<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>tax Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/tax/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/tax/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Sun, 09 Nov 2025 06:11:00 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>tax Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/tax/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>வரி வரம்புகளை குறைக்கும் அரசாங்கம் &#8211; பொருட்களின் விலை அதிகரிக்கும் சாத்தியம்</title>
		<link>https://oruvan.com/government-to-reduce-tax-thresholds-price-of-goods-likely-to-increase/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Sun, 09 Nov 2025 06:11:00 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[#oruvan #news]]></category>
		<category><![CDATA[budget 2026]]></category>
		<category><![CDATA[Colombo]]></category>
		<category><![CDATA[tax]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=37750</guid>

					<description><![CDATA[<p>மதிப்பு கூட்டப்பட்ட வரி மற்றும் சமூகப் பாதுகாப்பு வரியின் பதிவு வரம்பைக் குறைக்கும் அரசாங்கத்தின் திட்டத்துடன், சுமார் 25,000 முதல் 30,000 புதிய வரி கோப்புகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 150 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான வருவாயை இலக்காகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2026 வரவு செலவுத் திட்டத்தில் மதிப்பு கூட்டப்பட்ட வரி (VAT) மற்றும் சமூகப் பாதுகாப்புவரி (SSCL) ஆகியவற்றின் வருடாந்திர வரம்புகள்60 மில்லியன் ரூபாவில் இருந்து 36 மில்லியன் ரூபாவாகக் குறைக்கப்படும் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/government-to-reduce-tax-thresholds-price-of-goods-likely-to-increase/">வரி வரம்புகளை குறைக்கும் அரசாங்கம் &#8211; பொருட்களின் விலை அதிகரிக்கும் சாத்தியம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>மதிப்பு கூட்டப்பட்ட வரி மற்றும் சமூகப் பாதுகாப்பு வரியின் பதிவு வரம்பைக் குறைக்கும் அரசாங்கத்தின் திட்டத்துடன், சுமார் 25,000 முதல் 30,000 புதிய வரி கோப்புகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p>
<p>150 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான வருவாயை இலக்காகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>2026 வரவு செலவுத் திட்டத்தில் மதிப்பு கூட்டப்பட்ட வரி (VAT) மற்றும் சமூகப் பாதுகாப்புவரி (SSCL) ஆகியவற்றின் வருடாந்திர வரம்புகள்60 மில்லியன் ரூபாவில் இருந்து 36 மில்லியன் ரூபாவாகக் குறைக்கப்படும் என்று முன்மொழியப்பட்டுள்ளது.</p>
<p>இதையொட்டி, வரி வலையின் கீழ் உள்ள மளிகைக் கடைகள் உட்பட சிறு மற்றும் நடுத்தர வணிக நிறுவனங்கள், நாள் ஒன்றுக்கு சராசரியாக 100,000 ரூபாவிற்கு விற்பனை நடவடிக்கைகளில் ஈடுபட்டால், தற்போது வரிக்கு பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும்.</p>
<p>இதன் மூலம் ஏற்படும் வரிச்சுமை நுகர்வோர் மீது சுமத்தப்படும். இந்த வரவு செலவுத் திட்டம், நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டதும், அடுத்த ஆண்டு ஏப்ரல் ஒன்று முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>உள்நாட்டு வருவாய்த் துறையின் (IRD) மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், வர்த்தகர்கள் வரியை நுகர்வோர் மீது சுமத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படவில்லை என்றாலும், அது தவிர்க்க முடியாதது என கூறியுள்ளார்.</p>
<p>கடந்த ஆண்டு உள்நாட்டு வருவாய்த் துறையின் இலக்கு 2,085 பில்லியன் ரூபாவாக இருந்தது என்றும், இதுவரை இலக்கில் 88 சதவீதம் எட்டப்பட்டுள்ளதாகவும், நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைய முடியும் என்ற எதிர்பார்ப்பு இருப்பதாகவும் அவர் கூறினார்.</p>
<p>இலக்கு வைக்கப்பட்ட துறைகளில் சிறிய அளவிலான ஹோட்டல்களும் அடங்கும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>உள்நாட்டு வருவாய்த் துறை பணியாளர் அதிகாரிகள் சங்கத்தின் செயலாளரும் மூத்த துணை ஆணையருமான ஜே.டி. சந்தன, சமூகப் பாதுகாப்பு வரி செலுத்துவதைத் தவிர்த்து வந்த வாகன இறக்குமதியாளர்களும் புதிய வரி நடவடிக்கைகளின் கீழ் வரியைச் செலுத்த வேண்டியிருக்கும் என்று அவர் கூறினார்.</p>
<p>வாகனங்களை இறக்குமதி செய்யும் போது அல்லது தயாரித்து விற்பனை செய்யும் போது சமூகப் பாதுகாப்பு வரி வசூலிக்கப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/government-to-reduce-tax-thresholds-price-of-goods-likely-to-increase/">வரி வரம்புகளை குறைக்கும் அரசாங்கம் &#8211; பொருட்களின் விலை அதிகரிக்கும் சாத்தியம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ட்ரம்பின் வரிக்கொள்கைகளால் அமெரிக்க நிறுவனங்கள் பெரும் பாதிப்பு</title>
		<link>https://oruvan.com/us-companies-hit-hard-by-trumps-tax-policies/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sat, 02 Aug 2025 11:37:38 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[companies]]></category>
		<category><![CDATA[policies]]></category>
		<category><![CDATA[tax]]></category>
		<category><![CDATA[Trump]]></category>
