<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>went Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/went/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/went/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Sat, 30 Aug 2025 09:13:27 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>went Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/went/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>மீன் பிடிக்கச் சென்றவர் சடலமாக மீட்பு</title>
		<link>https://oruvan.com/body-of-man-who-went-fishing-recovered/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sat, 30 Aug 2025 09:13:27 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[body]]></category>
		<category><![CDATA[Fishing]]></category>
		<category><![CDATA[Man]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[recovered]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<category><![CDATA[went]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=31129</guid>

					<description><![CDATA[<p>மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்முனை பாலத்தின் கீழுள்ள வாவியில் மீன் பிடிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (29) நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். மீன்பிடிக்கச் சென்ற அவர், வீடு திரும்பாத நிலையிலேயே காணாமல் போயுள்ளார். ஆற்றில் வலை வீசி மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, தவறுதலாக ஆழமான பகுதிக்குள் சென்று மீள முடியாமல் மூழ்கியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர் கோயில் குளம் பகுதியைச் சேர்ந்த, 49 வயதுடையவர் என பொலிஸ் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/body-of-man-who-went-fishing-recovered/">மீன் பிடிக்கச் சென்றவர் சடலமாக மீட்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்முனை பாலத்தின் கீழுள்ள வாவியில் மீன் பிடிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (29) நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.</p>
<p>மீன்பிடிக்கச் சென்ற அவர், வீடு திரும்பாத நிலையிலேயே காணாமல் போயுள்ளார். ஆற்றில் வலை வீசி மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, தவறுதலாக ஆழமான பகுதிக்குள் சென்று மீள முடியாமல் மூழ்கியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p>
<p>உயிரிழந்தவர் கோயில் குளம் பகுதியைச் சேர்ந்த, 49 வயதுடையவர் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p>
<p>சம்பவ இடத்துக்கு சென்று திடீர் மரண விசாரணை அதிகாரி முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டதுடன், சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.</p>
<p>மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/body-of-man-who-went-fishing-recovered/">மீன் பிடிக்கச் சென்றவர் சடலமாக மீட்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>வேலைக்காக வெளிநாடு சென்றவர்களின் எண்ணிக்கை மூன்று இலட்சத்தை தாண்டியது</title>
		<link>https://oruvan.com/the-number-of-people-who-went-abroad-for-work-exceeded-three-hundred-thousand/</link>
		
		<dc:creator><![CDATA[Kanooshiya Pushpakumar]]></dc:creator>
		<pubDate>Mon, 16 Dec 2024 05:25:11 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[abroad]]></category>
		<category><![CDATA[exceeded]]></category>
		<category><![CDATA[hundred]]></category>
		<category><![CDATA[number]]></category>
		<category><![CDATA[people]]></category>
		<category><![CDATA[thousand]]></category>
		<category><![CDATA[went]]></category>
		<category><![CDATA[work three]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=2663</guid>

					<description><![CDATA[<p>2024ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் வெளிநாடு சென்ற இலங்கையர்களின் எண்ணிக்கை மூன்று இலட்சத்தை தாண்டியுள்ளது. கடந்த 13ஆம் திகதி நிலவரப்படி, குறித்த எண்ணிக்கை 300,162 ஆகும். கடந்த 10 வருட காலப்பகுதியில் 3 இலட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் வெளிநாடுகளுக்குச் சென்ற இரண்டாவது தடவை இதுவாகும். இதற்கு முன்னர், 2022ஆம் ஆண்டில் 310,948 பேர் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர். 2024 ஆம் ஆண்டில், 177,804 ஆண் மற்றும் 122,358 பெண் தொழிலாளர்கள் வேலைக்காக வெளிநாடு சென்றுள்ளனர். [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/the-number-of-people-who-went-abroad-for-work-exceeded-three-hundred-thousand/">வேலைக்காக வெளிநாடு சென்றவர்களின் எண்ணிக்கை மூன்று இலட்சத்தை தாண்டியது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>2024ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் வெளிநாடு சென்ற இலங்கையர்களின் எண்ணிக்கை மூன்று இலட்சத்தை தாண்டியுள்ளது.</p>
<p>கடந்த 13ஆம் திகதி நிலவரப்படி, குறித்த எண்ணிக்கை 300,162 ஆகும்.</p>
<p>கடந்த 10 வருட காலப்பகுதியில் 3 இலட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் வெளிநாடுகளுக்குச் சென்ற இரண்டாவது தடவை இதுவாகும்.</p>
<p>இதற்கு முன்னர், 2022ஆம் ஆண்டில் 310,948 பேர் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர்.</p>
<p>2024 ஆம் ஆண்டில், 177,804 ஆண் மற்றும் 122,358 பெண் தொழிலாளர்கள் வேலைக்காக வெளிநாடு சென்றுள்ளனர்.</p>
<p>குறித்த காலப்பகுதியில் வெளிநாடுகளுக்குச் சென்ற மொத்த எண்ணிக்கையில் 40.7 வீதமான பெண்களும், ஆண் தொழிலாளர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வது 60 வீதத்தால் அதிகரித்துள்ளது.</p>
<p>184,140 பேர் சொந்தமாக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதுடன், 116, 022 பேர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் ஊடாக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர்.</p>
<p>பெரும்பாலான இலங்கையர்கள் குவைட் நாட்டிற்கு வேலைக்காக சென்றுள்ள நிலையில் அதன் எண்ணிக்கை 73,995 ஆகும்.</p>
<p>இரண்டாவதாக அதிகளவான இலங்கையர்கள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றுள்ளதுடன் அந்த எண்ணிக்கை 49,499 ஆகும்.</p>
<p>கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில், இலங்கையர்கள் தென் கொரியா, இஸ்ரேல், ருமேனியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளுக்கு வேலைகளுக்குச் செல்வதில் அதிக நாட்டம் காட்டி வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.</p>
<p>அதன்படி, 2024ஆம் ஆண்டு தென் கொரியாவுக்கு 7,002 இலங்கையர்களும், இஸ்ரேலுக்கு 9,211 பேரும், ருமேனியாவுக்கு 10,274 பேரும், ஜப்பானில் வேலை வாய்ப்புக்காக 8,251 பேரும் வெளியேறியுள்ளனர்.</p>
<p>இந்நிலையில், 2024 ஆம் ஆண்டின் இறுதிக்குள், வேலை வாய்ப்புக்காக வெளிநாடு செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை 311,000ஐ தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>
<p>வெளிநாட்டு பணியாளர்களிடமிருந்து பெறப்பட்ட அந்நியச் செலாவணியின் அளவு கணிசமாக அதிகரித்துள்ளதுடன் இவ்வாண்டு நவம்பர் மாதம் வரையில் 5961.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை பெற்றுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/the-number-of-people-who-went-abroad-for-work-exceeded-three-hundred-thousand/">வேலைக்காக வெளிநாடு சென்றவர்களின் எண்ணிக்கை மூன்று இலட்சத்தை தாண்டியது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
