் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளைக் கொண்ட பிராந்தியத்தின் 78 ஆவது மாநாடு இன்று (13) முதல் 15ஆம் திகதி வரை கொழும்பில் நடைபெறவுள்ளது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த 78 ஆவது மாநாட்டை இலங்கை நடத்துகிறது. உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயேசஸ், உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய பிராந்திய பொறுப்பதிகாரி கத்ரீனா போஹ்மே ஆகியோரும், 8 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சுகாதார அமைச்சர்கள், இரண்டு [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/who-regional-conference-begins-in-colombo-today/">உலக சுகாதார அமைப்பின் பிராந்திய மாநாடு கொழும்பில் இன்று ஆரம்பம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>உலக சுகாதார அமைப்பின் தென் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளைக் கொண்ட பிராந்தியத்தின் 78 ஆவது மாநாடு இன்று (13) முதல் 15ஆம் திகதி வரை கொழும்பில் நடைபெறவுள்ளது.</p>
<p>மூன்று நாட்கள் நடைபெறும் இந்த 78 ஆவது மாநாட்டை இலங்கை நடத்துகிறது.</p>
<p>உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயேசஸ், உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய பிராந்திய பொறுப்பதிகாரி கத்ரீனா போஹ்மே ஆகியோரும், 8 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சுகாதார அமைச்சர்கள், இரண்டு நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தூதுவர்கள் மற்றும் உலக சுகாதார அமைப்பின் பிற வல்லுநர்கள் இந்த அமர்வில் பங்கேற்கவுள்ளனர்.</p>
<p>இதில் அவர்கள் எதிர்வரும் ஆண்டுகளுக்கான பிராந்திய சுகாதார நிகழ்ச்சி நிரலை உருவாக்குவார்கள்.</p>
<p>வலுவான முதன்மை சுகாதார சேவைகள் மூலம் ஆரோக்கியமான முதுமையை அடைவது மற்றும் புகையிலை இல்லாத சூழலுக்கு எதிரான போராட்டம் ஆகியவை 78வது பிராந்திய குழு அமர்வில் சுகாதாரத் தலைவர்கள் கலந்துரையாடும் பிரதான அம்சங்கள் ஆகும்.</p>
<p>தென் மற்றும் தென்கிழக்கு ஆசிய பிராந்திய சுகாதார அவசர நிதியத்தின் இருப்பு விரிவாக்கம் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்துதல் பற்றி உறுப்பு நாடுகளின் சுகாதார அமைச்சர்கள் மற்றும் சிரேஸ்ட அதிகாரிகள் இதில் விரிவாக கலந்துரையாடி, எதிர்கால முடிவுகளை எடுப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இந்த பிராந்திய மாநாட்டில் முக்கிய சுகாதாரப் பிரச்சினைகள் தொடர்பான தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கும், கடந்த ஆண்டுகளின் தீர்மானங்களின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்வதற்கும் எதிர்பார்க்கப்படுகிறது.</p>
<p>அனைத்து மக்களின் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துதல், பாதுகாத்தல், மற்றும் சுகாதாரம் தொடர்பான நிலையான வளர்ச்சி இலக்குகளை மீண்டும் வழமைக்கு கொண்டுவருவதற்கு தேவையான நடவடிக்கைகளை புதுப்பித்தல் ஆகியவை இதன் நோக்கங்களாகும்.</p>
<p>The post <a href="https://oruvan.com/who-regional-conference-begins-in-colombo-today/">உலக சுகாதார அமைப்பின் பிராந்திய மாநாடு கொழும்பில் இன்று ஆரம்பம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>நெல் கொள்வனவு செய்யும் ஆலை உரிமையாளர்கள் பதிவு செய்வது கட்டாயம்</title>
		<link>https://oruvan.com/registration-is-mandatory-for-mill-owners-who-purchase-rice/</link>
		
		<dc:creator><![CDATA[Kanooshiya Pushpakumar]]></dc:creator>
		<pubDate>Sun, 12 Jan 2025 06:45:15 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[for]]></category>