		<category><![CDATA[US]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=28300</guid>

					<description><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரிக்கொள்கைகளால் அமெரிக்க நிறுவனங்கள் பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வெளிநாட்டு உற்பத்தியை கட்டுப்படுத்தும் நோக்கத்தில், சீனா, இந்தியா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு ட்ரம்ப் புதிய வரிகளை அறிவித்துள்ளார். இதனால் அமெரிக்க நிறுவனங்கள் பாரிய செலவுகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த காலாண்டில் மட்டும் 800 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பு ஏற்பட்டதாக தெரிவித்த ஆப்பிளின் தலைமை பணிப்பாளர் எதிர்வரும் காலாண்டில் இது [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/us-companies-hit-hard-by-trumps-tax-policies/">ட்ரம்பின் வரிக்கொள்கைகளால் அமெரிக்க நிறுவனங்கள் பெரும் பாதிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரிக்கொள்கைகளால் அமெரிக்க நிறுவனங்கள் பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>வெளிநாட்டு உற்பத்தியை கட்டுப்படுத்தும் நோக்கத்தில், சீனா, இந்தியா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு ட்ரம்ப் புதிய வரிகளை அறிவித்துள்ளார்.</p>
<p>இதனால் அமெரிக்க நிறுவனங்கள் பாரிய செலவுகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.</p>
<p>கடந்த காலாண்டில் மட்டும் 800 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பு ஏற்பட்டதாக தெரிவித்த ஆப்பிளின் தலைமை பணிப்பாளர் எதிர்வரும் காலாண்டில் இது 1.1 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிக்கலாம் என தெரிவித்துள்ளார்.</p>
<p>தற்போது அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் பல ஐபோன்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன. ஆனால் இந்தியாவுக்கும் 25 வீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.</p>
<p>அமெரிக்க நிறுவனங்கள், சீனாவைத் தவிர்த்து வியட்நாம், தாய்லாந்து போன்ற நாடுகளுக்குச் சென்றாலும், அந்த நாடுகளிலிருந்து மாற்று நாட்டு வழியாக ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கும் 40 வீதம் வரி விதிக்கப்படுகிறது.</p>
<p>உலகின் முக்கிய சில்லுகள் தயாரிக்கப்படும் தாய்வான், தற்போது 20 வீதம் வரிக்கு உட்பட்டுள்ளது. வுளுஆஊ, Nஎனையை போன்றநிறுவனங்கள் இந்த வரிகளால் நேரடி தாக்கத்தை எதிர்கொள்கின்றன.</p>
<p>வரிகள் தொடர்பில் தெளிவாக அறிவிக்கப்படாத நிலையில், அமேசான், ஆப்பிள், என்விடியா உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் எதிர்கால திட்டங்களில் தயக்கம் காட்டுவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/us-companies-hit-hard-by-trumps-tax-policies/">ட்ரம்பின் வரிக்கொள்கைகளால் அமெரிக்க நிறுவனங்கள் பெரும் பாதிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>அரச வரி வருவாய் அதிகரிப்பு</title>
		<link>https://oruvan.com/increase-in-government-tax-revenue/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Mon, 09 Jun 2025 10:57:52 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[Government]]></category>
		<category><![CDATA[Increase]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[revenue]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<category><![CDATA[tax]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=22945</guid>

					<description><![CDATA[<p>2025 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் அரச வரி வருவாயில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு பதிவாகியுள்ளது. இலங்கை மத்திய வங்கி (CBSL) வெளியிட்டுள்ள தரவுகளுக்கமைய, 2024 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் 1,218.07 பில்லியன் ரூபாவாக காணப்பட்ட அரசாங்க வரி வருவாய் மற்றும் மானியங்கள், 2025 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் 236.60 பில்லியன் ரூபாவாக அதிகரித்து 1,454.67 பில்லியன் ரூபாவை எட்டியுள்ளது. இதன்படி, 19.42 வீத வளர்ச்சி பதிவாகியள்ளது. 2025 ஏப்ரலில் மாத்திரம் மாத்திரம் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/increase-in-government-tax-revenue/">அரச வரி வருவாய் அதிகரிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>2025 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் அரச வரி வருவாயில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு பதிவாகியுள்ளது.</p>
<p>இலங்கை மத்திய வங்கி (CBSL) வெளியிட்டுள்ள தரவுகளுக்கமைய, 2024 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் 1,218.07 பில்லியன் ரூபாவாக காணப்பட்ட அரசாங்க வரி வருவாய் மற்றும் மானியங்கள், 2025 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் 236.60 பில்லியன் ரூபாவாக அதிகரித்து 1,454.67 பில்லியன் ரூபாவை எட்டியுள்ளது.</p>
<p>இதன்படி, 19.42 வீத வளர்ச்சி பதிவாகியள்ளது.</p>
<p>2025 ஏப்ரலில் மாத்திரம் மாத்திரம் 463.19 பில்லியன் ரூபா வரி வருமானம் பதிவாகியுள்ளது.</p>
<p>இந்த வருமான அதிகரிப்புக்கு வாகனங்கள் மீண்டும் இறக்குமதி செய்யப்பட்டமையே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/increase-in-government-tax-revenue/">அரச வரி வருவாய் அதிகரிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>மக்களின் வரிப்பணம் விரயமாக்கப்படாது என ஜனாதிபதி உறுதி</title>
