<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>sector Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/sector/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/sector/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Wed, 03 Sep 2025 07:26:48 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>sector Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/sector/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக செயலணி</title>
		<link>https://oruvan.com/task-force-to-improve-tourism-sector/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Wed, 03 Sep 2025 07:26:26 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[force]]></category>
		<category><![CDATA[improve]]></category>
		<category><![CDATA[sector]]></category>
		<category><![CDATA[task]]></category>
		<category><![CDATA[Tourism]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=31531</guid>

					<description><![CDATA[<p>சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக செயலணியொன்றை நிறுவுவதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கும் நாட்டின் பொருளாதாரத்திற்கு நேரடி வருவாய் வளர்ச்சியை அடைவதற்கும் இந்த செயலணியை நிறுவுவதற்கு  தீர்மானித்துள்ளதாக  வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். இந்த செயலணி சுற்றுலாத் துறையை மேம்படுத்துவது தொடர்பான முடிவுகளை எடுக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். சுற்றுலா ஊக்குவிப்பு செயலணியின் முதல் கூட்டம் நேற்று (02) ஜனாதிபதி செயலகத்தில் ஆரம்பமான போதே அமைச்சர் இதனைத் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/task-force-to-improve-tourism-sector/">சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக செயலணி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக செயலணியொன்றை நிறுவுவதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.</p>
<p>சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கும் நாட்டின் பொருளாதாரத்திற்கு நேரடி வருவாய் வளர்ச்சியை அடைவதற்கும் இந்த செயலணியை நிறுவுவதற்கு  தீர்மானித்துள்ளதாக  வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.</p>
<p>இந்த செயலணி சுற்றுலாத் துறையை மேம்படுத்துவது தொடர்பான முடிவுகளை எடுக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p>
<p>சுற்றுலா ஊக்குவிப்பு செயலணியின் முதல் கூட்டம் நேற்று (02) ஜனாதிபதி செயலகத்தில் ஆரம்பமான போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.</p>
<p>சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்குத் தேவையான திட்டங்களைத் தயாரித்தல், அதற்கு அவசியமான முடிவுகளை எடுப்பதற்கு அரச நிறுவனங்களை<br />
ஒருங்கிணைந்த கட்டமைப்பின் கீழ் செயல்படுத்துதல், சுற்றுலாப் பயணிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சுற்றுலாத் துறையில் தொழில்முனைவோர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து இதன் போது கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன.</p>
<p>எதிர்வரும் சுற்றுலாப் பருவத்தை வெற்றிகரமாக்குவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்து அரச நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்துறையினர்களுடன் எதிர்காலத் திட்டங்களை வகுக்க வேண்டியதன் அவசியமும் இங்கு கவனத்தில் கொள்ளப்பட்டது.</p>
<p>ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதியின் சிரேஸ்ட மேலதிகச் செயலாளர் ரோஷன் கமகே, பொருளாதார விவகாரங்கள் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜா, பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோக பண்டார, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் தலைவர் புத்திக ஹேவாவசம், அமைச்சுக்களின் அதிகாரிகள் மற்றும் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி கிரிஷான் பாலேந்திரா, EKHO ஹொட்டல்ஸ் மற்றும் ரிசோர்ட்ஸ் நிறுவன உப தலைவர் நிஹால் முஹந்திரம் உள்ளிட்ட சுற்றுலாத் துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/task-force-to-improve-tourism-sector/">சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக செயலணி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>அமெரிக்க வரி விதிப்பால் இந்தியாவின் ஏற்றுமதி துறை பெரும் பாதிப்பு</title>
		<link>https://oruvan.com/indias-export-sector-hit-hard-by-us-tariffs/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Wed, 27 Aug 2025 13:40:24 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[export]]></category>
		<category><![CDATA[India's]]></category>
		<category><![CDATA[sector]]></category>
		<category><![CDATA[tariffs]]></category>
		<category><![CDATA[US]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=30875</guid>

