<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>shortage Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/shortage/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/shortage/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Sun, 22 Mar 2026 10:07:06 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>shortage Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/shortage/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>மின் உற்பத்திக்குத் தேவையான எரிபொருள் தட்டுப்பாடு</title>
		<link>https://oruvan.com/shortage-of-fuel-required-for-power-generation/</link>
		
		<dc:creator><![CDATA[Diluksha]]></dc:creator>
		<pubDate>Sun, 22 Mar 2026 10:07:06 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[fuel]]></category>
		<category><![CDATA[generation]]></category>
		<category><![CDATA[Power]]></category>
		<category><![CDATA[required]]></category>
		<category><![CDATA[shortage]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=47213</guid>

					<description><![CDATA[<p>இலங்கைக்கு எதிர்வரும் மார்ச் 24, 25 திகதிகளில் வரவிருந்த கச்சா எண்ணெய் கப்பல் வராததால், இம்மாதம் 25ஆம் திகதி வரை மாத்திரமே சுத்திகரிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார். எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அமைச்சர் இதனை தெரிவித்தார் . இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், மின்சார உற்பத்திக்குத் தேவையான எரிபொருள் எண்ணெய் மற்றும் நெப்தா எரிபொருள் ஆகியவற்றுக்குத் தட்டுப்பாடு ஏற்படும். [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/shortage-of-fuel-required-for-power-generation/">மின் உற்பத்திக்குத் தேவையான எரிபொருள் தட்டுப்பாடு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இலங்கைக்கு எதிர்வரும் மார்ச் 24, 25 திகதிகளில் வரவிருந்த கச்சா எண்ணெய் கப்பல் வராததால், இம்மாதம் 25ஆம் திகதி வரை மாத்திரமே சுத்திகரிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.</p>
<p>எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அமைச்சர் இதனை தெரிவித்தார் .</p>
<p>இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,</p>
<p>மின்சார உற்பத்திக்குத் தேவையான எரிபொருள் எண்ணெய் மற்றும் நெப்தா எரிபொருள் ஆகியவற்றுக்குத் தட்டுப்பாடு ஏற்படும். இது ஒரு பாரிய பிரச்சினையாகும். எதிர்வரும் ஏப்ரல் 12, 13 திகதிகளில் எரிபொருள் கப்பல் ஒன்று வரவுள்ளது, ஆனால் நெப்தா எரிபொருள் வராது.</p>
<p>அதற்குப் பதிலாக டீசலைப் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படும். இந்த நெருக்கடியால் இனிவரும் காலங்களில் இரவு நேரங்களில் டீசல் மூலமே மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.</p>
<p>எனவே, ஒரு விளக்கையாவது அணைத்து, வீதி விளக்குகளையும் அணைத்து இதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அவ்வாறு செய்தால் மாத்திரமே எம்மால் நிலைமையைச் சமாளிக்க முடியும். பொதுமக்கள் இதில் தியாகங்களைச் செய்ய வேண்டியுள்ளது” என்றார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/shortage-of-fuel-required-for-power-generation/">மின் உற்பத்திக்குத் தேவையான எரிபொருள் தட்டுப்பாடு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>எரிவாயு தட்டுப்பாடு &#8211; மக்களுக்கு விரை​வான சேவையை வழங்க இந்திய நிறுவனங்கள் நடவடிக்கை</title>
		<link>https://oruvan.com/cooking-gas-shortage-indian-oil-companies-announce-no-need-to-panic/</link>
		
		<dc:creator><![CDATA[Diluksha]]></dc:creator>
		<pubDate>Mon, 16 Mar 2026 05:10:00 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Gas]]></category>
		<category><![CDATA[shortage]]></category>
		<category><![CDATA[எரிவாயு]]></category>
		<category><![CDATA[சமையல்]]></category>
		<category><![CDATA[தட்டுப்பாடு]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=46874</guid>

