<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Saudi Arabia Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/saudi-arabia/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/saudi-arabia/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Tue, 07 Apr 2026 11:25:49 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>Saudi Arabia Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/saudi-arabia/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>சவூதி அரேபியாவின் பெட்ரோ கெமிக்கல் ஆலைகள் மீது தாக்குதல்</title>
		<link>https://oruvan.com/attack-on-saudi-arabias-petrochemical-plants/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Tue, 07 Apr 2026 12:00:06 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Iran War]]></category>
		<category><![CDATA[Saudi Arabia]]></category>
		<category><![CDATA[usa]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=48118</guid>

					<description><![CDATA[<p>சவூதி அரேபியாவின் ஜுபைல் பகுதியில் உள்ள பெட்ரோ கெமிக்கல் ஆலைகள் மீதான தாக்குதல்களுக்குப் ஈரானின் ஐ.ஆர்.ஜி.சி பொறுப்பேற்றுள்ளது. ஷிராஸ் பெட்ரோ கெமிக்கல் ஆலை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாகவே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஐ.ஆர்.ஜி.சி தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஜுபைலில் உள்ள சத்ரா, எக்ஸான்மொபில் மற்றும் டார்க் கெமிக்கல் உள்ளிட்ட அமெரிக்க நிறுவனங்களை ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் குறிவைத்ததாக ஐ.ஆர்.ஜி.சி. தெரிவித்துள்ளது. ஜுவைமாவில் உள்ள, அமெரிக்க நிறுவனமான பெட்ரோ கெமிக்கல் வளாகத்தை, நடுத்தர தூர ஏவுகணைகள் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/attack-on-saudi-arabias-petrochemical-plants/">சவூதி அரேபியாவின் பெட்ரோ கெமிக்கல் ஆலைகள் மீது தாக்குதல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>சவூதி அரேபியாவின் ஜுபைல் பகுதியில் உள்ள பெட்ரோ கெமிக்கல் ஆலைகள் மீதான தாக்குதல்களுக்குப் ஈரானின் ஐ.ஆர்.ஜி.சி பொறுப்பேற்றுள்ளது.</p>
<p>ஷிராஸ் பெட்ரோ கெமிக்கல் ஆலை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாகவே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஐ.ஆர்.ஜி.சி தெரிவித்துள்ளது.</p>
<p>இந்நிலையில், ஜுபைலில் உள்ள சத்ரா, எக்ஸான்மொபில் மற்றும் டார்க் கெமிக்கல் உள்ளிட்ட அமெரிக்க நிறுவனங்களை ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் குறிவைத்ததாக ஐ.ஆர்.ஜி.சி. தெரிவித்துள்ளது.</p>
<p>ஜுவைமாவில் உள்ள, அமெரிக்க நிறுவனமான பெட்ரோ கெமிக்கல் வளாகத்தை, நடுத்தர தூர ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் குறிவைத்ததாகவும் ஐ.ஆர்.ஜி.சி தெரிவித்துள்ளது.</p>
<p>ஹார்முஸ் நீரிணையை மீள திறக்க வேண்டும் எனவும் அவ்வாறு இல்லாவிட்டால் தாக்குதல்கள் தீவிரமடைய நேரிடும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் காலக்கெடு விதித்திருந்தார்.</p>
<p>எவ்வாறாயினும், மின் நிலையங்கள் மற்றும் பாலங்கள் மீதான எந்தவொரு தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்கப்படும் என ஈரானும் எச்சரிக்கை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/attack-on-saudi-arabias-petrochemical-plants/">சவூதி அரேபியாவின் பெட்ரோ கெமிக்கல் ஆலைகள் மீது தாக்குதல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>அமைச்சர் விஜித ஹேரத் சவுதி வெளியுறவு அமைச்சரை சந்தித்தார்</title>
		<link>https://oruvan.com/minister-vijitha-herath-meets-saudi-foreign-minister/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Mon, 10 Nov 2025 06:32:51 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[#oruvan #news]]></category>
