<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>University Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/university/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/university/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Fri, 31 Oct 2025 09:26:06 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>University Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/university/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>யாழ் நூலகத்தில் துப்பாக்கி கண்டெடுக்கப்பட்ட சம்பவம் &#8211; முழுமையாக சோதனை மேற்கொள்ள நடவடிக்கை</title>
		<link>https://oruvan.com/gun-found-in-jaffna-library-steps-taken-to-conduct-a-thorough-search/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Fri, 31 Oct 2025 09:26:06 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[Jaffna]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<category><![CDATA[University]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=36966</guid>

					<description><![CDATA[<p>யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நூலகத்தின் மேற்கூரைப் பகுதியிலிருந்து ரி-56 ரக துப்பாக்கியொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதால் மேலும் ஆயுதங்கள் இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தில், முழுமையாக சோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலக வளாகத்தின் கூரைப் பகுதியில் திருத்த வேலை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, நேற்றைய தினம் (30) இரண்டு மெகசின்களும வயர்களும் முதலில் அடையாளம் காணப்பட்டன. இதனையடுத்துப் பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் கோப்பாய் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டது. குறித்த பொருட்களைப் பொலிஸாரும், விசேட அதிரடிப் படையினரும் இன்று காலை அகற்றினர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/gun-found-in-jaffna-library-steps-taken-to-conduct-a-thorough-search/">யாழ் நூலகத்தில் துப்பாக்கி கண்டெடுக்கப்பட்ட சம்பவம் &#8211; முழுமையாக சோதனை மேற்கொள்ள நடவடிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நூலகத்தின் மேற்கூரைப் பகுதியிலிருந்து ரி-56 ரக துப்பாக்கியொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதால் மேலும் ஆயுதங்கள் இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தில், முழுமையாக சோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p>
<p>யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலக வளாகத்தின் கூரைப் பகுதியில் திருத்த வேலை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, நேற்றைய தினம் (30) இரண்டு மெகசின்களும வயர்களும் முதலில் அடையாளம் காணப்பட்டன.</p>
<p>இதனையடுத்துப் பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் கோப்பாய் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டது.</p>
<p>குறித்த பொருட்களைப் பொலிஸாரும், விசேட அதிரடிப் படையினரும் இன்று காலை அகற்றினர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/gun-found-in-jaffna-library-steps-taken-to-conduct-a-thorough-search/">யாழ் நூலகத்தில் துப்பாக்கி கண்டெடுக்கப்பட்ட சம்பவம் &#8211; முழுமையாக சோதனை மேற்கொள்ள நடவடிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>கொழும்பு பல்கலைக்கழக நூலகத்திற்கு தனது புத்தகங்களை நன்கொடையளித்த சந்திரிக்கா</title>
		<link>https://oruvan.com/chandrika-donates-her-books-to-the-colombo-university-library/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sat, 25 Oct 2025 08:40:26 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[books]]></category>
		<category><![CDATA[Chandrika]]></category>
		<category><![CDATA[Colombo]]></category>
		<category><![CDATA[donates]]></category>
		<category><![CDATA[Library]]></category>
		<category><![CDATA[University]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=36387</guid>

					<description><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தனது சொந்த நூலகத்திலுள்ள புத்தகங்கள் சிலவற்றை கொழும்பு பல்கலைக்கழக நூலகத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளார். கல்வி மற்றும் அறிவுத்திறன் சார்ந்த புத்தகங்கள் இதில் உள்ளடங்குவதாக அவர்  தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “எனது தனிப்பட்ட நூலகத்திலிருந்து மதிப்புமிக்க கல்வி மற்றும் அறிவார்ந்த புத்தகங்களின் தொகுப்பை கொழும்பு பல்கலைக்கழக நூலகத்திற்கு நன்கொடையாக அளித்தேன். நூலக பணியாளர்களுடன் ஒரு சிறிய தருணத்தை செலவிட்டேன்.  இந்த நேரத்தில், பேராசிரியர் ஜெயதேவா உயங்கோடா மற்றும் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/chandrika-donates-her-books-to-the-colombo-university-library/">கொழும்பு பல்கலைக்கழக நூலகத்திற்கு தனது புத்தகங்களை நன்கொடையளித்த சந்திரிக்கா</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தனது சொந்த நூலகத்திலுள்ள புத்தகங்கள் சிலவற்றை கொழும்பு பல்கலைக்கழக நூலகத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.</p>