					<description><![CDATA[<p>இந்தியாவில் சமையல் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் மக்கள் அச்சமடையே வேண்டாம் என எண்​ணெய் நிறு​வனங்​கள் அறிவித்துள்ளன. மத்​திய கிழக்கு நாடு​களில் இடம்பெறும் போர் பதற்றம் காரணமாக, இந்​தி​யா​வில் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு தட்​டுப்​பாடு ஏற்​பட்​டுள்​ளது. குறிப்​பாக வணி​கப் பயன்​பாட்​டுக்​கான எரிவாயு விநி​யோகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால் பல இடங்​களில் உணவகங்​கள் மூடப்​பட்​டுள்​ளன. இந்நிலையில் எல்​பிஜி சமையல் எரிவாயு விநி​யோகம் மற்​றும் சேவை​கள் தொடர்ந்து இடம்பெறும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. விரை​வான முன்​ப​திவுகளுக்கும், முறைப்பாடுகளுக்கு தீர்வு காண​வும் வாடிக்​கை​யாளர் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/cooking-gas-shortage-indian-oil-companies-announce-no-need-to-panic/">எரிவாயு தட்டுப்பாடு &#8211; மக்களுக்கு விரை​வான சேவையை வழங்க இந்திய நிறுவனங்கள் நடவடிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இந்தியாவில் சமையல் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் மக்கள் அச்சமடையே வேண்டாம் என எண்​ணெய் நிறு​வனங்​கள் அறிவித்துள்ளன.</p>
<p>மத்​திய கிழக்கு நாடு​களில் இடம்பெறும் போர் பதற்றம் காரணமாக, இந்​தி​யா​வில் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு தட்​டுப்​பாடு ஏற்​பட்​டுள்​ளது.</p>
<p>குறிப்​பாக வணி​கப் பயன்​பாட்​டுக்​கான எரிவாயு விநி​யோகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால்<br />
பல இடங்​களில் உணவகங்​கள் மூடப்​பட்​டுள்​ளன.</p>
<p>இந்நிலையில் எல்​பிஜி சமையல் எரிவாயு விநி​யோகம் மற்​றும் சேவை​கள் தொடர்ந்து இடம்பெறும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.</p>
<p>விரை​வான முன்​ப​திவுகளுக்கும், முறைப்பாடுகளுக்கு தீர்வு காண​வும் வாடிக்​கை​யாளர் அழைப்பு மையம் மேம்​படுத்​தப்​பட்​டுள்​ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இதேவேளை, அச்சம் கொள்வதைத் தவிர்க்குமாறு ஹிந்​துஸ்​தான் பெட்​ரோலி​யம் நிறுவனமும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/cooking-gas-shortage-indian-oil-companies-announce-no-need-to-panic/">எரிவாயு தட்டுப்பாடு &#8211; மக்களுக்கு விரை​வான சேவையை வழங்க இந்திய நிறுவனங்கள் நடவடிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>எரிபொருளுக்கு தட்டுப்பாடு நிலவாது</title>
		<link>https://oruvan.com/there-will-be-no-shortage-of-fuel/</link>
		
		<dc:creator><![CDATA[Diluksha]]></dc:creator>
		<pubDate>Sun, 01 Mar 2026 06:09:33 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[fuel]]></category>
		<category><![CDATA[No]]></category>
		<category><![CDATA[shortage]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=45985</guid>

					<description><![CDATA[<p>மத்திய கிழக்கில் போர்ச் சூழல் நிலவியபோதிலும், தற்போது நாட்டில் 37 நாட்களுக்குப் போதுமான எரிபொருள் கையிருப்பு உள்ளதால் பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டியதில்லை என இலங்கை எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்ற போதிலும் எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் இன்றும் தொடர்ச்சியாக இடம்பெறுவதோடு, நாளை பௌர்ணமி தினத்திலும் விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் டி.வி. சாந்த சில்வா  தெரிவித்துள்ளார். சாதாரணமாக இந்நிலைமை உருவாவதற்கு முன்னர், இன்று [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/there-will-be-no-shortage-of-fuel/">எரிபொருளுக்கு தட்டுப்பாடு நிலவாது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>மத்திய கிழக்கில் போர்ச் சூழல் நிலவியபோதிலும், தற்போது நாட்டில் 37 நாட்களுக்குப் போதுமான எரிபொருள் கையிருப்பு உள்ளதால் பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டியதில்லை என இலங்கை எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.</p>
<p>இன்று ஞாயிற்றுக்கிழமை என்ற போதிலும் எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் இன்றும் தொடர்ச்சியாக இடம்பெறுவதோடு, நாளை பௌர்ணமி தினத்திலும் விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் டி.வி. சாந்த சில்வா  தெரிவித்துள்ளார்.</p>
<p>சாதாரணமாக இந்நிலைமை உருவாவதற்கு முன்னர், இன்று ஞாயிற்றுக்கிழமை ஒரு விடுமுறை தினமாகும். நீண்ட வார இறுதி விடுமுறை என்பதால், ஐஓசி நிறுவனம் ஏற்கனவே தீர்மானித்தபடி வழமை போலவே எரிபொருள் விநியோகத்தை முன்னெடுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார் .</p>
<p>பொதுவாக பௌர்ணமி தினங்களில் எரிபொருள் போக்குவரத்து இடம்பெறுவதில்லை என்றாலும், முன்னரே தீர்மானித்தபடி நாளை எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும் எனவும் இதற்காகத் தேவையான அளவு பௌசர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>எரிபொருள் தொடர்பாக எந்தவித தேவையற்ற அச்சமும் கொள்ள வேண்டியதில்லை எனவும் இலங்கை எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது .</p>
<p>The post <a href="https://oruvan.com/there-will-be-no-shortage-of-fuel/">எரிபொருளுக்கு தட்டுப்பாடு நிலவாது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சாரதி உரிம அட்டைகளின் பற்றாக்குறை விரைவில் நிவர்த்தி செய்யப்படும் &#8211; அமைச்சர் பிமல்</title>
		<link>https://oruvan.com/shortage-of-drivers-license-cards-to-be-addressed-soon/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Wed, 08 Oct 2025 07:42:08 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[addressed]]></category>
		<category><![CDATA[cards]]></category>
		<category><![CDATA[drivers]]></category>
		<category><![CDATA[license]]></category>
		<category><![CDATA[shortage]]></category>
		<category><![CDATA[soon?]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=34770</guid>

