<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Tamil Nadu News Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/tamil-nadu-news/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/tamil-nadu-news/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Mon, 02 Feb 2026 08:28:51 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>Tamil Nadu News Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/tamil-nadu-news/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>‘பவள விழா பாப்பாவுக்கு’ வேறென்ன தெரியும்?? மீண்டும் திமுகவை சீண்டிய விஜய்</title>
		<link>https://oruvan.com/vijay-slams-dmk-again/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Mon, 02 Feb 2026 08:28:51 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[My TVK]]></category>
		<category><![CDATA[Tamil Nadu News]]></category>
		<category><![CDATA[tvk]]></category>
		<category><![CDATA[TVK Vijay]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=44298</guid>

					<description><![CDATA[<p>‘பவள விழா பாப்பாவுக்கு’ வேறென்ன தெரியும். பழைய டப்பாவை உருட்டத்தானே தெரியும் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஆளும் திமுக கட்சியை சாடியுள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டு ஆண்டு நிறைவை முன்னிட்டு பனையூரில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், தமிழகத்தில் புதிதாக யார் அரசியலுக்கு வந்தாலும் திராவிட முன்னேற்ற கழகம் அவர்களைப் பார்த்து உங்களுக்கு என்ன அனுபவம் இருக்கிறது? [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/vijay-slams-dmk-again/">‘பவள விழா பாப்பாவுக்கு’ வேறென்ன தெரியும்?? மீண்டும் திமுகவை சீண்டிய விஜய்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>‘பவள விழா பாப்பாவுக்கு’ வேறென்ன தெரியும். பழைய டப்பாவை உருட்டத்தானே தெரியும் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஆளும் திமுக கட்சியை சாடியுள்ளார்.</p>
<p>தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டு ஆண்டு நிறைவை முன்னிட்டு பனையூரில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.</p>
<p>தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,</p>
<p>தமிழகத்தில் புதிதாக யார் அரசியலுக்கு வந்தாலும் திராவிட முன்னேற்ற கழகம் அவர்களைப் பார்த்து உங்களுக்கு என்ன அனுபவம் இருக்கிறது? என்று கேள்வி கேட்கும்.</p>
<p>எம்ஜிஆருக்கு அரசியல் அரிச்சுவடி தெரியுமா? என்று கேள்வி எழுப்பினர். காமராஜருக்கு இலக்கியம் தெரியுமா? என்று கேட்டனர். இன்று நம்மைப் பார்த்து அவ்வாறே பேசுகின்றனர்.</p>
<p>இந்த அத்தனை கேள்விகளையும் மீறி தமிழகத்தில் மிகப்பெரிய கட்சியாக தமிழக வெற்றிக் கழம் இன்று வளர்ந்திருக்கிறது.</p>
<p>தொழிலுநுட்பம் வளர்ந்திருக்கும் சூழலில் விமர்சனங்களில் திமுகவின் டெக்னிக்கை மாற்ற வேண்டும் எனவும் விஜய் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>‘பவள விழா பாப்பாவுக்கு’ வேறென்ன தெரியும். பழைய டப்பாவை உருட்டத்தானே தெரியும் என்று நக்கல் தொணியிலும் பேசியிருந்தார்.</p>
<p>இதேவேளை, தமிழக வெற்றிக் கழகம் நகர்ப்புறங்களில் தான் இருக்கிறது. கிராமங்களில் இல்லை என்று சொல்பவர்கள் சற்று ஆய்வு செய்து பாருங்கள்.</p>
<p>விசில் சின்னம் போகாத ஊரே இல்லை. விசில் இருக்குமிடமெல்லாம் தமிழக வெற்றிக் கழகம் இருக்கிறது.</p>
<p>தமிழகத்தில் எனது அம்மா, அக்கா, தங்கை, அண்ணன், தம்பிகள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாக்களிப்பதை எவராலும் தடுக்க முடியாது, அவர்களை என்ன விலை கொடுத்தாலும் வாங்க முடியாது.</p>
<p>திமுக என்ற தீய சக்தியை வீழ்த்த தமிழக வெற்றிக் கழகம் என்ற தூய சக்தியால் தான் முடியும். இது வெறும் நம்பிக்கை மட்டுமல்ல. இதுதான் கள நிலவரம்.</p>
<p>தமிழக மக்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் தான் இப்போது இருக்கும் ஒரே தெரிவு என விஜய் மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/vijay-slams-dmk-again/">‘பவள விழா பாப்பாவுக்கு’ வேறென்ன தெரியும்?? மீண்டும் திமுகவை சீண்டிய விஜய்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>அதிமுக முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்</title>
