<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>seemaan Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/seemaan/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/seemaan/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Mon, 03 Mar 2025 06:54:52 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>seemaan Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/seemaan/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>சீமான் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு &#8211; விசாரணைக்கு நீதிமன்றம் தடை</title>
		<link>https://oruvan.com/sexual-assault-case-against-seeman-court-stays-trial/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Mon, 03 Mar 2025 06:53:16 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Court]]></category>
		<category><![CDATA[seemaan]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=13024</guid>

					<description><![CDATA[<p>நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தொடரப்பட்டுள்ள பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணைகளுக்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக நடிகை விஜயலட்சுமி வளசரவாக்கம் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார். இந்த முறைப்பாட்டை அடுத்து சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. எனினும், குறித்த வழக்கை இரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. குறித்த வழக்கு கடந்த [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/sexual-assault-case-against-seeman-court-stays-trial/">சீமான் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு &#8211; விசாரணைக்கு நீதிமன்றம் தடை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தொடரப்பட்டுள்ள பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணைகளுக்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p>
<p>சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக நடிகை விஜயலட்சுமி வளசரவாக்கம் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.</p>
<p>இந்த முறைப்பாட்டை அடுத்து சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. எனினும், குறித்த வழக்கை இரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.</p>
<p>குறித்த வழக்கு கடந்த 17ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதுடன், கற்பழிப்பு வழக்கை ரத்து செய்ய முடியாது என்றும், வழக்கை 12 வாரத்துக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் நீதிபதி பொலிஸாருக்கு உத்தரவிட்டிருந்தார்.</p>
<p>எனினும், உயர் நீதிமன்றின் உத்தரவுக்கு எதிராக சீமான் தரப்பிலிருந்து உச்ச நீதிமன்றில் மேன்முறையீடு செய்யப்பட்டது.</p>
<p>&#8216;இந்த விவகாரத்தில் முன்வைக்கப்பட்ட வாதங்களையும், அனைத்து அம்சங்களையும் முறையாக கருத்தில் கொள்ளவில்லை. ஆகையினால் தன் மீதான வழக்கை ரத்து செய்ய மறுத்த உயர் நீதிமன்றின் உத்தரவை ரத்துசெய்ய வேண்டும் என கோரப்பட்டிருந்தது.</p>
<p>இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்து தீர்ப்பு கூறும் வரையில், 12 வாரங்களுக்குள் விசாரணை நடத்தி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்&#8217; எனவும் கோரப்பட்டிருந்தது.</p>
<p>இந்நிலையில், சீமான் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு இன்று உச்ச நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.</p>
<p>இதன்போது சீமான் தரப்பின் முன்னிலையான சட்டத்தரணி, &#8220;நடிகை வழக்கை மூன்று முறை திரும்ப பெற்றுள்ளார். புதிய அரசு பொறுப்பேற்றவுடன் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மீண்டும் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றார்.</p>
<p>இந்த வழக்கில் எதிர்மனுதாரர் பதிலளிக்க வேண்டும் என்று கூறிய நீதிபதிகள், வழக்கு தொடர்பான விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.</p>
<p>இதன் மூலம், சென்னை உயர் நீதிமன்றின் உத்தரவின் அடிப்படையில் சீமான் மீது வளசரவாக்கம் பொலிஸார் நடத்திய விசாரணைக்கு இடைக்கால தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/sexual-assault-case-against-seeman-court-stays-trial/">சீமான் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு &#8211; விசாரணைக்கு நீதிமன்றம் தடை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>செருப்பால் அடி, உருவ பொம்மைக்கு தீ&#8230;சீமானுக்கு எதிராக போராடிய 878 பேர் மீது வழக்குப் பதிவு</title>
		<link>https://oruvan.com/a-case-has-been-registered-against-878-people-who-fought-against-seaman-setting-the-effigy-on-fire/</link>
		
		<dc:creator><![CDATA[T Sinduja]]></dc:creator>
		<pubDate>Thu, 23 Jan 2025 01:53:53 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[India]]></category>
		<category><![CDATA[seemaan]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=7880</guid>