					<description><![CDATA[<p>சாரதி உரிம அட்டைகளின் பற்றாக்குறை எதிர்வரும் 18 ஆம் திகதிக்குள் நிவர்த்தி செய்யப்படும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், “மோட்டர் போக்குவரத்துத் துறைக்குத் தெரியாமல் சுமார் 28 ஆண்டுகளாக அதே குழு சாரதி உரிமத் தொழிலில் ஈடுபட்டுள்ளது. இதன் காரணமாக நிதி துஷ்பிரயோகம் மற்றும் ஊழல் பெரிளவில் இடம்பெற்றுள்ளது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் இராணுவத்தைப் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/shortage-of-drivers-license-cards-to-be-addressed-soon/">சாரதி உரிம அட்டைகளின் பற்றாக்குறை விரைவில் நிவர்த்தி செய்யப்படும் &#8211; அமைச்சர் பிமல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>சாரதி உரிம அட்டைகளின் பற்றாக்குறை எதிர்வரும் 18 ஆம் திகதிக்குள் நிவர்த்தி செய்யப்படும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.</p>
<p>நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.</p>
<p>இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,</p>
<p>“மோட்டர் போக்குவரத்துத் துறைக்குத் தெரியாமல் சுமார் 28 ஆண்டுகளாக அதே குழு சாரதி உரிமத் தொழிலில் ஈடுபட்டுள்ளது.<br />
இதன் காரணமாக நிதி துஷ்பிரயோகம் மற்றும் ஊழல் பெரிளவில் இடம்பெற்றுள்ளது.</p>
<p>முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் இராணுவத்தைப் பயன்படுத்தி இதற்கு தீர்வு காண முயன்றார்.<br />
ஆனால் அது இன்னும் பலனளிக்கவில்லை. எனவே, இதனை நிறுத்தி புதிய முறையை அறிமுகப்படுத்துவதன் மூலம் தீர்வு காண<br />
நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம்.</p>
<p>சாரதி உரிமம் அச்சிடும் இயந்திரங்களை நிறுவும் பணி நேற்று முதல் நடைபெற்று வருகிறது.</p>
<p>அரசாங்கத்திடம் தற்போது 800,000 சாரதி உரிம அட்டைகள் உள்ளது. ஒக்டோபர் 18 ஆம் திகதி முதல் விநியோகிக்க எதிர்பார்த்துள்ளோம்.</p>
<p>தற்போதுள்ள அட்டைகள் முடிவடைவதற்கு முன்னர் மேலும் 01 மில்லியன் அட்டைகளை முன்பதிவு செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.</p>
<p>புதிய அட்டைகள் மோட்டார் போக்குவரத்துத் துறை மூலம் அரசாங்கத்தால் அச்சிடப்படும் , இதன் மூலம் அச்சிடும் போது அட்டையொன்றுக்கு 167 ரூபா சேமிக்க முடியும்” என்றார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/shortage-of-drivers-license-cards-to-be-addressed-soon/">சாரதி உரிம அட்டைகளின் பற்றாக்குறை விரைவில் நிவர்த்தி செய்யப்படும் &#8211; அமைச்சர் பிமல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இன்சுலின் போதுமான அளவு இல்லாததால் நோயாளர்கள் சிரமம்</title>
		<link>https://oruvan.com/patients-inconvenienced-due-to-insulin-shortage-in-hospitals/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sat, 22 Feb 2025 07:40:19 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[hospitals]]></category>
		<category><![CDATA[inconvenienced]]></category>
		<category><![CDATA[insulin]]></category>
		<category><![CDATA[patients]]></category>
		<category><![CDATA[shortage]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=11674</guid>

