<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>scam Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/scam/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/scam/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Tue, 27 Jan 2026 10:33:46 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>scam Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/scam/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>கனடாவுக்கு அனுப்புவதாக கூறி பெருந்தொகை பணம் மோசடி &#8211; மன்னாரை சேர்ந்த ஒருவர் கைது</title>
		<link>https://oruvan.com/a-mannar-resident-arrested-for-defrauding-a-large-sum-of-money-by-claiming-to-send-it-to-canada/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Tue, 27 Jan 2026 10:33:46 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#police]]></category>
		<category><![CDATA[Canada Job]]></category>
		<category><![CDATA[scam]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=43908</guid>

					<description><![CDATA[<p>கனடாவுக்கு அனுப்புவதாக கூறி 1,705,000 ரூபாய் மோசடி செய்ததாக, மன்னார் – எலுத்தூர் பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் நீர்கொழும்பு விசேட குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர், நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர், எதிர்வரும் மூன்றாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அதேபோல், ருமேனியா நாட்டில் வேலை வாய்ப்பு வழங்குவதாக கூறி ரூபாய் 915,000.00 பணத்தை மோசடி செய்த சந்தேகநபர் தொடர்பாகவும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. அநுராதபுரம் பகுதியைச் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/a-mannar-resident-arrested-for-defrauding-a-large-sum-of-money-by-claiming-to-send-it-to-canada/">கனடாவுக்கு அனுப்புவதாக கூறி பெருந்தொகை பணம் மோசடி &#8211; மன்னாரை சேர்ந்த ஒருவர் கைது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>கனடாவுக்கு அனுப்புவதாக கூறி 1,705,000 ரூபாய் மோசடி செய்ததாக, மன்னார் – எலுத்தூர் பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் நீர்கொழும்பு விசேட குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p>
<p>கைது செய்யப்பட்ட சந்தேகநபர், நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர், எதிர்வரும் மூன்றாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p>
<p>அதேபோல், ருமேனியா நாட்டில் வேலை வாய்ப்பு வழங்குவதாக கூறி ரூபாய் 915,000.00 பணத்தை மோசடி செய்த சந்தேகநபர் தொடர்பாகவும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.</p>
<p>அநுராதபுரம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருடன் அறிமுகம் ஏற்படுத்திக் கொண்டு, இவ்வாறு அவரை ஏமாற்றியுள்ளார். ஆரம்ப நடவடிக்கைகளுக்காக முதலில் ரூபாய் 4,70,000 தொகையை பெற்றுள்ளார்.</p>
<p>அதன் பின்னர், மீதமுள்ள நடவடிக்கைகளுக்காக ரூபாய் 1,600,000செலவாகும் என தெரிவித்து, அதில் பாதி தொகையை வழங்குமாறு கேட்டுள்ளார்.</p>
<p>இதனையடுத்து, அப்பெண் ரூபாய் 400,000 தொகையை சந்தேகநபரின் வழங்கிய வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளார்.</p>
<p>காலம் செல்லச் செல்ல வெளிநாடு செல்லும் நடவடிக்கைகள் தாமதமானதுடன், பல தடவைகள் மேலதிக பணம் கோரப்பட்ட போதிலும், உரிய சேவைகள் வழங்கப்படாத காரணத்தினால், அந்த பெண் பணம் செலுத்திய ரசீதுகளின் பிரதிகளுடன் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.</p>
<p>வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக விண்ணப்பிக்கும் போது, தனியார் நிறுவனங்களைத் தேர்ந்தெடுக்கும் சமயத்தில், உரிய முறையில் சரிபார்த்து, நம்பகமான நிறுவனங்களையே தேர்ந்தெடுக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.</p>
<p>மோசடி நோக்கத்துடன் செயல்படும் நபர்களின் வஞ்சக வாக்குறுதிகளுக்கு ஏமாறி, தங்களது பணத்தை இழக்க வேண்டாம்.</p>
<p>சேவை வழங்குபவர் குறித்து சந்தேகம் ஏற்பட்டால், தாமதமின்றி அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறது.</p>
<p>அதற்காக, பணம் செலுத்திய ரசீதுகள் மற்றும் சேவை வழங்குபவரின் தகவல்களை உள்ளடக்கிய ஆவணங்களை பாதுகாப்பாக வைத்திருக்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.</p>
<p>The post <a href="https://oruvan.com/a-mannar-resident-arrested-for-defrauding-a-large-sum-of-money-by-claiming-to-send-it-to-canada/">கனடாவுக்கு அனுப்புவதாக கூறி பெருந்தொகை பணம் மோசடி &#8211; மன்னாரை சேர்ந்த ஒருவர் கைது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>விரிவடைந்து வரும் சர்வதேச ஒன்லைன் மோசடி!! இலங்கையில் ஓய்வுபெற்ற நீதிபதியும் ஒருவரும் பாதிப்பு</title>
