<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>soldiers Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/soldiers/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/soldiers/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Mon, 11 Aug 2025 07:04:33 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>soldiers Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/soldiers/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>முல்லைத்தீவு இளைஞர் மரணம் &#8211; மூன்று இராணுவ சிப்பாய்களுக்கு விளக்கமறியல்</title>
		<link>https://oruvan.com/mullaitivu-youths-death-three-army-soldiers-remanded-in-custody/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Mon, 11 Aug 2025 07:04:33 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[custody]]></category>
		<category><![CDATA[death]]></category>
		<category><![CDATA[Mullaitivu]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[remanded]]></category>
		<category><![CDATA[soldiers]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<category><![CDATA[Three]]></category>
		<category><![CDATA[youths]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=29004</guid>

					<description><![CDATA[<p>முல்லைத்தீவு &#8211; ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முத்துஐயன்கட்டு குளத்திலிருந்து இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று இராணுவ சிப்பாய்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கைதானவர்கள் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்ட்டதையடுத்து எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த இளைஞனின் மரணம் தொடர்பில் பிரதேச மக்கள் வழங்கிய வாக்குமூலத்திற்கு அமைய முத்துஐயன்கட்டு இராணுவ முகாமை சேர்ந்த மூன்று இராணுவ சிப்பாய்களே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அந்த பகுதியை சேர்ந்த 05 இளைஞர்களை இரும்பு [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/mullaitivu-youths-death-three-army-soldiers-remanded-in-custody/">முல்லைத்தீவு இளைஞர் மரணம் &#8211; மூன்று இராணுவ சிப்பாய்களுக்கு விளக்கமறியல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>முல்லைத்தீவு &#8211; ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முத்துஐயன்கட்டு குளத்திலிருந்து இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று இராணுவ சிப்பாய்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.</p>
<p>கைதானவர்கள் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்ட்டதையடுத்து எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.</p>
<p>குறித்த இளைஞனின் மரணம் தொடர்பில் பிரதேச மக்கள் வழங்கிய வாக்குமூலத்திற்கு அமைய முத்துஐயன்கட்டு இராணுவ முகாமை சேர்ந்த மூன்று இராணுவ சிப்பாய்களே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.</p>
<p>அந்த பகுதியை சேர்ந்த 05 இளைஞர்களை இரும்பு சேகரிக்க வருமாறு அழைத்து இராணுவ சிப்பாய்கள் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.</p>
<p>இதன்போது அங்கிருந்து தப்பிப்பதற்காக குளத்தில் குதித்த போதே குறித்த இளைஞன் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.</p>
<p>இதேவேளை, முல்லைத்தீவு பொலிஸ் அத்தியட்சகர் பிரிவுக்குட்பட்ட ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்தின் சிவநகரில் பிரதேசத்தில் அமைந்துள்ள 12 ஆவது சிங்கப் படையணி முகாமை அப்புறப்படுத்துவதற்கு சில நாட்களாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்ததாக ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p>
<p>இந்நிலையில் கடந்த ஏழாம் திகதி இரவு, அகற்றப்பட்ட இரும்பு மற்றும் வெளிப்புறப் பொருட்களை எடுத்துச் செல்வதற்காக முகாம் வளாகத்தினுள் அனுமதியின்றி நுழைந்த ஐவரை வெளியேற்றுவதற்கே நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>மேலும் இதன்போது தப்பிச் செல்ல முயன்ற ஒருவரே முத்துஐயன்கட்டுக் குளத்தில் மூழ்கி உயிரிழந்ததாகவும் ஒட்டுசுட்டான் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p>
<p>எவ்வாறாயினும் ஒட்டுசுட்டான் பொலிஸாரும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரும் இணைந்து அந்தப் பகுதியில் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/mullaitivu-youths-death-three-army-soldiers-remanded-in-custody/">முல்லைத்தீவு இளைஞர் மரணம் &#8211; மூன்று இராணுவ சிப்பாய்களுக்கு விளக்கமறியல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இராணுவத்திலிருந்து  வெளியேறும் பாகிஸ்தான் வீரர்கள்</title>
		<link>https://oruvan.com/pakistani-soldiers-leaving-the-army/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Mon, 28 Apr 2025 11:02:14 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Pakistani]]></category>
		<category><![CDATA[soldiers]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=18749</guid>

