<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Tamil Ndu Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/tamil-ndu/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/tamil-ndu/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Tue, 08 Apr 2025 05:21:09 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>Tamil Ndu Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/tamil-ndu/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>அதீத பாசம் காட்டிய தந்தை &#8211; ஆத்திரத்தில் குழந்தையை கொலைசெய்த தாய்</title>
		<link>https://oruvan.com/father-who-showed-excessive-affection-mother-who-killed-child-in-anger/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Tue, 08 Apr 2025 05:21:09 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[#police]]></category>
		<category><![CDATA[Tamil Ndu]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=17075</guid>

					<description><![CDATA[<p>கணவன் அதீத பாசம் காட்டியதாக கூறி ஐந்து மாத ஆண் குழந்தையை தண்ணீர் பெரலுக்குள் அமிழ்த்தி கொலைசெய்த குற்றச்சாட்டில் குழந்தையின் தாய் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தமிழகம் &#8211; புதுக்கோட்டை மாவட்டம் புலியூரில் இடம்பெற்றுள்ளது. மணிகண்டன், லாவண்யா தம்பதியினரின் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. கணவன்-மனைவி இடையே குழந்தை பிறந்தது முதல் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் லாவண்யா குழந்தையுடன் புலியூரில் உள்ள அவரது தாய் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த ஆறாம் இரவு [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/father-who-showed-excessive-affection-mother-who-killed-child-in-anger/">அதீத பாசம் காட்டிய தந்தை &#8211; ஆத்திரத்தில் குழந்தையை கொலைசெய்த தாய்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>கணவன் அதீத பாசம் காட்டியதாக கூறி ஐந்து மாத ஆண் குழந்தையை தண்ணீர் பெரலுக்குள் அமிழ்த்தி கொலைசெய்த குற்றச்சாட்டில் குழந்தையின் தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.</p>
<p>இந்தச் சம்பவம் தமிழகம் &#8211; புதுக்கோட்டை மாவட்டம் புலியூரில் இடம்பெற்றுள்ளது. மணிகண்டன், லாவண்யா தம்பதியினரின் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.</p>
<p>கணவன்-மனைவி இடையே குழந்தை பிறந்தது முதல் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் லாவண்யா குழந்தையுடன் புலியூரில் உள்ள அவரது தாய் வீட்டில் வசித்து வந்தார்.</p>
<p>இந்நிலையில் கடந்த ஆறாம் இரவு வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் லாவண்யா கழுத்தில் கிடந்த தங்க நகையை பறித்து கொண்டு, குழந்தையை தூக்கிக் கொண்டு சென்றதாக சத்தமிட்டுள்ளார்.</p>
<p>உடனே அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தேடி பார்த்தனர். அப்போது வீட்டின் அருகில் இருந்த தண்ணீர் பெரலுக்குள் மர்மமான முறையில் குழந்தை உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.</p>
<p>இதுகுறித்து தகவல் அறிந்த கீரனூர் பொலிஜார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் லாவண்யா, மணிகண்டன், பொன்னருப்பு ஆகியோரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.</p>
<p>விசாரணையில் லாவண்யா குழந்தையை கொன்றதை ஒப்புக்கொண்டார். பின்னர் பொலிஸாரிடம் லாவண்யா பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.</p>
<p>அதில், கணவர் என் மீது அன்பாக இல்லாமல் குழந்தை மீது அதிக பாசம் காட்டி வந்தார். இதனால் ஆத்திரமடைந்த நான் குழந்தையை தண்ணீர் பேரலுக்குள் அமுக்கி கொலை செய்து விட்டேன்.</p>
<p>மேலும் ஏழு பவுன் தாலி சங்கிலியை வீட்டில் மறைத்து வைத்துள்ளேன் என்று கூறியுள்ளார். இதனையடுத்து பொலிஸார் நகையை மீட்டுள்ளனர்.</p>
<p>இதுகுறித்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்து லாவண்யாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். பெற்ற தாயே குழந்தையை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/father-who-showed-excessive-affection-mother-who-killed-child-in-anger/">அதீத பாசம் காட்டிய தந்தை &#8211; ஆத்திரத்தில் குழந்தையை கொலைசெய்த தாய்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