					<description><![CDATA[<p>நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளரான சீமான், அடிக்கடி ஏதாவதொரு சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வகையில் அண்மையில் தந்தை பெரியார் குறித்து அநாகரிகமாக சில வார்த்தைகளை பேசியிருந்தார். எனவே அவரது பேச்சுக்கு இதுவரை எந்தவொரு ஆதாரமும் அளிக்கப்படாததால் சீமானின் வீடு முற்றுகையிடப்படும் என தந்தை பெரியார் திராவிட கழக பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தெரிவித்திருந்தார். இதன் காரணமாக சென்னை நீலாங்கரையில் அமைந்துள்ள சீமான் வீட்டுக்கு பொலிஸ் காவல் போடப்பட்டது. இந்நிலையில், ஏற்கனவே கூறியிருந்தபடி, பெரியாரிய உணர்வாளர்கள் சீமானின் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/a-case-has-been-registered-against-878-people-who-fought-against-seaman-setting-the-effigy-on-fire/">செருப்பால் அடி, உருவ பொம்மைக்கு தீ&#8230;சீமானுக்கு எதிராக போராடிய 878 பேர் மீது வழக்குப் பதிவு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளரான சீமான், அடிக்கடி ஏதாவதொரு சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வகையில் அண்மையில் தந்தை பெரியார் குறித்து அநாகரிகமாக சில வார்த்தைகளை பேசியிருந்தார்.</p>
<p>எனவே அவரது பேச்சுக்கு இதுவரை எந்தவொரு ஆதாரமும் அளிக்கப்படாததால் சீமானின் வீடு முற்றுகையிடப்படும் என தந்தை பெரியார் திராவிட கழக பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.</p>
<p>இதன் காரணமாக சென்னை நீலாங்கரையில் அமைந்துள்ள சீமான் வீட்டுக்கு பொலிஸ் காவல் போடப்பட்டது.</p>
<p>இந்நிலையில், ஏற்கனவே கூறியிருந்தபடி, பெரியாரிய உணர்வாளர்கள் சீமானின் வீட்டை முற்றுகையிடும் நோக்கில் பொலிஸாரின் தடுப்புகளை மீறி சீமான் வீட்டுக்குள் செல்ல முயன்றதுடன் சீமானின் உருவப்படத்தை செருப்பால் அடித்தும், உருவ பொம்மைக்கு தீ வைத்தும் தங்கள் கோபத்தை வெளிக்காட்டினர்.</p>
<p>இதனைத் தொடர்ந்து பொலிஸாரின் தடுப்புகளை மீறிச் சென்ற பெரியாரிய உணர்வாளர்கள் கைது செய்யப்பட்டதோடு, சீமானுக்கு எதிராக போராட்டம் செய்த சுமார் 878 பேர் மீது பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/a-case-has-been-registered-against-878-people-who-fought-against-seaman-setting-the-effigy-on-fire/">செருப்பால் அடி, உருவ பொம்மைக்கு தீ&#8230;சீமானுக்கு எதிராக போராடிய 878 பேர் மீது வழக்குப் பதிவு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>&#8220;டாஸ்மாக்கில் எப்பவும் பாஸ் மார்க் தான் ஆனால், கள் இறக்கினால் குற்றமா?&#8221; &#8211; சீமான்</title>
		<link>https://oruvan.com/seemaan-speach-about-alcohol/</link>
		
		<dc:creator><![CDATA[T Sinduja]]></dc:creator>
		<pubDate>Tue, 21 Jan 2025 09:26:30 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[India]]></category>
		<category><![CDATA[seemaan]]></category>
		<category><![CDATA[tamilnadu]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=7727</guid>