		<link>https://oruvan.com/president-assures-that-peoples-tax-money-will-not-be-wasted/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Mon, 02 Jun 2025 12:37:28 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[president]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<category><![CDATA[tax]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=22184</guid>

					<description><![CDATA[<p>மக்களால் அரசாங்கத்திற்கு செலுத்தப்படும் வரிப் பணத்தில் ஒரு ரூபாய் கூட மோசடி செய்யப்படவோ அல்லது வீணாக்கப்படவோ மாட்டாது என்பதற்கான உத்தரவாதத்தை நாட்டுக்கு வழங்குவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார். ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (02) முற்பகல் இடம்பெற்ற வரி இணக்கம் மற்றும் வரி அடிப்படையை மேம்படுத்தும் தேசிய வேலைத்திட்டமான “வரி சக்தி” நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு வலியுறுத்தினார். எந்தவொரு அரசியல்வாதியோ அல்லது அரச அதிகாரியோ இவ்வாறான செயலில் ஈடுபட்டால், தரம் பாராமல் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/president-assures-that-peoples-tax-money-will-not-be-wasted/">மக்களின் வரிப்பணம் விரயமாக்கப்படாது என ஜனாதிபதி உறுதி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>மக்களால் அரசாங்கத்திற்கு செலுத்தப்படும் வரிப் பணத்தில் ஒரு ரூபாய் கூட மோசடி செய்யப்படவோ அல்லது வீணாக்கப்படவோ மாட்டாது என்பதற்கான உத்தரவாதத்தை நாட்டுக்கு வழங்குவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.</p>
<p>ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (02) முற்பகல் இடம்பெற்ற வரி இணக்கம் மற்றும் வரி அடிப்படையை மேம்படுத்தும் தேசிய வேலைத்திட்டமான “வரி சக்தி” நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.</p>
<p>எந்தவொரு அரசியல்வாதியோ அல்லது அரச அதிகாரியோ இவ்வாறான செயலில் ஈடுபட்டால், தரம் பாராமல் அதிகபட்ச தண்டனை வழங்க தலையிடுவேன் எனவும் ஜனாதிபதி உறுதியளித்தார்.</p>
<p>மக்கள் செலுத்தும் வரிகளுக்கு நியாயம் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, அதற்கு எதிராக செயல்படும் கருப்புப் பொறிமுறையை முற்றிலுமாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.</p>
<p>“உங்கள் வரிப் பணம் உங்களுக்காக” என்ற தொனிப்பொருளின் கீழ் “வரி சக்தி &#8211; தேசிய வரி வாரம்” ஆரம்பித்தல் இதற்கு இணைந்த வகையில் நடைபெற்றது.</p>
<p>தற்போதைய அரசாங்கம் ஸ்தம்பிதமடைந்த ஒரு நாட்டை பொறுப்பேற்றதாகவும், நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப வரி பொறிமுறையை நெறிப்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டினார்.</p>
<p>ஒரு நாடாக நாம் தகுதிகாண் காலத்தில் இருக்கிறோம் என்று தெரிவித்த ஜனாதிபதி, சர்வதேச நாணய நிதியத்துடனான நீடிக்கப்பட்ட கடன் உடன்படிக்கையை இந்நாட்டின் அவ்வாறான இறுதி வேலைத்திட்டமாக மாற்றுவதன் மூலம் நமக்கே உரிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு சகல மக்களையும் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்.</p>
<p>வரி செலுத்துவதில் மக்களின் அவநம்பிக்கையான மனப்பான்மையை நம்பிக்கையான மனப்பான்மையாக மாற்றவும், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் என்ற புதிய வரிக் கலாசாரத்தை உருவாக்கும் நோக்கத்துடன் வரி சக்தி தேசிய வரி வாரம் செயல்படுத்தப்படுகிறது.</p>
<p>இன்று முதல் எதிர்வரும் 07 ஆம் திகதி வரையான வாரத்தில், வரி செலுத்துதல் மற்றும் நாட்டின் அபிவிருத்திக்கு வரிப்பணம் எவ்வாறு பங்களிக்கிறது என்பதுடன் மக்களுக்கான நன்மைகள் தொடர்பிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/president-assures-that-peoples-tax-money-will-not-be-wasted/">மக்களின் வரிப்பணம் விரயமாக்கப்படாது என ஜனாதிபதி உறுதி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தேசிய வரி வாரம் இன்று முதல் ஆரம்பம்</title>
		<link>https://oruvan.com/national-tax-week-begins-today/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Mon, 02 Jun 2025 01:30:43 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Begins]]></category>
		<category><![CDATA[tax]]></category>
		<category><![CDATA[today]]></category>
		<category><![CDATA[Week]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=22084</guid>

					<description><![CDATA[<p>தேசிய வரி வாரம் இன்று திங்கட்கிழமை (02) முதல் ஆரம்பமாகிறது. இதன் தொடக்க விழா ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை (02) நடைபெறவுள்ளது. வரி சக்தி என்ற பெயரில் வரி வாரத்தை செயற்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளதுடன், இன்று முதல் எதிர்வரும் 7 ஆம் திகதி வரையான வாரத்தில் வரி செலுத்துதல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த எதிர்பார்க்கப்படுவதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் நாயகம் பி.கே.எஸ். சாந்த தெரிவித்தார். [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/national-tax-week-begins-today/">தேசிய வரி வாரம் இன்று முதல் ஆரம்பம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>தேசிய வரி வாரம் இன்று திங்கட்கிழமை (02) முதல் ஆரம்பமாகிறது.</p>
