<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>sl parliament Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/sl-parliament/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/sl-parliament/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Mon, 24 Nov 2025 06:58:04 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>sl parliament Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/sl-parliament/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>மட்டக்களப்பில் பெயர் பலகைகளை நீக்கிய சம்பவம்  &#8211;  அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை</title>
		<link>https://oruvan.com/incident-of-removing-name-boards-in-batticaloa-action-taken-by-the-government/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Mon, 24 Nov 2025 06:58:04 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[#oruvan #news]]></category>
		<category><![CDATA[ananda wijepala]]></category>
		<category><![CDATA[batticaloa]]></category>
		<category><![CDATA[sl parliament]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=39077</guid>

					<description><![CDATA[<p>மட்டக்களப்பு &#8211; வாழைச்சேனை மற்றும் கொக்கட்டிச்சோலை பகுதிகளில் அடையாளம் காணப்பட்ட தொல்பொருள் இடங்களுக்குச் செல்லும் பாதைகளை அடையாளம் காண்பதற்காக நிறுவப்பட்ட பல பெயர்ப்பலகைகளை அகற்றியது தொடர்பான ஆதாரங்களை இன்று (24) நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொல்பொருள் திணைக்களத்தால் நிறுவப்பட்ட பெயர்ப்பலகைகள் கடந்த 22 ஆம் திகதி அகற்றப்பட்டதாகவும், பெயர்ப்பலகைகளை அகற்ற முயன்ற நபர்கள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/incident-of-removing-name-boards-in-batticaloa-action-taken-by-the-government/">மட்டக்களப்பில் பெயர் பலகைகளை நீக்கிய சம்பவம்  &#8211;  அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>மட்டக்களப்பு &#8211; வாழைச்சேனை மற்றும் கொக்கட்டிச்சோலை பகுதிகளில் அடையாளம் காணப்பட்ட தொல்பொருள் இடங்களுக்குச் செல்லும் பாதைகளை அடையாளம் காண்பதற்காக நிறுவப்பட்ட பல பெயர்ப்பலகைகளை அகற்றியது தொடர்பான ஆதாரங்களை இன்று (24) நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.</p>
<p>குறித்த விடயம் தொடர்பில் நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.</p>
<p>தொல்பொருள் திணைக்களத்தால் நிறுவப்பட்ட பெயர்ப்பலகைகள் கடந்த 22 ஆம் திகதி அகற்றப்பட்டதாகவும், பெயர்ப்பலகைகளை அகற்ற முயன்ற நபர்கள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.</p>
<p>வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் உள்ள தேவிமலை தொல்பொருள் தளத்திற்கு செல்லும் பாதையை அடையாளம் காண நிறுவப்பட்ட ஆறு பெயர்ப்பலகைகள் அகற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.</p>
<p>வாழைச்சேனை பிரதேச சபையின் தலைவர் எஸ். சுதாகரன் மற்றும் பிரதிச் செயலாளர் பத்மநீதன் ஆகியோர் இதில் அடங்குவதாக அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.</p>
<p>அதன்படி, வாழைச்சேனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில், தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்த  விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்.</p>
<p>இதேவேளை, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவில் தொல்பொருள் இடமாக அடையாளம் காணப்பட்டுள்ள சாந்தமலை கோவிலுக்குச் செல்லும் பாதையைக் குறிக்கும் இரண்டு பெயர் பலகைகள் கடந்த 21ஆம் திகதி ஒரு குழுவினால் அகற்றப்பட்டதாக அமைச்சர் நாடாளுமன்றில் மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/incident-of-removing-name-boards-in-batticaloa-action-taken-by-the-government/">மட்டக்களப்பில் பெயர் பலகைகளை நீக்கிய சம்பவம்  &#8211;  அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>வரவு செலவுத் திட்டம்!! அரசாங்கத்தின் எதிர்ப்பார்ப்பு</title>
		<link>https://oruvan.com/budget-governments-expectations/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Wed, 12 Nov 2025 07:08:15 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[#oruvan #news]]></category>
		<category><![CDATA[budged 2026]]></category>
		<category><![CDATA[NPP]]></category>
		<category><![CDATA[sl parliament]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=38064</guid>

					<description><![CDATA[<p>2026 ஆம் ஆண்டுக்கான வரவு &#8211; செலவுத் திட்டம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றுவரும் நிலையில், இரண்டாம் வாசிப்புமீதான வாக்கெடுப்பு 14 ஆம் திகதி மாலை இடம்பெறவுள்ளது. நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கடந்த ஏழாம் திகதி வரவு- செலவுத் திட்டத்தை முன்வைத்தார். வரவு செலவுத் திட்டம் தொடர்பான இரண்டாம் வாசிப்புமீதான விவாதம் கடந்த எட்டாம் திகதி ஆரம்பமானது.  இந்நிலையில், இரண்டாம்  வாசிப்புமீதான வாக்கெடுப்பு நாளை மறுதினம் மாலை நடத்தப்படவுள்ளது. இதன்போது எவ்வாறு [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/budget-governments-expectations/">வரவு செலவுத் திட்டம்!! அரசாங்கத்தின் எதிர்ப்பார்ப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>2026 ஆம் ஆண்டுக்கான வரவு &#8211; செலவுத் திட்டம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றுவரும் நிலையில், இரண்டாம் வாசிப்புமீதான வாக்கெடுப்பு 14 ஆம் திகதி மாலை இடம்பெறவுள்ளது.</p>
<p>நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கடந்த ஏழாம் திகதி வரவு- செலவுத் திட்டத்தை முன்வைத்தார்.</p>
<p>வரவு செலவுத் திட்டம் தொடர்பான இரண்டாம் வாசிப்புமீதான விவாதம் கடந்த எட்டாம் திகதி ஆரம்பமானது.  இந்நிலையில், இரண்டாம்  வாசிப்புமீதான வாக்கெடுப்பு நாளை மறுதினம் மாலை நடத்தப்படவுள்ளது.</p>
<p>இதன்போது எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்பது தொடர்பில் ஆராய்வதற்காக  அரசியல்  கட்சிகளின் கூட்டங்கள்   இன்றும், நாளையும் இடம்பெறவுள்ளன.</p>
<p>பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்பன எதிராக வாக்களிக்கும் என தெரிவித்துள்ளன. தமிழ்த் தேசியக் கட்சிகள் தமது நிலைப்பாட்டை நாளை அறிவிக்கவுள்ளன.</p>
<p>வரவு &#8211; செலவுத் திட்டத்தை நிறைவேற்றிக்கொள்வதற்குரிய பெரும்பான்மைபலம் தன்வசம் உள்ளபோதிலும்,  எதிரணிகளும் வரவு- செலவுத் திட்டத்தை ஆதரிக்க வேண்டும் என அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.</p>
<p>அதேவேளை, அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதம் நவம்பர் 15 ஆம் திகதி ஆரம்பமாகும்.  இந்நிலையில், வரவு செலவு திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு டிசம்பர் ஐந்தாம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/budget-governments-expectations/">வரவு செலவுத் திட்டம்!! அரசாங்கத்தின் எதிர்ப்பார்ப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