<p>கல்வி மற்றும் அறிவுத்திறன் சார்ந்த புத்தகங்கள் இதில் உள்ளடங்குவதாக அவர்  தெரிவித்துள்ளார்.</p>
<p>இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,</p>
<p>“எனது தனிப்பட்ட நூலகத்திலிருந்து மதிப்புமிக்க கல்வி மற்றும் அறிவார்ந்த புத்தகங்களின் தொகுப்பை கொழும்பு பல்கலைக்கழக நூலகத்திற்கு நன்கொடையாக அளித்தேன்.</p>
<p>நூலக பணியாளர்களுடன் ஒரு சிறிய தருணத்தை செலவிட்டேன்.  இந்த நேரத்தில், பேராசிரியர் ஜெயதேவா உயங்கோடா மற்றும் பேராசிரியர் நிர்மல் ரஞ்சித் தேவசிறி ஆகியோர் வழங்கிய ஆதரவையும் ஒருங்கிணைப்பையும் நன்றியுடன் நினைவு கூர்கிறேன்,” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/chandrika-donates-her-books-to-the-colombo-university-library/">கொழும்பு பல்கலைக்கழக நூலகத்திற்கு தனது புத்தகங்களை நன்கொடையளித்த சந்திரிக்கா</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனம் பணிப்பகிஷ்கரிப்பு</title>
		<link>https://oruvan.com/university-teachers-union-federation-strike/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Tue, 30 Sep 2025 04:48:04 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[Federation]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[strike]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<category><![CDATA[teachers]]></category>
		<category><![CDATA[Union]]></category>
		<category><![CDATA[University]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=33938</guid>

					<description><![CDATA[<p>பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனம் நாடளாவிய ரீதியில் இன்று (30) ஒருநாள் அடையாள பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ளது. பல்கலைக்கழக கட்டமைப்பில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாக கூறி பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடத் தீர்மானித்ததாக அந்த சங்கம் நேற்று அறிவித்தது. ​ அதன் செயலாளர், சிரேஸ்ட விரிவுரையாளர் சாருதத்த இளங்கசிங்க இந்த அறிவிப்பை வெளியிட்டார். ​ அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் கடந்துள்ள போதிலும் அரச பல்கலைக்கழகங்களில் உள்ள நெருக்கடிகளுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/university-teachers-union-federation-strike/">பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனம் பணிப்பகிஷ்கரிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனம் நாடளாவிய ரீதியில் இன்று (30) ஒருநாள் அடையாள பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ளது.</p>
<p>பல்கலைக்கழக கட்டமைப்பில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாக கூறி பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடத் தீர்மானித்ததாக அந்த சங்கம் நேற்று அறிவித்தது.<br />
​<br />
அதன் செயலாளர், சிரேஸ்ட விரிவுரையாளர் சாருதத்த இளங்கசிங்க இந்த அறிவிப்பை வெளியிட்டார்.<br />
​<br />
அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் கடந்துள்ள போதிலும் அரச பல்கலைக்கழகங்களில் உள்ள நெருக்கடிகளுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை என கூறிய அவர், தற்போது அரச கல்வி<br />
வீழ்ச்சியடைந்து கடுமையான நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவித்தார்.<br />
​<br />
பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு தற்போது கடுமையான பற்றாக்குறை நிலவுவதாகவும்<br />
பேராதனை பல்கலைக்கழகத்தில் இருந்து கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 200 பேராசிரியர்கள் வெளியேறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/university-teachers-union-federation-strike/">பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனம் பணிப்பகிஷ்கரிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>யாழ் பல்கலைகழக வேந்தராகப் பேராசிரியர் ராஜரட்ணம் குமாரவடிவேல் நியமனம்</title>
		<link>https://oruvan.com/professor-rajaratnam-kumaravadivel-appointed-as-chancellor-of-the-university-of-jaffna/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sat, 06 Sep 2025 09:55:28 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[appointed]]></category>