<p>இதன் தொடக்க விழா ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை (02) நடைபெறவுள்ளது.</p>
<p>வரி சக்தி என்ற பெயரில் வரி வாரத்தை செயற்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளதுடன், இன்று முதல் எதிர்வரும் 7 ஆம் திகதி வரையான வாரத்தில் வரி செலுத்துதல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த எதிர்பார்க்கப்படுவதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் நாயகம் பி.கே.எஸ். சாந்த தெரிவித்தார்.</p>
<p>இதனிடையே 10 மில்லியனுக்கும் அதிகமானவர்களுக்கு வரி செலுத்துவோர் அடையாள இலக்கம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் யு.டி.என். ஜயவீர தெரிவித்தார்.</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/national-tax-week-begins-today/">தேசிய வரி வாரம் இன்று முதல் ஆரம்பம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தேசிய வரி வாரம் நாளை முதல் ஆரம்பம்</title>
		<link>https://oruvan.com/national-tax-week-begins-tomorrow/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sun, 01 Jun 2025 12:28:34 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Begins]]></category>
		<category><![CDATA[tax]]></category>
		<category><![CDATA[tomorrow]]></category>
		<category><![CDATA[Week]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=22071</guid>

					<description><![CDATA[<p>தேசிய வரி வாரம் நாளை திங்கட்கிழமை (02) முதல் ஆரம்பமாகிறது. இதன் தொடக்க விழா ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நாளை காலை (02) நடைபெறவுள்ளது. வரி சக்தி என்ற பெயரில் வரி வாரத்தை செயற்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளதுடன், நாளை முதல் எதிர்வரும் 7 ஆம் திகதி வரையான வாரத்தில் வரி செலுத்துதல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த எதிர்பார்க்கப்படுவதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் நாயகம் பி.கே.எஸ். சாந்த தெரிவித்தார். [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/national-tax-week-begins-tomorrow/">தேசிய வரி வாரம் நாளை முதல் ஆரம்பம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>தேசிய வரி வாரம் நாளை திங்கட்கிழமை (02) முதல் ஆரம்பமாகிறது.</p>
<p>இதன் தொடக்க விழா ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நாளை காலை (02) நடைபெறவுள்ளது.</p>
<p>வரி சக்தி என்ற பெயரில் வரி வாரத்தை செயற்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளதுடன், நாளை முதல் எதிர்வரும் 7 ஆம் திகதி வரையான வாரத்தில் வரி செலுத்துதல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த எதிர்பார்க்கப்படுவதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் நாயகம் பி.கே.எஸ். சாந்த தெரிவித்தார்.</p>
<p>இதனிடையே 10 மில்லியனுக்கும் அதிகமானவர்களுக்கு வரி செலுத்துவோர் அடையாள இலக்கம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் யு.டி.என். ஜயவீர தெரிவித்தார்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/national-tax-week-begins-tomorrow/">தேசிய வரி வாரம் நாளை முதல் ஆரம்பம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>மருந்துகளுக்கான வட் வரி இன்றும் நடைமுறையில் உள்ளதா?</title>
		<link>https://oruvan.com/is-vat-on-medicines-still-in-effect-today/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Thu, 27 Feb 2025 08:56:31 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Harini]]></category>
		<category><![CDATA[Harini Amarasuriya]]></category>
		<category><![CDATA[Ranjith]]></category>
		<category><![CDATA[tax]]></category>
		<category><![CDATA[VAT]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=12441</guid>

					<description><![CDATA[<p>இலங்கையில் மருந்துகளுக்கான வட் வரியானது இன்றும் நடைமுறையில் உள்ளது என எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ள நிலையில், அவ்வாறான வரி எதுவும் அறவிடப்படுவதில்லை என எதிர்கட்சியின் கூற்றை அரசாங்கம் முழுமையாக நிராகரித்து வாத விவாதங்களில் ஈடுபடுவதை நாடாளுமன்றத்தில் அவதானிக்க முடிந்துள்ளது. நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வருகின்ற வரவு செலவு திட்ட விவாதத்தில் பல தவறான தகவல்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாலே தெரிவிக்கப்படுவதால், இலங்கையில் மருந்துப் பொருட்களுக்கான வட் வரி அறவீடு உள்ளதா என்பது குறித்து factseeker ஆராய்ந்தது. அதற்கமைய, ஐக்கிய மக்கள் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/is-vat-on-medicines-still-in-effect-today/">மருந்துகளுக்கான வட் வரி இன்றும் நடைமுறையில் உள்ளதா?</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இலங்கையில் மருந்துகளுக்கான வட் வரியானது இன்றும் நடைமுறையில் உள்ளது என எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ள நிலையில், அவ்வாறான வரி எதுவும் அறவிடப்படுவதில்லை என எதிர்கட்சியின் கூற்றை அரசாங்கம் முழுமையாக நிராகரித்து வாத விவாதங்களில் ஈடுபடுவதை நாடாளுமன்றத்தில் அவதானிக்க முடிந்துள்ளது.</p>