		<category><![CDATA[Saudi Arabia]]></category>
		<category><![CDATA[Vijitha Herath]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=37835</guid>

					<description><![CDATA[<p>இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹெராத்துக்கும் சவுதி அரேபிய வெளியுறவு அமைச்சர் பைசல் பின் ஃபர்ஹானுக்கும் இடையே சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. ரியாத்தில் நடைபெற்ற 26வது UNWTO பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சவுதி அரேபியா சென்றுள்ள வெளியுறவு அமைச்சர் விஜித ஹெராத், சவுதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சரைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இலங்கையில் சவுதி தனியார் துறை முதலீட்டை ஈர்ப்பது உள்ளிட்ட அரசியல் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இரு அமைச்சர்களுக்கும் இடையில் கலந்துரையாடல்கள் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/minister-vijitha-herath-meets-saudi-foreign-minister/">அமைச்சர் விஜித ஹேரத் சவுதி வெளியுறவு அமைச்சரை சந்தித்தார்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹெராத்துக்கும் சவுதி அரேபிய வெளியுறவு அமைச்சர் பைசல் பின் ஃபர்ஹானுக்கும் இடையே சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.</p>
<p>ரியாத்தில் நடைபெற்ற 26வது UNWTO பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சவுதி அரேபியா சென்றுள்ள வெளியுறவு அமைச்சர் விஜித ஹெராத், சவுதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சரைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.</p>
<p>இலங்கையில் சவுதி தனியார் துறை முதலீட்டை ஈர்ப்பது உள்ளிட்ட அரசியல் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இரு அமைச்சர்களுக்கும் இடையில் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன.</p>
<p>இதற்கிடையில், பலஸ்தீன பிரச்சினைக்கு நிரந்தர தீர்வைக் காண்பதில் சவுதி அரேபியாவின் பங்களிப்பை வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் பாராட்டியுள்ளார், மேலும் பலஸ்தீனத்திற்கான இலங்கையின் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.</p>
<p>இலங்கைக்கும் சவுதி அரேபியாவிற்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 50 ஆண்டுகளைக் குறிக்கும் நினைவு முத்திரையையும் சவுதி அரேபிய வெளியுறவு அமைச்சர் வெளியிட்டார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/minister-vijitha-herath-meets-saudi-foreign-minister/">அமைச்சர் விஜித ஹேரத் சவுதி வெளியுறவு அமைச்சரை சந்தித்தார்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>என்னை கொலைசெய்யும் முன் காப்பாற்றுங்கள் &#8211; சவூதியில் இருந்து இலங்கைப் பெண் அவசர கோரிக்கை</title>
		<link>https://oruvan.com/save-me-before-i-am-killed-urgent-plea-from-sri-lankan-woman-trapped-in-saudi-arabia/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Thu, 17 Jul 2025 10:25:53 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Saudi Arabia]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=26885</guid>

