<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>UN Human Rights Commissioner Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/un-human-rights-commissioner/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/un-human-rights-commissioner/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Wed, 03 Sep 2025 06:03:18 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>UN Human Rights Commissioner Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/un-human-rights-commissioner/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பில் பரிந்துரைகள்</title>
		<link>https://oruvan.com/recommendations-regarding-the-prevention-of-terrorism-act/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Wed, 03 Sep 2025 06:03:18 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[un]]></category>
		<category><![CDATA[UN Human Rights Commissioner]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=31514</guid>

					<description><![CDATA[<p>இலங்கை அரசாங்கம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்வதாக உறுதியளித்த போதிலும், தனி நபர்களை கைது செய்து நீண்ட காலத்திற்கு தடுத்து வைப்பதற்கு இந்தச் சட்டம் தொடர்ந்தும் பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வில் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கைக்கான உயர் ஸ்தானிகரின் அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், அந்த அறிக்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பில் முக்கிய பரிந்துரைகளும் வழங்கப்பட்டுள்ளன. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் பயன்பாட்டை நிறுத்தி வைப்பது, அதை [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/recommendations-regarding-the-prevention-of-terrorism-act/">பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பில் பரிந்துரைகள்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இலங்கை அரசாங்கம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்வதாக உறுதியளித்த போதிலும், தனி நபர்களை கைது செய்து நீண்ட காலத்திற்கு தடுத்து வைப்பதற்கு இந்தச் சட்டம் தொடர்ந்தும் பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வில் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கைக்கான உயர் ஸ்தானிகரின் அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p>
<p>மேலும், அந்த அறிக்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பில் முக்கிய பரிந்துரைகளும் வழங்கப்பட்டுள்ளன.</p>
<p>பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் பயன்பாட்டை நிறுத்தி வைப்பது, அதை ரத்து செய்வது அல்லது சர்வதேச மனித உரிமைகள் சட்டத்திற்கு இணங்க புதிய வரைவுச் சட்டத்தை அறிமுகப்படுத்துவது ஆகியவற்றை விரைவுபடுத்த வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.</p>
<p>பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நீண்ட காலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து சந்தேக நபர்களையும் விடுவிக்கவும் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் பரிந்துரைத்துள்ளார்.</p>
<p>மேலும், குறித்த சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் அல்லது திருத்தங்கள் செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளார்.</p>
<p>மேலும் கருத்துச் சுதந்திரம், அமைதியான கூட்டம் மற்றும் பேச்சு ஆகியவற்றை தேவையற்ற முறையில் கட்டுப்படுத்தும் சட்டங்களை முன்மொழிந்துள்ளார்.</p>
<p>இதற்கிடையில், மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வு எதிர்வரும் எட்டாம் திகதி முதல் ஒக்டோபர் மூன்றாம் திகதி வரை நடைபெறவுள்ளது.</p>
<p>இதில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/recommendations-regarding-the-prevention-of-terrorism-act/">பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பில் பரிந்துரைகள்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>வெளிநாட்டு தூதுவர்கள், மனித உரிமை ஆர்வளர்களை சந்திக்கும் வெளிவிவகார அமைச்சர்</title>
