<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Trincomale Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/trincomale/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/trincomale/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Mon, 23 Mar 2026 07:00:04 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>Trincomale Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/trincomale/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>திருகோணமலை எண்ணெய் குதங்களை துரிதமாகப் புனரமைக்க தீர்மானம்</title>
		<link>https://oruvan.com/resolution-to-expedite-reconstruction-of-trincomalee-oil-fields/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Mon, 23 Mar 2026 07:00:04 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Fuel crisis]]></category>
		<category><![CDATA[Fuel crisis In Sri Lanka]]></category>
		<category><![CDATA[Trincomale]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=47252</guid>

					<description><![CDATA[<p>இலங்கையின் தற்போதைய எரிசக்தி நெருக்கடிக்கு நீண்டகால தீர்வாக, திருகோணமலை எண்ணெய் குதங்களை இந்தியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஒத்துழைப்புடன் துரிதமாகப் புனரமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது குறித்து &#8216;த இந்து&#8217; நாளிதழுக்கு வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் கருத்து வெளியிட்டுள்ளார். திருகோணமலையை ஒரு பிராந்திய எரிசக்தி மையமாக மாற்றுவதன் மூலம், நாட்டின் எரிபொருள் விநியோகச் சவால்களுக்கு நிரந்தர தீர்வை எட்ட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2025 ஏப்ரலில் இலங்கை, இந்தியா மற்றும் ஐக்கிய [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/resolution-to-expedite-reconstruction-of-trincomalee-oil-fields/">திருகோணமலை எண்ணெய் குதங்களை துரிதமாகப் புனரமைக்க தீர்மானம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இலங்கையின் தற்போதைய எரிசக்தி நெருக்கடிக்கு நீண்டகால தீர்வாக, திருகோணமலை எண்ணெய் குதங்களை இந்தியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஒத்துழைப்புடன் துரிதமாகப் புனரமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.</p>
<p>இது குறித்து &#8216;த இந்து&#8217; நாளிதழுக்கு வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் கருத்து வெளியிட்டுள்ளார்.</p>
<p>திருகோணமலையை ஒரு பிராந்திய எரிசக்தி மையமாக மாற்றுவதன் மூலம், நாட்டின் எரிபொருள் விநியோகச் சவால்களுக்கு நிரந்தர தீர்வை எட்ட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>கடந்த 2025 ஏப்ரலில் இலங்கை, இந்தியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளுக்கிடையே கையெழுத்திடப்பட்ட முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.</p>
<p>முன்னர் இத்திட்டத்தில் இந்தியத் தலையீட்டைத் தேசிய மக்கள் சக்தி எதிர்த்து வந்த போதிலும், தற்போதைய உலகளாவிய போர்ச் சூழல் மற்றும் விநியோகப் பாதிப்புகளைக் கருத்திற்கொண்டு, இந்த விவகாரத்தில் கொள்கை மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>தற்போது எரிசக்தி அமைச்சினால் இதற்கான தொழில்நுட்ப அம்சங்கள் மீளாய்வு செய்யப்பட்டு வருவதுடன், விரைவில் கேள்விப்பத்திரங்கள் கோரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>
<p>The post <a href="https://oruvan.com/resolution-to-expedite-reconstruction-of-trincomalee-oil-fields/">திருகோணமலை எண்ணெய் குதங்களை துரிதமாகப் புனரமைக்க தீர்மானம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் &#8211; பலாங்கொட கஸ்ஸப தேரருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்</title>
		<link>https://oruvan.com/trincomalee-buddha-statue-issue-balangoda-kassapa-thero-remanded-in-custody/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Mon, 09 Feb 2026 06:26:04 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Court]]></category>
		<category><![CDATA[Trincomale]]></category>
		<category><![CDATA[திருகோணமலை]]></category>
		<category><![CDATA[நீதிமன்றம்]]></category>
		<category><![CDATA[பலாங்கொட கஸ்ஸப தேரர்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=44755</guid>

