<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>solution Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/solution/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/solution/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Thu, 02 Jan 2025 06:00:55 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>solution Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/solution/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை &#8211; பரீட்சைகள் திணைக்களத்தின் இறுதி முடிவு</title>
		<link>https://oruvan.com/grade-5-exam-leak-exam-department-gives-final-solution/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Thu, 02 Jan 2025 06:00:55 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Department]]></category>
		<category><![CDATA[exam]]></category>
		<category><![CDATA[final]]></category>
		<category><![CDATA[gives]]></category>
		<category><![CDATA[Grade 5]]></category>
		<category><![CDATA[leak]]></category>
		<category><![CDATA[solution]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=4976</guid>

					<description><![CDATA[<p>தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் கசிந்த 3 வினாக்களுக்கு உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு அமைவாக &#8216;இலவச மதிப்பெண்&#8217; வழங்குவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார். அண்மையில் நிறைவடைந்த தரம் 05 இற்கான புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் வினாத்தாளின் முன்கூட்டியே வௌியான மூன்று வினாக்களுக்கு இலவச மதிப்பெண்கள் வழங்குவது அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகும் என உயர் நீதிமன்றம் நேற்றுமுன்தினம் தீர்ப்பளித்தது. இந்த பிரச்னைக்கு தீர்வு [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/grade-5-exam-leak-exam-department-gives-final-solution/">தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை &#8211; பரீட்சைகள் திணைக்களத்தின் இறுதி முடிவு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் கசிந்த 3 வினாக்களுக்கு உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு அமைவாக &#8216;இலவச மதிப்பெண்&#8217; வழங்குவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.</p>
<p>பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார்.</p>
<p>அண்மையில் நிறைவடைந்த தரம் 05 இற்கான புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் வினாத்தாளின் முன்கூட்டியே வௌியான மூன்று வினாக்களுக்கு இலவச மதிப்பெண்கள் வழங்குவது அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகும் என உயர் நீதிமன்றம் நேற்றுமுன்தினம் தீர்ப்பளித்தது.</p>
<p>இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், வல்லுனர்கள் முன்வைத்த மூன்று பரிந்துரைகளில், பொருத்தமான பரிந்துரையை தேர்வு செய்து, உடனடியாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி, பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்திற்கு நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டது.</p>
<p>மேலும், இந்த வினாத்தாள்கள் வெளியானதில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர்களான, ஐ.ஜி.எஸ். பிரேமதிலக மூன்று மில்லியன் ரூபாவையும், சமிந்த குமார இளங்கசிங்க இரண்டு மில்லியன் ரூபாவையும் அரசாங்கத்திற்கு இழப்பீடாக செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.</p>
<p>பரீட்சையில் தோற்றிய மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் தாக்கல் செய்த நான்கு அடிப்படை உரிமை மனுக்களை விசாரணை செய்த யசந்த கோதாகொட, குமுதுனி விக்கிரமசிங்க மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இந்த தீர்ப்பை அறிவித்தது.</p>
<p>தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் வினாத்தாளில் மூன்று கேள்விகள் முன்கூட்டியே வெளியிடப்பட்டதன் காரணமாக, பரீட்சையில் தோற்றிய அனைத்து மாணவர்களுக்கும் இலவச மதிப்பெண்கள் வழங்குவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்தால் தமக்கு அநீதி இழைக்கப்படுவதாக மனுதாரர்கள் குறிப்பிட்டிருந்தனர்.</p>
<p>இதனூடாக, தங்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பு ஒன்றை வழங்குமாறு கோரி இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.</p>
<p>The post <a href="https://oruvan.com/grade-5-exam-leak-exam-department-gives-final-solution/">தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை &#8211; பரீட்சைகள் திணைக்களத்தின் இறுதி முடிவு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பயங்கரவாத குற்றச்சாட்டு &#8211; அரசாங்கத்திடம் தீர்வு கோரும் உறவினர்கள்</title>
		<link>https://oruvan.com/terrorism-charges-relatives-seek-solution-from-government/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Fri, 13 Dec 2024 06:00:52 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[charges]]></category>
		<category><![CDATA[Government]]></category>
		<category><![CDATA[relatives]]></category>
		<category><![CDATA[solution]]></category>
		<category><![CDATA[Terrorism]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=2334</guid>

					<description><![CDATA[<p>இலங்கையிலிருந்து வர்த்தக நடவடிக்கைக்காக இந்தியாவிற்கு சென்ற நால்வர் பயங்கரவாதிகள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு இதுவரை விடுவிக்கப்படவில்லையென அவர்களது உறவினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். கொழும்பில் நேற்றைய தினம் ஊடகச் சந்திப்பை ஏற்படுத்தி, கைதோனோரின் குடும்பத்தினர் அரசாங்கம் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தனர். கடந்த ஐந்தாம் மாதம் 19 ஆம் திகதி இந்தியாவிற்கு சென்ற போது அவர்கள் அஹமதாபாத் விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டதாக கைதான ஒருவரின் மனைவி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/terrorism-charges-relatives-seek-solution-from-government/">பயங்கரவாத குற்றச்சாட்டு &#8211; அரசாங்கத்திடம் தீர்வு கோரும் உறவினர்கள்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இலங்கையிலிருந்து வர்த்தக நடவடிக்கைக்காக இந்தியாவிற்கு சென்ற நால்வர் பயங்கரவாதிகள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு இதுவரை விடுவிக்கப்படவில்லையென அவர்களது உறவினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.</p>
<p>கொழும்பில் நேற்றைய தினம் ஊடகச் சந்திப்பை ஏற்படுத்தி, கைதோனோரின் குடும்பத்தினர் அரசாங்கம் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தனர்.</p>
<p>கடந்த ஐந்தாம் மாதம் 19 ஆம் திகதி இந்தியாவிற்கு சென்ற போது அவர்கள் அஹமதாபாத் விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டதாக கைதான ஒருவரின் மனைவி தெரிவித்துள்ளார்.</p>
<p>இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,</p>
<p>இலங்கையில் அனைத்து விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டன. இவர்கள் பயங்கரவாதிகள் இல்லையென்பது தெரியும் என பாதுகாப்பு செயலாளர் ஊடகங்களுக்கும் அறிவித்திருக்கிறார்.</p>
<p>கைது செய்யப்பட்டமை மட்டுமே அறிவிக்கப்பட்டது. அதன்பின்னர் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது தொடர்பில் எதுவித தகவலும் கிடைக்கவில்லை.</p>
<p>ஜனாதிபதி இந்த வாரம் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்கிறார் என்பதை அறிந்தோம். எங்களுக்கு குழந்தைகள் உள்ளன. ஆகவே அவர்களின் எதிர்காலத்தைக் கருத்திற் கொண்டு தீர்வைப் பெற்றுத் தருமாறு கோருகிறோம்” என்றார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/terrorism-charges-relatives-seek-solution-from-government/">பயங்கரவாத குற்றச்சாட்டு &#8211; அரசாங்கத்திடம் தீர்வு கோரும் உறவினர்கள்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
