<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>School Leav Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/school-leav/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/school-leav/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Fri, 09 Jan 2026 03:51:50 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>School Leav Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/school-leav/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை!! நேரத்துடன் மூடப்படும் பதுளை மாவட்ட பாடசாலைகள்</title>
		<link>https://oruvan.com/schools-to-close-on-time-from-today-badulla-district-schools-to-close-on-time/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Fri, 09 Jan 2026 03:51:50 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[School Leav]]></category>
		<category><![CDATA[Sri Lanka Weather]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=42719</guid>

					<description><![CDATA[<p>பதுளை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் இன்று (09) காலை 11 மணிக்குள் மூட தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஊவா மாகாண கல்விப் பணிப்பாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். வளிமண்டலவியல் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட சமீபத்திய முன்னறிவிப்பு மற்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட மண்சரிவுகள் தொடர்பான சிறப்பு எச்சரிக்கை அறிவிப்பை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனிடையே, அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் முதலாம் தவணையின் முதல் கட்டம் இன்றுடன் நிறைவடைகிறது. [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/schools-to-close-on-time-from-today-badulla-district-schools-to-close-on-time/">பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை!! நேரத்துடன் மூடப்படும் பதுளை மாவட்ட பாடசாலைகள்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பதுளை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் இன்று (09) காலை 11 மணிக்குள் மூட தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஊவா மாகாண கல்விப் பணிப்பாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.</p>
<p>வளிமண்டலவியல் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட சமீபத்திய முன்னறிவிப்பு மற்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட மண்சரிவுகள் தொடர்பான சிறப்பு எச்சரிக்கை அறிவிப்பை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.</p>
<p>இதனிடையே, அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் முதலாம் தவணையின் முதல் கட்டம் இன்றுடன் நிறைவடைகிறது.</p>
<p>இதன்படி, ஈதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 21ஆம் திகதி தொடங்கும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.</p>
<p>இதற்கிடையில், அனர்த்த நிலைமை காரணமாக நடைபெறாத உயர்தரப் பரீட்சைகள் எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை நாடு முழுவதும் 2086 பரீட்சை நிலையங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>அனர்த்தம் காரணமாக தேசிய அடையாள அட்டையை இழந்த மாணவர்கள், அதிபரால் சான்றளிக்கப்பட்ட தற்காலிக அடையாள அட்டையைப் பயன்படுத்தி பரீட்சைக்கு எழுத முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>தனியார் விண்ணப்பதாரர்கள் பிரதேச செயலாளரால் சான்றளிக்கப்பட்ட தற்காலிக அடையாள அட்டையைப் பயன்படுத்தி பரீட்சை எழுதலாம் என்றும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/schools-to-close-on-time-from-today-badulla-district-schools-to-close-on-time/">பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை!! நேரத்துடன் மூடப்படும் பதுளை மாவட்ட பாடசாலைகள்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>யாழ் மாவட்ட பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை</title>
		<link>https://oruvan.com/special-holiday-for-jaffna-district-schools/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Wed, 20 Aug 2025 10:00:38 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Jaffna]]></category>
		<category><![CDATA[Jaffna News]]></category>
		<category><![CDATA[School Leav]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=30086</guid>

					<description><![CDATA[<p>நல்லூர் தேர்த்திருவிழாவினையொட்டி நாளை யாழ் மாவட்ட பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. நாளைய தினம் (21.08.2025) வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி ஆலய தேர்த்திருவிழா பாடசாலை நாளில் இடம்பெறுகின்றது. இதனையொட்டி பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்களும் குறித்த நிகழ்வில் பங்குபெற வேண்டும் எனும் நோக்கில் யாழ் மாவட்ட பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கவேண்டும் என பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் ப.பத்மநாதன் சத்தியலிங்கம் மற்றும் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி ஆகியோர் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/special-holiday-for-jaffna-district-schools/">யாழ் மாவட்ட பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>நல்லூர் தேர்த்திருவிழாவினையொட்டி நாளை யாழ் மாவட்ட பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.</p>
<p>நாளைய தினம் (21.08.2025) வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி ஆலய தேர்த்திருவிழா பாடசாலை நாளில் இடம்பெறுகின்றது.</p>
<p>இதனையொட்டி பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்களும் குறித்த நிகழ்வில் பங்குபெற வேண்டும் எனும் நோக்கில் யாழ் மாவட்ட பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கவேண்டும் என பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.</p>
<p>யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் ப.பத்மநாதன் சத்தியலிங்கம் மற்றும் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி ஆகியோர் பிரதமரை நேரில் சந்தித்து இந்த கோரிக்கையை விடுத்திருந்தனர்.</p>
<p>இதன்பிரகாரம், உடனடியாக கல்வி அமைச்சின் செயலாளருக்கு நாளைய தினம் யாழ்ப்பாண மாவட்ட பாடசாலைகளுக்கு விசேட விடுமுறையினை அறிவிக்குமாறு பிரதமர் பணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>தமது கோரிக்கையினை ஏற்று நாளைய தினம் யாழ்ப்பாணம் மாவட்ட பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்க நடவடிக்கை மேற்கொண்டமைக்காக உளப்பூர்வமான நன்றிகளை பிரதமருக்கு தெரிவித்துக்கொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதன்போது தெரிவித்தனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/special-holiday-for-jaffna-district-schools/">யாழ் மாவட்ட பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