		<link>https://oruvan.com/expanding-international-online-fraud-a-retired-judge-and-another-person-in-sri-lanka-have-been-affected/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Mon, 24 Nov 2025 10:55:18 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[#oruvan #news]]></category>
		<category><![CDATA[scam]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=39117</guid>

					<description><![CDATA[<p>இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் சர்வதேச ஒன்லைன் மோசடி வளையத்தின் சமீபத்திய பாதிக்கப்பட்டவர்களில் ஒருவராக ஓய்வுபெற்ற இலங்கை நீதிபதி ஒருவர் மாறியுள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். குற்றவாளிகள் அவரது வங்கிக் கணக்கில் ஊடுருவி, இலங்கை தபால் திணைக்கள அதிகாரிகள் போல் நடித்து, பொதி ஒன்றுக்கு ஒன்லைனில் பணம் செலுத்தும்படி அவரைத் தூண்டி, கிட்டத்தட்ட 400,000 ரூபாயை மோசடி செய்துள்ளனர். விசாரணைகளின்படி, மோசடி செய்பவர்கள் தபால் திணைக்களம் மூலம் பொதி ஒன்று வந்துள்ளதாக தெரிவித்து, பெறுநரிடம் ஒரு சிறிய [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/expanding-international-online-fraud-a-retired-judge-and-another-person-in-sri-lanka-have-been-affected/">விரிவடைந்து வரும் சர்வதேச ஒன்லைன் மோசடி!! இலங்கையில் ஓய்வுபெற்ற நீதிபதியும் ஒருவரும் பாதிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் சர்வதேச ஒன்லைன் மோசடி வளையத்தின் சமீபத்திய பாதிக்கப்பட்டவர்களில் ஒருவராக ஓய்வுபெற்ற இலங்கை நீதிபதி ஒருவர் மாறியுள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.</p>
<p>குற்றவாளிகள் அவரது வங்கிக் கணக்கில் ஊடுருவி, இலங்கை தபால் திணைக்கள அதிகாரிகள் போல் நடித்து, பொதி ஒன்றுக்கு ஒன்லைனில் பணம் செலுத்தும்படி அவரைத் தூண்டி, கிட்டத்தட்ட 400,000 ரூபாயை மோசடி செய்துள்ளனர்.</p>
<p>விசாரணைகளின்படி, மோசடி செய்பவர்கள் தபால் திணைக்களம் மூலம் பொதி ஒன்று வந்துள்ளதாக தெரிவித்து, பெறுநரிடம் ஒரு சிறிய கட்டணத்தை (பொதுவாக 100 ரூபாவுக்கும் குறைவானது) செலுத்துமாறு ஒன்லைன் கட்டண இணைப்பு மூலம் குறுஞ்செய்தியை அனுப்பியுள்ளனர்.</p>
<p>பாதிக்கப்பட்டவர் தங்கள் வங்கி விவரங்களை உள்ளிட்டதும், மோசடி செய்பவர்கள் கணக்கில் அங்கீகரிக்கப்படாத அணுகலைப் பெற்று, திருடப்பட்ட பணத்தை வெளிநாட்டு நாணயமாக மாற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>பாதிக்கப்பட்ட முன்னாள் நீதிபதி, மருதானை தபால் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.</p>
<p>இந்த மோசடியின் பின்னணியில் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குழு இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருவதாகவும், ஆனால் அவர்களின் அடையாளங்கள் தெரியவில்லை என்றும் அஞ்சல்மா அதிபர் தெரிவித்துள்ளார்.</p>
<p>மோசடி செய்பவர்கள் அதிகாரப்பூர்வ அஞ்சல் துறை பக்கத்தை ஒத்த போலி வலைத்தளங்களையும் உருவாக்கி, அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளை மேற்கொள்ள OTP குறியீடுகளைப் பயன்படுத்துகின்றனர்.</p>
<p>கிரெடிட் அல்லது டெபிட் அட்டைகள் மூலம் எந்தவொரு ஒன்லைன் கட்டணத்தையும் தபால் திணைக்களம் அனுமதிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இந்நிலையில், அஞ்சல் சேவைகளுடன் இணைக்கப்பட்டதாகக் கூறி இதுபோன்ற எந்தவொரு பரிவர்த்தனையையும் மேற்கொள்ள வேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.</p>
<p>இந்த மோசடி ஒரு தனி நபரால் நடத்தப்படுகிறதா அல்லது ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட சர்வதேச குழுவால் நடத்தப்படுகிறதா என்பதை அதிகாரிகளால் இன்னும் தீர்மானிக்க முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/expanding-international-online-fraud-a-retired-judge-and-another-person-in-sri-lanka-have-been-affected/">விரிவடைந்து வரும் சர்வதேச ஒன்லைன் மோசடி!! இலங்கையில் ஓய்வுபெற்ற நீதிபதியும் ஒருவரும் பாதிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>வாடகைக்கு வாகனங்களை பெற்று விற்பனை  &#8211; இருவர் கைது</title>
		<link>https://oruvan.com/02-arrested-in-vehicle-sale-scam-using-rented-cars/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sat, 14 Jun 2025 07:50:45 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#vehicle]]></category>