					<description><![CDATA[<p>விழுப்புரத்தில் தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கம் சார்பாக இடம்பெற்று வரும் கள் விடுதலை மாநாட்டில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டார். குறித்த ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியதாவது, “தமிழகத்தில் மட்டும் கள்ளுக்கு ஏன் தடை? உயிரைக் குடிக்கும் விஷக் கடைகளை அரசு திறக்கிறது. ஆனால், கள் கடைகளை ஏன் திறப்பதில்லை. தேசிய பானம் கள்ளுக்கு தமிழகத்தை தவிர இந்தியாவின் ஏனைய மாநிலங்களில் அனுமதியுண்டு. கள் மது என்று கூறினால், அப்போது டாஸ்மாக் கடைகளில் அரசு விற்பது [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/seemaan-speach-about-alcohol/">&#8220;டாஸ்மாக்கில் எப்பவும் பாஸ் மார்க் தான் ஆனால், கள் இறக்கினால் குற்றமா?&#8221; &#8211; சீமான்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>விழுப்புரத்தில் தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கம் சார்பாக இடம்பெற்று வரும் கள் விடுதலை மாநாட்டில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டார்.</p>
<p>குறித்த ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியதாவது,</p>
<p>“தமிழகத்தில் மட்டும் கள்ளுக்கு ஏன் தடை? உயிரைக் குடிக்கும் விஷக் கடைகளை அரசு திறக்கிறது. ஆனால், கள் கடைகளை ஏன் திறப்பதில்லை.</p>
<p>தேசிய பானம் கள்ளுக்கு தமிழகத்தை தவிர இந்தியாவின் ஏனைய மாநிலங்களில் அனுமதியுண்டு.</p>
<p>கள் மது என்று கூறினால், அப்போது டாஸ்மாக் கடைகளில் அரசு விற்பது என்ன தீர்த்தமா?</p>
<p>இந்தியாவில் ஆளும் எந்த மாநில முதலமைச்சருக்கும் சாராய ஆலை இல்லை. ஆனால் தமிழகத்தில் இருக்கிறது. இந்த அரசு டாஸ்மாக்கில் மட்டும் எப்பொழுதும் பாஸ் மார்க் தான்.</p>
<p>வருடத்துக்கு ரூபாய் 50 ஆயிரம் கோடிக்கு சாராயம் விற்பனை செய்யப்படுகிறது.</p>
<p>கள் இறக்குவது வேளாண்மை சார்ந்த தொழில்” இவ்வாறு சீமான் அம் மாநாட்டில் பேசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/seemaan-speach-about-alcohol/">&#8220;டாஸ்மாக்கில் எப்பவும் பாஸ் மார்க் தான் ஆனால், கள் இறக்கினால் குற்றமா?&#8221; &#8211; சீமான்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு மாநில கட்சி அங்கீகாரம்</title>
		<link>https://oruvan.com/state-party-recognition-for-seemans-naam-tamilar-party/</link>
		
		<dc:creator><![CDATA[T Sinduja]]></dc:creator>
		<pubDate>Sat, 11 Jan 2025 04:22:13 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[India]]></category>
		<category><![CDATA[seemaan]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=6429</guid>