					<description><![CDATA[<p>இன்சுலின் போதுமான அளவு இல்லாததால் நோயாளர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்களின் தொழிற்சங்க கூட்டணி தலைவர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார். மாத்தறையில் உள்ள வைத்தியசாலைகள் உட்பட சில வைத்தியசாலைகள் நோயாளர்களுக்கு இன்சுலின் வழங்கப்படுவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மருத்துவ விநியோக பிரிவு இன்சுலின் விநியோகிக்கப்பட்டதாகக் கூறினாலும்,வைத்தியசாலைகள் தேவையான அளவை விட குறைவாகவே பெறுகின்றன. இதன் விளைவாக, நோயாளர்கள் வெளிப்புற மருந்தகங்களிலிருந்து அதிக விலைக்கு அதனை [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/patients-inconvenienced-due-to-insulin-shortage-in-hospitals/">இன்சுலின் போதுமான அளவு இல்லாததால் நோயாளர்கள் சிரமம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இன்சுலின் போதுமான அளவு இல்லாததால் நோயாளர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளதாக<br />
மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்களின் தொழிற்சங்க கூட்டணி தலைவர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.</p>
<p>மாத்தறையில் உள்ள வைத்தியசாலைகள் உட்பட சில வைத்தியசாலைகள் நோயாளர்களுக்கு இன்சுலின் வழங்கப்படுவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.</p>
<p>இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,</p>
<p>மருத்துவ விநியோக பிரிவு இன்சுலின் விநியோகிக்கப்பட்டதாகக் கூறினாலும்,வைத்தியசாலைகள் தேவையான அளவை விட குறைவாகவே பெறுகின்றன. இதன் விளைவாக, நோயாளர்கள் வெளிப்புற மருந்தகங்களிலிருந்து அதிக விலைக்கு அதனை பெறவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.</p>
<p>மேலும் வைத்தியசாலைகளுக்கு அருகிலுள்ள மருந்தகங்களில் பதிவு செய்யப்படாத மருந்துகள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதாகவும்<br />
அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.</p>
<p>இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சிடம் அவர் வலியுறுத்தினார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/patients-inconvenienced-due-to-insulin-shortage-in-hospitals/">இன்சுலின் போதுமான அளவு இல்லாததால் நோயாளர்கள் சிரமம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சுகாதாரத் துறையில் நிலவும் பணியாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய ஆட்சேர்ப்பு</title>
		<link>https://oruvan.com/recruitment-to-address-staff-shortage-in-the-health-sector/</link>
		
		<dc:creator><![CDATA[Kanooshiya Pushpakumar]]></dc:creator>
		<pubDate>Sun, 09 Feb 2025 03:52:30 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[address]]></category>
		<category><![CDATA[health]]></category>
		<category><![CDATA[recruitment]]></category>
		<category><![CDATA[sector]]></category>
		<category><![CDATA[shortage]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=9828</guid>