					<description><![CDATA[<p>அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பு காரணமாக இந்தியாவின் 4.2 லட்சம் கோடி ரூபா மதிப்பிலான ஏற்றுமதி பாதிக்கப்படலாம் இந்திய ஏற்றுமதியாளர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். ஆடைகள், ரத்தினங்கள் மற்றும் நகைகள் உள்ளிட்ட தொழிலாளர் சார்ந்த இந்திய நிறுவனங்கள் கடுமையான பாதிப்பைச் சந்திக்க வாய்ப்புள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, அமெரிக்கச் சந்தைகளில் இருந்து இந்திய பொருட்கள் வெளியேற்றப்பட்டு, அமெரிக்காவின் குறைந்த வரி விதிப்பு சலுகையைப் பெற்ற இந்தியாவின் போட்டியாளர்களான பங்களாதேஷ், வியட்நாம், இலங்கை, கம்போடியா, இந்தோனேஷியா நாடுகளின் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/indias-export-sector-hit-hard-by-us-tariffs/">அமெரிக்க வரி விதிப்பால் இந்தியாவின் ஏற்றுமதி துறை பெரும் பாதிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பு காரணமாக இந்தியாவின் 4.2 லட்சம் கோடி ரூபா மதிப்பிலான ஏற்றுமதி பாதிக்கப்படலாம்<br />
இந்திய ஏற்றுமதியாளர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.</p>
<p>ஆடைகள், ரத்தினங்கள் மற்றும் நகைகள் உள்ளிட்ட தொழிலாளர் சார்ந்த இந்திய நிறுவனங்கள் கடுமையான பாதிப்பைச் சந்திக்க வாய்ப்புள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.</p>
<p>குறிப்பாக, அமெரிக்கச் சந்தைகளில் இருந்து இந்திய பொருட்கள் வெளியேற்றப்பட்டு, அமெரிக்காவின் குறைந்த வரி விதிப்பு சலுகையைப் பெற்ற இந்தியாவின் போட்டியாளர்களான பங்களாதேஷ், வியட்நாம், இலங்கை, கம்போடியா, இந்தோனேஷியா நாடுகளின் பொருட்களுக்கு வரவேற்பளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>
<p>இந்தியாவின் பின்னலாடை ஏற்றுமதியில் 68 சதவீதம் தமிழ்நாட்டின் திருப்பூர் மாநகரில் இடம்பெறுகிறது</p>
<p>1980 ஆம் அண்டு முதல்1990 ஆம் ஆண்டுகளில் இங்கு வளர்ச்சியடைந்த பின்னலாடை ஏற்றுமதி தொழில் கடந்த 10 ஆண்டுகளில் அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் உள்ள சந்தைகளுக்கு ஆண்டுக்கு46 ஆயிரம் கோடி ரூபா என்ற அளவில் ஏற்றுமதி நடைபெறுவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.</p>
<p>இந்த ஏற்றுமதியில் சுமார் 30 சதவீத அளவுக்கான பின்னலாடைகள் திருப்பூரில் இருந்து அமெரி க்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.</p>
<p>அமெரிக்க ஏற்றுமதியை நம்பி பல பின்னலாடை நிறுவனங்கள் உள்ள நிலையில் லட்சக்கணக்கான தொழிலாளர்களும் இங்கு பணி புரிகின்றனர்.</p>
<p>இந்தநிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்த 50 சதவீத வரியா திருப்பூர் பின்னலாடை தொழிலை ஸ்தம்பிக்க காரணம் எனவும்<br />
தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/indias-export-sector-hit-hard-by-us-tariffs/">அமெரிக்க வரி விதிப்பால் இந்தியாவின் ஏற்றுமதி துறை பெரும் பாதிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சுகாதாரத் துறையில் நிலவும் பணியாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய ஆட்சேர்ப்பு</title>
		<link>https://oruvan.com/recruitment-to-address-staff-shortage-in-the-health-sector/</link>
		
		<dc:creator><![CDATA[Kanooshiya Pushpakumar]]></dc:creator>
		<pubDate>Sun, 09 Feb 2025 03:52:30 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[address]]></category>
		<category><![CDATA[health]]></category>
		<category><![CDATA[recruitment]]></category>
		<category><![CDATA[sector]]></category>
		<category><![CDATA[shortage]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=9828</guid>

