<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>transparency Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/transparency/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/transparency/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Sat, 30 Aug 2025 13:24:07 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>transparency Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/transparency/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>டிரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் தலைவர் மற்றும் ஜனாதிபதி செயலாளர் இடையே சந்திப்பு</title>
		<link>https://oruvan.com/meeting-between-transparency-international-president-and-presidential-secretary/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sat, 30 Aug 2025 13:24:07 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[between]]></category>
		<category><![CDATA[International]]></category>
		<category><![CDATA[Meeting]]></category>
		<category><![CDATA[president]]></category>
		<category><![CDATA[Presidential]]></category>
		<category><![CDATA[Secretary]]></category>
		<category><![CDATA[transparency]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=31150</guid>

					<description><![CDATA[<p>இலங்கைக்கு வருகை தந்துள்ள டிரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் தலைவர் பிரான்சுவா வெலரியன் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (29) பிற்பகல் நடைபெற்றது. அரச மற்றும் தனியார் துறைகளில் ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கான அரசாங்கத்தின் தொடர்ச்சியான முயற்சிகளை பிரான்சுவா வெலரியனுக்கு விளக்கிய ஜனாதிபதியின் செயலாளர், ஊழல் எதிர்ப்பு இயந்திரத்தை வலுப்படுத்த அரசாங்கம் பல புதிய திட்டங்களைத் தொடங்கியுள்ளது என்றும் அவை ஏற்கனவே குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காட்டியுள்ளன என்றும் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/meeting-between-transparency-international-president-and-presidential-secretary/">டிரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் தலைவர் மற்றும் ஜனாதிபதி செயலாளர் இடையே சந்திப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இலங்கைக்கு வருகை தந்துள்ள டிரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் தலைவர் பிரான்சுவா வெலரியன் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (29) பிற்பகல் நடைபெற்றது.</p>
<p>அரச மற்றும் தனியார் துறைகளில் ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கான அரசாங்கத்தின் தொடர்ச்சியான முயற்சிகளை பிரான்சுவா வெலரியனுக்கு விளக்கிய ஜனாதிபதியின் செயலாளர்,<br />
ஊழல் எதிர்ப்பு இயந்திரத்தை வலுப்படுத்த அரசாங்கம் பல புதிய திட்டங்களைத் தொடங்கியுள்ளது என்றும் அவை ஏற்கனவே குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காட்டியுள்ளன<br />
என்றும் குறிப்பிட்டார்.</p>
<p>இலஞ்சம் மற்றும் ஊழலை ஒழித்தல்,அரச நிதியை திறம்பட பயன்படுத்துவதை உறுதி செய்தல் மற்றும் நாட்டில் சிறந்த கலாச்சாரத்தை உருவாக்குதல் ஆகிய பரந்த நோக்கங்களுடன் இலஞ்சம் மற்றும் ஊழல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் கூறினார்.</p>
<p>இலஞ்சம் மற்றும் ஊழலைத் தடுக்க அரச நிறுவனங்களுக்குள் உள் விவகாரப் பிரிவுகளை நிறுவுவதையும், கிளீன் ஶ்ரீலங்கா திட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளையும் பாராட்டிய டிரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனலின் தலைவர், ஊழல் எதிர்ப்பு இலக்குகளை முன்னேற்றுவதில் அரசாங்கமும் சிவில் சமூகமும் இணைந்து செயல்படுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.</p>
<p>இலங்கையின் ஊழல் எதிர்ப்புத் திட்டத்திற்கு தொடர்ந்து ஆதரவளிக்க டிரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் உறுதிபூண்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/meeting-between-transparency-international-president-and-presidential-secretary/">டிரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் தலைவர் மற்றும் ஜனாதிபதி செயலாளர் இடையே சந்திப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என ஐ.நா வலியுறுத்தல்</title>
		<link>https://oruvan.com/un-urges-transparency-in-easter-sunday-attacks/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Tue, 22 Apr 2025 05:16:24 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[attacks]]></category>
		<category><![CDATA[Easter]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Sunday]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<category><![CDATA[transparency]]></category>
		<category><![CDATA[un]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=17936</guid>

					<description><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஆறு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இலங்கையில் நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் நீடித்த அமைதிக்கான தனது அழைப்பை ஐக்கிய நாடுகள் சபை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் இன்னும் பதில்களுக்காகக் காத்திருப்பதாகவும், இடம்பெற்று வரும் விசாரணைகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் உரிய செயன்முறையை நிலைநிறுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்துவதாகவும் ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்ச் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெற்று நேற்றுடன் 06 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/un-urges-transparency-in-easter-sunday-attacks/">உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என ஐ.நா வலியுறுத்தல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஆறு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இலங்கையில் நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் நீடித்த அமைதிக்கான தனது அழைப்பை ஐக்கிய நாடுகள் சபை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.</p>
<p>பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் இன்னும் பதில்களுக்காகக் காத்திருப்பதாகவும், இடம்பெற்று வரும் விசாரணைகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் உரிய செயன்முறையை நிலைநிறுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்துவதாகவும் ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்ச் தெரிவித்துள்ளார்.</p>
<p>உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெற்று நேற்றுடன் 06 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.</p>
<p>2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று சஹரான் ஹாஷிம் தலைமையிலான தீவிரவாதிகளால் 08 இடங்களில் 10 தற்கொலைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.</p>
<p>கொச்சிக்கடையில் உள்ள புனித அந்தோனியார் தேவாலயம், கட்டுவாபிட்டியில் உள்ள புனித செபஸ்தியன் தேவாலயம், மட்டக்களப்பில் உள்ள சியோன் தேவாலயம், அதேபோன்று ஷங்ரி-லா, கிங்ஸ்பெரி மற்றும் சினமன் கிராண்ட் ஹோட்டல்களிலும் குண்டுவெடிப்புகள் நடத்தப்பட்டன.</p>
<p>தெமட்டகொடை மற்றும் தெஹிவளையில் மேலும் இரண்டு தற்கொலை குண்டுவெடிப்புகள் மேற்கொள்ளப்பட்டன.</p>
<p>இந்த தாக்குதல்களால் 273 பேர் உயிரிழந்ததுடன் 500 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.</p>
<p>உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம்(CID) ஒப்படைக்கப்பட்டுள்ளது.</p>
<p>ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் உத்தரவிற்கமைய ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமநாயக்க அறிக்கையை ஒப்படைத்தார்.</p>
<p>அறிக்கை சரியான நேரத்தில் பொதுமக்களுக்கு வெளியிடப்படும் என்று அமைச்சர் விஜேபால உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/un-urges-transparency-in-easter-sunday-attacks/">உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என ஐ.நா வலியுறுத்தல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
