<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Telangana Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/telangana/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/telangana/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Mon, 03 Nov 2025 06:47:20 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>Telangana Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/telangana/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>தெலங்கானாவில் கோர விபத்து &#8211; 20 பேர் உயிரிழப்பு</title>
		<link>https://oruvan.com/20-killed-in-road-accident-in-telangana/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Mon, 03 Nov 2025 06:47:20 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[#oruvan #news]]></category>
		<category><![CDATA[Telangana]]></category>
		<category><![CDATA[தெலங்கானா]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=37190</guid>

					<description><![CDATA[<p>இந்தியா &#8211; தெலங்கானாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று மாத பெண் குழந்தை உட்பட 20 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரங்காரெட்டி மாவட்டம் செவெல்லா அருகே மிர்ஜாகுடா &#8211; கானாபூர் சாலையில் இன்று காலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. பேருந்து ஒன்றின் மீது லொறி மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இரு சக்கர வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது டிப்பர் லொறி பேருந்து மீது மோதியதாகக் கூறப்படுகிறது. இந்த கோர விபத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளதாக செவெல்லா [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/20-killed-in-road-accident-in-telangana/">தெலங்கானாவில் கோர விபத்து &#8211; 20 பேர் உயிரிழப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இந்தியா &#8211; தெலங்கானாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று மாத பெண் குழந்தை உட்பட 20 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>ரங்காரெட்டி மாவட்டம் செவெல்லா அருகே மிர்ஜாகுடா &#8211; கானாபூர் சாலையில் இன்று காலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. பேருந்து ஒன்றின் மீது லொறி மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.</p>
<p>இரு சக்கர வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது டிப்பர் லொறி பேருந்து மீது மோதியதாகக் கூறப்படுகிறது.</p>
<p>இந்த கோர விபத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளதாக செவெல்லா அரசு வைத்தியசாலை உறுதிப்படுத்தியுள்ளது, காயமடைந்தவர்கள் அருகிலுள்ள வைத்தியசாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.</p>
<p>இதுகுறித்து செவெல்லா அரசு வைத்திசாலையின் கண்காணிப்பாளர் இராஜேந்திர பிரசாத் கருத்து வெளியிடுகையில், விபத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளமையை உறுதிப்படுத்தியுள்ளார்.</p>
<p>அவர்களின் உடல்கள் எங்கள் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளன. பிரேதப் பரிசோதனை நடைமுறைகள் முடிந்த பிறகு உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும்.</p>
<p>சிறு காயங்களுடன் உள்ள ஆறு பயணிகள் செவெல்லா சமூக சுகாதார மையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலத்த காயங்களுடன் உள்ளவர்கள் பட்டினம் மஹிந்திரா ரெட்டி வைத்தியசாலை மற்றும் பாஸ்கர் பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.</p>
<p>இந்த நிலையில், விபத்தில் காயமடைந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க ஹைதராபாத்தில் உள்ள காந்தி வைத்தியசாலை மற்றும் உஸ்மானியா பொது வைத்தியசாலைகளில் ஏற்பாடுகள் செய்யுமாறு அதிகாரிகளுக்கு தெலங்கானா முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.</p>
<p>உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்த அவர், ஆபத்தான நிலையில் உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ குழுக்கள் தயாராக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/20-killed-in-road-accident-in-telangana/">தெலங்கானாவில் கோர விபத்து &#8211; 20 பேர் உயிரிழப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தெலுங்கானாவில் பறவைக் காய்ச்சல் காரணமாக 8,000 கோழிகள் உயிரிழப்பு</title>
		<link>https://oruvan.com/8000-chickens-die-due-to-bird-flu-in-telangana/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Tue, 04 Mar 2025 11:19:25 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[chickens]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<category><![CDATA[Telangana]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=13173</guid>

					<description><![CDATA[<p>இந்தியாவின் தெலுங்கானாவில் பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 08 ஆயிரம் கோழிகள் பரிதாபமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. ஆந்திராவின் கிருஷ்ணா, கோதாவரி மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான பண்ணை கோழிகள் கடந்த மாதம் உயிரிழந்தன. பறவைக் காய்ச்சலே இதற்கு காரணம் என இரத்தப் பரிசோதனையில் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, அந்த மாவட்டங்களில் பண்ணை கோழிகள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, தமிழகம், கர்நாடகா, தெலுங்கானாவிலும் ஆந்திராவின் கோழிகள் விற்பனை ஆகவில்லை. இதனால் இந்த வியாபாரத்தில் பெரும் நட்டம் ஏற்பட்டுள்ளது. தெலுங்கானா மாநில எல்லைகளில் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/8000-chickens-die-due-to-bird-flu-in-telangana/">தெலுங்கானாவில் பறவைக் காய்ச்சல் காரணமாக 8,000 கோழிகள் உயிரிழப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இந்தியாவின் தெலுங்கானாவில் பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 08 ஆயிரம் கோழிகள் பரிதாபமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.</p>
<p>ஆந்திராவின் கிருஷ்ணா, கோதாவரி மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான பண்ணை கோழிகள் கடந்த மாதம் உயிரிழந்தன.</p>
<p>பறவைக் காய்ச்சலே இதற்கு காரணம் என இரத்தப் பரிசோதனையில் உறுதிசெய்யப்பட்டுள்ளது.</p>
<p>இதனைத்தொடர்ந்து, அந்த மாவட்டங்களில் பண்ணை கோழிகள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது.</p>
<p>இதன் தொடர்ச்சியாக, தமிழகம், கர்நாடகா, தெலுங்கானாவிலும் ஆந்திராவின் கோழிகள் விற்பனை ஆகவில்லை. இதனால் இந்த வியாபாரத்தில் பெரும் நட்டம் ஏற்பட்டுள்ளது.</p>
<p>தெலுங்கானா மாநில எல்லைகளில் 24 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து ஆந்திர மாநில கோழிகளை தெலுங்கானாவுக்குள் அனுமதிக்காமல் தடுத்தனர்.</p>
<p>ஆனாலும், தெலுங்கானா மாநில எல்லையில் கம்மம் மாவட்டத்தில் கடந்த மாதம் பறவை காய்ச்சல் பரவியது.</p>
<p>இதனைத் தொடர்ந்து, வாரங்கல், நல்கொண்டா, சூர்யாபேட்டை, மேதக் உள்ளிட்ட மாவட்டங்களில் பறவை காய்ச்சலால் பண்ணை கோழிகளின் உயிரிழப்பு அதிகரித்தது.</p>
<p>இந்நிலையில், நேற்று சங்காரெட்டி, மேதக் மாவட்டங்களில் பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 08 ஆயிரம் பண்ணைக் கோழிகள் பரிதாபமாக உயிரிழந்தன.</p>
<p>இப்பகுதிகளில் கோழிக்கறி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இறந்த கோழிகளின் இரத்தம், பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/8000-chickens-die-due-to-bird-flu-in-telangana/">தெலுங்கானாவில் பறவைக் காய்ச்சல் காரணமாக 8,000 கோழிகள் உயிரிழப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