					<description><![CDATA[<p>சுகாதாரத் துறையில் நிலவும் பணியாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக அடுத்த மாதத்திற்குள் ஆட்சேர்ப்பு செய்யவுள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். பேராதனை போதனா வைத்தியசாலையில் நேற்று (09.02) அறுவை சிகிச்சை பிரிவொன்றை திறந்து வைக்கும் நிகழ்வில் பங்கேற்றபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், சுகாதாரத் துறையில் நிலவும் பணியாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக அடுத்த மாதத்திற்குள் 3,500 தாதியர்களையும் 976 குடும்ப சுகாதார சேவை [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/recruitment-to-address-staff-shortage-in-the-health-sector/">சுகாதாரத் துறையில் நிலவும் பணியாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய ஆட்சேர்ப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>சுகாதாரத் துறையில் நிலவும் பணியாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக அடுத்த மாதத்திற்குள் ஆட்சேர்ப்பு செய்யவுள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.</p>
<p>பேராதனை போதனா வைத்தியசாலையில் நேற்று (09.02) அறுவை சிகிச்சை பிரிவொன்றை திறந்து வைக்கும் நிகழ்வில் பங்கேற்றபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.</p>
<p>இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,</p>
<p>சுகாதாரத் துறையில் நிலவும் பணியாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக அடுத்த மாதத்திற்குள் 3,500 தாதியர்களையும் 976 குடும்ப சுகாதார சேவை அதிகாரிகளையும் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.</p>
<p>கடந்த காலங்களில் வெளிநாடுகளுக்குச் சென்ற அனைத்து மருத்துவர்களும் நாடு திரும்புமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்றார்.</p>
<p>இதேவேளை, பல்வேறு வைத்தியசாலைகளில் தொடர்புடைய அறுவை சிகிச்சைகளை மேற்கொள்வதற்காக சுமார் இருபதாயிரம் இருதய நோயாளர்கள் காத்திருப்போர் பட்டியலில் உள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்களின் தொழிற்சங்க கூட்டணியின் தலைவரான நிபுணர் வைத்தியர் சமல் சஞ்சீவ, தெரிவித்தார்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/recruitment-to-address-staff-shortage-in-the-health-sector/">சுகாதாரத் துறையில் நிலவும் பணியாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய ஆட்சேர்ப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>உப்பு பொதிக்கு மீண்டும் தட்டுப்பாடு</title>
		<link>https://oruvan.com/salt-packets-face-shortage-again/</link>
		
		<dc:creator><![CDATA[Kanooshiya Pushpakumar]]></dc:creator>
		<pubDate>Tue, 04 Feb 2025 09:23:40 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[again]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[packets]]></category>
		<category><![CDATA[salt]]></category>
		<category><![CDATA[shortage]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=9208</guid>

					<description><![CDATA[<p>உள்ளூர் சந்தையில் நானூறு கிராம் உப்பு பொதியொன்றின் விலை 150 ரூபா முதல் 160 ரூபா வரை அதிகரித்துள்ளதாக கடை உரிமையாளர்கள் மற்றும் நுகர்வோர் கூறுகின்றனர். ஒரு கிலோ கிராம் உப்பு பொதிகளுக்கு பற்றாக்குறை நிலவுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நாட்டில் நிலவும் உப்புப் பற்றாக்குறைக்குத் தீர்வாக, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உப்பை உள்ளூர் சந்தையில் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு மக்களுக்குக் கிடைத்துள்ளது. நாட்டில் வருடாந்திர உப்பு நுகர்வு சுமார் 180,000 மெட்ரிக் தொன் ஆகும், மேலும் கடந்த [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/salt-packets-face-shortage-again/">உப்பு பொதிக்கு மீண்டும் தட்டுப்பாடு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>உள்ளூர் சந்தையில் நானூறு கிராம் உப்பு பொதியொன்றின் விலை 150 ரூபா முதல் 160 ரூபா வரை அதிகரித்துள்ளதாக கடை உரிமையாளர்கள் மற்றும் நுகர்வோர் கூறுகின்றனர்.</p>
<p>ஒரு கிலோ கிராம் உப்பு பொதிகளுக்கு பற்றாக்குறை நிலவுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.</p>
<p>நாட்டில் நிலவும் உப்புப் பற்றாக்குறைக்குத் தீர்வாக, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உப்பை உள்ளூர் சந்தையில் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு<br />
மக்களுக்குக் கிடைத்துள்ளது.</p>
<p>நாட்டில் வருடாந்திர உப்பு நுகர்வு சுமார் 180,000 மெட்ரிக் தொன் ஆகும், மேலும் கடந்த ஆண்டு பிற்பகுதியிலிருந்து ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக உப்பு அறுவடை வேகமாகக் குறைவடைந்துள்ளது.</p>
<p>நாட்டில் உப்பு பற்றாக்குறைக்கு தீர்வாக, 15 ஆண்டுகளுக்குப் பின்னர் பொது உள்நாட்டு நுகர்வுக்காக உப்பை இறக்குமதி செய்ய அரசாங்கம் அண்மையில் தீர்மானித்தது.</p>
<p>இதனிடையே, அம்பாறை, சம்மாந்துறை மற்றும் எரகம பகுதிகளில் நெல் அறுவடை ஏற்கனவே ஆரம்பமான நிலையில், வியாபாரிகள் 85 ரூபா முதல் 90 ரூபா வரை மிகக் குறைந்த விலைக்கு நெல் கொள்வனவு செய்வதாக விவசாயிகள் கூறுகின்றனர்.</p>
<p>நெல் ஆலை உரிமையாளர்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான ஒப்பந்தம் காரணமாக அரசாங்கம் இன்னும் நெல்லுக்கு உத்தரவாத விலையை வழங்கவில்லை என்று முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர குற்றம் சுமத்தியுள்ளார்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/salt-packets-face-shortage-again/">உப்பு பொதிக்கு மீண்டும் தட்டுப்பாடு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சிவப்பு, வெள்ளை, நாட்டு அரிசிகளுக்கு சந்தையில் கடும் தட்டுப்பாடு!</title>
		<link>https://oruvan.com/there-is-a-severe-shortage-of-red-white-and-local-rice-in-the-market/</link>
		