					<description><![CDATA[<p>சவூதி அரேபியாவிற்கு பணிப்பெண்ணாகச் சென்ற இலங்கை பெண் ஒருவர் தன் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும், எனவே தன்னை விரைந்து காப்பாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். &#8220;ஒரு வருடமாக என்னை அடித்து, அவமானப்படுத்தி, கடுமையான வேலை கொடுத்து துன்புறுத்தி வருகின்றனர். வீட்டு உரிமையாளர்கள் சாப்பிட்டு குப்பையில் போடும் மீதியை நான் பல மாதங்களாக சாப்பிட்டு வருகிறேன். அவர்கள் என்னை ஒரு இருட்டு அறையில் அடைத்து, சித்திரவதை செய்கிறார்கள்&#8230; எனக்கு பல மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. என்னைக் கொல்வதற்கு [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/save-me-before-i-am-killed-urgent-plea-from-sri-lankan-woman-trapped-in-saudi-arabia/">என்னை கொலைசெய்யும் முன் காப்பாற்றுங்கள் &#8211; சவூதியில் இருந்து இலங்கைப் பெண் அவசர கோரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>சவூதி அரேபியாவிற்கு பணிப்பெண்ணாகச் சென்ற இலங்கை பெண் ஒருவர் தன் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும், எனவே தன்னை விரைந்து காப்பாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.</p>
<p>&#8220;ஒரு வருடமாக என்னை அடித்து, அவமானப்படுத்தி, கடுமையான வேலை கொடுத்து துன்புறுத்தி வருகின்றனர். வீட்டு உரிமையாளர்கள் சாப்பிட்டு குப்பையில் போடும் மீதியை நான் பல மாதங்களாக சாப்பிட்டு வருகிறேன்.</p>
<p>அவர்கள் என்னை ஒரு இருட்டு அறையில் அடைத்து, சித்திரவதை செய்கிறார்கள்&#8230; எனக்கு பல மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. என்னைக் கொல்வதற்கு முன்பு என்னை இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுங்கள்&#8230;&#8221; என கோரிக்கை விடுத்துள்ளார்.</p>
<p>ஜி.பி. தம்மிகா பத்மா குமாரி என்பவரே இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.</p>
<p>தம்மிகா 51 வயதான ஒரு குழந்தையின் தாய். தனது ஒரே மகளைப் படிக்க வைக்கவும், நிரந்தர வீடு ஒன்றைக் கட்டுவதற்காக சிறிது பணத்தைச் சேமிக்கவும், பணிப் பெண்ணாக ஜூலை 3, 2024 அன்று சவூதி அரேபியாவுக்குச் சென்றார்.</p>
<p>சவுதி அரேபியாவிற்கு வீட்டு வேலைக்காகச் சென்ற தனது தாயாரை இலங்கைக்கு அழைத்து வருவதற்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தம்மிடம் ஏழரை லட்சம் ரூபாய் நிதி கோருவதாகவும், கூலி வேலை செய்யும் தனது தந்தையாலோ இவ்வளவு பெரிய தொகையை சம்பாதிக்க முடியாது என்றும் தம்மிகா பத்மகுமாரியின் மகள் குமுதுனி தாருகா கமகே தெரிவித்தார்.</p>
<p>இந்த விவகாரம் தொடர்பாக தனது தந்தை ஜூலை ஏழாம் திகதி வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் முறைப்பாடு அளித்ததாகவும், பின்னர் அந்த நிறுவனம் மூலம் அவளை மீண்டும் அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் அறிவுறுத்தியதாகவும் தாருகா கமகே கூறினார்.</p>
<p>குமுதுனி அழுது கொண்டே, தனது தாயாரை வீட்டு உரிமையாளர்கள் தாக்கி அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதற்கு முன்பு, இலங்கைக்கு அழைத்து வர தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வெளியுறவு அமைச்சரிடமும் ஜனாதிபதியிடமும் கேட்டுக்கொள்வதாகக் கூறினார்.</p>
<p>&#8220;என்னை ஒரு நிறுவனம் வேறொரு வீட்டிற்கு அனுப்பியது. இப்போது அந்தக் குடும்பத்தினர் என்னை ஒரு இருட்டு அறையில் அடைத்து வைத்து துன்புறுத்துகிறது. எனக்கு சாப்பிடவோ குடிக்கவோ அனுமதி இல்லை.</p>
<p>அந்தக் குடும்பத்தினர் சாப்பிடு குப்பையில் போடும் எஞ்சிய உணவை நான் பல மாதங்களாக சாப்பிட்டுகின்றேன். என் மகளுக்கு நல்ல கல்வியை வழங்குவதற்கும், நிரந்தர வீடு கட்டவும் வீட்டு வேலை செய்ய வந்தேன்.</p>
<p>ஆனால் இந்த வீட்டில் உள்ளவர்கள் என்னைக் கொல்வதற்கு முன்பு என்னை இலங்கைக்கு அழைத்து வருமாறு அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்கின்றேன். நான் இப்போது மிகவும் கடினமான சூழ்நிலையில் இருக்கிறேன்.&#8221; என சவுதி அரேபியாவில் ஒரு இருண்ட அறையில் அடைக்கப்பட்டுள்ள ஜி.பி. தம்மிகா பத்மா குமாரி தெரிவித்துள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/save-me-before-i-am-killed-urgent-plea-from-sri-lankan-woman-trapped-in-saudi-arabia/">என்னை கொலைசெய்யும் முன் காப்பாற்றுங்கள் &#8211; சவூதியில் இருந்து இலங்கைப் பெண் அவசர கோரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சவூதி அரேபியா 13 நாடுகளுக்கு தற்காலிக விசா தடை விதித்தது</title>