		<link>https://oruvan.com/former-aiadmk-minister-k-p-krishnan-joins-tamil-nadu-victory-party/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Mon, 26 Jan 2026 07:58:16 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Tamil Nadu News]]></category>
		<category><![CDATA[tvk]]></category>
		<category><![CDATA[TVK Vijay]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=43851</guid>

					<description><![CDATA[<p>அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார். 1991 முதல் 96ஆம் ஆண்டு காலகட்டதில் வேளாண்மை துறை அமைச்சராக இருந்த அவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை அடுத்து டக்சியில் இருந்து விலகினார். எனினும், பின்னர் கட்சியில் இணைந்துகொண்ட அவர் 2011ஆம் ஆண்டு சட்ட மன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றிருந்தார். இந்நிலையில், 2021ஆம் ஆண்டு நடந்த சட்ட சபை தேர்தலில் போட்டியிட்ட போது தோல்வியை சந்தித்தார். [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/former-aiadmk-minister-k-p-krishnan-joins-tamil-nadu-victory-party/">அதிமுக முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார்.</p>
<p>1991 முதல் 96ஆம் ஆண்டு காலகட்டதில் வேளாண்மை துறை அமைச்சராக இருந்த அவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை அடுத்து டக்சியில் இருந்து விலகினார்.</p>
<p>எனினும், பின்னர் கட்சியில் இணைந்துகொண்ட அவர் 2011ஆம் ஆண்டு சட்ட மன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றிருந்தார்.</p>
<p>இந்நிலையில், 2021ஆம் ஆண்டு நடந்த சட்ட சபை தேர்தலில் போட்டியிட்ட போது தோல்வியை சந்தித்தார்.</p>
<p>முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக தொண்டர் உரிமைகள் மீட்பு கழகத்தில் இணைந்து பணியாற்றினார்.</p>
<p>எனினும், அவருக்கான செல்வாக்கு அங்கு குறைந்திருந்த நிலையில், அதிமுக தொண்டர் உரிமைகள் மீட்பு கழகத்தில் இருந்து விலகினார்.</p>
<p>இந்நிலையிலேயே கு.ப.கிருஷ்ணன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார்.</p>
<p>நேற்று இடம்பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் செயல் வீரர்கள் கூட்டத்தில் அந்த கட்சியின் தலைவர் விஜயை சந்தித்த அவர் கட்சியில் இணைந்துகொண்டுள்ளார்.</p>
<p><strong> </strong></p>
<p>The post <a href="https://oruvan.com/former-aiadmk-minister-k-p-krishnan-joins-tamil-nadu-victory-party/">அதிமுக முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தொடர்ந்து நான்காவது ஆண்டாக முரண்பாடு – தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே நீடிக்கும் மோதல்</title>
		<link>https://oruvan.com/discord-for-the-fourth-consecutive-year-the-ongoing-conflict-between-the-tamil-nadu-government-and-the-governor/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Tue, 20 Jan 2026 10:51:07 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Tamil Nadu]]></category>
		<category><![CDATA[Tamil Nadu Governor]]></category>
		<category><![CDATA[Tamil Nadu News]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=43420</guid>

					<description><![CDATA[<p>தமிழக சட்ட சபை இன்று கூடிய நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி உரையை புறக்கணித்து சபையில் இருந்து வெளியேறியுள்ளார். 2026ஆம் ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு கூடியது. கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுவதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவி காலை 9.25 மணிக்கு தலைமைச்செயலகம் வந்திருந்தார். அவருக்கு பொலிஸ் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்ருந்தது. காலை 9.30 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டதும் சட்டசபை கூட்டம் தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தில் ஆளுநர் உரை நிகழ்த்த தொடங்கினார். [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/discord-for-the-fourth-consecutive-year-the-ongoing-conflict-between-the-tamil-nadu-government-and-the-governor/">தொடர்ந்து நான்காவது ஆண்டாக முரண்பாடு – தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே நீடிக்கும் மோதல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>தமிழக சட்ட சபை இன்று கூடிய நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி உரையை புறக்கணித்து சபையில் இருந்து வெளியேறியுள்ளார்.</p>