<p>நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வருகின்ற வரவு செலவு திட்ட விவாதத்தில் பல தவறான தகவல்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாலே தெரிவிக்கப்படுவதால், இலங்கையில் மருந்துப் பொருட்களுக்கான வட் வரி அறவீடு உள்ளதா என்பது குறித்து factseeker ஆராய்ந்தது.</p>
<p>அதற்கமைய, ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார, கடந்த 25 ஆம் திகதி இடம்பெற்ற வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் போது, &#8220;இலங்கையில் மருந்துகளுக்கான வட் வரியானது இன்றும் நடைமுறையில் உள்ளது&#8221; என்ற கூற்றின் உண்மைத்தன்மை குறித்து ஆராயப்பட்டது.</p>
<p>நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார, சுகாதாரத்துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டாலும், நோயாளிகள் இன்னும் 18 சதவீத வரி செலுத்த வேண்டிய சூழ்நிலையில் உள்ளதாக குற்றம் சுமத்தினார்.</p>
<p><iframe title="Parliament Live - 25.02.2025" width="1400" height="788" src="https://www.youtube.com/embed/1QxJeZ8fVXo?start=4954&#038;feature=oembed" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" referrerpolicy="strict-origin-when-cross-origin" allowfullscreen></iframe></p>
<p>இதற்கு பதிலளித்த பிரதமர் ஹரிணி அமரசூரிய, மருந்துகளுக்கு விதிக்கப்பட்டுள்ள வட்-வரி குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டாரவின் குற்றச்சாட்டு தவறானது என்றும், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மருந்துகளுக்கான மூலப்பொருட்களின் வட் வரி நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.</p>
<p><iframe title="Parliament Live - 25.02.2025" width="1400" height="788" src="https://www.youtube.com/embed/1QxJeZ8fVXo?start=6027&#038;feature=oembed" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" referrerpolicy="strict-origin-when-cross-origin" allowfullscreen></iframe></p>
<p>இக் கூற்றுகளின் உண்மை தன்மைகள் குறித்து ஆராய்ந்த போது, 2023 ஆம் ஆண்டின் 32 ஆம் இலக்க, சேர்பெறுமதி வரி (திருத்தச்) சட்டம் மற்றும் 2025ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வரவு செலவுத்திட்ட உரைகளை அவதானிக்க முடிந்தது.</p>
<p>இவற்றை ஆராய்ந்ததில், 2024 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் மருந்துகள் வட் வரியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.</p>
<p>இவ் வரி விலக்கு பட்டியலில் மருந்துகள், மருத்துவ உற்பத்திப் பொருட்கள் மற்றும் மூலப்பொருட்கள் ஆகியவை வட் வரியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன என்பது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.</p>
<p>ஆகவே, 2024 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி முதல் மருந்துகளுக்கு விதிக்கப்பட்ட 18 வீத வட் வரி நீக்கப்பட்டுள்ளதுடன், &#8220;இலங்கையில் மருந்துக்களுக்கான வட் வரியானது இன்றும் நடைமுறையில் உள்ளது&#8221; என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார கூறிய கூற்று தவறானது என்பதும் உறுதியாகின்றது.</p>
<p><img fetchpriority="high" decoding="async" class="alignnone size-medium wp-image-12443" src="https://oruvan.com/wp-content/uploads/2025/02/WhatsApp-Image-2025-02-27-at-12.49.18-PM-400x289.jpeg" alt="" width="300" height="217" srcset="https://oruvan.com/wp-content/uploads/2025/02/WhatsApp-Image-2025-02-27-at-12.49.18-PM-400x289.jpeg 400w, https://oruvan.com/wp-content/uploads/2025/02/WhatsApp-Image-2025-02-27-at-12.49.18-PM-650x470.jpeg 650w, https://oruvan.com/wp-content/uploads/2025/02/WhatsApp-Image-2025-02-27-at-12.49.18-PM-250x181.jpeg 250w, https://oruvan.com/wp-content/uploads/2025/02/WhatsApp-Image-2025-02-27-at-12.49.18-PM-768x555.jpeg 768w, https://oruvan.com/wp-content/uploads/2025/02/WhatsApp-Image-2025-02-27-at-12.49.18-PM-150x108.jpeg 150w, https://oruvan.com/wp-content/uploads/2025/02/WhatsApp-Image-2025-02-27-at-12.49.18-PM-50x36.jpeg 50w, https://oruvan.com/wp-content/uploads/2025/02/WhatsApp-Image-2025-02-27-at-12.49.18-PM-100x72.jpeg 100w, https://oruvan.com/wp-content/uploads/2025/02/WhatsApp-Image-2025-02-27-at-12.49.18-PM-200x145.jpeg 200w, https://oruvan.com/wp-content/uploads/2025/02/WhatsApp-Image-2025-02-27-at-12.49.18-PM-300x217.jpeg 300w, https://oruvan.com/wp-content/uploads/2025/02/WhatsApp-Image-2025-02-27-at-12.49.18-PM-350x253.jpeg 350w, https://oruvan.com/wp-content/uploads/2025/02/WhatsApp-Image-2025-02-27-at-12.49.18-PM-450x325.jpeg 450w, https://oruvan.com/wp-content/uploads/2025/02/WhatsApp-Image-2025-02-27-at-12.49.18-PM-500x361.jpeg 500w, https://oruvan.com/wp-content/uploads/2025/02/WhatsApp-Image-2025-02-27-at-12.49.18-PM-550x398.jpeg 550w, https://oruvan.com/wp-content/uploads/2025/02/WhatsApp-Image-2025-02-27-at-12.49.18-PM-800x578.jpeg 800w, https://oruvan.com/wp-content/uploads/2025/02/WhatsApp-Image-2025-02-27-at-12.49.18-PM-1200x867.jpeg 1200w, https://oruvan.com/wp-content/uploads/2025/02/WhatsApp-Image-2025-02-27-at-12.49.18-PM.jpeg 1245w" sizes="(max-width: 300px) 100vw, 300px" /></p>