		<category><![CDATA[is mandatory]]></category>
		<category><![CDATA[mill]]></category>
		<category><![CDATA[owners]]></category>
		<category><![CDATA[purchase]]></category>
		<category><![CDATA[Registration]]></category>
		<category><![CDATA[rice]]></category>
		<category><![CDATA[who]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=6559</guid>

					<description><![CDATA[<p>பெரும்போக காலத்தில் நெல் வாங்கும் அனைத்து ஆலை உரிமையாளர்கள் மற்றும் களஞ்சியசாலை உரிமையாளர்களும் அரசாங்க நெல் சந்தைப்படுத்தல் சபையில் பதிவு செய்வது கட்டாயம் என்று வர்த்தகம், வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஆர்.எம். ஜயவர்தன தெரிவித்தார். பெற்றுக்கொள்ளும் நெல் தொடர்பாக ஒரு தரவுத்தள அமைப்பை உருவாக்குவதும், நெல் இருப்புகளை மறைக்க முடியாத ஒரு திட்டத்தை உருவாக்குவதும் இதன் நோக்கம் என்று பிரதி அமைச்சர் தெரிவித்தார். தட்டுப்பாடு இல்லாமல் அரிசி வழங்கும் நோக்கில் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/registration-is-mandatory-for-mill-owners-who-purchase-rice/">நெல் கொள்வனவு செய்யும் ஆலை உரிமையாளர்கள் பதிவு செய்வது கட்டாயம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பெரும்போக காலத்தில் நெல் வாங்கும் அனைத்து ஆலை உரிமையாளர்கள் மற்றும் களஞ்சியசாலை உரிமையாளர்களும் அரசாங்க நெல் சந்தைப்படுத்தல் சபையில் பதிவு செய்வது கட்டாயம் என்று வர்த்தகம், வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஆர்.எம். ஜயவர்தன தெரிவித்தார்.</p>
<p>பெற்றுக்கொள்ளும் நெல் தொடர்பாக ஒரு தரவுத்தள அமைப்பை உருவாக்குவதும், நெல் இருப்புகளை மறைக்க முடியாத ஒரு திட்டத்தை உருவாக்குவதும் இதன் நோக்கம் என்று பிரதி அமைச்சர் தெரிவித்தார்.</p>
<p>தட்டுப்பாடு இல்லாமல் அரிசி வழங்கும் நோக்கில் அரசு நெல் கொள்முதல் திட்டத்தை செயல்படுத்தி வருவதாகவும் பிரதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.</p>
<p>நெல் மற்றும் அரிசிக்கான உத்தரவாத விலையை ஒரே நேரத்தில் தீர்மானித்து வர்த்தமானியில் வெளியிட அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/registration-is-mandatory-for-mill-owners-who-purchase-rice/">நெல் கொள்வனவு செய்யும் ஆலை உரிமையாளர்கள் பதிவு செய்வது கட்டாயம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தேசிய பட்டியலுக்கு இலஞ்சம் வழங்கிய பிரபல வர்த்தகர்</title>
		<link>https://oruvan.com/prominent-businessman-who-paid-bribe-to-national-list/</link>
		
		<dc:creator><![CDATA[Kanooshiya Pushpakumar]]></dc:creator>
		<pubDate>Sat, 11 Jan 2025 06:59:53 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[bribe]]></category>
		<category><![CDATA[businessman]]></category>
		<category><![CDATA[list]]></category>
		<category><![CDATA[national]]></category>
		<category><![CDATA[paid]]></category>
		<category><![CDATA[Prominent]]></category>
		<category><![CDATA[to]]></category>
		<category><![CDATA[who]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=6464</guid>