		<category><![CDATA[Jaffna]]></category>
		<category><![CDATA[Kumaravadivel]]></category>
		<category><![CDATA[Professor]]></category>
		<category><![CDATA[Rajaratnam]]></category>
		<category><![CDATA[University]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=31854</guid>

					<description><![CDATA[<p>யாழ். பல்கலைகழக வேந்தராகப் பேராசிரியர் ராஜரட்ணம் குமாரவடிவேல் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான எழுத்து மூல கடிதம் ஒகஸ்ட் 27 ஆம் திகதியிடப்பட்டு ஜனாதிபதி செயலாளரால் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இந்தப் பதவியை அவர் வகிக்கவுள்ளார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் 1966 ஆம் ஆண்டு முதல் 1970 ஆம் ஆண்டு வரை பயின்ற குமாரவடிவேல் பௌதீக துறையில் முதல் தர சிறப்புப் பட்டம் பெற்றவர். பிரிஸ்டல் பல்கலைகழகத்தில் 1975 இல் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/professor-rajaratnam-kumaravadivel-appointed-as-chancellor-of-the-university-of-jaffna/">யாழ் பல்கலைகழக வேந்தராகப் பேராசிரியர் ராஜரட்ணம் குமாரவடிவேல் நியமனம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>யாழ். பல்கலைகழக வேந்தராகப் பேராசிரியர் ராஜரட்ணம் குமாரவடிவேல் நியமிக்கப்பட்டுள்ளார்.</p>
<p>ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.</p>
<p>இதற்கான எழுத்து மூல கடிதம் ஒகஸ்ட் 27 ஆம் திகதியிடப்பட்டு ஜனாதிபதி செயலாளரால் வழங்கப்பட்டுள்ளது.</p>
<p>இந்நிலையில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இந்தப் பதவியை அவர் வகிக்கவுள்ளார்.</p>
<p>பேராதனைப் பல்கலைக்கழகத்தில் 1966 ஆம் ஆண்டு முதல் 1970 ஆம் ஆண்டு வரை பயின்ற குமாரவடிவேல் பௌதீக துறையில் முதல் தர சிறப்புப் பட்டம் பெற்றவர்.</p>
<p>பிரிஸ்டல் பல்கலைகழகத்தில் 1975 இல் கலாநிதிப் பட்டம் பெற்ற அவர் 1976 முதல் யாழ் பல்கலைகழகத்தில் பணியாற்றியள்ளார்.</p>
<p>2006-2007 ஆம் ஆண்டுகளில் மிக நெருக்கடியான காலக்கட்டத்தில் யாழ் பல்கலைக்கழக பதில் துணைவேந்தராகப் பொறுப்பெடுத்து சிறப்பு பணியாற்றியிருந்தார்.</p>
<p>2015 முதல் 2020 வரை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உறுப்பினராகவும் அவர் பணி புரிந்தார்.</p>
<p>Professor Rajaratnam Kumaravadivel appointed as Chancellor of the University of Jaffna</p>
<p>The post <a href="https://oruvan.com/professor-rajaratnam-kumaravadivel-appointed-as-chancellor-of-the-university-of-jaffna/">யாழ் பல்கலைகழக வேந்தராகப் பேராசிரியர் ராஜரட்ணம் குமாரவடிவேல் நியமனம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்காதிருக்க யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தீர்மானம்</title>
		<link>https://oruvan.com/jaffna-university-students-union-resolves-not-to-support-hartal/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sun, 17 Aug 2025 13:14:14 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[hartal]]></category>
		<category><![CDATA[Jaffna]]></category>
		<category><![CDATA[not to support]]></category>
		<category><![CDATA[students]]></category>
		<category><![CDATA[University]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=29782</guid>

					<description><![CDATA[<p>யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்,ஹர்த்தாலுக்கு ஆதரவினை வழங்கவில்லை என ஒன்றியத்தின் செயலாளர் தேவதாஸ் அனோஜன் தெரிவித்துள்ளார். தனி ஒரு அரசியல் கட்சியின் ஹர்த்தாலுக்குக்கான அழைப்பிற்குப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமா் ஆதரவு வழங்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுப்பதற்கு முன்னர் இது குறித்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், தமிழ்த் தேசியம் சார்ந்த அனைத்துக் கட்சிகள், தொழிற்சங்கங்கள், சிவில் சமூக அமைப்புகள் என்பவற்றுடன் கலந்துரையாடல்களை நடாத்தி இருக்க வேண்டும். [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/jaffna-university-students-union-resolves-not-to-support-hartal/">ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்காதிருக்க யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தீர்மானம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்,ஹர்த்தாலுக்கு ஆதரவினை வழங்கவில்லை என ஒன்றியத்தின் செயலாளர் தேவதாஸ் அனோஜன் தெரிவித்துள்ளார்.</p>
<p>தனி ஒரு அரசியல் கட்சியின் ஹர்த்தாலுக்குக்கான அழைப்பிற்குப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமா் ஆதரவு வழங்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.</p>