		<category><![CDATA[arrested]]></category>
		<category><![CDATA[cars]]></category>
		<category><![CDATA[rented]]></category>
		<category><![CDATA[scam]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=23429</guid>

					<description><![CDATA[<p>வாடகைகக்கு வாகனங்களைப் பெற்று,  போலி ஆவணங்களைத் தயாரித்து விற்பனை செய்த சந்தேகநபர்கள் இருவர் மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்துள்ளனர். அனுராதபுரத்தில் வேன் ஒன்றை வாடகைக்குப் பெற்று அதனை 1.04 மில்லியன் ரூபாவிற்கும் பொரளையில் வாடகைக்குப் பெற்ற காரை 09 மில்லியன் ரூபாவிற்கும் விற்பனை செய்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் மாளிகாவத்தை மற்றும் ஹொரணை பகுதிகளில் வசிக்கும் 30 மற்றும் 36 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாணந்துறை பொலிஸ் பிரிவில் வாடகைக் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/02-arrested-in-vehicle-sale-scam-using-rented-cars/">வாடகைக்கு வாகனங்களை பெற்று விற்பனை  &#8211; இருவர் கைது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>வாடகைகக்கு வாகனங்களைப் பெற்று,  போலி ஆவணங்களைத் தயாரித்து விற்பனை செய்த சந்தேகநபர்கள் இருவர் மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்துள்ளனர்.</p>
<p>அனுராதபுரத்தில் வேன் ஒன்றை வாடகைக்குப் பெற்று அதனை 1.04 மில்லியன் ரூபாவிற்கும் பொரளையில் வாடகைக்குப் பெற்ற காரை 09 மில்லியன் ரூபாவிற்கும் விற்பனை செய்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p>
<p>கைது செய்யப்பட்டவர்கள் மாளிகாவத்தை மற்றும் ஹொரணை பகுதிகளில் வசிக்கும் 30 மற்றும் 36 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>மேலும் பாணந்துறை பொலிஸ் பிரிவில் வாடகைக் கார் ஒன்றை பெற்று அதனை 5.8 மில்லியனுக்கு, மொரகஹஹேன மற்றும் வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவுகளில் வாடகை அடிப்படையில் கார்களை பெற்று அதனை 5.0 மில்லியனுக்கும், 4.2 மில்லியனுக்கும் விற்பனை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p>
<h1 class=" loop-title"></h1>
<p>The post <a href="https://oruvan.com/02-arrested-in-vehicle-sale-scam-using-rented-cars/">வாடகைக்கு வாகனங்களை பெற்று விற்பனை  &#8211; இருவர் கைது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தேங்காய் எண்ணெய் மோசடி</title>
		<link>https://oruvan.com/coconut-oil-scam/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sat, 28 Dec 2024 09:09:20 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[Coconut]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[oil]]></category>
		<category><![CDATA[scam]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=4330</guid>

					<description><![CDATA[<p>பயன்படுத்தப்பட்ட தேங்காய் எண்ணெய் சுத்திகரிக்கப்பட்டு சந்தையில் வெளியிடப்படும் தேங்காய் எண்ணெய் மோசடி தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மிளகாய்த்துள் மஞ்சள் உள்ளிட்ட கலப்பட மசாலாப் பொருட்கள் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக சங்கத்தின் பொதுச் செயலாளர் சமீரா முத்துக்குடா தெரிவித்துள்ளார். பண்டிகைக் காலத்தில் சுகாதாரத் தரங்கள் கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் டிசம்பர் முதலாம் திகதி முதல் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். 5000 இற்கும் மேற்பட்ட [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/coconut-oil-scam/">தேங்காய் எண்ணெய் மோசடி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பயன்படுத்தப்பட்ட தேங்காய் எண்ணெய் சுத்திகரிக்கப்பட்டு சந்தையில் வெளியிடப்படும் தேங்காய் எண்ணெய் மோசடி தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.</p>
<p>மிளகாய்த்துள் மஞ்சள் உள்ளிட்ட கலப்பட மசாலாப் பொருட்கள் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக சங்கத்தின் பொதுச் செயலாளர் சமீரா முத்துக்குடா தெரிவித்துள்ளார்.</p>
<p>பண்டிகைக் காலத்தில் சுகாதாரத் தரங்கள் கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் டிசம்பர் முதலாம் திகதி முதல் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p>
<p>5000 இற்கும் மேற்பட்ட கடைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் 450 கடைகள் நுகர்வுக்குப் பொருத்தமற்ற உணவுகளை<br />
விற்பனை செய்தமைக்காக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/coconut-oil-scam/">தேங்காய் எண்ணெய் மோசடி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
