<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>thanks Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/thanks/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/thanks/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Tue, 17 Feb 2026 12:32:25 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>thanks Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/thanks/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>சமூக மீட்பு பணிகளில் ஐக்கிய இராச்சியத்தின் முழுமையான ஆதரவுக்கு ஜனாதிபதி நன்றி</title>
		<link>https://oruvan.com/president-thanks-uk-for-full-support-in-community-recovery-efforts/</link>
		
		<dc:creator><![CDATA[Diluksha]]></dc:creator>
		<pubDate>Tue, 17 Feb 2026 12:32:25 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[president]]></category>
		<category><![CDATA[thanks]]></category>
		<category><![CDATA[UK]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=45275</guid>

					<description><![CDATA[<p>ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும், இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய இராச்சியத்தின் துணைப் பிரதமர் டேவிட் லம்மிக்கும் (David Lammy) இடையிலான சந்திப்பு இன்று (17) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. கடந்த பொருளாதார நெருக்கடி மற்றும் அண்மையில் ஏற்பட்ட &#8216;டிட்வா&#8217; புயலுக்கு பின்னர் நாடு மீண்டெழுந்து வரும் வேளையில், இலங்கைக்கு வருகை தந்தமைக்காக துணைப் பிரதமருக்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்தார். துணைப் பிரதமரின் இந்த விஜயம், இலங்கையின் மீளக் கட்டியெழுப்பும் பணிகள் மீதான சர்வதேச நம்பிக்கையை [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/president-thanks-uk-for-full-support-in-community-recovery-efforts/">சமூக மீட்பு பணிகளில் ஐக்கிய இராச்சியத்தின் முழுமையான ஆதரவுக்கு ஜனாதிபதி நன்றி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும், இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய இராச்சியத்தின் துணைப் பிரதமர் டேவிட் லம்மிக்கும் (David Lammy) இடையிலான சந்திப்பு இன்று (17) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.</p>
<p>கடந்த பொருளாதார நெருக்கடி மற்றும் அண்மையில் ஏற்பட்ட &#8216;டிட்வா&#8217; புயலுக்கு பின்னர் நாடு மீண்டெழுந்து வரும் வேளையில்,<br />
இலங்கைக்கு வருகை தந்தமைக்காக துணைப் பிரதமருக்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.</p>
<p>துணைப் பிரதமரின் இந்த விஜயம், இலங்கையின் மீளக் கட்டியெழுப்பும் பணிகள் மீதான சர்வதேச நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்திருப்பதாகவும் ஜனாதிபதி கூறினார்.</p>
<p>அத்துடன், &#8216;டிட்வா&#8217; புயலால் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் மற்றும் முன்னெடுக்கப்பட்டு வரும் மீளக் கட்டியெழுப்பும் பணிகள் குறித்து துணைப் பிரதமருக்கு தெளிவுபடுத்திய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அதற்காகத் தேவையான அந்நியச் செலாவணியை ஈட்டுவதற்கு சுற்றுலாத்துறை, ஏற்றுமதி மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிக்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.</p>
<p>இதில் அனைத்து நட்பு நாடுகளின் ஆதரவையும் எதிர்பார்ப்பதாகவும், ஐக்கிய இராச்சியம் இதில் ஒரு தனித்துவமான பங்களிப்பினை வகிக்க முடியும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.</p>
<p>ஐக்கிய இராச்சியம் மற்றும் இலங்கைக்கும் இடையே நிலவும் நீண்டகால நட்புறவை நினைவு கூர்ந்த ஜனாதிபதி, சுற்றுலாத் துறை மற்றும் ஏற்றுமதிச் சந்தையில் ஐக்கிய இராச்சியம் வழங்கி வரும் பாரிய பங்களிப்பைப் பாராட்டினார்.</p>
<p>குறிப்பாக, சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டம் மற்றும் கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகளின் போதும், இலங்கையின் ஆடை ஏற்றுமதிக்காக விதிக்கப்பட்டிருந்த தீர்வை வரியினை நீக்கி, வழங்கிய விசேட ஆதரவிற்கும் தனது நன்றியினைத் தெரிவித்தார்.</p>
<p>ஐக்கிய இராச்சியம் மற்றும் இலங்கை இடையிலான பிணைப்பு மிகவும் விசேடமானது எனக் குறிப்பிட்ட துணைப் பிரதமர் டேவிட் லம்மி, இலங்கைக்கு மிக நெருக்கமான நாடாகச் செயற்படுவதை எப்போதும் உயர்வாகக் கருதுவதாகத் தெரிவித்தார்.</p>