<p>எனினும், 2024 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் மருந்துகள் மற்றும் ஆயுர்வேத மருந்துகளின் பொதிகளுக்கு பயன்படுத்தப்படும் பொதியிடல் பொருட்கள் வட் வரிக்கு உற்படுத்தப்பட்டிருந்தன.</p>
<p>இது தொடர்பாக, 2025 ஆம் ஆண்டு வரவு-செலவு திட்டத்தின் IVவது இணைப்பில்,&#8221;2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, சேர்பெருமதி வரி சட்டத்தில் சில மாற்றங்கள்&#8221; முன்மொழியப்பட்டுள்ளன.</p>
<p>அந்த முன்மொழிவுகளில் ஒன்று, &#8220;இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் மருந்துகள் மற்றும் ஆயுர்வேத மருந்துகளின் பொதிகளுக்கு பயன்படுத்தப்படும் பொதியிடல் பொருட்களையும் வட் வரியிலிருந்து விடுவிப்பதாகும்&#8221;.</p>
<p>ஆகவே, மருந்துகளுக்கு விதிக்கப்பட்டிருந்த வட் வரி நீக்கப்பட்டுள்ளமை தொடர்பாக நாடாளுமன்றத்தில் விளக்கமளித்த பிரதமர் ஹரிணி அமரசூரியவின் கூற்றுக்கள் உண்மையானது என்பதையும் &#8220;இலங்கையில் மருந்துக்களுக்கான வட் வரியானது இன்றும் நடைமுறையில் உள்ளது&#8221; என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார கூறிய கூற்று தவறானது என்பதையும் FactSeeker உறுதிப்படுத்துகிறது.</p>
<p><strong>நன்றி &#8211; FactSeeker</strong></p>
<p>The post <a href="https://oruvan.com/is-vat-on-medicines-still-in-effect-today/">மருந்துகளுக்கான வட் வரி இன்றும் நடைமுறையில் உள்ளதா?</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>டிஜிட்டல் சேவைகளுக்கான வரி தொடர்பில் அரசாங்கம் விளக்கம்</title>
		<link>https://oruvan.com/government-explains-tax-on-digital-services/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Thu, 27 Feb 2025 05:10:46 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Colombo]]></category>
		<category><![CDATA[money]]></category>
		<category><![CDATA[tax]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=12361</guid>

					<description><![CDATA[<p>டிஜிட்டல் சேவைகள் மூலம் வெளிநாடுகளில் பணம் சம்பாதிக்கும் தனிநபர்கள் மீது வரி விதிப்பது தொடர்பாக சமூகத்தில் தவறான புரிதல் இருப்பதாக தொழிலாளர் அமைச்சரும் பொருளாதார மேம்பாட்டு பிரதி அமைச்சருமான பேராசிரியர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஏனைய துறைகளுடன் ஒப்பிடும்போது டிஜிட்டல் சேவைகளுக்கு வரி விதிப்பதில் சிறிய நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் பேசுகையில், &#8220;உள்நாட்டு வருவாய் சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தங்களில் சேவை ஏற்றுமதிகளுக்கு 15 வீத வரி விதிப்பது [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/government-explains-tax-on-digital-services/">டிஜிட்டல் சேவைகளுக்கான வரி தொடர்பில் அரசாங்கம் விளக்கம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>டிஜிட்டல் சேவைகள் மூலம் வெளிநாடுகளில் பணம் சம்பாதிக்கும் தனிநபர்கள் மீது வரி விதிப்பது தொடர்பாக சமூகத்தில் தவறான புரிதல் இருப்பதாக தொழிலாளர் அமைச்சரும் பொருளாதார மேம்பாட்டு பிரதி அமைச்சருமான பேராசிரியர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.</p>
<p>ஏனைய துறைகளுடன் ஒப்பிடும்போது டிஜிட்டல் சேவைகளுக்கு வரி விதிப்பதில் சிறிய நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் பேசுகையில்,</p>
<p>&#8220;உள்நாட்டு வருவாய் சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தங்களில் சேவை ஏற்றுமதிகளுக்கு 15 வீத வரி விதிப்பது குறித்து சமூகத்தில் சில விவாதங்கள் நடந்துள்ளன.&#8221;</p>
<p>உண்மையில், ஒவ்வொரு நபரும் நமது வருமான வரிச் சட்டத்தின் கீழ் வருமான வரி செலுத்துவதற்கு உட்பட்டவர்கள்.</p>
<p>ஆனால் ஒரு தனிநபரை எடுத்துக் கொண்டால், நீங்கள் இலங்கைக்குள் சம்பாதிக்கும் வருமானம் இருந்தால், அந்த வருமானம் இலங்கைக்குள் அல்லது வெளிநாட்டில் ஈட்டப்பட்டாலும், நீங்கள் அதை இலங்கைக்குத் திரும்பக் கொண்டு வந்தாலும், அந்த வருமானம் இலங்கையின் கீழ் வருகிறது.</p>
<p>பின்னர் நீங்கள் வருமான வரிக்கு உட்பட்டவர். எனவே, உங்கள் மாத வருமானம் 150,000 ரூபாய்க்குக் குறைவாக இருந்தால், ஏப்ரல் முதல் நீங்கள் எந்த வருமான வரியையும் செலுத்த வேண்டியதில்லை.</p>
<p>நீங்கள் எந்தத் துறையில் சம்பாதித்தாலும் பரவாயில்லை. ஆனால் அது 150,000 ரூபாயை தாண்டினால் வரிக்கு உட்பட்டவை. இந்த டிஜிட்டல் சேவை மூலம் நீங்கள் மாதத்திற்கு 150,000 ரூபாய் சம்பாதித்தால், நீங்கள் வரி செலுத்த வேண்டியதில்லை.</p>
<p>நீங்கள் 200,000 ரூபாய் சம்பாதித்தால், நீங்கள் வரிக்கு உட்பட்டவராக இருப்பீர்கள், ஆனால் 150,000 ரூபாய்க்கு வரி விலக்கு அளிக்கப்படும்.</p>
<p>சராசரி குடிமகன் 36 வீத வரை வருமான வரி செலுத்துகிறார். ஆனால் இந்த டிஜிட்டல் சேவைகளை வழங்குபவருக்கு அதிகபட்ச கட்டணம் 15 வீதம் ஆகும்.</p>
<p>எனவே, இது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு, புதிய வரிகள் விதிக்கப்படுகின்றன என்ற வாதம் எழுப்பப்பட்டுள்ளது, இது சமூகத்தில் தவறான கருத்தை உருவாக்கி, சமூகத்தில் பதட்டமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது” என்றார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/government-explains-tax-on-digital-services/">டிஜிட்டல் சேவைகளுக்கான வரி தொடர்பில் அரசாங்கம் விளக்கம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>மதுபானம் மற்றும் சிகரெட் விலை அதிகரிப்பால் யாருக்கு லாபம்?</title>