		<link>https://oruvan.com/foreign-minister-meets-foreign-ambassadors-human-rights-activists/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Mon, 01 Sep 2025 05:21:48 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[UN Human Rights Commissioner]]></category>
		<category><![CDATA[UN Human Rights Council]]></category>
		<category><![CDATA[Vijitha Herath]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=31270</guid>

					<description><![CDATA[<p>ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமர்வில் கலந்து கொள்வதற்கு முன்னர், நாட்டிலுள்ள தூதர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களுடன் கலந்துரையாடல்களை நடத்த வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் திட்டமிட்டுள்ளார். இதன்படி, குறித்த விடயத்தில் ஆர்வமுள்ள அறிஞர்கள் மற்றும் சட்டத்தரணிகளை சந்தித்து கலந்துரையாடவும் அமைச்சர் முடிவு செய்துள்ளார். அதன்படி, நாளை முதல் இந்தக் கலந்துரையாடல்கள் ஆரம்பமாகும் என்று தெரிவிக்கப்பட்டது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து மனித உரிமைகள் பிரச்சினைகளைத் தீர்க்க எடுத்த நடவடிக்கைகள் மற்றும் அவற்றின் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/foreign-minister-meets-foreign-ambassadors-human-rights-activists/">வெளிநாட்டு தூதுவர்கள், மனித உரிமை ஆர்வளர்களை சந்திக்கும் வெளிவிவகார அமைச்சர்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமர்வில் கலந்து கொள்வதற்கு முன்னர், நாட்டிலுள்ள தூதர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களுடன் கலந்துரையாடல்களை நடத்த வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் திட்டமிட்டுள்ளார்.</p>
<p>இதன்படி, குறித்த விடயத்தில் ஆர்வமுள்ள அறிஞர்கள் மற்றும் சட்டத்தரணிகளை சந்தித்து கலந்துரையாடவும் அமைச்சர் முடிவு செய்துள்ளார்.</p>
<p>அதன்படி, நாளை முதல் இந்தக் கலந்துரையாடல்கள் ஆரம்பமாகும் என்று தெரிவிக்கப்பட்டது.</p>
<p>தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து மனித உரிமைகள் பிரச்சினைகளைத் தீர்க்க எடுத்த நடவடிக்கைகள் மற்றும் அவற்றின் முன்னேற்றம் குறித்து இராஜதந்திரிகளுக்குத் தெரிவிக்க அமைச்சர் தயாராகியுள்ளார்.</p>
<p>ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் 60வது அமர்வு செப்டம்பர் எட்டாம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இதில் இலங்கை மனித உரிமைகள் குறித்து முக்கிய அறிக்கை வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையர் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த நிலையில், இலங்கை விஜயம் குறித்த அறிக்கையை அவர் வெளியிடவுள்ளார்.</p>
<p>இந்நிலையில், இலங்கை அரசாங்கமும் தனது நிலைப்பாட்டை முன்வைக்க தயாராகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/foreign-minister-meets-foreign-ambassadors-human-rights-activists/">வெளிநாட்டு தூதுவர்கள், மனித உரிமை ஆர்வளர்களை சந்திக்கும் வெளிவிவகார அமைச்சர்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஜெனீவா மனித உரிமைகள் கூட்டத்தொடர் &#8211; இலங்கை தொடர்பில் ஐநா ஆணையர் அறிக்கை</title>
		<link>https://oruvan.com/geneva-human-rights-conference-un-commissioners-statement-on-sri-lanka/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Tue, 12 Aug 2025 07:57:57 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[UN Human Rights Commissioner]]></category>
		<category><![CDATA[UN Human Rights Council]]></category>
		<category><![CDATA[Volker Türk]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=29192</guid>

					<description><![CDATA[<p>சுவிட்ஸர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வில், &#8220;இலங்கையில் மனித உரிமைகள் நிலைமை&#8221; குறித்த தனது அறிக்கையை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையர் வோல்கர் டர்க் சமர்ப்பிக்க உள்ளார். மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வு செப்டம்பர் எட்டாம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், ஒக்டோபர் எட்டாம் திகதி நிறைவடையவுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அலுவலகத்தால் வெளியிடப்பட்ட நிகழ்ச்சி நிரலின்படி, அமர்வின் தொடக்க நாளில் ஆணையர் வோல்கர் டர்க் இலங்கை குறித்த தனது அறிக்கையை [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/geneva-human-rights-conference-un-commissioners-statement-on-sri-lanka/">ஜெனீவா மனித உரிமைகள் கூட்டத்தொடர் &#8211; இலங்கை தொடர்பில் ஐநா ஆணையர் அறிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>சுவிட்ஸர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வில், &#8220;இலங்கையில் மனித உரிமைகள் நிலைமை&#8221; குறித்த தனது அறிக்கையை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையர் வோல்கர் டர்க் சமர்ப்பிக்க உள்ளார்.</p>