<p>இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,</p>
<p>ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுப்பதற்கு முன்னர் இது குறித்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், தமிழ்த் தேசியம் சார்ந்த அனைத்துக் கட்சிகள், தொழிற்சங்கங்கள், சிவில் சமூக அமைப்புகள் என்பவற்றுடன் கலந்துரையாடல்களை நடாத்தி இருக்க வேண்டும்.</p>
<p>அதன்பின்னரே ஒரு முடிவுக்கு வந்து பொதுவான திகதியில் ஹர்த்தாலுக்கு அழைப்பை விடுத்திருக்க வேண்டும்.</p>
<p>இவை எதுவும் இன்றி ஒரு கட்சியைச் சேர்ந்த ஒருசிலர் தன்னிச்சையாகத் தீர்மானம் எடுத்துவிட்டு அதற்கு ஆதரவு கோரும் பட்சத்தில் மாணவர் ஒன்றியமாகிய எம்மால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது.</p>
<p>பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமானது சுயமாக இயங்கும் ஒரு அமைப்பாகும்.</p>
<p>வடக்கு கிழக்கிலிருந்து இராணுவ பிரசன்னத்தைக் குறைக்க வேண்டும், இராணுவத்தின் பிடியில் உள்ள தமிழ் மக்களது காணிகள் மக்களிடமே மீளளிக்கப்பட வேண்டும், இராணுவத்தின் அராஜகம் ஒழிக்கப்பட வேண்டும் என்ற விடயத்தில் எம்மிடம் மாற்றுக் கருத்து இல்லை.</p>
<p>கடந்த காலங்களில் தமிழ் மக்களது உரிமை சார் பிரச்சினைகளுக்காகப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமாக நாங்கள் குரல் கொடுத்தமை அனைவரும் அறிந்த விடயமே.</p>
<p>ஆனால் ஒரு சில தரப்பு தமது சுயலாபங்களுக்காக மேற்குறித்த விடயங்களைக் கையில் எடுத்து அரசியல் செய்வதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கவும் மாட்டோம், அதற்குத் துணை போகவும் மாட்டோம்.</p>
<p>மேலும், பல்கலைக்கழகத்தில் நாளைய பாடநேர அட்டவணைகள் அனைத்தும் தயாரிக்கப்பட்டுள்ளன.</p>
<p>பாடங்கள் உரிய நேர அட்டவணையின்படி ஒழுங்காக நடைபெறும்.</p>
<p>பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரும் வழமை போல கற்றல் செயல்பாடுகளில் ஈடுபடுவார்கள்” என அவர் மேலும் தெரிவித்தார்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/jaffna-university-students-union-resolves-not-to-support-hartal/">ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்காதிருக்க யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தீர்மானம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் மரணம் &#8211; விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு</title>
		<link>https://oruvan.com/sabaragamuwa-university-students-death-investigation-report-submitted/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sun, 27 Jul 2025 08:12:15 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[Investigation]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Sabaragamuwa]]></category>
		<category><![CDATA[submitted]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<category><![CDATA[University]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=27707</guid>

					<description><![CDATA[<p>சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒருவர், அண்மையில் பகிடிவதையின் பின்னர் உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரிக்க நியமிக்கப்பட்ட ஐவர் கொண்ட குழுவின் அறிக்கை, பல்கலைக்கழக துணைவேந்தரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை அடுத்த வாரம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்படும் என சப்ரகமுவ பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சுனில் சாந்த தெரிவித்துள்ளார். அதன்படி, தொழில்நுட்ப பீடத்தைச் சேர்ந்த குறித்த மாணவரின் மரணம் தொடர்பில் விசாரணையில் கண்டறியப்பட்ட விடயங்களை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வெளியிடும் எனவும் அவர் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/sabaragamuwa-university-students-death-investigation-report-submitted/">சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் மரணம் &#8211; விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒருவர், அண்மையில் பகிடிவதையின் பின்னர் உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரிக்க நியமிக்கப்பட்ட ஐவர் கொண்ட குழுவின் அறிக்கை, பல்கலைக்கழக துணைவேந்தரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இந்த அறிக்கை அடுத்த வாரம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்படும் என சப்ரகமுவ பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சுனில் சாந்த தெரிவித்துள்ளார்.</p>
<p>அதன்படி, தொழில்நுட்ப பீடத்தைச் சேர்ந்த குறித்த மாணவரின் மரணம் தொடர்பில் விசாரணையில் கண்டறியப்பட்ட விடயங்களை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வெளியிடும் எனவும் அவர் கூறினார்.</p>