<p>2026ஆம் ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு கூடியது.</p>
<p>கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுவதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவி காலை 9.25 மணிக்கு தலைமைச்செயலகம் வந்திருந்தார்.</p>
<p>அவருக்கு பொலிஸ் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்ருந்தது.</p>
<p>காலை 9.30 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டதும் சட்டசபை கூட்டம் தொடங்கியது.</p>
<p>இந்த ஆண்டின் முதல் கூட்டத்தில் ஆளுநர் உரை நிகழ்த்த தொடங்கினார். பொதுவாக, ஆளுநரின் உரை நேரலையாக வழங்கப்படும்.</p>
<p>எனினும், இம்முறை நேரலை வழங்கப்பட்டிருக்கவில்லை.</p>
<p>சட்டசபையில் பேசத் தொடங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்த்தாய் வாழ்த்தை தொடர்ந்து தேசிய கீதம் பாடப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டி, தனது உரையை புறக்கணித்து வெளியேறினார்.</p>
<p>அவர் தொடர்ந்து, நான்காவது ஆண்டாக உரை நிகழ்த்தாமல் வெளியேறியுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p>
<p>தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி, 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நியமிக்கப்பட்டார்.  2022ஆம் ஆண்டு முதன்முதலில் தமிழக சட்டசபையில் உரை நிகழ்த்தினார்.</p>
<p>அந்த உரையை மட்டும்தான் அவர் முழுமையாக வாசித்தார்.</p>
<p>அதன் பிறகு, தமிழக அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே உள்ள உறவில் விரிசல் ஏற்பட்டதால், தனது உரையை அவர் முழுமையாக வாசிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/discord-for-the-fourth-consecutive-year-the-ongoing-conflict-between-the-tamil-nadu-government-and-the-governor/">தொடர்ந்து நான்காவது ஆண்டாக முரண்பாடு – தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே நீடிக்கும் மோதல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் கூடியது!</title>
		<link>https://oruvan.com/a-cabinet-meeting-was-held-under-the-chairmanship-of-tamil-nadu-chief-minister-m-k-stalin/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Tue, 06 Jan 2026 05:45:20 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[M K Stalin]]></category>
		<category><![CDATA[Tamil Nadu CM]]></category>
		<category><![CDATA[Tamil Nadu News]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=42464</guid>

					<description><![CDATA[<p>தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்த ஆண்டுக்கான முதல் அமைச்சரவை கூட்டம் கூடியுள்ளது. தலைமைச் செயலகத்தில் காலை 11 மணிக்கு கூட்டம் கூடியுள்ளது. இதில் அனைத்து அமைச்சர்களும் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத் தொடர் எதிர்வரும் 20ஆம் திகதி கூடவுள்ளது.  தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி முதல் நாள் உரையை நிகழ்த்தவுள்ளார். சட்டசபை கூட்டத் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னர், முதல்-அமைச்சர் தலைமையில் அமைச்சரவை கூடி கலந்துரையாடுவது வழக்கமாகும். இதன்படி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/a-cabinet-meeting-was-held-under-the-chairmanship-of-tamil-nadu-chief-minister-m-k-stalin/">தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் கூடியது!</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்த ஆண்டுக்கான முதல் அமைச்சரவை கூட்டம் கூடியுள்ளது.</p>
<p>தலைமைச் செயலகத்தில் காலை 11 மணிக்கு கூட்டம் கூடியுள்ளது. இதில் அனைத்து அமைச்சர்களும் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>தமிழ்நாடு சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத் தொடர் எதிர்வரும் 20ஆம் திகதி கூடவுள்ளது.  தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி முதல் நாள் உரையை நிகழ்த்தவுள்ளார்.</p>
<p>சட்டசபை கூட்டத் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னர், முதல்-அமைச்சர் தலைமையில் அமைச்சரவை கூடி கலந்துரையாடுவது வழக்கமாகும்.</p>