					<description><![CDATA[<p>பிரதானமான அரசியல் எதிர்க்கட்சி ஒன்றின் காரியாலத்திற்கு சில தினங்களுக்கு முன்னர் சென்ற இந்நாட்டின் பிரபல வர்த்தகர் ஒருவர் அங்கு பதட்டமான நிலையை உருவாக்கி பரப்பரப்பை ஏற்படுத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தனக்கு தேசியப் பட்டியல் பதவியை வழங்குவதாகக் கூறி, குறித்த கட்சியின் பிரதானி ஒருவர் ஐந்து கோடி ரூபாயை பெற்றுக்கொண்ட போதிலும் தேசியப் பட்டியல் பதவியை வழங்கவில்லை என குற்றம் சுமத்தி குறித்த பணத்தை உடனடியாக மீள வழங்குமாறு கோரிக்கை விடுத்து பதட்டமான நிலையை உருவாக்கியுள்ளதாக தெரியவருகிறது. இந்த [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/prominent-businessman-who-paid-bribe-to-national-list/">தேசிய பட்டியலுக்கு இலஞ்சம் வழங்கிய பிரபல வர்த்தகர்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பிரதானமான அரசியல் எதிர்க்கட்சி ஒன்றின் காரியாலத்திற்கு சில தினங்களுக்கு முன்னர் சென்ற இந்நாட்டின் பிரபல வர்த்தகர் ஒருவர் அங்கு பதட்டமான நிலையை உருவாக்கி பரப்பரப்பை ஏற்படுத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.</p>
<p>தனக்கு தேசியப் பட்டியல் பதவியை வழங்குவதாகக் கூறி, குறித்த கட்சியின் பிரதானி ஒருவர் ஐந்து கோடி ரூபாயை பெற்றுக்கொண்ட போதிலும் தேசியப் பட்டியல் பதவியை வழங்கவில்லை என குற்றம் சுமத்தி குறித்த பணத்தை உடனடியாக மீள வழங்குமாறு கோரிக்கை விடுத்து பதட்டமான நிலையை உருவாக்கியுள்ளதாக தெரியவருகிறது.</p>
<p>இந்த சம்பவத்தால் அலுவலகத்தில் பெரும் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.</p>
<p>நாட்டின் பிரபல கோடீஸ்வர வர்த்தகர் ஒருவருக்கு தேசியப் பட்டியல் பதவி வழங்குவதாக வாக்குறுதி அளித்து, அவரிடமிருந்து ஐந்து கோடி ரூபாய் பெறப்பட்டதாகக் கூறப்படுகிறது.</p>
<p>அவர் அந்தக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரோ அல்லது அமைப்பாளரோ அல்ல, ஆனால் அவர் கட்சியின் தேசியப் பட்டியலில் காணப்படட்டுள்ளார்.</p>
<p>வர்த்தகர் கட்சி அலுவலகத்திற்கு வந்து இது தொடர்பாக கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தபோது, ​​அங்கிருந்த அதிகாரிகள், &#8220;உங்களைப் பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது. பணத்தை எடுத்தவர்களிடமிருந்து அதை நீங்கள் பெற்றுக்கொண்டால் நல்லது&#8221; என்று கூறியதாக அறியக்கிடைக்கின்றது.</p>
<p>பின்னர் அந்த தொழிலதிபர், &#8220;நான் அதை பெற்றுக்கொள்கிறேன்&#8221; என்று கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு வெளியேறினார்.</p>
<p>கட்சியுடன் மிகவும் நெருக்கமாகவும் தீவிரமாகவும் செயற்பட்டு வரும் மற்றுமொரு பிரபல வர்த்தகர் மீது தொழிலதிபர் இந்தக் குற்றச்சாட்டை சுமத்துவதாக வட்டாரங்கள் தெரிவித்தன.</p>
<p>இந்த சம்பவத்தைத் தொடர்ந்து கட்சிக்குள் கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/prominent-businessman-who-paid-bribe-to-national-list/">தேசிய பட்டியலுக்கு இலஞ்சம் வழங்கிய பிரபல வர்த்தகர்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சீனாவில் பரவும் வைரஸால் இலங்கைக்கு ஆபத்தா?</title>
		<link>https://oruvan.com/is-sri-lanka-at-risk-from-the-virus-spreading-in-china/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Mon, 06 Jan 2025 05:30:16 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[HMPV]]></category>
		<category><![CDATA[Human Metapneumonia]]></category>
		<category><![CDATA[who]]></category>
		<category><![CDATA[சீனா]]></category>
		<category><![CDATA[சீனாவில் பரவும் புதிய வைரஸ்]]></category>
		<category><![CDATA[புதிய வைரஸ்]]></category>
		<category><![CDATA[மனித மெட்டாப்நியூமோவைரஸ்]]></category>
		<category><![CDATA[வைரஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=5562</guid>