<p>சம்பவம் தொடர்பாக சுமார் 70 மாணவர்களிடமிருந்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டதாக குறித்த விசாரணைக்குழு தெரிவித்துள்ளது.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/sabaragamuwa-university-students-death-investigation-report-submitted/">சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் மரணம் &#8211; விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் குறித்து ஆராய புதிய குழு நியமனம்</title>
		<link>https://oruvan.com/new-committee-appointed-to-investigate-irregularities-at-sabaragamuwa-university/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Tue, 15 Jul 2025 04:51:45 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[appointed]]></category>
		<category><![CDATA[Committee]]></category>
		<category><![CDATA[New]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Sabaragamuwa]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<category><![CDATA[University]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=26585</guid>

					<description><![CDATA[<p>சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற முறைகேடுகளைப் பற்றி ஆராய்வதற்கு புதிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற, நிர்வாக மற்றும் நிதி முறைகேடுகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காகவே சுயாதீன விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழகம் தொடர்பில் அரசாங்கப் பொறுப்புக் கணக்குகள் குழுவின் (COPE) பரிந்துரைகளைச் செயற்படுத்துவதற்காக நான்கு அங்கத்தவர்களைக் கொண்ட இக்குழு உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவவினால் நியமிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் தலைவராக முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/new-committee-appointed-to-investigate-irregularities-at-sabaragamuwa-university/">சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் குறித்து ஆராய புதிய குழு நியமனம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p><!--StartFragment --></p>
<p class="pf0"><span class="cf0">சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற முறைகேடுகளைப் பற்றி ஆராய்வதற்கு புதிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.</span></p>
<p class="pf0"><span class="cf0">இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற, நிர்வாக மற்றும் நிதி முறைகேடுகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காகவே சுயாதீன விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது</span><span class="cf1">.</span></p>
<p class="pf0"><span class="cf0">இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழகம் தொடர்பில் அரசாங்கப் பொறுப்புக் கணக்குகள் குழுவின் (</span><span class="cf1">COPE) </span><span class="cf0">பரிந்துரைகளைச் செயற்படுத்துவதற்காக நான்கு அங்கத்தவர்களைக் கொண்ட இக்குழு உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவவினால் நியமிக்கப்பட்டுள்ளது.</span></p>
<p class="pf0"><span class="cf0">இந்த குழுவின் தலைவராக முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி விஜித் கே. மலல்கொட, ருஹுனு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் காமினி சேனாநாயக்க, அரச உடமைகள் மற்றும் வியாபார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் டபிள்யு.எம்.சி. பண்டார ஆகியோர் குழு அங்கத்தவர்களாகவும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உதவி கணக்காய்வாளர் ஹஸ்தி பத்திரண அழைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.</span></p>
<p class="pf0"><span class="cf0">மேற்குறிப்பிட்ட சம்பவம் பற்றிய விசாரணை அறிக்கையினை 60 நாட்களுக்குள் கல்வி, உயர் கல்வி, தொழிற்கல்வி அமைச்சிடம் கையளிக்க வேண்டும்.</span></p>
<p>&nbsp;</p>
<p><!--EndFragment --></p>
<p>The post <a href="https://oruvan.com/new-committee-appointed-to-investigate-irregularities-at-sabaragamuwa-university/">சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் குறித்து ஆராய புதிய குழு நியமனம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதை சம்பவங்களை தடுக்க உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு</title>
		<link>https://oruvan.com/high-court-orders-to-prevent-incidents-of-bullying-in-universities/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Wed, 09 Jul 2025 06:55:51 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[order]]></category>