<p>மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வு செப்டம்பர் எட்டாம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், ஒக்டோபர் எட்டாம் திகதி நிறைவடையவுள்ளது.</p>
<p>ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அலுவலகத்தால் வெளியிடப்பட்ட நிகழ்ச்சி நிரலின்படி, அமர்வின் தொடக்க நாளில் ஆணையர் வோல்கர் டர்க் இலங்கை குறித்த தனது அறிக்கையை சமர்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையர் வோல்கர் டர்க் ஜூன் மாதம் இலங்கைக்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்தார்.</p>
<p>இந்நிலையில், இலங்ழகையில் தனது அவதானிப்புகளை அறிக்கையில் இணைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>செம்மணி மனித புதைகுழி தளத்திற்கு அவர் மேற்கொண்ட விஜயம் தொடர்பான தகவல்கள் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படும் அறிக்கையில் முக்கியமாக இடம்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.</p>
<p>இதற்கிடையில், அடுத்த மாதம் நடைபெற உள்ள ஐநா மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வில் இலங்கை குறித்த புதிய தீர்மானத்தை முன்வைக்க பிரித்தானியா மற்றும் கனடா திட்டமிட்டுள்ளன.</p>
<p>இதேவேளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அமர்வில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அறிக்கையை வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் சமர்ப்பிக்க உள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/geneva-human-rights-conference-un-commissioners-statement-on-sri-lanka/">ஜெனீவா மனித உரிமைகள் கூட்டத்தொடர் &#8211; இலங்கை தொடர்பில் ஐநா ஆணையர் அறிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இலங்கையின் முயற்சிகளை ஆதரிப்பதாக ஐ.நா மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் தெரிவிப்பு</title>
		<link>https://oruvan.com/un-high-commissioner-for-human-rights-expresses-support-for-sri-lankas-efforts/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Fri, 27 Jun 2025 02:54:35 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Anura Kumara]]></category>
		<category><![CDATA[Anura Kumara Dissanayake]]></category>
		<category><![CDATA[UN Human Rights Commissioner]]></category>
		<category><![CDATA[Volker Türk]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=24744</guid>

					<description><![CDATA[<p>இலங்கையில் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் (Volker Türk) தனது முழு ஆதரவையும் தெரிவித்தார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க், நேற்று (26) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்தபோது இந்தக் கருத்தை வெளியிட்டார். இலங்கையில் தற்போது இடம்பெற்று வரும் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/un-high-commissioner-for-human-rights-expresses-support-for-sri-lankas-efforts/">இலங்கையின் முயற்சிகளை ஆதரிப்பதாக ஐ.நா மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் தெரிவிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இலங்கையில் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் (Volker Türk) தனது முழு ஆதரவையும் தெரிவித்தார்.</p>
<p>இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க், நேற்று (26) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்தபோது இந்தக் கருத்தை வெளியிட்டார்.</p>