<p>அத்துடன், இலங்கை தற்போது முன்னெடுத்து வரும் பொருளாதார மற்றும் சமூக மாற்றங்களுக்காகத் தனது நாடு தொடர்ச்சியான ஆதரவை வழங்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.</p>
<p>இலங்கையின் மீளக் கட்டியெழுப்பும் பணிகள், மனித உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் நல்லிணக்கத்திற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் சாதகமான வேலைத்திட்டத்திற்கு ஐக்கிய இராச்சியத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும் என்றும் துணைப் பிரதமர் உறுதியளித்தார்.</p>
<p>போருக்குப் பின்னர் இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவதில் தற்போதைய அரசாங்கம் பின்பற்றும் வேலைத்திட்டங்கள் மற்றும் மக்களுக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள விரிவான அபிவிருத்திப் பணிகள் குறித்தும் பாராட்டுத் தெரிவித்த அவர், அவற்றுக்கும் ஆதரவு வழங்குவதாகக் குறிப்பிட்டார்.</p>
<p>இந்தச் சந்திப்பில் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அண்ட்ரூ பெட்ரிக் (Andrew Patrick), துணைப் பிரதமரின் சர்வதேச பிரிவின் தலைவர் டேவிட் மேயர் (David Meyer) உள்ளிட்ட பிரித்தானிய தூதுக்குழுவினரும், இலங்கை அரசாங்கத்தின் சார்பில் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே ஆகியோரும் கலந்துகொண்டனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/president-thanks-uk-for-full-support-in-community-recovery-efforts/">சமூக மீட்பு பணிகளில் ஐக்கிய இராச்சியத்தின் முழுமையான ஆதரவுக்கு ஜனாதிபதி நன்றி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஜனாதிபதி அனுரவுக்கு மனமார்ந்த நன்றி &#8211; ஜெலென்ஸ்கி</title>
		<link>https://oruvan.com/zelenskyy-thanks-sri-lankan-president/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Mon, 25 Aug 2025 06:22:59 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[president]]></category>
		<category><![CDATA[Sri Lankan]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<category><![CDATA[thanks]]></category>
		<category><![CDATA[Zelenskyy]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=30598</guid>

					<description><![CDATA[<p>உக்ரைனின் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் வாழ்த்துக்களுக்கு உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி நன்றி தெரிவித்துள்ளார். சமூக ஊடக தளமான ‘எக்ஸ்’ இல், இலங்கையின் தொடர்ச்சியான ஆதரவிற்கு நன்றி தெரிவித்த ஜெலென்ஸ்கி, இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை வலியுறுத்தினார். இது தொடர்பில் ஜெலென்ஸ் மேலும் பதிவிட்டிருப்பதாவது, &#8220;உக்ரைனின் சுதந்திர தினத்தன்று அன்பான மற்றும் நேர்மையான வாழ்த்துக்களுக்கு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு நான் நன்றி கூறுகிறேன். பரஸ்பர மரியாதை மற்றும் அமைதி மற்றும் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/zelenskyy-thanks-sri-lankan-president/">ஜனாதிபதி அனுரவுக்கு மனமார்ந்த நன்றி &#8211; ஜெலென்ஸ்கி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>உக்ரைனின் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் வாழ்த்துக்களுக்கு உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி நன்றி தெரிவித்துள்ளார்.</p>
<p>சமூக ஊடக தளமான ‘எக்ஸ்’ இல், இலங்கையின் தொடர்ச்சியான ஆதரவிற்கு நன்றி தெரிவித்த ஜெலென்ஸ்கி, இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை வலியுறுத்தினார்.</p>
<p>இது தொடர்பில் ஜெலென்ஸ் மேலும் பதிவிட்டிருப்பதாவது,</p>
<p>&#8220;உக்ரைனின் சுதந்திர தினத்தன்று அன்பான மற்றும் நேர்மையான வாழ்த்துக்களுக்கு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு நான் நன்றி கூறுகிறேன்.</p>
<p>பரஸ்பர மரியாதை மற்றும் அமைதி மற்றும் செழிப்புக்கான பகிரப்பட்ட அர்ப்பணிப்பின் அடிப்படையில் இலங்கையுடனான நட்புறவுகள் மற்றும் ஒத்துழைப்பை உக்ரைன் மதிக்கிறது.</p>
<p>இரு நாடுகளுக்கும் நன்மைகளைத் தரும் வகையில், எங்கள் உறவுகள் மேலும் வளர்ச்சிக்கு சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளன என்று நாங்கள் நம்புகிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>உக்ரைன் தலைவருக்கு அனுப்பிய முறையான கடிதத்தில், ஜனாதிபதி இருதரப்பு உறவுகளை ஆழப்படுத்துவதற்கான இலங்கையின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/zelenskyy-thanks-sri-lankan-president/">ஜனாதிபதி அனுரவுக்கு மனமார்ந்த நன்றி &#8211; ஜெலென்ஸ்கி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஜனாதிபதியின் அடுத்த விஜயம் சீனாவுக்கு</title>