		<category><![CDATA[ragging]]></category>
		<category><![CDATA[Supreme Court]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<category><![CDATA[University]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=26063</guid>

					<description><![CDATA[<p>பல்கலைக்கழகங்களில் பகிடிவதை செய்வதைத் தடுக்க தற்போது நடைமுறையில் உள்ள வழிகாட்டுதல்களை அவசியம் அமுல்படுத்துமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் பகிடிவதையைத் தடுப்பதற்காக ஏற்கனவே வகுக்கப்பட்ட வழிகாட்டுதல்களின் தொகுப்பை செயற்படுத்துவது அவசியம் என பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவுக்கு உயர் நீதிமன்றம் இன்று புதன்கிழமை (09) உத்தரவிட்டது. கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சர் இந்த வழிகாட்டுதல்களை செயற்படுத்த தேவையான நிதி மற்றும் தொழில்நுட்ப உதவி மற்றும் வசதிகளை வழங்க நடவடிக்கை [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/high-court-orders-to-prevent-incidents-of-bullying-in-universities/">பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதை சம்பவங்களை தடுக்க உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பல்கலைக்கழகங்களில் பகிடிவதை செய்வதைத் தடுக்க தற்போது நடைமுறையில் உள்ள வழிகாட்டுதல்களை அவசியம் அமுல்படுத்துமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p>
<p>நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் பகிடிவதையைத் தடுப்பதற்காக ஏற்கனவே வகுக்கப்பட்ட வழிகாட்டுதல்களின் தொகுப்பை செயற்படுத்துவது அவசியம் என பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவுக்கு உயர் நீதிமன்றம் இன்று புதன்கிழமை (09) உத்தரவிட்டது.</p>
<p>கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சர் இந்த வழிகாட்டுதல்களை செயற்படுத்த தேவையான நிதி மற்றும் தொழில்நுட்ப உதவி மற்றும் வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது.</p>
<p>2020 ஆம் ஆண்டில் பகிடிவதை காரணமாக ஏற்பட்ட காயங்களால் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் தொடர்ந்து பாதிக்கப்பட்ட முதலாம் ஆண்டு பல்கலைக்கழக மாணவரான பசிந்து ஹிருஷான் டி சில்வா தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனு மீதான தீர்ப்பை வழங்கும் போது, ​​நீதியரசர்கள் ஷிரான் குணரத்ன, பிரியந்த பெர்னாண்டோ மற்றும் சோபித ராஜகருணா ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்றத்தின் மூவரடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது.</p>
<p>இந்த உத்தரவுகள் எவ்வாறு செயற்படுத்தப்படுகின்றன என்பதற்கான முன்னேற்றத்தை மீளாய்வு செய்ய அடுத்த வருடம் ஜனவரி மாதம் 14 ஆம் திகதி வழக்கை மீண்டும் அழைக்கவும் உத்தரவிட்டுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/high-court-orders-to-prevent-incidents-of-bullying-in-universities/">பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதை சம்பவங்களை தடுக்க உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>நீரில் மூழ்கி காணாமற்போன பல்கலைக்கழக மாணவனின் சடலம் மீட்பு</title>
		<link>https://oruvan.com/body-of-missing-university-student-recovered-after-drowning/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Fri, 27 Jun 2025 13:04:11 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[body]]></category>
		<category><![CDATA[drowning]]></category>
		<category><![CDATA[missing]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<category><![CDATA[University]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=24842</guid>

					<description><![CDATA[<p>கொழும்பு துறைமுக நகரத்தின் செயற்கை கடற்கரையைச் சேர்ந்த கடலில் மூழ்கி காணாமல் போயிருந்த பல்கலைக்கழக மாணவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுக நகர செயற்கை கடற்கரை பகுதியில் நேற்று காலை சக பல்கலைக்கழக மாணவர்களுடன் கடல் உயிரினங்களை பார்வையிடுவதற்காக சென்றிருந்த மாணவனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடலினுள் நீந்திக் கொண்டிருந்த நிலையில் காணாமல் போன மாணவர் தொடர்பில் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து மீட்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்றையதினம் பிற்பகல் மாணவனின் சடலம் கொழும்பு துறைமுக நகர [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/body-of-missing-university-student-recovered-after-drowning/">நீரில் மூழ்கி காணாமற்போன பல்கலைக்கழக மாணவனின் சடலம் மீட்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>கொழும்பு துறைமுக நகரத்தின் செயற்கை கடற்கரையைச் சேர்ந்த கடலில் மூழ்கி காணாமல் போயிருந்த பல்கலைக்கழக மாணவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.</p>