		<dc:creator><![CDATA[Kanooshiya Pushpakumar]]></dc:creator>
		<pubDate>Tue, 07 Jan 2025 05:39:46 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[and local rice]]></category>
		<category><![CDATA[in the market]]></category>
		<category><![CDATA[of]]></category>
		<category><![CDATA[red]]></category>
		<category><![CDATA[severe]]></category>
		<category><![CDATA[shortage]]></category>
		<category><![CDATA[There is a]]></category>
		<category><![CDATA[white]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=5725</guid>

					<description><![CDATA[<p>நாடளாவிய ரீதியில் சந்தைகளில் உருவாக்கப்பட்டுள்ள உள்நாட்டு சிவப்பு அரிசி, வெள்ளை பச்சையரிசி மற்றும் நாட்டு அரிசி தட்டுப்பாடு கடுமையாக அதிகரித்துள்ளது. நுகர்வோர் பச்சையரிசியை தேடி கடைகளுக்கு சென்றாலும் கட்டுப்பாட்டு விலைக்கு பச்சையரிசியை பெற்றுக் கொள்வதில் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். அனைத்து பல்பொருள் அங்காடிகள் மற்றும் சில்லறை கடைகளில் பச்சையரிசி தொட்டிகள் காலியாகக் கிடப்பதை அவதானிக்க முடிந்துள்ளது. ஒரு சில கடைகளில் பச்சையரிசி காணப்பட்ட போதிலும், அந்த அரிசியை கட்டுப்பாட்டு விலையில் பெற்றுக்கொள்ள முடியாத ஒரு சூழல் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/there-is-a-severe-shortage-of-red-white-and-local-rice-in-the-market/">சிவப்பு, வெள்ளை, நாட்டு அரிசிகளுக்கு சந்தையில் கடும் தட்டுப்பாடு!</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>நாடளாவிய ரீதியில் சந்தைகளில் உருவாக்கப்பட்டுள்ள உள்நாட்டு சிவப்பு அரிசி, வெள்ளை பச்சையரிசி மற்றும் நாட்டு அரிசி தட்டுப்பாடு கடுமையாக அதிகரித்துள்ளது.</p>
<p>நுகர்வோர் பச்சையரிசியை தேடி கடைகளுக்கு சென்றாலும் கட்டுப்பாட்டு விலைக்கு பச்சையரிசியை பெற்றுக் கொள்வதில் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.</p>
<p>அனைத்து பல்பொருள் அங்காடிகள் மற்றும் சில்லறை கடைகளில் பச்சையரிசி தொட்டிகள் காலியாகக் கிடப்பதை அவதானிக்க முடிந்துள்ளது.</p>
<p>ஒரு சில கடைகளில் பச்சையரிசி காணப்பட்ட போதிலும், அந்த அரிசியை கட்டுப்பாட்டு விலையில் பெற்றுக்கொள்ள முடியாத ஒரு சூழல் உருவாகியுள்ளதாக நுகர்வோர் குற்றம் சுமத்துகின்றனர்.</p>
<p>ஒரு கிலோ உள்ளூர் பச்சையரிசியின் கட்டுப்பாட்டு விலை 220 ரூபாய் என்ற போதிலும் கடைகளில் 240 ரூபாய் தொடக்கம் 300 ரூபாய் வரையில் ஒவ்வொரு விலைகளில் அரிசி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.</p>
<p>அதன்படி, தற்போது எந்தவொரு நிலையிலும் அரிசியை கட்டுப்பாட்டு விலையில் பெற்றுக்கொள்ள முடியாத ஒரு சூழல் எழுந்துள்ளது.</p>
