<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>South Korea President Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/south-korea-president/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/south-korea-president/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Fri, 25 Jul 2025 03:36:53 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>South Korea President Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/south-korea-president/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>தென் கொரியாவில் துன்புறுத்தப்பட்ட இலங்கையர் &#8211; அந்நாட்டு ஜனாதிபதி கடும் கண்டனம்</title>
		<link>https://oruvan.com/sri-lankans-persecuted-in-south-korea-president-of-that-country-strongly-condemns/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Fri, 25 Jul 2025 03:36:53 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[South Korea]]></category>
		<category><![CDATA[South Korea President]]></category>
		<category><![CDATA[தென் கொரியா]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=27539</guid>

					<description><![CDATA[<p>கொரியாவில் பணிபுரியும் இலங்கை தொழிலாளி ஒருவர் சந்தித்த துஷ்பிரயோக சம்பவத்தை அந்நாட்டு ஜனாதிபதி கண்டித்துள்ளார். தென் கொரிய ஜனாதிபதி லீ ஜே-மியுங் இந்த சம்பவத்தை கண்டித்து, &#8220;எந்தவொரு மனித உரிமை மீறலுக்கும் கடுமையாக பதிலடி கொடுக்கப்படும்&#8221; என்று எச்சரித்துள்ளார். இந்த சம்பவம் கடந்த பெப்ரவரி 26 அன்று தெற்கு ஜியோல்லா மாகாணத்தின் நஜுவில் உள்ள செங்கல் தொழிற்சாலை ஒன்றில் நடந்துள்ளது. குறித்த தொழிற்சாலையில் இலங்கையர் பணிபுரிந்தார். தொழிற்சாலையில் இருந்த சக தொழிலாளர்கள் இலங்கை தொழிலாளியை செங்கல் குவியலில் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/sri-lankans-persecuted-in-south-korea-president-of-that-country-strongly-condemns/">தென் கொரியாவில் துன்புறுத்தப்பட்ட இலங்கையர் &#8211; அந்நாட்டு ஜனாதிபதி கடும் கண்டனம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>கொரியாவில் பணிபுரியும் இலங்கை தொழிலாளி ஒருவர் சந்தித்த துஷ்பிரயோக சம்பவத்தை அந்நாட்டு ஜனாதிபதி கண்டித்துள்ளார்.</p>
<p>தென் கொரிய ஜனாதிபதி லீ ஜே-மியுங் இந்த சம்பவத்தை கண்டித்து, &#8220;எந்தவொரு மனித உரிமை மீறலுக்கும் கடுமையாக பதிலடி கொடுக்கப்படும்&#8221; என்று எச்சரித்துள்ளார்.</p>
<p>இந்த சம்பவம் கடந்த பெப்ரவரி 26 அன்று தெற்கு ஜியோல்லா மாகாணத்தின் நஜுவில் உள்ள செங்கல் தொழிற்சாலை ஒன்றில் நடந்துள்ளது. குறித்த தொழிற்சாலையில் இலங்கையர் பணிபுரிந்தார்.</p>
<p>தொழிற்சாலையில் இருந்த சக தொழிலாளர்கள் இலங்கை தொழிலாளியை செங்கல் குவியலில் கட்டி வைத்து, ஃபோர்க்லிஃப்ட் மூலம் தூக்கி, துன்புறுத்தி கேலி செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>குறித்த தொழிலாளி டிசம்பர் 2024 இல் வேலை அனுமதி முறையின் கீழ் E-9 விசாவில் கொரியாவிற்கு சென்றதாகவும் சம்பவத்திற்கு முன்னர் சுமார் மூன்று மாதங்கள் தொழிற்சாலையில் பணிபுரிந்ததாகக் கூறப்படுகிறது.</p>
<p>இந்நிலையில், ஜியோனம் புலம்பெயர்ந்த தொழிலாளர் மனித உரிமைகள் வலையமைப்பு, தொழிலாளி வேலையில் தவறு இருந்ததாக தெரிவித்து சக தொழிலாளர்களால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளது.</p>
<p>சம்பவம் நடந்த சில மாதங்களுக்குப் பின்னர், சம்பவத்தின் காணொளி சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டதுடன், கொரிய அரசாங்கம் இந்த விடயத்தில் உடனடி விசாரணையைத் தொடங்கியுள்ளது.</p>
<p>இந்த சம்பவத்தால் தான் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக இலங்கை தொழிலாளி உள்ளூர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது தெரிவித்துள்ளார்.</p>
<p>இந்நிலையில், குறித்து சம்பவம் தொடர்பில் தென் கொரிய ஜனாதிபதி கருத்து வெளியிடுகையில்,</p>
<p>&#8220;என் கண்களை என்னால் நம்ப முடியவில்லை. ஒரு ஜனநாயக நாட்டிலும், ஒரு கலாச்சார அதிகார மையத்திலும் இதுபோன்ற துஷ்பிரயோகம் நடக்கும் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை. இது மன்னிக்க முடியாத வன்முறைச் செயல்.</p>
<p>சிறுபான்மையினர் மற்றும் பாதிக்கப்படக்கூடிய நபருக்கு எதிரான மனித உரிமைகளை தெளிவாக மீறுவதாகும். புலம்பெயர்ந்த தொழிலாளியின் பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலையை யாரும் சுரண்டவோ அல்லது துஷ்பிரயோகம் செய்யவோ கூடாது என்பதை நாங்கள் உறுதிசெய்கிறோம்.</p>
<p>வெளிநாட்டில் பணிபுரியும் கொரிய குடிமக்களை நாங்கள் மதிக்கிறோம் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கிறோம்.&#8221; என தெரிவித்துள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/sri-lankans-persecuted-in-south-korea-president-of-that-country-strongly-condemns/">தென் கொரியாவில் துன்புறுத்தப்பட்ட இலங்கையர் &#8211; அந்நாட்டு ஜனாதிபதி கடும் கண்டனம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