					<description><![CDATA[<p>சுகாதாரத் துறையில் நிலவும் பணியாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக அடுத்த மாதத்திற்குள் ஆட்சேர்ப்பு செய்யவுள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். பேராதனை போதனா வைத்தியசாலையில் நேற்று (09.02) அறுவை சிகிச்சை பிரிவொன்றை திறந்து வைக்கும் நிகழ்வில் பங்கேற்றபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், சுகாதாரத் துறையில் நிலவும் பணியாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக அடுத்த மாதத்திற்குள் 3,500 தாதியர்களையும் 976 குடும்ப சுகாதார சேவை [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/recruitment-to-address-staff-shortage-in-the-health-sector/">சுகாதாரத் துறையில் நிலவும் பணியாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய ஆட்சேர்ப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>சுகாதாரத் துறையில் நிலவும் பணியாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக அடுத்த மாதத்திற்குள் ஆட்சேர்ப்பு செய்யவுள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.</p>
<p>பேராதனை போதனா வைத்தியசாலையில் நேற்று (09.02) அறுவை சிகிச்சை பிரிவொன்றை திறந்து வைக்கும் நிகழ்வில் பங்கேற்றபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.</p>
<p>இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,</p>
<p>சுகாதாரத் துறையில் நிலவும் பணியாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக அடுத்த மாதத்திற்குள் 3,500 தாதியர்களையும் 976 குடும்ப சுகாதார சேவை அதிகாரிகளையும் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.</p>
<p>கடந்த காலங்களில் வெளிநாடுகளுக்குச் சென்ற அனைத்து மருத்துவர்களும் நாடு திரும்புமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்றார்.</p>
<p>இதேவேளை, பல்வேறு வைத்தியசாலைகளில் தொடர்புடைய அறுவை சிகிச்சைகளை மேற்கொள்வதற்காக சுமார் இருபதாயிரம் இருதய நோயாளர்கள் காத்திருப்போர் பட்டியலில் உள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்களின் தொழிற்சங்க கூட்டணியின் தலைவரான நிபுணர் வைத்தியர் சமல் சஞ்சீவ, தெரிவித்தார்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/recruitment-to-address-staff-shortage-in-the-health-sector/">சுகாதாரத் துறையில் நிலவும் பணியாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய ஆட்சேர்ப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தனியாரால் 72,000 மெட்றிக் டொன் அரிசி இறக்குமதி</title>
		<link>https://oruvan.com/private-sector-imports-72000-metric-tons-of-rice/</link>
		
		<dc:creator><![CDATA[Kanooshiya Pushpakumar]]></dc:creator>
		<pubDate>Fri, 27 Dec 2024 11:25:54 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[000]]></category>
		<category><![CDATA[72]]></category>
		<category><![CDATA[imports]]></category>
		<category><![CDATA[metric]]></category>
		<category><![CDATA[of rice]]></category>
		<category><![CDATA[Private]]></category>
		<category><![CDATA[sector]]></category>
		<category><![CDATA[tons]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=4210</guid>

					<description><![CDATA[<p>இறக்குமதி அனுமதிப்பத்திரம் இன்றி அரிசி இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டதையடுத்து இன்று  (27) வரையில் இறக்குமதி செய்யப்பட்ட 72,000 மெட்றிக் டொன் அரிசி துறைமுகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மேலதிக சுங்கப் பணிப்பாளர் நாயகம் சீவலி அருக்கொட தெரிவித்தார். இறக்குமதி செய்யப்பட்ட 72,000 மெட்றிக் டொன் அரிசியில் 32,000 மெட்றிக் டொன் பச்சை அரிசியும், 40,000 மெட்றிக் டொன் நாட்டு அரிசியும் உள்ளடங்குவதாகவும், மேலும், சுங்கத்திற்கு அனுப்பப்படும் இறக்குமதி செய்யப்பட்ட அரிசி விரைவில் விடுவிக்கப்படும் என்றும் அருக்கொட [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/private-sector-imports-72000-metric-tons-of-rice/">தனியாரால் 72,000 மெட்றிக் டொன் அரிசி இறக்குமதி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இறக்குமதி அனுமதிப்பத்திரம் இன்றி அரிசி இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டதையடுத்து இன்று  (27) வரையில் இறக்குமதி செய்யப்பட்ட 72,000 மெட்றிக் டொன் அரிசி துறைமுகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மேலதிக சுங்கப் பணிப்பாளர் நாயகம் சீவலி அருக்கொட தெரிவித்தார்.</p>
<p>இறக்குமதி செய்யப்பட்ட 72,000 மெட்றிக் டொன் அரிசியில் 32,000 மெட்றிக் டொன் பச்சை அரிசியும், 40,000 மெட்றிக் டொன் நாட்டு அரிசியும் உள்ளடங்குவதாகவும், மேலும், சுங்கத்திற்கு அனுப்பப்படும் இறக்குமதி செய்யப்பட்ட அரிசி விரைவில் விடுவிக்கப்படும் என்றும் அருக்கொட குறிப்பிட்டார்.</p>
<p>நாடு எதிர்நோக்கும் அரிசி நெருக்கடிக்கு தீர்வாக, இறக்குமதி அனுமதிப்பத்திரம் இன்றி அரிசியை இறக்குமதி செய்வதற்கான சந்தர்ப்பத்தை தனியார் துறையினருக்கு தற்போதைய அரசாங்கம் கடந்த 4ஆம் திகதி வழங்கியது.</p>
<p>The post <a href="https://oruvan.com/private-sector-imports-72000-metric-tons-of-rice/">தனியாரால் 72,000 மெட்றிக் டொன் அரிசி இறக்குமதி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