<p>இலங்கையில் தற்போது இடம்பெற்று வரும் புதிய அரசியல் மற்றும் சமூக மாற்றத்தைப் பாராட்டிய உயர்ஸ்தானிகர், வடக்கு மற்றும் தெற்கில் உள்ள அனைத்து மக்களும் தற்போதைய ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளனர் என்று தெரிவித்தார்.</p>
<p>தனது இலங்கை விஜயத்தின் போது இலங்கையில் நடைபெற்று வரும் புதிய மாற்றம் குறித்து தெளிவான புரிதலைப் பெற முடிந்ததாகத் தெரிவித்த வோல்கர் டர்க், இன்று நாட்டின் அனைத்து மக்களும் சிறந்த எதிர்காலத்திற்கான புதிய நம்பிக்கைகளைக் கொண்டுள்ளனர் என்று தான் நம்புவதாகவும் கூறினார்.</p>
<p>காணாமல் போனோர் தொடர்பான பிரச்சினை குறித்தும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.</p>
<p>வடக்கு மற்றும் தெற்கில் காணாமல் போனவர்களின் உறவினர்களின் வேதனைகள் ஒரேமாதிரியானவை என்றும் அவர்கள் அரசாங்கத்தின் மீது வைத்திருக்கும் நம்பிக்கைகள் நிறைவேறும் என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் எதிர்பார்க்கிறது என்று உயர்ஸ்தானிகர் மேலும் கூறினார்.</p>
<p>தற்போதைய அரசியல் கலாச்சாரம் காரணமாக மக்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் அவர்களின் உரிமைகள் குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் செயல்படத் தவறியுள்ளதால், காணாமல் போனவர்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான நிறுவன கட்டமைப்பை வலுப்படுத்தி மறுசீரமைக்க வேண்டியதன் அவசியம் தொடர்பாகவும் இதன் போது ஆராயப்பட்டது.</p>
<p>இங்கு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான பிரச்சினையை அனுபவ ரீதியாக எதிர்கொண்ட ஒரு அரசியல் இயக்கமாக தனக்கு அது தொடர்பான புரிதல் இருப்பதாக தெரிவித்தார்.</p>
<p>நாட்டில் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை உறுதி செய்வதற்கும், மனித உரிமைகளைப் பாதுகாக்க தேவையான சீர்திருத்தங்களை செயல்படுத்துவதற்கும் தனது அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.</p>
<p>நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதே தற்போதைய நிலைமையில் அரசாங்கத்தின் பிரதான நோக்கம் என்று கூறிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, சவால்களை நன்கு புரிந்துகொண்டு, அந்த நோக்கத்திற்காக உறுதிபூண்டுள்ளதாகவும், சர்வதேச அளவில் அனைவரின் ஆதரவையும் எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.</p>
<p>இலங்கையின் இந்த உண்மையான நிலைமையை உலகிற்கு கொண்டு செல்வதன் மூலம் சர்வதேச அளவில் இலங்கையின் நற்பெயரை மேம்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளின் ஆதரவு அவசியம் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.</p>
<p>இலங்கைக்கான ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே பிராஞ்ச் (Marc-André Franche), மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் ஆசிய-பசிபிக் பிரிவு பிரதானி ரோரி மங்கோவன் (Rory Mungoven), மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலக அதிகாரி எலேன் சேன் (Elaine Chan), ஐ.நா அலுவலக சிரேஷ்ட மனித உரிமைகள் ஆலோசகர் லைலா நசராலி (Laila Nazarali), அபிவிருத்தி ஒருங்கிணைப்பு அதிகாரி அஸாம் பாக்கீர் மார்கர் (Azam Bakeer Markar), மற்றும் ஊடக மற்றும் தகவல் அதிகாரி அந்தணி ஹெட்லி (Anthony Headley)ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.</p>
<p>இலங்கை அரசாங்கத்தின் சார்பாக நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் ரோஷன் கமகே ஆகியோர் கலந்து கொண்டனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/un-high-commissioner-for-human-rights-expresses-support-for-sri-lankas-efforts/">இலங்கையின் முயற்சிகளை ஆதரிப்பதாக ஐ.நா மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் தெரிவிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஐநா மனித உரிமைகள் ஆணையரின் வருகையை முன்னிட்டு திருகோணமலையில் போராட்டம்</title>
		<link>https://oruvan.com/protest-in-trincomalee-ahead-of-un-human-rights-commissioners-visit/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Wed, 25 Jun 2025 03:28:36 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Trincomalee]]></category>
		<category><![CDATA[UN Human Rights Commissioner]]></category>
		<category><![CDATA[Volker Türk]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=24539</guid>