		<link>https://oruvan.com/saudi-arabia-imposes-temporary-visa-ban-on-13-countries/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Mon, 07 Apr 2025 04:14:38 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Saudi]]></category>
		<category><![CDATA[Saudi Arabia]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=17002</guid>

					<description><![CDATA[<p>பங்களாதேஷ் உட்பட 13 நாடுகளுக்கு சவூதி அரேபியா தற்காலிக விசா தடை விதித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருப்பினும், ஜூன் மாத நடுப்பகுதியில் இது நீக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. விசா தடையால் பாதிக்கப்பட்ட நாடுகள் பாகிஸ்தான், இந்தியா, பங்களாதேஷ், எகிப்து, இந்தோனேசியா, ஈராக், நைஜீரியா, ஜோர்டான், அல்ஜீரியா, சூடான், எத்தியோப்பியா, துனிசியா மற்றும் ஏமன் ஆகும். இந்த தற்காலிக தடைக்குப் பின்னால் உள்ள பல முக்கிய காரணங்களை சவூதி அதிகாரிகள் எடுத்துரைத்துள்ளனர். சிலர் சவூதி அரேபியாவிற்குள் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/saudi-arabia-imposes-temporary-visa-ban-on-13-countries/">சவூதி அரேபியா 13 நாடுகளுக்கு தற்காலிக விசா தடை விதித்தது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பங்களாதேஷ் உட்பட 13 நாடுகளுக்கு சவூதி அரேபியா தற்காலிக விசா தடை விதித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருப்பினும், ஜூன் மாத நடுப்பகுதியில் இது நீக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.</p>
<p>விசா தடையால் பாதிக்கப்பட்ட நாடுகள் பாகிஸ்தான், இந்தியா, பங்களாதேஷ், எகிப்து, இந்தோனேசியா, ஈராக், நைஜீரியா, ஜோர்டான், அல்ஜீரியா, சூடான், எத்தியோப்பியா, துனிசியா மற்றும் ஏமன் ஆகும்.</p>
<p>இந்த தற்காலிக தடைக்குப் பின்னால் உள்ள பல முக்கிய காரணங்களை சவூதி அதிகாரிகள் எடுத்துரைத்துள்ளனர்.</p>
<p>சிலர் சவூதி அரேபியாவிற்குள் நுழைய பல நுழைவு விசாக்களைப் பயன்படுத்தி, பின்னர் ஹஜ் சீசன் வரை சட்டவிரோதமாகத் தங்கியிருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.</p>
<p>எனவே, இது அதிக போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு அபாயங்களை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.</p>
<p>வணிக அல்லது குடும்ப வருகை விசாக்களில் நுழையும் பலர் அனுமதியின்றி வேலை செய்கிறார்கள், விசா நிபந்தனைகளை மீறுகிறார்கள் மற்றும் தொழிலாளர் சந்தையில் இடையூறுகளை உருவாக்குகிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>எனவே, ஹஜ் பருவத்தில் பயணத்தை ஒழுங்குபடுத்தவும் பாதுகாப்பை உறுதி செய்யவும் விசாக்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உள்ளதாக சவூதி வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.</p>
<p>விசா விண்ணப்பதாரர்கள் புதிய விதிமுறைகளுக்கு இணங்குமாறு அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர். அவ்வாறு செய்யத் தவறினால் தண்டனை விதிக்கப்படலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/saudi-arabia-imposes-temporary-visa-ban-on-13-countries/">சவூதி அரேபியா 13 நாடுகளுக்கு தற்காலிக விசா தடை விதித்தது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ரஷ்யாவுடனான 30 நாள் போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ள உக்ரைன் தயார்</title>
		<link>https://oruvan.com/ukraine-ready-to-accept-30-day-ceasefire-with-russia/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Wed, 12 Mar 2025 04:21:14 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[donald trump]]></category>