		<link>https://oruvan.com/who-benefits-from-the-increase-in-alcohol-and-cigarette-prices/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Tue, 14 Jan 2025 08:24:30 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[tax]]></category>
		<category><![CDATA[கலால் வரி]]></category>
		<category><![CDATA[வரி]]></category>
		<category><![CDATA[வரி அதிகரிப்பு]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=6726</guid>

					<description><![CDATA[<p>மதுபானம் மற்றும் சிகரெட்டுகள் சாதாரண நுகர்வோர் பொருட்கள் அல்ல எனவும் அவற்றின் விலைகள் எப்போதும் அந்தப் பொருட்களை வாங்குவதை ஊக்கப்படுத்தாத அளவில் பராமரிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளது. “இலங்கையில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 15,000 பேர் மது அருந்துவதால் மரணமடைகிறார்கள். புகைப்பிடிப்பதனால் ஆண்டுக்கு சுமார் 20,000 பேர் உயிரிழக்கின்றனர். கூடுதலாக, ஏராளமான மக்கள் நோய்வாய்ப்படுகிறார்கள், மேலும் மது மற்றும் புகைப்பழக்கம் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/who-benefits-from-the-increase-in-alcohol-and-cigarette-prices/">மதுபானம் மற்றும் சிகரெட் விலை அதிகரிப்பால் யாருக்கு லாபம்?</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>மதுபானம் மற்றும் சிகரெட்டுகள் சாதாரண நுகர்வோர் பொருட்கள் அல்ல எனவும் அவற்றின் விலைகள் எப்போதும் அந்தப் பொருட்களை வாங்குவதை ஊக்கப்படுத்தாத அளவில் பராமரிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.</p>
<p>அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளது.</p>
<p>“இலங்கையில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 15,000 பேர் மது அருந்துவதால் மரணமடைகிறார்கள். புகைப்பிடிப்பதனால் ஆண்டுக்கு சுமார் 20,000 பேர் உயிரிழக்கின்றனர்.</p>
<p>கூடுதலாக, ஏராளமான மக்கள் நோய்வாய்ப்படுகிறார்கள், மேலும் மது மற்றும் புகைப்பழக்கம் மக்களின் மகிழ்ச்சியையும் சுதந்திரத்தையும் கட்டுப்படுத்தும் முக்கிய காரணிகளாக மாறிவிட்டன.</p>
<p>இந்நிலையில், நாட்டில் உள்ள பல்வேறு தரப்பினர்களையும் ஈர்க்கும் நோக்கில் புகைப்பொருட்கள் மற்றும் மதுபான நிறுவனங்கள் பல்வேறு உத்திகளைச் செயல்படுத்துகின்றன.</p>
<p>நாட்டில் தொற்றா நோய்களால் ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கை தற்போது 80 வீதமாக அதிகரித்துள்ளது. தொற்றாத நோய்களுக்கான நான்கு முக்கிய ஆபத்து காரணிகளில் புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல் ஆகும்.</p>
<p>அமெரிக்க மத்திய அரசின் பொது சுகாதார சேவைகளின் தலைவர் (சர்ஜன் ஜெனரல்) இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒரு சிறப்பு அறிக்கையை வெளியிட்டிருந்தார்.</p>
<p>அதில் மது ஒரு புற்றுநோயை உண்டாக்கும் காரணி என்றும், சிறிய அளவிலான மது அருந்துதல் கூட ஒரு நபரின் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கிறது என்றும் கூறினார்.</p>
<p>அற்ககோல் ஒரு புற்றுநோயை உண்டாக்கும் காரணியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.</p>
<p>அதன்படி, இந்த அண்மையில் மேற்கொள்ளப்பட்ட வரி அதிகரிப்பால் சிகரெட் உற்பத்தி துறை பெறும் கூடுதல் லாபம் தோராயமாக 7,000 மில்லியன் ரூபாய்க்கு மேல் என்று மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் வெளிப்படுத்தியுள்ளது.</p>
<p>மக்கள் சார்பு அரசாங்கங்கள் செய்ய வேண்டியது புகையிலை மற்றும் மதுபான நிறுவனங்களின் வருவாயை அதிகரிப்பது அல்ல.</p>
<p>மாறாக பொதுமக்களை மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும் ஆரோக்கியமான, பொருளாதார முடிவுகளை எடுப்பதுதான் என்பதை மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் சுட்டிக்காட்டியுள்ளது.</p>
<p>மேலும், முறையான கலால் கொள்கையை அமல்படுத்துவதன் மூலம் மக்களைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பு என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/who-benefits-from-the-increase-in-alcohol-and-cigarette-prices/">மதுபானம் மற்றும் சிகரெட் விலை அதிகரிப்பால் யாருக்கு லாபம்?</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>வாகன வரிகள் சில சந்தர்ப்பங்களில் 600 சதவீதம் வரை உயரக்கூடும் &#8211; வெளியாகியுள்ள புதிய தகவல்</title>
		<link>https://oruvan.com/vehicle-taxes-could-rise-by-up-to-600-percent-in-some-cases/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Mon, 13 Jan 2025 04:18:21 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[tax]]></category>
		<category><![CDATA[VAT]]></category>
		<category><![CDATA[Vehicle import]]></category>
		<category><![CDATA[Vehicle imports]]></category>
		<category><![CDATA[VIASL]]></category>
		<category><![CDATA[வரி]]></category>
		<category><![CDATA[வரி அறவீடு]]></category>
		<category><![CDATA[வாகன இறக்குமதி]]></category>
		<category><![CDATA[வாகன இறக்குமதிக்கான வரி]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=6637</guid>