					<description><![CDATA[<p>திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட வணக்கத்திற்குரிய பலாங்கொட கஸ்ஸப தேரரை அடுத்த மாதம் 11 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்க திருகோணமலை நீதவான் நீதிமன்றம் இன்று (09) உத்தரவிட்டது. திருகோணமலை நகரின் கடலோரப் பாதுகாப்பு வலயத்திற்குள் அங்கீகரிக்கப்படாத குடிசை கட்டப்பட்டு புத்தர் சிலை வைக்கப்பட்டதாகக் கூறி கடலோரப் பாதுகாப்பு மற்றும் கடலோர வள மேலாண்மை திணைக்களத்தால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டை தொடர்ந்து இந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது. திருகோணமலை, கோட்டை [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/trincomalee-buddha-statue-issue-balangoda-kassapa-thero-remanded-in-custody/">திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் &#8211; பலாங்கொட கஸ்ஸப தேரருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட வணக்கத்திற்குரிய பலாங்கொட கஸ்ஸப தேரரை அடுத்த மாதம் 11 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்க திருகோணமலை நீதவான் நீதிமன்றம் இன்று (09) உத்தரவிட்டது.</p>
<p>திருகோணமலை நகரின் கடலோரப் பாதுகாப்பு வலயத்திற்குள் அங்கீகரிக்கப்படாத குடிசை கட்டப்பட்டு புத்தர் சிலை வைக்கப்பட்டதாகக் கூறி கடலோரப் பாதுகாப்பு மற்றும் கடலோர வள மேலாண்மை திணைக்களத்தால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டை தொடர்ந்து இந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது.</p>
<p>திருகோணமலை, கோட்டை வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜா விகாரையின் தலைவர் வணக்கத்துக்குரிய கல்யாணவங்ச திஸ்ஸ தேரர், வணக்கத்துக்குரிய பலாங்கொட கஸ்ஸப தேரர், வணக்கத்துக்குரிய சுகிதவன்ச திஸ்ஸ தேரர் மற்றும் வணக்கத்துக்குரிய நந்த தேரர் உள்ளிட்ட சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/trincomalee-buddha-statue-issue-balangoda-kassapa-thero-remanded-in-custody/">திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் &#8211; பலாங்கொட கஸ்ஸப தேரருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>திருகோணமலை புத்தர் சிலை சர்ச்சை &#8211; ஆளும் கட்சியின் தமிழ் உறுப்பினர்களை பதவி விலகுமாறு கோரிக்கை</title>
		<link>https://oruvan.com/trincomalee-buddha-statue-controversy-tamil-members-of-the-ruling-party-demanded-to-resign/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Mon, 17 Nov 2025 11:38:44 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[M. A. Sumanthiran]]></category>
		<category><![CDATA[Trincomale]]></category>
		<category><![CDATA[Trincomalee]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=38465</guid>

					<description><![CDATA[<p>திருகோணமலையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள புத்தர் சிலை விவகாரத்தில் சிலையை அதே இடத்தில் மீளவும் நிறுவுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில், தேசிய மக்கள் மக்கள் சக்தி அரசாங்கத்தின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், பிரதி வெளியுறவு அமைச்சருமான அருண் ஹேமச்சந்திரா உட்பட அந்தக் கட்சியின் அனைத்து தமிழ் உறுப்பினர்களும் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று இலங்கை தமிழ் அரசு கட்சி கோரியுள்ளது. இது குறித்து தமிழரசு கட்சியின் பொது செயலாளர் சுமந்திரன் தனது எக்ஸ் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/trincomalee-buddha-statue-controversy-tamil-members-of-the-ruling-party-demanded-to-resign/">திருகோணமலை புத்தர் சிலை சர்ச்சை &#8211; ஆளும் கட்சியின் தமிழ் உறுப்பினர்களை பதவி விலகுமாறு கோரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>திருகோணமலையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள புத்தர் சிலை விவகாரத்தில் சிலையை அதே இடத்தில் மீளவும் நிறுவுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.</p>
<p>இந்நிலையில், தேசிய மக்கள் மக்கள் சக்தி அரசாங்கத்தின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், பிரதி வெளியுறவு அமைச்சருமான அருண் ஹேமச்சந்திரா உட்பட அந்தக் கட்சியின் அனைத்து தமிழ் உறுப்பினர்களும் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று இலங்கை தமிழ் அரசு கட்சி கோரியுள்ளது.</p>
<p>இது குறித்து தமிழரசு கட்சியின் பொது செயலாளர் சுமந்திரன் தனது எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,</p>
<p>அமைச்சர் ஆனந்த விஜயபாலவும் தே. ம. ச. அரசும் பேரினவாத சக்திகளின் அழுத்தங்களுக்கு கோழைத்தனமாக அடிபணிவதை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி கேவலமாகக் காண்கிறது.</p>
<p>நேற்றிரவு அமைச்சரின் கட்டளைப்படி திருகோணமலை கடற்கரையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட சிலை பொலிஸாரினால் அகற்றப்பட்ட போது, அரசாங்கம் இனவாத எண்ணமில்லாமல் சரியாக நடந்து கொள்கிறது என்று சிலர் நினைத்தார்கள்.</p>
<p>ஆனால் அப்படியல்ல என்பதை சில மணி நேரத்துக்குள்ளேயே அமைச்சர் நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தினார்.</p>
<p>பாதுகாப்புக்காகவே சிலை அகற்றப்பட்டதாகவும் அது இன்று மீள நிறுவப்படும் என்றும் வெட்கமில்லாமல் அறிவித்த போதே சகல மக்களும் சமத்துவமாக நடத்தப்படுவார்கள் என்ற வாக்குறுதி காற்றில் பறக்க விடப்பட்டது.</p>
<p>தே. ம. ச. அரசும் முன்னைய அரசுகளைப் போலவே ஒரு இனவாத, சிங்கள பெளத்த பேரினவாத அரசு என்பதை நிறுவியுள்ளது.</p>
<p>அக்கட்சியை சேர்ந்த அனைத்து தமிழ் உறுப்பினர்களும், திருகோணமலை உறப்பினர் அருண் ஹேமச்சந்திரா உட்பட, உடனடியாக இராஜினாமா செய்ய வேண்டும்.</p>
<p>The post <a href="https://oruvan.com/trincomalee-buddha-statue-controversy-tamil-members-of-the-ruling-party-demanded-to-resign/">திருகோணமலை புத்தர் சிலை சர்ச்சை &#8211; ஆளும் கட்சியின் தமிழ் உறுப்பினர்களை பதவி விலகுமாறு கோரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