		<category><![CDATA[Marco Rubio]]></category>
		<category><![CDATA[Russia]]></category>
		<category><![CDATA[Saudi Arabia]]></category>
		<category><![CDATA[ukrain russia war]]></category>
		<category><![CDATA[US President]]></category>
		<category><![CDATA[Volodomyr Zelensky]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=14225</guid>

					<description><![CDATA[<p>சவூதி அரேபியாவில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைக்குப் பின்னர், அமெரிக்கா முன்மொழிந்த ரஷ்யாவுடன் உடனடியாக 30 நாள் போர் நிறுத்தத்தை ஏற்கத் தயாராக இருப்பதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ இந்த வாய்ப்பை ரஷ்யாவிடம் முன்வைப்பதாக தெரிவித்துள்ளார். &#8220;நேர்மறையான&#8221; திட்டத்திற்கு ரஷ்யாவை ஒப்புக்கொள்ள வைப்பது இப்போது அமெரிக்காவின் பொறுப்பாகும் என்று உக்ரைன் ஜனாதிபதி வோலோடோமிர் ஜெலென்ஸ்கி கூறினார். ஜெட்டாவில் செவ்வாய்க்கிழமை நடந்த பேச்சுவார்த்தைகள், உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கும் இடையிலான [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/ukraine-ready-to-accept-30-day-ceasefire-with-russia/">ரஷ்யாவுடனான 30 நாள் போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ள உக்ரைன் தயார்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>சவூதி அரேபியாவில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைக்குப் பின்னர், அமெரிக்கா முன்மொழிந்த ரஷ்யாவுடன் உடனடியாக 30 நாள் போர் நிறுத்தத்தை ஏற்கத் தயாராக இருப்பதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.</p>
<p>இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ இந்த வாய்ப்பை ரஷ்யாவிடம் முன்வைப்பதாக தெரிவித்துள்ளார்.</p>
<p>&#8220;நேர்மறையான&#8221; திட்டத்திற்கு ரஷ்யாவை ஒப்புக்கொள்ள வைப்பது இப்போது அமெரிக்காவின் பொறுப்பாகும் என்று உக்ரைன் ஜனாதிபதி வோலோடோமிர் ஜெலென்ஸ்கி கூறினார்.</p>
<p>ஜெட்டாவில் செவ்வாய்க்கிழமை நடந்த பேச்சுவார்த்தைகள், உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கும் இடையிலான அசாதாரண மோதலுக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான முதல் அதிகாரப்பூர்வ சந்திப்பாகும்.</p>
<p>இந்த சந்திப்பின் பின்னர் வெளியிடப்பட்டுள்ள கூட்டு அறிக்கையில், உக்ரைனுக்கு உளவுத்துறை பகிர்வு மற்றும் பாதுகாப்பு உதவியை உடனடியாக மீண்டும் தொடங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.</p>
<p>&#8220;இரு பிரதிநிதிகளும் தங்கள் பேச்சுவார்த்தை குழுக்களை பெயரிடவும், உக்ரைனின் நீண்டகால பாதுகாப்பை வழங்கும் ஒரு நீடித்த அமைதியை நோக்கி உடனடியாக பேச்சுவார்த்தைகளைத் தொடங்கவும் ஒப்புக்கொண்டனர்&#8221; என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.</p>
<p>செவ்வாய்க்கிழமை மாலை ஜெட்டாவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய ரூபியோ, ரஷ்யா இந்த திட்டத்தை ஏற்றுக்கொள்ளும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.</p>
<p>இதனிடையே, ஜெட்டாவில் நடந்த பேச்சுவார்த்தைகளின் &#8220;ஆக்கபூர்வமான தன்மைக்கு&#8221; உக்ரைன் ஜனாதிபதி டிரம்பிற்கு நன்றி தெரிவித்தார்.</p>
<p>இந்நிலையில், ரஷ்யா &#8220;போரை நிறுத்த அல்லது போரைத் தொடர அதன் விருப்பத்தைக் காட்ட வேண்டும்&#8221; என்று ஜெலென்ஸ்கி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.</p>
<p>எவ்வாறாயினும், இந்த விடயம் தொடர்பில் ரஷ்ய தரப்பில் இருந்து எவ்வித அறிவிப்பும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/ukraine-ready-to-accept-30-day-ceasefire-with-russia/">ரஷ்யாவுடனான 30 நாள் போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ள உக்ரைன் தயார்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
