<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Sunil Handunnethi Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/sunil-handunnethi/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/sunil-handunnethi/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Tue, 29 Apr 2025 05:17:00 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>Sunil Handunnethi Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/sunil-handunnethi/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>50 ரூபாவிற்கு உப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் &#8211; அரசாங்கம் அறிவிப்பு</title>
		<link>https://oruvan.com/steps-will-be-taken-to-provide-salt-for-50-rupees-government-announcement/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Tue, 29 Apr 2025 05:17:00 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Sunil Handunnethi]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=18822</guid>

					<description><![CDATA[<p>ஒரு கிலோ கடல்நீர் உப்பின் உற்பத்தி செலவு 25 ரூபாய் எனவும், தற்போது சந்தையில் 180 ரூபாவுக்கு உப்பு விற்பனை செய்யப்படுவதாகவும் அமைச்சர் சுனில் ஹதுன்னெத்தி தெரிவித்துள்ளார். இந்நிலையில், எதிர்காலத்தில் 50 ரூபாவிற்கு உப்பை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தொழில் மற்றும் தொழில் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹதுன்னெத்தி தெரிவித்துள்ளார். முவன்கல மற்றும் உக்சிரிபுர பிரதேசங்களில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அமைச்சர், &#8220;சந்தையில் சீனி [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/steps-will-be-taken-to-provide-salt-for-50-rupees-government-announcement/">50 ரூபாவிற்கு உப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் &#8211; அரசாங்கம் அறிவிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஒரு கிலோ கடல்நீர் உப்பின் உற்பத்தி செலவு 25 ரூபாய் எனவும், தற்போது சந்தையில் 180 ரூபாவுக்கு உப்பு விற்பனை செய்யப்படுவதாகவும் அமைச்சர் சுனில் ஹதுன்னெத்தி தெரிவித்துள்ளார்.</p>
<p>இந்நிலையில், எதிர்காலத்தில் 50 ரூபாவிற்கு உப்பை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தொழில் மற்றும் தொழில் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹதுன்னெத்தி தெரிவித்துள்ளார்.</p>
<p>முவன்கல மற்றும் உக்சிரிபுர பிரதேசங்களில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அமைச்சர்,</p>
<p>&#8220;சந்தையில் சீனி விற்பனை தற்போது ஐந்து வணிகர்களின் அதிகாரத்தின் கீழ் நடைபெறுவதால், அதன் விலை இவ்வளவு உயர்ந்துள்ளது.</p>
<p>எனவே, உள்நாட்டு சந்தையில் சீனி விற்பனை சாத்தியமில்லாத பட்சத்தில், அதனை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து அந்த அதிகாரத்தை ஒழித்து, சர்க்கரை தொழிற்துறையை மேம்படுத்தும் நடவடிக்கைகள் எடுப்போம்&#8221; என்றும் அவர் வலியுறுத்தினார்.</p>
<p>ஹிகுரான கல்‌ஓய சர்க்கரை தொழிற்சாலை 51 வீதம் அரசாங்கத்திற்கு சொந்தமானதாயினும், அதன் உரிமை அரசால் பயன்படுத்தப்படவில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பாக இன்னும் அந்த நிறுவனத்துக்கு நேரடி அழுத்தம் வழங்கப்படவில்லை என்றாலும், சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/steps-will-be-taken-to-provide-salt-for-50-rupees-government-announcement/">50 ரூபாவிற்கு உப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் &#8211; அரசாங்கம் அறிவிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தியின் பெயரில் பண மோசடி</title>
		<link>https://oruvan.com/money-laundering-in-the-name-of-minister-sunil-handunnethi/</link>
		
		<dc:creator><![CDATA[Kanooshiya Pushpakumar]]></dc:creator>
		<pubDate>Tue, 24 Dec 2024 11:32:29 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[in the name]]></category>
		<category><![CDATA[laundering]]></category>
		<category><![CDATA[Minister]]></category>
		<category><![CDATA[money]]></category>
		<category><![CDATA[Sunil Handunnethi]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=3818</guid>

					<description><![CDATA[<p>கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தனது பெயரில் மேற்கொள்ளப்படும் பண மோசடி தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளார். இன்று (24) பிற்பகல் கொழும்பு குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் தலைமையகத்தில் குறித்த முறைப்பாட்டை வழங்கியுள்ளார். அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி என அடையாளப்படுத்தப்படும் நபர் அல்லது குழு, வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை இலக்கு வைத்து சமூக பராமரிப்பு சேவைகளுக்காக பணம் பெற்றுக்கொள்வதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக சுனில் ஹந்துன்நெத்தி முறைப்பாடு செய்துள்ளார். குற்றப் புலனாய்வுத் தலைமையகத்தில் இந்த [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/money-laundering-in-the-name-of-minister-sunil-handunnethi/">அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தியின் பெயரில் பண மோசடி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தனது பெயரில் மேற்கொள்ளப்படும் பண மோசடி தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளார்.</p>
<p>இன்று (24) பிற்பகல் கொழும்பு குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் தலைமையகத்தில் குறித்த முறைப்பாட்டை வழங்கியுள்ளார்.</p>
<p>அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி என அடையாளப்படுத்தப்படும் நபர் அல்லது குழு, வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை இலக்கு வைத்து சமூக பராமரிப்பு சேவைகளுக்காக பணம் பெற்றுக்கொள்வதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக சுனில் ஹந்துன்நெத்தி முறைப்பாடு செய்துள்ளார்.</p>
<p>குற்றப் புலனாய்வுத் தலைமையகத்தில் இந்த முறைப்பாட்டை ஆதாரங்களுடன் சமர்ப்பித்துள்ளார்.</p>
<p>குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாட்டை வழங்கிய அமைச்சர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.</p>
<p>மக்கள் பிரதிநிதியாகவும், பொறுப்பு வாய்ந்த அமைச்சராகவும் இருக்கும் தன்னைப் போன்றவர்களின் பெயரை பயன்படுத்திக் கூட அச்சமின்றி இதுபோன்ற மோசடிகளை செய்து வருகின்றனர் என கூறினார்.</p>
<p>மேலும் கருத்து தெரிவித்த அவர்,</p>
<p>“இவ்வாறானதொரு பின்னணியில் பொது மக்கள் இலகுவாக இவ்வாறான மோசடியாளர்களின் இலக்காக மாறக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.</p>
<p>சட்டம் அனைவருக்கும் பொதுவானது, இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள சட்டமே இதுபோன்ற மோசடி செய்பவர்களை சட்டத்தின் கீழ் கொண்டு வர போதுமானது.</p>
<p>எனக்கும், இதுபோன்ற மோசடிகளில் சிக்கிய மற்றவர்களுக்கும் சட்டம் அமுல்படுத்தப்படும் என்று நம்புகிறேன்.</p>
<p>மேலும், இந்த மோசடியாளர்கள் ஜனவரி 5ஆம் திகதி Zoom தொழிநுட்பம் மூலம் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.</p>
<p>அது தற்போது பரப்பப்பட்டு வருவதாகவும், அவ்வாறான பொதுக்கூட்டத்தை தானோ அல்லது தனது கட்சியோ ஏற்பாடு செய்யவில்லை” என அமைச்சர் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.</p>
<p>மேலும், தனது பெயரில் பணம் கேட்கும் இவ்வாறான மோசடியாளர்களுக்கு பணம் வழங்குவதை தவிர்க்குமாறும் அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/money-laundering-in-the-name-of-minister-sunil-handunnethi/">அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தியின் பெயரில் பண மோசடி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