					<description><![CDATA[<p>ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகரின் திருகோணமலை விஜயத்தை முன்னிட்டு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களின் மனித உரிமை நிலைமைகள் மற்றும் குறைபாடுகளை அவருடைய கவனத்திற்கு கொண்டு செல்லவும் அமைதியான கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்றைய தினம் (25) திருகோணமலையில் மேற்கொள்ளப்பட்டது. குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தினை பாதிக்கப்பட்டவர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கம், சிவில் அமைப்புக்கள் மற்றும் வடக்கு கிழக்கு சமூக இயக்கம் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/protest-in-trincomalee-ahead-of-un-human-rights-commissioners-visit/">ஐநா மனித உரிமைகள் ஆணையரின் வருகையை முன்னிட்டு திருகோணமலையில் போராட்டம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகரின் திருகோணமலை விஜயத்தை முன்னிட்டு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களின் மனித உரிமை நிலைமைகள் மற்றும் குறைபாடுகளை அவருடைய கவனத்திற்கு கொண்டு செல்லவும் அமைதியான கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்றைய தினம் (25) திருகோணமலையில் மேற்கொள்ளப்பட்டது.</p>
<p>குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தினை பாதிக்கப்பட்டவர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கம், சிவில் அமைப்புக்கள் மற்றும் வடக்கு கிழக்கு சமூக இயக்கம் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.</p>
<p>ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டுர்க் திருகோணமலைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் அவருடைய கவனத்தை ஈர்க்கும் முகமாக யுபிலி மண்டபத்தின் முன்பாக காலை 8.00 மணியளவில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.</p>
<p>இதன்போது, “இலங்கையில் தமிழர்களுக்கெதிராக நடைபெற்ற இன அழிப்பை (Genocide) விசாரித்து குற்றவாளிகளை வழக்குப் பூர்வமாக தண்டிக்க ஒரு சர்வதேச குற்றவியல் நீதித்துறை முறைமை அமைக்கப்பட வேண்டும்.</p>
<p>செம்மணி, கொக்குத்தொடுவாய் உள்ளிட்ட இடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட கூட்டு மனித புதை குழி விடயம் தொடர்பாக சர்வதேச நீதிமன்ற மற்றும் நிபுணத்துவ குழுக்களுக்கு அணுகுவதற்கான அனுமதி வழங்கப்பட வேண்டும்.</p>
<p>இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கும் (ICC), அல்லது சர்வதேச நீதிமன்றத்திற்கும் (ICJ) – போர் குற்றங்கள், மனிதத்துக்கு எதிரான குற்றங்கள், மற்றும் இன அழிப்பு குற்றங்கள் ஆகியவற்றுக்காக பரிந்துரை செய்ய வேண்டும்.</p>
<p>தமிழ் மக்கள் பாரம்பரியமாக வாழும் பிரதேசங்களில் அரசால் முன்னெடுக்கப்படும் நில அபகரிப்புகளை உடனடியாக நிறுத்தி, உரிய உரிமையாளர்களுக்கு நிலங்களை மீளளிக்க வேண்டும்.</p>
<p>தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு தளங்களை அழிக்கும் செயற்பாடுகளை (Sinhalisation) நிறுத்த வேண்டும்.</p>
<p>வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே? அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா?</p>
<p>ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உயர் ஆணையாளர் அலுவலகம் (OSLAP) நடத்திய இலங்கை பொறுப்புக்கூறும் திட்டம் – 1948இல் தொடங்கிய தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறையின் மற்றும் இன அழிப்பின் முழு வரலாற்றையும் உள்ளடக்கி அறிக்கையிட வேண்டும்.”<br />
போன்ற கோரிக்கைகளை முன்நிறுத்தி அமைதியான முறையில் கவனயீர்ப்பு நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/protest-in-trincomalee-ahead-of-un-human-rights-commissioners-visit/">ஐநா மனித உரிமைகள் ஆணையரின் வருகையை முன்னிட்டு திருகோணமலையில் போராட்டம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஐநா மனித உரிமைகள் ஆணையரை யாழ்ப்பாணம் வரவிடாமல் தடுக்க பெரும் முயற்சி &#8211; அர்ச்சுனா எம்.பி தகவல்</title>
		<link>https://oruvan.com/major-effort-to-prevent-un-human-rights-commissioner-from-coming-to-jaffna-archchuna-mp-reports/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Mon, 23 Jun 2025 06:50:19 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Archchuna]]></category>