					<description><![CDATA[<p>சீனாவில் பரவி வரும் மனித மெட்டாப்நியூமோவைரஸ் (Human Metapneumonia) அல்லது HMPV வைரஸ் பயப்பட வேண்டிய ஒன்றல்ல என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் அலர்ஜி, நோயெதிர்ப்பு மற்றும் செல் உயிரியல் துறையின் பணிப்பாளர் பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள பதிவொன்றில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். &#8220;குளிர்காலத்தில் சுவாச நோய்த்தொற்றுகள் பொதுவானவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 2001ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட HMPV வைரஸ் புதிய வைரஸ் அல்ல என்றும் பொதுவாக சளி அல்லது [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/is-sri-lanka-at-risk-from-the-virus-spreading-in-china/">சீனாவில் பரவும் வைரஸால் இலங்கைக்கு ஆபத்தா?</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>சீனாவில் பரவி வரும் மனித மெட்டாப்நியூமோவைரஸ் (Human Metapneumonia) அல்லது HMPV வைரஸ் பயப்பட வேண்டிய ஒன்றல்ல என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் அலர்ஜி, நோயெதிர்ப்பு மற்றும் செல் உயிரியல் துறையின் பணிப்பாளர் பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.</p>
<p>தனது எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள பதிவொன்றில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். &#8220;குளிர்காலத்தில் சுவாச நோய்த்தொற்றுகள் பொதுவானவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>2001ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட HMPV வைரஸ் புதிய வைரஸ் அல்ல என்றும் பொதுவாக சளி அல்லது காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் சுவாச நோய்த்தொற்றுகளை ஏற்படுத்துவதாகவும் பேராசிரியர் சந்திம ஜீவந்தர குறிப்பிட்டார்.</p>
<p>இருப்பினும், HMPV வைரஸ் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு உள்ளவர்களுக்கு தீவிரமாக இருக்கலாம் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.</p>
<p>இந்த வைரஸ் நிலை பொதுவாக ஒரு வாரத்திற்குள் குறையும் என்று பேராசிரியர் சந்திம ஜீவந்தர குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>எவ்வாறாயினும், &#8220;இது தொடர்பான பிரச்சனையான சூழ்நிலை இலங்கையில் பதிவாகவில்லை என &#8221; இலங்கை சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.</p>
<p>&#8220;இந்த நிலைமை உலக சுகாதார அமைப்பு (WHO)எதிர்பாராதது என்று கூறியுள்ளது.</p>
<p>தற்போதைய சுவாச நோய்களின் அலை முந்தைய ஆண்டுகளை விட குறைவாக இருப்பதாகவும், வைத்தியசாலைகள் நோயாளிகள் திறம்பட நிர்வகிக்கப்படுவதாகவும் சீன அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்&#8221; எனவும் கூறியுள்ளது.</p>
<p>இந்த விடயம் தொடர்பில் இலங்கையின் சுகாதார அதிகாரிகள் அவதானம் செலுத்தி வருவதாகவும் இலங்கை சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.</p>
<p>மேலும், பொது பாதுகாப்பை உறுதி செய்வதற்காக உலகளாவிய சுகாதார நிலைமைகளை தொடர்ச்சியாக அவதானித்து வருவதாகவும் சுகாதார மேம்பாட்டு பணியகம் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.</p>
<p>சீனாவில் சுவாச நோய்கள் அதிகரிப்பதற்கான காரணம் முன்னர் கண்டறியப்பட்ட வைரஸ் என்றும், புதிய அல்லது அசாதாரண வைரஸ்கள் எதுவும் கண்டறியப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இந்த நிலைமை பொதுவான சுவாச நோய்கள் பரவுவதைப் போன்றது என்றும், மேலும் குறிப்பிடத்தக்க தாக்கம் எதுவும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/is-sri-lanka-at-risk-from-the-virus-spreading-in-china/">சீனாவில் பரவும் வைரஸால் இலங்கைக்கு ஆபத்தா?</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>விரைவில் கைது செய்யப்படவுள்ள பிரபல ஐந்து அரசியல்வாதிகள்?</title>