<p>சில தினங்களுக்கு முன் பல்பொருள் அங்காடிகளில் பச்சையரிசி தொட்டிகளில் 220 ரூபாய் என விலை குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் தற்போது 240 ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளதை காணக்கூடியதாக உள்ளது.</p>
<p>இதேவேளை, அரிசி விலை தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் தற்போது அரிசி நெருக்கடியை தீர்க்க முடியாத வெறும் காகிதமாக மாறியுள்ளதாக தேசிய விவசாய சங்கத்தின் தலைவர் அனுராத தென்னகோன் தெரிவித்தார்.</p>
<p>மொத்த விற்பனையாளர்களுக்கு விதிக்கப்பட்ட நடைமுறைப்படுத்தப்படாத அரிசி வர்த்தமானி அறிவித்தலின் மூலம், சில்லறை விற்பனையாளர்கள் தற்போது உள்ளூர் பச்சையரிசி மற்றும் நாட்டு அரிசி விற்பனையில் இருந்து விலகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.</p>
<p>பச்சை மற்றும் நாட்டு அரிசிக்கு தேவையான கையிருப்பு ஆலை உரிமையாளர்களிடம் இன்னும் காணப்படுவதாகவும் நுகர்வோர் அதிகார சபைக்கு குறித்த நெல் கையிருப்பை கண்டுபிடிக்க முடியாமல் போயுள்ளதாக அரசாங்கம் மற்றும் நுகர்வோர் அதிகார சபை கூறுவது பொய் எனவும் அவர் கூறினார்.</p>
<p>பச்சை மற்றும் நாட்டு அரிசிக்கு தேவையான நெல் கையிருப்பு அரிசி ஆலை உரிமையாளர்களிடம் இன்னும் இருப்பதாக அரசாங்கமும், நுகர்வோர் அதிகார சபையும் சொல்வது பொய் என்றும், அந்த நெல் கையிருப்பை அரசாங்கமும், நுகர்வோர் அதிகார சபையும் கண்டு கொள்ளவில்லை என்றும் அவர் கூறினார்.</p>
<p>நுகர்வோரை தவறாக வழிநடத்தி அரிசி வர்த்தகர்கள் தேவையற்ற இலாபம் ஈட்ட அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அரிசி நெருக்கடியை தீர்ப்பதில் அரசாங்கமும் நுகர்வோர் அதிகார சபையும் ஒழுங்காக ஈடுபடவில்லை எனவும் தேசிய விவசாயிகள் சங்கத்தின் தலைவர் குற்றம் சுமத்தியுள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/there-is-a-severe-shortage-of-red-white-and-local-rice-in-the-market/">சிவப்பு, வெள்ளை, நாட்டு அரிசிகளுக்கு சந்தையில் கடும் தட்டுப்பாடு!</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>அரச வைத்தியசாலைகளில் கதிரியக்க தொழில்நுட்ப நிபுணர்கள் பற்றாக்குறை</title>
		<link>https://oruvan.com/shortage-of-radiology-technicians-in-government-hospitals/</link>
		
		<dc:creator><![CDATA[Kanooshiya Pushpakumar]]></dc:creator>
		<pubDate>Fri, 27 Dec 2024 06:10:53 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Government]]></category>
		<category><![CDATA[in hospitals]]></category>
		<category><![CDATA[radiology]]></category>
		<category><![CDATA[shortage]]></category>
		<category><![CDATA[technicians]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=4114</guid>