<p>இதன்படி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்த ஆண்டுக்கான முதல் அமைச்சரவை கூட்டம் கூடியுள்ளது.</p>
<p>இந்த கூட்டத்தில் ஆளுநரின் உரை குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p>
<p>அரசின் உரையை ஆளுநர் ஏற்கனவே புறக்கணித்துள்ள நிலையில், இந்த ஆண்டு தமிழக அரசின் உரையை ஆளுநர் சட்டசபையில் வாசிப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.</p>
<p>மேலும், முதலமைச்சர் அண்மையில் வெளியிட்ட ஓய்வூதிய திட்டத்திற்கு இந்த அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.</p>
<p>அத்துடன், சட்டசபையில் தாக்கல் செய்யப்படும் இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தில் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்வது தொடர்பாகவும் ஆராயப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/a-cabinet-meeting-was-held-under-the-chairmanship-of-tamil-nadu-chief-minister-m-k-stalin/">தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் கூடியது!</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தமிழகத்தில் புலம்பெயர் தொழிலாளி ஒருவர் மீது தாக்குதல் &#8211; வலுக்கும் கண்டனம்</title>
		<link>https://oruvan.com/attack-on-a-migrant-worker-in-tamil-nadu-strong-condemnation/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Tue, 30 Dec 2025 08:46:47 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[Tamil Nadu]]></category>
		<category><![CDATA[Tamil Nadu News]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=41966</guid>

					<description><![CDATA[<p>தமிழகத்தில் புலம்பெயர் தொழிலாளி ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. திருத்தணி ரயில் நிலையம் அருகே கடந்த 27ஆம் திகதி புலம்பெயர் தொழிலாளி நான்கு பேர் கொண்ட கும்பல் ஒன்றினால் மோசமாக தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். மேலும், தாக்குதல் மேற்கொள்ளும் காணொளியும் சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. தாக்குதலில் ஈடுபட்ட சிறுவர் கும்பலை மறு நாளே கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட அரிவாள்கள் மற்றும் கையடக்க தொலைபேசிகள் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/attack-on-a-migrant-worker-in-tamil-nadu-strong-condemnation/">தமிழகத்தில் புலம்பெயர் தொழிலாளி ஒருவர் மீது தாக்குதல் &#8211; வலுக்கும் கண்டனம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>தமிழகத்தில் புலம்பெயர் தொழிலாளி ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>
<p>திருத்தணி ரயில் நிலையம் அருகே கடந்த 27ஆம் திகதி புலம்பெயர் தொழிலாளி நான்கு பேர் கொண்ட கும்பல் ஒன்றினால் மோசமாக தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.</p>
<p>மேலும், தாக்குதல் மேற்கொள்ளும் காணொளியும் சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.</p>
<p>தாக்குதலில் ஈடுபட்ட சிறுவர் கும்பலை மறு நாளே கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட அரிவாள்கள் மற்றும் கையடக்க தொலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.</p>
<p>கைது செய்யப்பட்டவர்களில் மூன்று பேர் சிறுவர்கள் என்பதால், அவர்கள் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.</p>
<p>இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>
<p>இந்த சம்பவத்தை அடுத்து தமிழகத்தில் பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன.</p>
<p>காங்கிரஸ் கட்சியின் கார்த்திக் சிதம்பரம், தமிழ்நாடு பொலிஸ் அதன் வலிமையை நிரூபிக்க நேரம் வந்துவிட்டது என்று தெரிவித்துள்ளார்.</p>
<p>மாநிலம் தழுவிய நடவடிக்கை உடனடியாக தேவை. சாலைகளில் ஓடும் அனைத்து வாகனங்களிலும் பெரிய அளவிலான சோதனைகள் செய்யப்பட வேண்டும்.</p>
<p>அனைத்து குற்றவாளிகளும் வாரத்திற்கு மூன்று முறை அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாக வேண்டும்.</p>
<p>பொதுமக்கள் பாதுகாப்பாக உணர வேண்டும் என்று கார்த்திக் சிதம்பரம் மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/attack-on-a-migrant-worker-in-tamil-nadu-strong-condemnation/">தமிழகத்தில் புலம்பெயர் தொழிலாளி ஒருவர் மீது தாக்குதல் &#8211; வலுக்கும் கண்டனம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