		<category><![CDATA[Ramanathan Archchuna]]></category>
		<category><![CDATA[UN Human Rights Commissioner]]></category>
		<category><![CDATA[Volker Türk]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=24368</guid>

					<description><![CDATA[<p>ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டேர்க் இன்று இலங்கை வரவுள்ள நிலையில், அவரை வடக்கு பகுதிகளுக்கு வரவிடாமல் செய்ய சதி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார். செம்மணி மனிபுதைகுழிக்கு நீதி வேண்டி “அணையா தீபம்” ஏற்றப்பட்டு போராட்டம ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதனர், அர்ச்சுனா இராமநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர். இதன் போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அர்ச்சுனா எம்.பி, “இப்போராட்டமானது அரசியலையும் தாண்டி எங்கள் உறவுகளுக்காக [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/major-effort-to-prevent-un-human-rights-commissioner-from-coming-to-jaffna-archchuna-mp-reports/">ஐநா மனித உரிமைகள் ஆணையரை யாழ்ப்பாணம் வரவிடாமல் தடுக்க பெரும் முயற்சி &#8211; அர்ச்சுனா எம்.பி தகவல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டேர்க் இன்று இலங்கை வரவுள்ள நிலையில், அவரை வடக்கு பகுதிகளுக்கு வரவிடாமல் செய்ய சதி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார்.</p>
<p>செம்மணி மனிபுதைகுழிக்கு நீதி வேண்டி “அணையா தீபம்” ஏற்றப்பட்டு போராட்டம ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதனர், அர்ச்சுனா இராமநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.</p>
<p>இதன் போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அர்ச்சுனா எம்.பி,</p>
<p>“இப்போராட்டமானது அரசியலையும் தாண்டி எங்கள் உறவுகளுக்காக நடக்கின்ற போராட்டம். ஏனெனில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டேர்க் இலங்கைக்கு வருகைதரவுள்ளார்.</p>
<p>முன்னதாக 2011ஆம் ஆண்டும், 2016ஆம் ஆண்டும் ஐநா மனித உரிமைகள் ஆணையர் இலங்கை வந்திருந்தனர். இதில் 2016ஆம் ஆண்டு ஆணையாளரை வடக்கு பகுதிகளுக்கு விரவிடாமல் செய்திருந்தனர்.</p>
<p>அப்போதைய நல்லாட்சி அரசாங்கமும், அதற்கு முட்டுக்கொடுத்தவர்களும் இனப்படுகொலை நடக்கவில்லை என்றே கூறிவிட்டனர். இதன் காரணமாக அவர் அப்போது வடக்கு பகுதிகளுக்கு வந்திருக்கவில்லை.</p>
<p>மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டேர்க் மீளவும் இன்று இலங்கை வருகின்றார். இம்முறையும் மனித உரிமைகள் ஆணையாளரை வடக்கிற்கு வரவிடாமல் செய்ய உச்சகட்ட முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் எம்.பி குறிப்பிட்டார்.</p>
<p>ஆனால் புலம்பெயர் தமிழர்கள் கட்டயாம் யாழ்ப்பாணம் செல்ல வேண்டும் என்ற ஒரு நிலைமைக்கு கொண்டுவந்துள்ளனர்.</p>
<p>இந்நிலையில், நாளை நாடாளுமன்றில் கட்சித் தலைவர்கள் மாத்திரம் சந்திக்கும் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் சிறிதரன் ஐயா மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஐயா உள்ளிட்டவர்களும் கலந்துகொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.</p>
<p>இந்த சந்திப்பில் முள்ளிவாய்க்காலில் நடந்தது இனப்படுகொலை தான் என்பதை அவர்கள் மனித உரிமைகள் ஆணையரிடம் கூற உதவிசெய்ய வேண்டும்.</p>
<p>இதனிடையே, நாளைய தினம் என்னை நாடாளுமன்றம் செல்லவிடாமல் தடுக்க உச்சகட்ட முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. எனினும், நான் கண்டிப்பாக நாடாளுமன்றம் சென்று அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வேன்.</p>
<p>இதன்போது தமிழர்களுக்கு எதிரான நடந்த அனைத்து இனப்படுகொலை சம்பவங்களும் எழுத்து மூலம் அறிவிக்கப்படும் என்பதுடன், அதற்கான முழு ஆவணங்களும் தயார்ப்படுத்தக்கப்பட்டுள்ளன.</p>
<p>எனினும், அதை கொடுக்க கூடாது எனவும் இதனை தடுக்கும் முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அர்ச்சுனா இராமநாதன் எம்.பி மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/major-effort-to-prevent-un-human-rights-commissioner-from-coming-to-jaffna-archchuna-mp-reports/">ஐநா மனித உரிமைகள் ஆணையரை யாழ்ப்பாணம் வரவிடாமல் தடுக்க பெரும் முயற்சி &#8211; அர்ச்சுனா எம்.பி தகவல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