		<link>https://oruvan.com/five-famous-politicians-who-will-be-arrested-soon/</link>
		
		<dc:creator><![CDATA[Kanooshiya Pushpakumar]]></dc:creator>
		<pubDate>Thu, 02 Jan 2025 06:21:43 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[arrested]]></category>
		<category><![CDATA[famous]]></category>
		<category><![CDATA[five]]></category>
		<category><![CDATA[politicians]]></category>
		<category><![CDATA[soon?]]></category>
		<category><![CDATA[who]]></category>
		<category><![CDATA[will be]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=4984</guid>

					<description><![CDATA[<p>பல்வேறு ஊழல் மோசடிகளுடன் தொடர்புடைய பிரபல அரசியல்வாதியொருவரின் மனைவி உள்ளிட்ட ஐந்து அரசியல்வாதிகள் இவ்வாண்டின் ஆரம்பத்தில் கைது செய்யப்படவுள்ளதை அரசாங்கத் தகவல்கள் தெரிவிப்பதாக கொழும்பிலிருந்து வெளியாகும் பிரதான சிங்கள நாளிதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது. கைது செய்யப்படவுள்ள பிரபல ஐந்து அரசியல்வாதிகளுள் வெளிநாட்டு வேலைக்காக அனுப்புவதாகக் கூறி பொதுமக்களிடம் பணத்தை மோசடி செய்ததாக கூறப்படும் அரசியல்வாதியொருவரும், ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும், சுற்றுலா சபையின் முறைகேடுகளில் ஈடுபட்ட அதிகாரிகள் சிலரும் உள்ளடங்குவதாக கூறப்படுகிறது. [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/five-famous-politicians-who-will-be-arrested-soon/">விரைவில் கைது செய்யப்படவுள்ள பிரபல ஐந்து அரசியல்வாதிகள்?</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பல்வேறு ஊழல் மோசடிகளுடன் தொடர்புடைய பிரபல அரசியல்வாதியொருவரின் மனைவி உள்ளிட்ட ஐந்து அரசியல்வாதிகள் இவ்வாண்டின் ஆரம்பத்தில் கைது செய்யப்படவுள்ளதை அரசாங்கத் தகவல்கள் தெரிவிப்பதாக கொழும்பிலிருந்து வெளியாகும் பிரதான சிங்கள நாளிதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.</p>
<p>கைது செய்யப்படவுள்ள பிரபல ஐந்து அரசியல்வாதிகளுள் வெளிநாட்டு வேலைக்காக அனுப்புவதாகக் கூறி பொதுமக்களிடம் பணத்தை மோசடி செய்ததாக கூறப்படும் அரசியல்வாதியொருவரும், ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும், சுற்றுலா சபையின் முறைகேடுகளில் ஈடுபட்ட அதிகாரிகள் சிலரும் உள்ளடங்குவதாக கூறப்படுகிறது.</p>
<p>இதேவேளை, நாட்டின் தேசிய சொத்தை கொள்ளையடித்த வழக்குகளில் தொடர்புடைய 10க்கும் மேற்பட்ட பிரபல அதிகாரிகளுக்கு மற்றும் பிணைமுறி மோசடியில் குற்றம் சாட்டப்பட்ட ஒரு குழுவுக்கு எதிராகவும் குற்றப்புலனாய்வு திணைக்களமும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவும் உடனடியாக வழக்குத் தொடரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>கைது செய்யப்படவுள்ள பிரபல அரசியல்வாதியின் மனைவி தொடர்பில் மைத்திரி-ரணில் அரசாங்கத்தின் காலப்பகுதியில் வெவ்வேறு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டாலும், சரியான சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை.</p>
<p>இந்த அனைத்து விசாரணைகளையும் சரியான முறையில் நடத்திய பின்னர் அனைத்து சந்தேகநபர்களுக்கு எதிராகவும் விரைவான மற்றும் முறையான ரீதியில் சட்டத்தை அமுல்படுத்துவதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் குறித்த சிங்கள நாளிதழிடம் கருத்து வெளியிட்டுள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/five-famous-politicians-who-will-be-arrested-soon/">விரைவில் கைது செய்யப்படவுள்ள பிரபல ஐந்து அரசியல்வாதிகள்?</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