					<description><![CDATA[<p>சினிமாவிலிருந்து அரசியலில் நுழைந்த சீமான், நாம் தமிழர் இயக்கமாக செயல்பட்டு வந்ததை கடந்த 2010 ஆம் ஆண்டு நாம் தமிழர் கட்சியாக மாற்றினார். ஆனால் அக் கட்சி அங்கீகரிக்கப்படாத கட்சியாக இருந்து வந்தது. கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 6.58 சதவீத வாக்குகளைப் பெற்றதால் அதற்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை. இந்நிலையில் கடந்த மக்களவைத் தேர்தலில் 8.22 சதவீத வாக்குகளைப் பெற்றதால் இக் கட்சிக்கு மாநில கட்சி அங்கீகாரம் கிடைத்துள்ளது. இது தொடர்பில் கடிதமொன்றை [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/state-party-recognition-for-seemans-naam-tamilar-party/">சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு மாநில கட்சி அங்கீகாரம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>சினிமாவிலிருந்து அரசியலில் நுழைந்த சீமான், நாம் தமிழர் இயக்கமாக செயல்பட்டு வந்ததை கடந்த 2010 ஆம் ஆண்டு நாம் தமிழர் கட்சியாக மாற்றினார்.</p>
<p>ஆனால் அக் கட்சி அங்கீகரிக்கப்படாத கட்சியாக இருந்து வந்தது.</p>
<p>கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 6.58 சதவீத வாக்குகளைப் பெற்றதால் அதற்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை.</p>
<p>இந்நிலையில் கடந்த மக்களவைத் தேர்தலில் 8.22 சதவீத வாக்குகளைப் பெற்றதால் இக் கட்சிக்கு மாநில கட்சி அங்கீகாரம் கிடைத்துள்ளது.</p>
<p>இது தொடர்பில் கடிதமொன்றை அனுப்பிய தேர்தல் ஆணைக்குழு,</p>
<p>&#8216;கடந்த மக்களவைத் தேர்தலில் தேர்தல் சின்னங்கள் சட்டம் 1968, பிரிவு 6ஏ-ன் விதிகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் நிபந்தனைகளை நாம் தமிழர் கட்சி பூர்த்தி செய்திருக்கிறது. இதன் மூலம் தமிழகத்தின் மாநில கட்சியாக அங்கீகாரம் வழங்கப்படுகிறது.</p>
<p>ஆனால், கட்சியின் சின்னமாக விவசாயி அல்லது புலி சின்னம் ஒதுக்க கோரப்பட்டுள்ளது.</p>
<p>இந்த சின்னங்கள் ஏற்கனவே ஒதுக்கப்பட்டிருப்பதால் நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்க முடியாது&#8217; எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/state-party-recognition-for-seemans-naam-tamilar-party/">சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு மாநில கட்சி அங்கீகாரம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>அனுமதி மறுப்புக்குப் பின்னரும் போராட்டத்தில் ஈடுபட்ட சீமான்&#8230; கைது செய்த பொலிஸார்</title>
		<link>https://oruvan.com/the-police-arrested-the-seaman-who-was-protesting-even-after-the-refusal-of-permission/</link>
		
		<dc:creator><![CDATA[T Sinduja]]></dc:creator>
		<pubDate>Tue, 31 Dec 2024 06:42:50 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[seemaan]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=4677</guid>

					<description><![CDATA[<p>அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இவ் ஆர்ப்பாட்டத்துக்கு பொலிஸாரின் அனுமதி கேட்டிருந்த நிலையில், நுங்கம்பாக்கம் பொலிஸார் அனுமதி மறுத்துள்ளனர். பொலிஸாரின் அனுமதி மறுப்புக்குப் பின்னரும் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அனுமதி பெறாமல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பொலிஸார் கைது செய்தனர். தொடர்ந்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் காரை விட்டு இறங்கி போராட்டத்தில் ஈடுபட [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/the-police-arrested-the-seaman-who-was-protesting-even-after-the-refusal-of-permission/">அனுமதி மறுப்புக்குப் பின்னரும் போராட்டத்தில் ஈடுபட்ட சீமான்&#8230; கைது செய்த பொலிஸார்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.</p>
<p>இவ் ஆர்ப்பாட்டத்துக்கு பொலிஸாரின் அனுமதி கேட்டிருந்த நிலையில், நுங்கம்பாக்கம் பொலிஸார் அனுமதி மறுத்துள்ளனர்.</p>
<p>பொலிஸாரின் அனுமதி மறுப்புக்குப் பின்னரும் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அனுமதி பெறாமல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பொலிஸார் கைது செய்தனர்.</p>
<p>தொடர்ந்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் காரை விட்டு இறங்கி போராட்டத்தில் ஈடுபட முயன்ற நிலையில் பொலிஸார் அவரை தடுக்க முயன்றுள்ளனர்.</p>
<p>இந்நிலையில் இரு தரப்பினருக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சீமானை கைது செய்த பொலிஸார் அவரை அருகிலுள்ள திருமண மண்டபத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.</p>
<p>பொலிஸார் கைது செய்தபோது “ஜனநாயக ரீதியில் போராட வந்த தன்னை பொலிஸார் ஒடுக்குகின்றனர் என சீமான் குற்றம் சாட்டினர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/the-police-arrested-the-seaman-who-was-protesting-even-after-the-refusal-of-permission/">அனுமதி மறுப்புக்குப் பின்னரும் போராட்டத்தில் ஈடுபட்ட சீமான்&#8230; கைது செய்த பொலிஸார்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