<p>கொழும்பு துறைமுக நகர செயற்கை கடற்கரை பகுதியில் நேற்று காலை சக பல்கலைக்கழக மாணவர்களுடன் கடல் உயிரினங்களை பார்வையிடுவதற்காக சென்றிருந்த மாணவனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.</p>
<p>கடலினுள் நீந்திக் கொண்டிருந்த நிலையில் காணாமல் போன மாணவர் தொடர்பில் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து<br />
மீட்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்தது.</p>
<p>இந்நிலையில் இன்றையதினம் பிற்பகல் மாணவனின் சடலம் கொழும்பு துறைமுக நகர கடற்கரையில் கரையொதுங்கிய நிலையில்<br />
அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது. 24 வயதுடைய அஸ்கிரிய கம்பஹா பகுதியை சேர்ந்த கொழும்பு பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் கல்வி கற்று வந்த மாணவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p>
<p>கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் மொறட்டுவை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர் குழுவொன்று பொழுதுப் போக்குக்காக ஸ்னோர்கெல் என்னும் நீரினுள் சுவாசிக்க உதவும் கருவியை அணிந்து கடலின் உற்பகுதியை பார்வையிட்ட போதே, குறித்த மாணவர் காணாமல் போயுள்ளமை விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.</p>
<p>மேலும் அம்மாணவர் அணிந்திருந்த ஸ்னோர்கெல் கருவி உயிர் பாதுகாப்பு அதிகாரிகளால் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன்,<br />
கொழும்பு துறைமுகப் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/body-of-missing-university-student-recovered-after-drowning/">நீரில் மூழ்கி காணாமற்போன பல்கலைக்கழக மாணவனின் சடலம் மீட்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>30 இற்கும் மேற்பட்ட பல்கலைக்கழக பகிடிவதை சம்பவங்கள் பதிவு</title>
		<link>https://oruvan.com/more-than-30-university-riot-incidents-recorded/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Fri, 20 Jun 2025 11:10:23 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[incidents]]></category>
		<category><![CDATA[recorded]]></category>
		<category><![CDATA[riot]]></category>
		<category><![CDATA[University]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=24130</guid>

					<description><![CDATA[<p>இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 30 இற்கும் மேற்பட்ட பல்கலைக்கழக பகிடிவதை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக குற்ற புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு ,சப்ரகமுவ மற்றும் ஒலுவில் பல்கலைக்கழகங்களில் அதிகளவான பகிடிவதைகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவங்கள் தொடர்பாக விரிவான விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் குற்றவாளிகள் கண்டறியப்பட்டால், 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்கப்படலாம் என குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதேவேளை பகிடிவதை சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடளிக்க, 24 மணிநேரமும் சேவையில் இருக்கும் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/more-than-30-university-riot-incidents-recorded/">30 இற்கும் மேற்பட்ட பல்கலைக்கழக பகிடிவதை சம்பவங்கள் பதிவு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 30 இற்கும் மேற்பட்ட பல்கலைக்கழக பகிடிவதை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக குற்ற புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.</p>
<p>கிழக்கு ,சப்ரகமுவ மற்றும் ஒலுவில் பல்கலைக்கழகங்களில் அதிகளவான பகிடிவதைகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இந்த சம்பவங்கள் தொடர்பாக விரிவான விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் குற்றவாளிகள் கண்டறியப்பட்டால், 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்கப்படலாம் என குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.</p>
<p>இதேவேளை பகிடிவதை சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடளிக்க, 24 மணிநேரமும் சேவையில் இருக்கும் 1997 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தை தொடர்புகொள்ள முடியும்.</p>
<p>இவ்வாறு கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் இரகசியமாக பரிசீலிக்கப்படும் என்பதுடன், உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/more-than-30-university-riot-incidents-recorded/">30 இற்கும் மேற்பட்ட பல்கலைக்கழக பகிடிவதை சம்பவங்கள் பதிவு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