					<description><![CDATA[<p>அரச வைத்தியசாலைகளில் சுமார் 530 கதிரியக்க தொழில்நுட்ப நிபுணர்கள் பற்றாக்குறையாக உள்ளதாக அரச கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர் சங்கத்தின் தலைவர் சானக தர்மவிக்ரம தெரிவித்தார். கதிரியக்க தொழில்நுட்பத்தில் அங்கீகரிக்கப்பட்ட 1,150 ஊழியர்கள் காணப்பட வேண்டும் எனினும், தற்போது 620 ஊழியர்கள் மாத்திரமே பணியாற்றுவதாக அவர் கூறினார். இரண்டு வருடங்களுக்கு மேலாக கதிரியக்க நிபுணர்கள் நியமனம் செய்யப்படாமையால் நோயாளர்களின் சிகிச்சை மற்றும் பரிசோதனைகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, கடந்த ஒன்றரை வருடத்திற்குள் 80க்கும் மேற்பட்ட [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/shortage-of-radiology-technicians-in-government-hospitals/">அரச வைத்தியசாலைகளில் கதிரியக்க தொழில்நுட்ப நிபுணர்கள் பற்றாக்குறை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>அரச வைத்தியசாலைகளில் சுமார் 530 கதிரியக்க தொழில்நுட்ப நிபுணர்கள் பற்றாக்குறையாக உள்ளதாக அரச கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர் சங்கத்தின் தலைவர் சானக தர்மவிக்ரம தெரிவித்தார்.</p>
<p>கதிரியக்க தொழில்நுட்பத்தில் அங்கீகரிக்கப்பட்ட 1,150 ஊழியர்கள் காணப்பட வேண்டும் எனினும், தற்போது 620 ஊழியர்கள் மாத்திரமே பணியாற்றுவதாக அவர் கூறினார்.</p>
<p>இரண்டு வருடங்களுக்கு மேலாக கதிரியக்க நிபுணர்கள் நியமனம் செய்யப்படாமையால் நோயாளர்களின் சிகிச்சை மற்றும் பரிசோதனைகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.</p>
<p>இதேவேளை, கடந்த ஒன்றரை வருடத்திற்குள் 80க்கும் மேற்பட்ட கதிரியக்க தொழில்நுட்ப நிபுணர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>குறித்த பதவிக்கு 110 பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளதாக அவர் கூறினார்.</p>
<p>மேலும், சுகாதார அமைச்சின் கதிரியக்க தொழில்நுட்ப நிபுணர்கள் பயிற்சிப் பாடசாலையில் உயர்தர டிப்ளோமா பயிற்சியை முடித்த 41 டிப்ளோமாதாரர்கள் எட்டு மாதங்களாக சேவையில் இணைவதற்கு காத்திருப்பதாக தர்மவிக்ரம குறிப்பிட்டார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/shortage-of-radiology-technicians-in-government-hospitals/">அரச வைத்தியசாலைகளில் கதிரியக்க தொழில்நுட்ப நிபுணர்கள் பற்றாக்குறை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்களுக்கு பற்றாக்குறை</title>
		<link>https://oruvan.com/shortage-of-radiologic-technologists/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Thu, 26 Dec 2024 11:48:37 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[radiologic]]></category>
		<category><![CDATA[shortage]]></category>
		<category><![CDATA[technologists]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=4045</guid>

					<description><![CDATA[<p>நாடளாவிய ரீதியில் வைத்தியசாலைகளில் கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்களுக்கு பற்றாக்குறை காணப்படுவதாக அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, 40 வீதத்திற்கும் அதிகமான அதிகாரிகளுக்கான பற்றாக்குறை காணப்படுவதாக அதன் தலைவர் சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்கத்தால் அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்களை சேவையில் இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை மட்டுப்படுத்தப்பட்டமையால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இதன் காரணமாக நோயாளர்களின் சிகிச்சை மற்றும் பரிசோதனை நடவடிக்கைள் தாமதமடைந்துள்ளதாக அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார். இந்த [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/shortage-of-radiologic-technologists/">கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்களுக்கு பற்றாக்குறை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>நாடளாவிய ரீதியில் வைத்தியசாலைகளில் கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்களுக்கு பற்றாக்குறை காணப்படுவதாக<br />
அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.</p>
<p>இதன்படி, 40 வீதத்திற்கும் அதிகமான அதிகாரிகளுக்கான பற்றாக்குறை காணப்படுவதாக அதன் தலைவர் சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.</p>
<p>கடந்த அரசாங்கத்தால் அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்களை சேவையில் இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை மட்டுப்படுத்தப்பட்டமையால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.</p>
<p>இதன் காரணமாக நோயாளர்களின் சிகிச்சை மற்றும் பரிசோதனை நடவடிக்கைள் தாமதமடைந்துள்ளதாக அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.</p>
<p>இந்த ஆண்டில் 80 இற்கும் அதிகமான கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் நாட்டை விட்டு வௌியேறியுள்ளதுடன் 41 உயர் டிப்ளோமாதாரிகள் தற்போது தொழில்வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.</p>
<p>The post <a href="https://oruvan.com/shortage-of-radiologic-technologists/">கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்களுக்கு பற்றாக்குறை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