					<description><![CDATA[<p>பாகிஸ்தான் வீரர்கள் இராணுவத்திலிருந்து  வெளியேறி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இராணுவத்தைவிட்டு அதிரடியாக 1200 பாகிஸ்தான் வீரர்கள் வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தியாவின் அதிரடி நடவடிக்கைகளால் அச்சத்தில் பாகிஸ்தான் வீரர்கள் இராணுவத்தைவிட்டு வெளியேறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பாகிஸ்தான் இராணுவத்தின் உட்பூசல், நிதி தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்சினைகள் காரணமாக அவர்கள் வெளியேறி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22 ஆம் திகதி பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்குப் பிறகு, இந்திய அரசாங்கம் பாகிஸ்தானுக்கு [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/pakistani-soldiers-leaving-the-army/">இராணுவத்திலிருந்து  வெளியேறும் பாகிஸ்தான் வீரர்கள்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பாகிஸ்தான் வீரர்கள் இராணுவத்திலிருந்து  வெளியேறி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p>
<p>இராணுவத்தைவிட்டு அதிரடியாக 1200 பாகிஸ்தான் வீரர்கள் வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p>
<p>இந்தியாவின் அதிரடி நடவடிக்கைகளால் அச்சத்தில் பாகிஸ்தான் வீரர்கள் இராணுவத்தைவிட்டு வெளியேறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.</p>
<p>மேலும், பாகிஸ்தான் இராணுவத்தின் உட்பூசல், நிதி தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்சினைகள் காரணமாக அவர்கள் வெளியேறி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.</p>
<p>காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22 ஆம் திகதி பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர்.</p>
<p>இந்த தாக்குதலுக்குப் பிறகு, இந்திய அரசாங்கம் பாகிஸ்தானுக்கு எதிராக சில கடுமையான முடிவுகளை எடுத்து வருகிறது. பாகிஸ்தானும் பதிலடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.</p>
<p>பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கும் இந்தத் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியவர்களுக்கும் கடுமையான பதிலடி கொடுக்கடும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.</p>
<p>இந்நிலையில் தற்போது பாகிஸ்தான் வீரர்கள் இராணுவத்திலிருந்து வெளியேறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/pakistani-soldiers-leaving-the-army/">இராணுவத்திலிருந்து  வெளியேறும் பாகிஸ்தான் வீரர்கள்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>நிட்டம்புவ – கிரிந்திவெல வீதியில் விபத்து &#8211;  22 இராணுவ வீரர்கள் வைத்தியசாலையில்</title>
		<link>https://oruvan.com/22-army-soldiers-injured-in-bus-accident/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Mon, 21 Apr 2025 09:43:11 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[22 Army]]></category>
		<category><![CDATA[injured]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[soldiers]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=17852</guid>

					<description><![CDATA[<p>நிட்டம்புவ – கிரிந்திவெல வீதியில் மணமால வளைவு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராணுவ வீரர்கள் 22 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று (21) காலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற பஸ் எதிர் திசையில் இருந்து வந்த லொறியுடன் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது. காயமடைந்தவர்கள் வத்துபிட்டிவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 20 பேர் ஏற்கனவே சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் விபத்து தொடர்பில் கிரிந்திவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/22-army-soldiers-injured-in-bus-accident/">நிட்டம்புவ – கிரிந்திவெல வீதியில் விபத்து &#8211;  22 இராணுவ வீரர்கள் வைத்தியசாலையில்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>நிட்டம்புவ – கிரிந்திவெல வீதியில் மணமால வளைவு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராணுவ வீரர்கள் 22 பேர் காயமடைந்துள்ளனர்.</p>
<p>இந்த விபத்து இன்று (21) காலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p>
<p>இராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற பஸ் எதிர் திசையில் இருந்து வந்த லொறியுடன் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது.</p>
<p>காயமடைந்தவர்கள் வத்துபிட்டிவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p>
<p>அவர்களில் 20 பேர் ஏற்கனவே சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.</p>
<p>இந்நிலையில் விபத்து தொடர்பில் கிரிந்திவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/22-army-soldiers-injured-in-bus-accident/">நிட்டம்புவ – கிரிந்திவெல வீதியில் விபத்து &#8211;  22 இராணுவ வீரர்கள் வைத்தியசாலையில்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