					<description><![CDATA[<p>சில நேரங்களில் வாகனங்களுக்கு விதிக்கப்படும் வரி 600 வீதம் வரை அதிகரிக்கக்கூடும் என்றும், சில வாகனங்கள் 400 வீதம் அல்லது 500 வீதம் வரை வரிகளுக்கு உட்பட்டவை என்றும் இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் (VIASL) தெரிவித்துள்ளது. வாகனங்களுக்கான வரி விதிப்பு தொடர்பில் அரசாங்கம் வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டிருந்தாலும், அது வாகன இறக்குமதிகளுக்கு விதிக்கப்படும் கலால் வரி சதவீதங்களை மட்டுமே குறிப்பிட்டுள்ளது என்று சங்கத்தின் தலைவர் பிரசாத் மானேஜ் விளக்கினார். ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/vehicle-taxes-could-rise-by-up-to-600-percent-in-some-cases/">வாகன வரிகள் சில சந்தர்ப்பங்களில் 600 சதவீதம் வரை உயரக்கூடும் &#8211; வெளியாகியுள்ள புதிய தகவல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>சில நேரங்களில் வாகனங்களுக்கு விதிக்கப்படும் வரி 600 வீதம் வரை அதிகரிக்கக்கூடும் என்றும், சில வாகனங்கள் 400 வீதம் அல்லது 500 வீதம் வரை வரிகளுக்கு உட்பட்டவை என்றும் இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் (VIASL) தெரிவித்துள்ளது.</p>
<p>வாகனங்களுக்கான வரி விதிப்பு தொடர்பில் அரசாங்கம் வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டிருந்தாலும், அது வாகன இறக்குமதிகளுக்கு விதிக்கப்படும் கலால் வரி சதவீதங்களை மட்டுமே குறிப்பிட்டுள்ளது என்று சங்கத்தின் தலைவர் பிரசாத் மானேஜ் விளக்கினார்.</p>
<p>ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை தெரிவித்துள்ளார்.</p>
<p>வாகனங்களுக்கு விதிக்கப்படும் தற்போதைய இறக்குமதி வரி சுமார் 300 வீதம் ஆகும், எனினும், இந்த எண்ணிக்கை 400 வீதம் அல்லது 500 வீதமாக அதிகரிக்கக் கூடும் என்று இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.</p>
<p>வட் (VAT) உட்பட மூன்று வகையான வரிகள; வாகன விலை உயர்வைப் பாதித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் பிரசாத் மானேஜ் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>வாகனத்தின் மதிப்பு, ஆடம்பர வரி, சுங்க வரி, செலவு, காப்பீடு மற்றும் சரக்கு வரி (CIF) மற்றும் தற்போதுள்ள 18 வீத வட் ஆகியவற்றின் அடிப்படையில் சிறப்பு இறக்குமதி வரி உட்பட பல அடுக்கு வரிவிதிப்புகளைக் கணக்கிட்ட பிறகு ஒரு வாகனத்தின் இறுதி விலை தீர்மானிக்கப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.</p>
<p>எனவே, பொது மக்கள் பீதி அடைய வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தினார், சமீபத்திய வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள வரிகள் அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட இறுதி வாகன வரியைக் குறிக்கவில்லை என்பதை அவர் தெளிவுபடுத்தினார்.</p>
<p>வாகன இறக்குமதியைத் தொடங்குவதற்கு முன்பு முன்கூட்டியே பணம் செலுத்துதல் அல்லது வாகன முன்பதிவுகளைச் செய்வதற்கு எதிராகவும் அவர் அறிவுறுத்தினார்.</p>
<p>மேலும், தற்போதைய வாகன சந்தையை விட விலை சற்று அதிகமாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>2020ஆம் ஆண்டில் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக வாகனங்கள் உள்ளிட்ட அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை தற்காலிகமாக நிறுத்தி, கட்டுப்பாடுகளை விதிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.</p>
<p>எனினும், சர்வதேச நாணய நிதியத்தின் விரிவான கடன் திட்டம் செயல்படுத்தப்பட்டதாலும், நாட்டின் வெளிநாட்டு இருப்புக்கள் மேம்பட்டதாலும், பொருளாதாரம் ஸ்திரமடைந்ததாலும் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டது.</p>
<p>அதன்படி, கடந்த ஆண்டு செப்டம்பர் 12ஆம் திகதி நடைபெற்ற அரசாங்க அமைச்சரவையின் ஒப்புதலின்படி வாகன இறக்குமதிக்கு மூன்று கட்டங்களாக அனுமதி வழங்கப்பட்டது.</p>
<p>இந்த நிலையில், மோட்டார் வாகன இறக்குமதிக்கான புதிய வரி திருத்தங்களை உள்ளடக்கிய ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு நேற்று முன்தினம் (11) முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.</p>
<p>இதன் விளைவாக, எரிபொருள் மூலம் இயங்கும் மற்றும் மின்சார வாகனங்களின் இறக்குமதிக்கு விதிக்கப்படும் கலால் வரி, வாகனத்தின் சிலிண்டர் திறன் மற்றும் மற்றும் உற்பத்தி ஆண்டு ஆகியவற்றின் அடிப்படையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இந்நிலையில், புதிய வாகன இறக்குமதியில் போது விதிக்கப்படும் வரிகள் தொடர்பில் இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் கூறுகையில்,</p>
<p>* வேகன் ஆர் காரின் வரி, சுமார் ரூ.1.6 மில்லியனாக இருந்தது எனினும் புதிய திருத்தத்தின் மூலம் ரூ.1.8 மில்லியனை தாண்டக்கூடும்.</p>
<p>* மேலும், சுமார் ரூ.2 மில்லியனாக இருந்த விட்ஸ் வகை காரின் இறக்குமதி மீதான வரி சுமார் ரூ.2.4 மில்லியனாக அதிகரிக்கக்கூடும்.</p>
<p>* டொயோட்டா அக்வா, கொரோலா மற்றும் ஆக்சியோ மொடல்களுக்கான வரி முன்னர் ரூ. 5.7 மில்லியனாக இருந்தது, இது சுமார் ரூ. 6.6 மில்லியனாக அதிகரிக்கும் என்றும் வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் கூறுகிறது.</p>
<p>The post <a href="https://oruvan.com/vehicle-taxes-could-rise-by-up-to-600-percent-in-some-cases/">வாகன வரிகள் சில சந்தர்ப்பங்களில் 600 சதவீதம் வரை உயரக்கூடும் &#8211; வெளியாகியுள்ள புதிய தகவல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