		<link>https://oruvan.com/president-thanks-the-chinese-government/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Wed, 18 Dec 2024 13:27:56 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Chinese]]></category>
		<category><![CDATA[Government]]></category>
		<category><![CDATA[president]]></category>
		<category><![CDATA[thanks]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=3092</guid>

					<description><![CDATA[<p>கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கியமை மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கைக்கு கடன் பெற்றுக்கொடுத்தமைக்காக சீன அரசாங்கத்துக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நன்றி தெரிவித்தார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் சீன மக்கள் குடியரசின் அரசியல் ஆலோசனை சம்மேளன (CPPCC) தேசியக் குழுவின் உப தலைவர் கின் பொயோங் (Qin Boyong) ஆகியோருக்கு இடையில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று (18.12) நடைபெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி நன்றித் தெரிவித்தார். சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் காணப்படும் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/president-thanks-the-chinese-government/">ஜனாதிபதியின் அடுத்த விஜயம் சீனாவுக்கு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கியமை மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்<br />
இலங்கைக்கு கடன் பெற்றுக்கொடுத்தமைக்காக சீன அரசாங்கத்துக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நன்றி தெரிவித்தார்.</p>
<p>ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் சீன மக்கள் குடியரசின் அரசியல் ஆலோசனை சம்மேளன (CPPCC) தேசியக் குழுவின் உப தலைவர்<br />
கின் பொயோங் (Qin Boyong) ஆகியோருக்கு இடையில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று (18.12) நடைபெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி நன்றித் தெரிவித்தார்.</p>
<p>சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் காணப்படும் நீண்டகால உறவுகளை மேலும் வலுப்படுத்தி, புதிய அரசாங்கத்துடன் தொடர்ந்தும் செயற்பட எதிர்பார்த்திருப்பதாகவும் கின் பொயோங் தெரிவித்தார்.</p>
<p>அதேபோல் நாட்டின் அனர்த்த நிலைமைகளின் போது உதவிகளை வழங்கியமை மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு சீருடைகளை வழங்கியமைக்காகவும் நன்றி கூறிய ஜனாதிபதி சீன அரசாங்கத்தின் ஒத்துழைப்பை தொடர்ந்தும் எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.</p>
<p>இடைநடுவில் நிறுத்தப்பட்டிருக்கும் மத்திய அதிவேக வீதியில் சீனாவிற்கு பொறுப்பான பகுதிகளை நிறைவு செய்ய வேண்டுமென வலியுறுத்திய ஜனாதிபதி, கொழும்பு துறைமுக நகரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தை மையப்படுத்தி விநியோக மத்தியஸ்தானம் மற்றும் நிறுவன வேலைத்திட்டங்களை விரைவாக ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.</p>
<p>குறித்த வேலைத்திட்டங்களை ஆரம்பிக்கவும், பல்வேறு காரணங்களுக்காக இடைநடுவில் நிறுத்தப்பட்டிருக்கும் சமுத்திர ஆய்வு பணிகளை மீள ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாகவும் உப தலைவர் இதன்போது கூறினார்.</p>
<p>அத்தோடு, ஹம்பாந்தோட்டை முதலீட்டு வலயத்தை அண்மித்து சீன நிறுவனங்களை அமைத்து உலக அளவில் இலங்கைக்கு மிகச் சிறந்ததொரு பிரவேசத்தை ஏற்படுத்தித் கொடுக்க எதிர்பார்த்திருப்பதுடன்,எதிர்வரும் காலங்களில் சீனாவுக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவிருக்கும் ஜனாதிபதியை வரவேற்பதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.</p>
<p>வௌிநாட்டு அலுவல்கள், வௌிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், பிரதி சபாநாயகர் வைத்தியர் ரிஷ்வி சாலி, சீன மக்கள் குடியரசின் அரசியல் ஆலோசனைக் குழுவின் உறுப்பினர் மா யூசியாங் (Ma Youxiang) ஆகியோர் இதன்போது கலந்துகொண்டனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/president-thanks-the-chinese-government/">ஜனாதிபதியின் அடுத்த விஜயம் சீனாவுக்கு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
