<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>speech Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/speech/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/speech/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Sat, 30 Aug 2025 11:13:00 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.3</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>speech Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/speech/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>ரணில் விக்ரமசிங்கவின் விசேட உரை</title>
		<link>https://oruvan.com/special-speech-by-ranil-wickremesinghe/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sat, 30 Aug 2025 11:13:00 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Ranil]]></category>
		<category><![CDATA[Special]]></category>
		<category><![CDATA[speech]]></category>
		<category><![CDATA[Wickremesinghe]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=31138</guid>

					<description><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 06 ஆம் திகதி விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கட்சியின் மாநாடு எதிர்வரும் 06 ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன், அன்றைய தினம் முன்னாள் ஜனாதிபதி இந்த விசேட உரையினை நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பொது சொத்துக்கள் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, 26 ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டார். முன்னாள் ஜனாதிபதி தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ அறிக்கைகளை பரிசீலித்த பின்னர், கோட்டை நீதவான் நிலுபுலி [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/special-speech-by-ranil-wickremesinghe/">ரணில் விக்ரமசிங்கவின் விசேட உரை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 06 ஆம் திகதி விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>கட்சியின் மாநாடு எதிர்வரும் 06 ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன், அன்றைய தினம் முன்னாள் ஜனாதிபதி இந்த விசேட உரையினை நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>
<p>பொது சொத்துக்கள் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, 26 ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டார்.</p>
<p>முன்னாள் ஜனாதிபதி தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ அறிக்கைகளை பரிசீலித்த பின்னர், கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர இந்த உத்தரவை பிறப்பித்தார்.</p>
<p>அதன்படி, குற்றப் புலனாய்வு திணைக்களம் மற்றும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த உண்மைகளை பரிசீலித்த பின்னர், முன்னாள் ஜனாதிபதியை தலா 05 மில்லியன் ரூபா பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளில் விடுவிக்க நீதவான் உத்தரவிட்டிருந்தார்.</p>
<p>அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய சம்பவம் தொடர்பாக பொது சொத்துக்கள் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த 22 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.</p>
<p>அதே நாளில் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டது.</p>
<p>அவரது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, அவர் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், மறுநாள், மருத்துவ பரிந்துரைகளின் பேரில் முன்னாள் ஜனாதிபதியை கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.</p>
<p>பின்னர், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (29) வைத்தியசாலையிலிருந்து வெளியேறினார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/special-speech-by-ranil-wickremesinghe/">ரணில் விக்ரமசிங்கவின் விசேட உரை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>புதிய அரசியல் கலாசாரத்துக்காக அர்ப்பணிப்போடு செயற்படுவோம் &#8211; சஜித்</title>
		<link>https://oruvan.com/let-us-work-with-dedication-for-a-new-political-culture-sajith/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Tue, 07 Jan 2025 09:01:05 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[culture]]></category>
		<category><![CDATA[dedication]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[parliment]]></category>
		<category><![CDATA[political]]></category>
		<category><![CDATA[Sajith]]></category>
		<category><![CDATA[speech]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=5798</guid>

					<description><![CDATA[<p>புதிய அரசியல் கலாசாரத்துக்காக அர்ப்பணிப்போடு செயற்படுவோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். புது வருடத்தின் முதலாவது நாடாளுமன்ற அமர்வில் இன்று செவ்வாய்க்கிழமை கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், மக்களின் இறையாண்மையைப் பாதுகாப்பதில், பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் கேந்திர ஸ்தானமாக,  உயரிய நாடாளுமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பு தனித்துவமானதொன்றாகும். வெறும் கோஷங்களுக்கு சுருங்கிப் போகாது, புதிய அரசியல் கலாசாரத்தின் ஊடாக மக்களின் எதிர்பார்ப்புகளும் நம்பிக்கைகளும் நிறைவேற்றப்படும், மக்கள் சார் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/let-us-work-with-dedication-for-a-new-political-culture-sajith/">புதிய அரசியல் கலாசாரத்துக்காக அர்ப்பணிப்போடு செயற்படுவோம் &#8211; சஜித்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>புதிய அரசியல் கலாசாரத்துக்காக அர்ப்பணிப்போடு செயற்படுவோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.</p>
<p>புது வருடத்தின் முதலாவது நாடாளுமன்ற அமர்வில் இன்று செவ்வாய்க்கிழமை கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.</p>
<p>இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,</p>
<p>மக்களின் இறையாண்மையைப் பாதுகாப்பதில், பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் கேந்திர ஸ்தானமாக,  உயரிய நாடாளுமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பு தனித்துவமானதொன்றாகும்.</p>
<p>வெறும் கோஷங்களுக்கு சுருங்கிப் போகாது, புதிய அரசியல் கலாசாரத்தின் ஊடாக மக்களின் எதிர்பார்ப்புகளும் நம்பிக்கைகளும் நிறைவேற்றப்படும், மக்கள் சார் அரசியல் கலாச்சாரத்தை உருவாக்க நாடாளுமன்றத்திலுள்ள அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் ” என்றார்.</p>
<p>மேலும்  அர்ப்பணிப்புடன் செயற்படக்கூடியவருடமாக அமைய வாழ்த்துகள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் இதன்போது தெரிவித்துள்ளார்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/let-us-work-with-dedication-for-a-new-political-culture-sajith/">புதிய அரசியல் கலாசாரத்துக்காக அர்ப்பணிப்போடு செயற்படுவோம் &#8211; சஜித்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
